Showing posts with label ததஜ ஊழல். Show all posts
Showing posts with label ததஜ ஊழல். Show all posts

Tuesday, March 23, 2010

நற்செய்தியும் எச்சரிக்கையும் - அப்துர்ரஹ்மான் மண்பஈ

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்

நற்செய்தியும் எச்சரிக்கையும்


நற்செய்தி கூறி எச்சரிக்கை செய்து நல்வழிப்படுத்துவது நபியின் வழி, அந்த வழியில்,சமீபத்திய நிகழ்வுகளை வைத்து பிரபல பேச்சாளர் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு இந்த நற்செய்தியையும் எச்சரிக்கையும் வழங்குகிறோம்.

ஒரு சில மாதங்களுக்கு முன் பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லப்படுவோருடன் பீ.ஜைனுலாபிதீன் தனது குழுவினருடன் விவாதம் செய்தார்கள்.அதில் நாத்திகத்திற்க்கு எதிரான பல நல்ல கருத்துக்களை எடுத்து வைத்தார்கள் அதற்க்காக அல்லாஹ் அவர்களுக்கு நற்கூலி கொடுக்கட்டும்!

நற்செய்தி :

அந்த விவாதத்தின் முதல் தலைப்பில் முதல் சுற்று பேச்சிலேயே ஜைனுலாபிதீன் தான் நாத்திகக் கொள்கைக்கு சென்று விட்டுமீண்டும் இஸ்லாத்திற்கு திரும்பியவர்தான் என்ற செய்தியை சொன்னார்கள்.

இது அவருக்கு அல்லாஹ் செய்துள்ள பேரருளாகும். இறை நம்பிக்கை கொண்டு நற்செயல் புரிபவர்களுக்கு அல்லாஹ்விடம் நற்கூலி உண்டென்று திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறியிருப்பது அவர்களுக்கும் சுபச் செய்திதான்.

அல்லாஹ்வையும் மறுமையையும் மறுத்து காஃபிராக தான் மாறி விட்டு மீண்டும் இஸ்லாத்திற்கு திரும்பியதாக அவரைப் போன்ற அந்தஸ்திலுள்ள யார் தான் ஒப்புக் கொள்வார் அவர் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

அல்லாஹூதாஆலா அனைத்து முஸ்லீம்களுக்கும் முஸ்லிம்களாகவே மரணிக்க நல்லுதவி செய்வானாக!

எச்சரிக்கை

அவர் தன்னைப்பற்றி வெளியிட்ட செய்தியின் மூலம் அவருடைய பெரிய பலவீனம் வெளிபட்டுள்ளது. அதாவது அல்லாஹ்வைப்பற்றியும் அவனது மார்க்க விசயத்திலும் நிதான மின்றியும் அலட்சியத்தோடும் முடிவு சொல்கிற தன்மை. இந்த தன்மை இருந்ததால் தான் அவசரப்பட்டு சத்திய இஸ்லாத்தை விட்டு நாத்திகத்தைத் தேர்ந்தெடுத்த மாபெரும் தவறை செய்தார்.

அவர் அந்த தவறிலிருந்து விடுபட்டாலும் அந்த தவறுக்கு காரணமாக இருந்த தன்மையிலிருந்து விடுபடவில்லை.அது தான் குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றும் மக்களுடன் அவர் செய்யும் சச்சரவுகளுக்குக் காரணம்

நிதானமில்லாமலும் அலட்சியத்தோடும் அல்லாஹ்வின் மார்க்கத்தை அணுகும் போக்கிலிருந்து முதலில் அவர் விடுபட வேண்டும்.

நன்றாக யோசித்து பார்ப்போம் முஸ்லிம்களிடத்திலே நிலவுகிற மூடப்பழக்கங்களினாலும் அவர்களிடத்திலே காணப்படும் கருத்து வேற்றுமைகளினாலும் எவ்வளவோ முஸ்லிம்கள் குழப்பத்திற்கு ஆளாகத்தான் செய்கிறார்கள்.அப்படி குழப்பத்திற்க்கு ஆளாகக் கூடியவர்கள் எவரும் நாத்திகக் கொள்கைக்கு ஓடி விடுவதில்லை. மார்க்கத்தை அலட்சியமாக பார்த்துக் கொண்டும் கடமையான வணக்கங்களைக்கூட நிறைவேற்றாமலும் இருக்கும் சிலர் வேண்டுமானால் அப்படி ஓடலாம்!

ஆக நிதானமின்மை,மார்க்கத்தை பேணுதல் இல்லாமல் அலட்சியமாக அணுகுவது ஆகிய தன்மைகளால் அவர் நாத்திக கொள்கைக்குச் சென்றார். பிறகு நாத்திகம் என்ற தவறை விட்டாரே தவிர அந்தத் தவறுக்கு அவரை கொண்டு சென்ற இந்த மோசமான தன்மைகளை விடவில்லை. அதனால் மார்க்கத்துக்குள் இருந்து கொண்டு குர்ஆன், ஹதீஸூக்கு எதிரான கொள்கைகளை புகுத்துகிற செயலில் ஈடுபடுகிறார்.அவர் நிதானமற்ற தன்மையாலும் மார்க்கத்தை அலட்சியமாக கருதும் தன்மையாலும் தவறான கொள்கையை புகுத்துபவர் என்பதற்க்கு அவரது எழுத்துக்களே ஆதாரமாக உள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்)அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக வரும் ஹதீஸை மறுப்பதற்கு முக்கிய காரணமாக, குர்ஆனின், அல்லாஹ் உன்னை மனிதர்களிடமிருந்து காப்பாற்றுவான் எனும்(5:67)வசனத்துக்கு அந்த ஹதீஸ் முரண்படுவதாக எழுதியிருந்தார்(அவரது தாஜிமா குறிப்பு எண் 357முதல் பதிப்பு)

ஆனால் இப்போதைய புதிய (7வது8வது)பதிப்புகளில் இதை காணவில்லை. அதாவது இவர் கருத்துப்படி இந்த குர்ஆன் வசனத்துடன் மோதிக்கொண்டும் முரண்பட்டுக்கொண்டும் இருந்த அந்த ஹதீஸ் இப்போது முரண்படவில்லை,மோதவில்லை.

அப்படியானால் ஓரு ஹதீஸைப் பற்றி பேசுகிறோம் என்கிற பேணுதல் இல்லாமல் அவசரத்தோடும் அலட்சியத்தோடும் பெறுந்தவறு செய்திருக்கிறார்.

எப்படி சம்பந்தப்பட்ட சூனியம் பற்றிய ஹதீஸ் 5:67 வசனத்துக்கு முரண்பட வில்லை என்கிற உண்மையை தெரிந்து கொண்டாரோ அது போல் அவர் எடுத்து வைத்துக்கொண்டிருக்கும் மற்ற வசனங்களோடும் முரண்படவில்லை என்பது குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றும் முஸ்லிம்களின் நிலைப்பாடு.

நிதானத்தோடு வரட்டுப்பிடிவாதத்தை விட்டு நல்வழியை நாடினால் நல்லமுடிவு கிடைக்கும்.சூனியம் பற்றிய ஹதீஸில் எழுப்பப்படும் ஐயங்களுக்கு புகாரியின் மிகச்சிறந்த விளக்கவுரையாகிய ஃபத்ஹீல் பாரீ யில் தகுந்த விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

அதோடு இந்த ஹதீஸை மறுப்பவர்கள் 'பித்அத்துக்காரர்கள்'(அதாவது மார்க்கத்தில் தவறான கொள்கையை புகுத்துவர்கள்) என்றும் இமாம் இப்னு ஹஜர் அவர்கள் அதில் சாடியிருக்கிறார்கள்.

சம்மந்தப்பட்டஹதீஸ் 5:67 வசனத்துடன் முரண்படவில்லை என்பதைத் தெரிந்தவுடன் வாபஸ் வாங்கிக் கொண்டேன். மற்ற வசனங்களுடன் முரண்படுவதால் தான் வாபஸ் வாங்கவில்லை என்று இவர் தரப்பில் கூறலாம். உண்மை என்னவென்றால் இலகுவாக எல்லோரும் இவரது வாதம் தவறு என்று கருதும் படியான வாதத்தை வாபஸ் வாங்கியிருக்கிறார். தன் வாதம் தவறு என்றாலும் எதையாவது சுற்றி வளைத்துப்பேசி தாக்கு பிடிக்க முடியுமென்றால் அதைவைத்து சமாளித்துக் கொண்டிருக்கிறார் அவ்வளவு தான்.

குர்ஆனுக்கு முரண்படுவதாக காரணம் கற்பித்து இவரால் மறுக்கப்படும் ஹதீஸ்களுக்கு தகுந்த விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது கொடுக்கப்பட்டுகொண்டுமிருக்கிறது.

அந்த விளக்கங்கள் எல்லாம் அவசரப்பட்டு நாத்திகத்திற்கு ஓடாத, குர்ஆன் ஹதீஸை இனிமையாகப் பேசும் வழிகெட்ட பேச்சாளர்களிடம் ஏமாறாத எல்லா முஸ்லீம்களுக்கும் திருப்தியளிக்கிறது.

ஆக இவர் நாத்திகம் என்ற அழிவிலிருந்து விடுபட்டாலும் அந்த அழிவுக்கு அவரை கொண்டு சென்ற தீய தன்மைகளிலிருந்து விடுபடவில்லை.

அதனாலேயே பல பெரிய தவறான கொள்ளைகள் அவரிடமிருந்து வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. நாத்திகர்கள் எல்லாமதத்தவர்களோடு சேர்த்து முஸ்லீம்களையும் மடையர்களாகப் பார்ப்பது போல் இவரின் தவறான கருத்துக்களை எதிர்க்கும் குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றும் முஸ்லீம்களையும் மடையர்களாகப் பார்க்கிறார்கள் இவரும் இவரது ஆதரவாளர்களும்.

அவர் வெளியிட்டுள்ள இவ்வாறான மகாதவறுகள்:-

ழூ ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை குர்ஆனுக்கு முரண்படுவதாக காரணம் கற்பித்து மறுப்பது. அதற்கு முறையான பதில் அளிக்கும் முஸ்லீம்களை எள்ளி நகையாடுவதுடன் இதே காரணம் கற்பித்து மறுப்பதற்காக வேறு ஹதீஸ்களையும் தேடி எடுப்பது.
ழூ பெண்கள் அந்நிய ஆண்களுக்கு முன் தங்களின் முகத்தை மறைப்பது கட்டாயம் என்று இல்லாவிட்டாலும் அப்படி மறைப்பதை நபி(ஸல்) அவர்கள் அங்கிகரித்ததும் நபியுடன் இருந்த ஸஹாபியப் பெண்கள் மறைத்ததும் மிக வலுவான ஆதாரங்களாக பதியப்பட்டிருக்கின்றன.

ஆனால் அப்படி மறைப்பது பிற்காலத்தில் ஏற்பட்ட பழக்கம் என்பது போலவும் மறைப்பதே தவறு என்றும் சித்தரிக்கிறார் அவர் இயக்கத்தை சேர்ந்த இளைஞர்கள் தங்கள் மனைவியர் உண்மையான வெட்கத்தினால் அன்னிய ஆடவருக்கு முன் முகத்தை மறைப்பதை தடுக்கிறார்கள்.

ழூ வருடா வருடம் ஜகாத் கொடுப்பதை பித்அத் என்று கூறி தடுப்பது.

இதுபோல பல ஆபத்தான தவறுகளை அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிறார்.

இதற்கெல்லாம் காரணம் அவர் நாத்திகத்துக்குச் செல்ல காரணமாக இருந்த தீயத் தன்மைகள் அவரிடம் இருந்து கொண்டிருப்பது தான் ஆகவே அந்த தன்மைகளையும் அவர் விட்டொழிக்க வேண்டும் இல்லாவிட்டால் இன்னும் பல வினோத வழிகேடுகளை அவிழ்த்து விடலாம். அதனால் அல்லாஹ்வின் தண்டனைக்கு ஆளாக நேரிடும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் எல்லா முஸ்லீம்களையும் அவனது தண்டனையிலிருந்து காப்பானாக.

Sunday, November 08, 2009

ததஜ வின் அழிச்சாட்டியங்களை 'அடக்கம்' செய்வோம் - தொண்டி த.மு.மு.க

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம்


அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்....)

கடந்த சில தினங்களுக்கு முன்பு. ததஜ தலைவர் பீஜைனுல் ஆபிதீன், 'ஆன்லைன் பொய்யன் ஜமாத்' என்ற தனது அதிகாரப் பூர்வ இணைய தளத்தில் அப்துர் ரஹ்மானின் அறியாமை என்ற தலைப்பில் ஒரு ஆக்கம் எழுதியுள்ளார். குர்ஆன் ஹதீஸுக்கு எதிரான பீஜேயின் வழிகேட்டை எதிர்த்து அவரிடமிருந்து விலகிய அவருடைய மாணவர் அப்துர்ரஹ்மான் மன்பஈயை தனக்கே உரிய அபூஜஹ்ல் தனத்தோடு தாக்கி எழுதியிருக்கிறார்.

அதோடு தொண்டி த.மு.மு.கவையும் தவறான முறையில் விமர்சித்துள்ளார். அதற்கு தகுந்த விளக்கமளிக்கவே இதனை எழுதுகிறேன்.

'உள்ளுர் த.மு.மு.கவினர் தவ்ஹீது ஜமாஅத்துக்கு மட்டுமின்றி தவ்ஹீதுக்கும் எதிராகச் செயல்படுவது தெரிந்திருந்தும், கட்டப்பஞ்சாயத்துக்கு உள்ளுரில் பேர் பெற்ற த.மு.மு.கவில் சேர்ந்து கொண்டார். த.மு.மு.க கூட்டங்களில் நம்மைத் திட்டும் தலைப்பு இவருக்கு' இவ்வாறு கிறுக்கியுள்ளார் பீஜே.

இவருடைய மோசடி வார்த்தைப் பிரயோகத்தைக் கவனியுங்கள். 'தவ்ஹீது ஜமாஅத்துக்கு' எதிராக செயல்படுவதாக கூறுவது ஒரு பொய் என்பது ஒருபுறமிருக்க, தவ்ஹீது கொள்கை கொண்ட ஜமாத் இவர்கள் மட்டும்தான் என்ற தோற்றத்தை ஏற்படுத்துவது இன்னொரு பொய்.

நாங்களும் தவ்ஹீது வாதிகள்தான் இவர் முன்பு பிரிந்து வந்த ஜாக் இயக்கமும் தவ்ஹீத் கொள்கை கொண்ட ஜமாஅத்துதான். மட்டுமின்றி, பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் விபச்சாரக் குற்றச்சாட்டை கூறிக் கொண்டதால் இப்போது பிரிந்துள்ள இவரது உயிருக்குயிரான நண்பர்களின் இயக்கமும் தவ்ஹீது ஜமாஅத்துதான்.

நாங்கள் தவ்ஹீது கூட்டத்துக்கு எதிரானவர்கள் அல்ல, தருதலைக் கூட்டத்திற்கு எதிரானவர்கள்.

தவ்ஹுதுக்கு எதிரானவர்கள் என்றும் எங்களைபற்றி கிறுக்கி வைத்துள்ளார். நாங்களே தவ்ஹீதுவாதிகளாக இருக்கும் போது எப்படி தவ்ஹீதுக்கு எதிராக செயல்படுவோம். த.மு.மு.க சமூகப் பணிக்காக மட்டுமே துவக்கப்பட்ட இயக்கம். என்றாலும் தவ்ஹீதை நிலை நாட்டவும் மார்க்க அறிவை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் எங்களால் ஆன உழைப்பை கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

பீஜேயும் சேர்ந்து உருவாக்கிய த.மு.மு.கவின் அமைப்பு நிர்ணயச்சட்டபடி எந்த முஸ்லிமும் இதில் உறுப்பினராக இருக்கலாம் அதன்படி மாற்றுகருத்துக்களை கொண்ட முஸ்லிம்கள் சிலர் இந்த இயக்கத்தில் உறுப்பினராக இருக்கத்தான் செய்வார்கள்.

சமுதாய நன்மைக்காக பல கருத்துள்ள முஸ்லிம்களும் ஒன்று பட்டு ஒரு இயக்கத்தில் இருப்பது தவ்ஹீதுக்கு எதிரானது அல்ல ஆனால் தொண்டி வடக்குத் தெரு மேலபள்ளிவாசலில் டி என் டி ஜே காரர் நிர்வாகியாக இருப்பது உங்கள் கொள்கைக்கும் இயக்கப் பாலிசிக்கும் எதிரானதாகும். ஷஷpர்க் செய்யக்கூடிய இமாமை வைத்து ஷஷpர்க் பாடல்பாடக்கூடிய, அதனை ஆதரிக்கக் கூடிய தலைமை நிர்வாகளைக் கொண்ட ஒரு நிர்வாகத்தில் ஒரு நிர்வாக உறுப்பினராக இருப்பதென்றால் கொள்கை என்னவாயிற்று வெட்கங் கெட்டவர்களே?

தொண்டி மேலப்பள்ளிவாசல் உங்களைப் பொறுத்தவரை ஒரு கட்டிடத்தை போல்தான் அதனால்தானே எந்த அவசியமும் இல்லாமல் அதன் எதிர்திசையில் அருகிலேயே உங்கள் ஜமாத் சார்பில் பள்ளிவாசல் கட்டுகிறீர்கள்! உங்கள் ஜமாத்துக்காரர்களை மேலப்பள்ளிவாசலில் தொழக் கூடாது எனத் தடுக்கிறீர்கள்!

பள்ளிவாசலில் ஷிர்க் நடக்கிறது. இமாம் ( உங்கள் பார்வையில் ) ஒரு முஷ்ரிக், ஜமாஅத் நிர்வாகிகளெல்லாம் முஷ்ரிக்குகள், அதில் டி என் டி ஜே காரன் ஒரு நிர்வாக உறுப்பினராக இருப்பதென்றால் உங்கள் கொள்கை என்னவானது வேடதாரி பீஜைனுலாபிதீனே!

இப்படி செய்யும் நீங்கள், அனைத்து முஸ்லிமும் பங்குபெறும் இயக்கம் என தெளிவாக அறிவித்து அறப்பணி செய்யும் த.மு.மு.கவை தவ்ஹீதுக்கு எதிராக செயல்படுதாக கூறுவதற்கு வெட்கப்பட வேண்டும்.

கட்டப்பஞ்சாயத்துக்கு உள்ளுரில் பேர் பெற்ற த.மு.மு.க என்றும் எழுதி தான் ஒரு அவதூறு பேர்வழி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் பீஜே.

இந்தப் பீஜே த.மு.மு.கவில் இருக்கும் போது செய்த நற்பணிகளை விட அதிகமாகவும் சிறப்பாகவும் தனது பணிகளை தொடர்ந்து கொண்டிருக்கிறது தொண்டி த.மு.மு.க! எல்லாப் பகுதி த.மு.மு.கவைப் போல!

மைக்கைப் பிடித்தால் ஏக வசனத்திலும் கீழ்த்தரமாகவும் ரவுடித்தனமாகவும் பேசும் உங்கள் ஜமாத் பொறுப்பாளர்கள் போன்றவர்களால் ஏற்படும் சண்டை சச்சரவுகளை நியாமான வழியில் தீர்த்து வைப்பது போன்ற சமூகச் சேவையில் தான் த.மு.மு.க ஈடுபடுமே தவிர கட்டப்பஞ்சாயத்தோ நெட்டப்பஞ்சாயத்தோ செய்வது கிடையாது.

பீஜே த.மு.மு.கவில் இருக்கும் போது யாரை விரும்பி தலைமையிலேயே வைத்திருந்தாரோ அந்த நன்னடத்தையும் தொண்டுள்ளமும் கொண்ட சகோதரர்தான் இப்போதும் தொண்டியில் எங்களை வழிநடத்துகிறார். அவரிடம் நற்பணிகளில் முன்னேற்றம் என்ற மாற்றத்தைத் தவிர வேறு மாற்றத்தை நாங்கள் காணவில்லை.

ஆனால் அலிச்சாட்டியங்களில் முன்னேறியுள்ள உங்களிடம் நிறைய மாற்றங்களை எல்லா மக்களும் கண்டு கொண்டிருக்கிறார்கள் பொய்யன் ஜமாத்தின் தலைமை குரு பீஜே அவர்களே!

த.மு.மு.க கூட்டங்களில் பீஜேயை திட்டுகிற தலைப்பு அப்துர்ரஹ்மானுக்கு கொடுக்கப்படுவதாகவும் கிறுக்கியிருக்கிறார் பீஜே.

த.மு.மு.கவின் எந்தக் கூட்டத்திலும் இவரைத் திட்டுகிற தலைப்பு யாருக்கும் கொடுக்கப்படுவதில்லை. கடந்த (2006) சட்டமன்றத் தேர்தலில் உங்களின் தவறான நிலைப்பாட்டை சரியான வழிமுறையில் விமர்சித்துப் பேசியது மட்டும் தான் அப்துர்ரஹ்மான் த.மு.மு.க மேடையில் உங்களைப் பற்றி பேசியது.

ஆனால் அதற்கு சில தினங்களுக்கு முன் நடந்த உங்கள் ஜமாத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உங்களுக்கே உரிய இழிந்த வழிமுறையில் த.மு.மு.க தலைமை நிர்வாகிகளை திட்டிப் பேசினீர்கள். உங்களிலன் மட்டரக நடத்தையை அடுத்தவர் மீது போடுவதேன்!

'கடந்த தேர்தலில் சாமியாரிடம் ஜவாஹிருல்லா ஆசி வாங்கிய பிறகும் .......' என்று பேப்பர்காரர்கள் வாந்தி எடுத்ததை திண்று மீண்டும் வாந்தி எடுத்துள்ளார் புரட்டல் மன்னன் பீஜே இந்த செய்திக்கு அப்போதே டிவியில் விளக்கமளித்து விட்டார்கள் ஜவாஹிருல்லா. தேர்தலில் ஆதரவு கேட்டுச் சென்றதை பேப்பர்காரர்கள் தங்கள் சிந்தனைப்படி அப்படி எழுதிவிட்டார்கள் என்று மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள். அதை பார்க்காத மக்களிடம் தவறான செய்தியை கொண்டு செல்வதற்காக இதை எழுதியிருக்கிறார்.

கும்பிடு போட்ட தவ்ஹீது தலைவன் (?)

தவ்ஹீது கொள்கைவாதிகளின் தலைவனாக தன்னை பற்றி கற்பனை செய்து கொண்டு அலையும் பீஜே ஆட்சியாளரையும், அதிகாரியையும் சந்திக்கச் சென்ற போது கும்பிடுபோட்டவர்தான் என்ற செய்தியையும் அப்போது டிவியில் விளக்கமாக சொல்லப்பட்டது.

இவர்தான் அடுத்தவர் கொள்கை உறுதிபற்றியும் மார்க்கப் பற்று பற்றியும் அதிகப் பிரசங்கித்தனம் செய்து கொண்டு திரிகிறார்!

பொய்யன் ஜமாத் தலைவர் பீஜைனுலாபிதீன் அவர்களே உங்கள் நாவுக்கு அடக்கம் தேவைப்படுவதுபோல் உங்கள் எழுத்துக்களுக்கும் அடக்கம் தேவைப்படுகிறது. இதை புரிந்து செயல்படுங்கள்!

இல்லாவிட்டால் உங்கள் அழிச்சாட்டியங்களை அல்லாஹ்வின் உதவியோடு 'அடக்கம்' செய்யும் தொண்டி த.மு.மு.க!

எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன், அவனே சிறந்த பொறுப்பாளன்.

இவண் அஹ்மத் பாயிஸ்
தொண்டி.

Monday, April 16, 2007

முச்சந்தி சிரிக்கும் ததஜவின் நாடகங்கள்

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.

முச்சந்தி சிரிக்கும் வகையில் பாக்கர் மீண்டும் பொதுச் செயலாளர்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

பாக்கர் பி.ஜெ. ஆகியவர்களுக்கிடையிலேயான ராஜினாமா? நாடகத்தின் பின்னணி பற்றி நாம் எதுவும் எழுதாமல் இருந்தோம். பின்னணி பற்றி முன்பே எழுதி இருந்தால் முச்சந்தி சிரிக்கும் வகையில் பாக்கர் மீண்டும் பொதுச் செயலாளர் என்ற கீழ் தர முடிவை பி.ஜெ. இவ்வளவு விரைவாக எடுத்திருக்க மாட்டார். நமது எழுத்தைக் காட்டியே பாக்கரை ஏமாற்றி இருப்பார். பாக்கரும் பி.ஜெ.யை மிரட்ட முடியாத நிலைக்கு வந்திருப்பார். பிராடு பி.ஜெ.யின் முடிவுகள் பித்தலாட்டமானது என்பதும் இவ்வளவு சீக்கிரம் அம்பலமாகி இருக்காது.

பி.ஜெ.யின் தற்போதைய டுபாக்கூர்

பாக்கர் ராஜினாமாவை ஒட்டி பி.ஜெ. வள வள கொழ கொல என ஒரு விளக்கெண்ணை விளக்கம் வெளியிட்டார். அது அப்பட்டமான பொய் பித்தலாட்டம் என அறிவுள்ளவர்கள் அனைவரும் விளங்கிக் கொண்டார்கள். எங்களுக்கு நாங்களே கட்டுப்பாடு விதித்துக் கொண்டோம். கலீல் ரசூல் விஷயத்திலும் இந்த அடிப்படையில்தான் அவர் ராஜினாமா செய்தார் என கப்ஸா அடித்தார். பி.ஜெ. அடித்தது கப்ஸா இல்லை என்றால் இதே விளக்கத்தை கலீல் ரசூல் ராஜினாமாவின் போதும் கூறி இருப்பார். இது பி.ஜெ.யின் தற்போதைய டுபாக்கூர் என்பதற்கு இன்னொன்றையும் நினைவுக்கு கொண்டு வருவோம்.

பலமான சாட்சி பலரது சாட்சி ஒய்.கே. மேன்சனுக்குத்தான் இருந்தது.

தங்களுக்கு தாங்களே விதித்துக் கொண்ட கட்டுப்பாட்டுப்படிதான் இந்த ராஜினாமா என்றால் புகழ் பெற்ற ஒய்.கே. மேன்சன் விவகாரத்தின் போதே பாக்கரின் ராஜினாமா நடந்திருக்க வேண்டும். அல்லது ராஜினாமா செய்ய வைத்திருக்க வேண்டும். சென்னையிலிருந்து கோவில்பட்டி வரை அந்நிய பெண்ணுடன் அடுத்தடுத்து இருந்து வந்தார் என்பதற்கு உள்ள சாட்சிகளைவிட பலமான சாட்சி பலரது சாட்சி ஒய்.கே. மேன்சனுக்குத்தான் இருந்தது.

காதல் கடிதம் கொடுத்த பி.ஜெ.தான் தலைவராக ஆகி இருப்பாரா?

குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாவிட்டாலும் ஜமாஅத்தின் நலன் கருதி ஆரம்பத்திலேயே எங்களுக்கு நாங்களே விதித்துக் கொண்ட கட்டுப்பாடு என்பது உண்மையானால் மாணவனிடம் ஆண் புணர்ச்சி செய்த குற்றச்சாட்டுக்கு ஆளான ஸைபுல்லாவை தலைமைப் பொறுப்பில் வைத்திருப்பார்களா? அடுத்தவன் மனைவிக்கு தர்ஜுமாவில் வைத்து காதல் கடிதம் கொடுத்த பி.ஜெ.தான் தலைவராக ஆகி இருப்பாரா?

பி.ஜெ. கூறிய காரணங்கள் பிராடானது.

கோயில்பட்டி வரை பாக்கர் கும்மாளமடித்தார் என்ற குற்றச்சாட்டு பரவிய சம காலத்தில்தான் ஆமினா என்ற அந்நிய பெண்ணுடன் த.த.ஜ. மாநில துணைத் தலைவர் ஸைபுல்லாஹ் ஹாஜா மதுரையில் தங்கினார். அதனால் அந்தப் பெண்ணின் கணவரும் தலாக் சொல்லி விட்டார். என்ற செய்தியும் பிரபலமானது. ஆனால் த.த.ஜ. மாநில துணைத் தலைவர் ஸைபுல்லாஹ் ஹாஜா ராஜினாமா செய்யவில்லை. பாக்கர் ராஜினாமாவுக்கு பி.ஜெ. கூறிய காரணங்கள் பிராடானது, பித்தலாட்டமானது ரீல் என்பதற்கு இவையே போதுமானதாகும்.

பாக்கரை கழட்டி விட பி.ஜெ. சூழ்ச்சி செய்தார்.

ஸாஜிதா புக் சென்டர் ஜக்கரிய்யாவிடம் ராயல்டி வாங்கி பிழைப்பு நடத்தியவர்தான் பி.ஜெ. தானே தனியாக புக் வியாபாரம் செய்ய ஆரம்பித்ததும் தனது புக்குகளை தானே பிரிண்ட் செய்து விற்க வேண்டும். முழு வருமானமும் தனக்கே வர வேண்டும் என்று முடிவு செய்தார். உடனே ஜக்கரிய்யாவை கழட்டி விட்டார். இதுபோல்தான் பாக்கரின் விஷயமும். பி.ஜெ.யின் மூன் கிரியேஷன் மூலம் மட்டுமே சி.டி. விற்பனைகளும் டி.வி. நிகழ்ச்சிகளும் நடத்தப்பட வேண்டும். அந்த வருமானங்கள் முழுவதும் தனக்கே வர வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். பாக்கர் தன்னோடு இருந்தால் பாக்கரின் மீடியா வேல்டு மூலம் நடைபெறும் சி.டி. விற்பனை டி.வி. நிகழ்ச்சிகளை தடுக்க முடியாது. எனவே பாக்கரை கழட்டி விட பி.ஜெ. சூழ்ச்சி செய்தார்.

அடுத்தடுத்த சீட்டில் டிக்கட் ரிசர்வ் செய்யப்பட்டது.

தஃவா சென்டர் மாணவியும் பாக்கரும் ஏதோ பஸ் ஸடாண்டுக்கு போன இடத்தில் ஒரே பஸ்ஸில் ஏறி அடுத்தடுத்து இருக்கவில்லை. பி.ஜெ.யின் திட்டப்படி ஹாமித் பக்ரிக்கு 2ஆவது திருமணம் நடந்தது அல்லவா. அது போல் பி.ஜெ.யின் திட்டப்படி ஒரு வாரத்திற்கு முன்னரே தஃவா சென்டர் மாணவிக்கும் பாக்கருக்கும் ஒரே பஸ்ஸில் கணவன் மனைவி போல் அடுத்தடுத்த சீட்டில் டிக்கட் ரிசர்வ் செய்யப்பட்டது.

பாக்கர் த.மு.மு.க.வில் சேர எண்ணி பி.ஜெ. விரித்த வலையில் பாக்கர் வீழ்ந்து விட்டார். இதை பயன்படுத்தி பாக்கரை மிரட்டிய பி.ஜெ. ராஜினாமா செய்ய வைத்தார். பி.ஜெ. போட்ட சதித் திட்டத்தில் சிக்கிய பாக்கர் த.மு.மு.க.வில் சேர எண்ணி பி.ஜெ.யால் முன்னாள் சகாக்கள் எனப்படுவோருக்கு போன் செய்தார். யாரும் பாக்கரின் போன் அழைப்பில் கிடைக்கவில்லை.

பாக்கர் த.மு.மு.க.வில் சேர முயற்சி

காரணம் அனைவரது போனும் டெல்லி பேரணி பணியால் எந்த நேரமும் பிஸியாக இருந்தது. சிலர் டெல்லிக்காக சிம் கார்டையும் மாற்றி இருந்தனர். அவர்களில் ஒருவர் மேலப்பாளையத்துக்காரர். டெல்லி நம்பர் வாங்கி இருந்த அவரின் தமிழக எண்ணுக்கு பாக்கர் போன் செய்துள்ளார். அதனால் அவரிடம் பேச முடியவில்லை. பாக்கர் த.மு.மு.க.வில் சேர முயற்சி செய்யும் இந்தச் செய்தி கசிய ஆரம்பித்தது. உடனே த.மு.மு.க.வின் தொண்டர்கள் கொதித்தெழுந்தனர். பெரும்பாலான தொண்டர்கள் பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்து விட்டனர்.

முதல் முயற்சியாக துபை சென்றார்.

மாநில நிர்வாகிகளிடம் பாக்கர் மன்னிப்பு கேட்க வேண்டும். மாநில செயற்குழுவில் பாக்கர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை இல்லை. மாநில பொதுக்குழுவில்தான் மன்னிப்பு கேட்க வேண்டும் அதன் பின்தான் சேர்ப்பது பற்றி யோசிக்கவே வேண்டும் என பேச ஆரம்பித்து விட்டனர். இதை அறிந்த பாக்கர் பி.ஜெ.யை மிரட்ட முடிவு செய்து வெகுண்டெழுந்து முதல் முயற்சியாக துபை சென்றார்.

விண் டி.வியில் பி.ஜெ. செய்த மோசடி, ஊழல், கள்ளக் கணக்கு.

துபை செல்லும் முன் த.த.ஜ.வின் முன்னாள் மாநில செயலாளர்களில் ஒருவரான வழித் தோழர் என்ற பொருள்படும் பாளையவாசியிடம் பேசி உள்ளார். டேய் நீ ஏண்டா போனே. வாயை திறந்தால் நாறும்டா. அவ்வளவு அசிங்கம்டா. துபை சென்று வந்து பேசுகிறேன் என்று கூறி இருக்கிறார். அடுத்து அல்லாஹ்வின் அருள் என்ற பொருள்படும் பெயருடைய நல்லூராரிடம் பேசிய பாக்கர். துபை சென்று விண் டி.வியில் பி.ஜெ. செய்த மோசடி, ஊழல், கள்ளக் கணக்கு ஆகியவற்றை சேர் (பங்கு) சேர்ந்தவர்களிடம் விளக்கி விட்டு வரப் போகிறேன் என்று கூறி இருக்கிறார்.

அங்கிருந்தபடியே பி.ஜெ.யை மிரட்டினார்.

பி.ஜெ.யின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்ற திட்டமிட்டு துபை சென்ற பாக்கர் அப்பா கடை பார்ட்னர்களான ஜே.டி. மர்கஸ் நிர்வாகிகளை தனது ஆதரவாளர்களாக ஆக்கிக் கொண்டார். பிறகு விண் டி.வி.க்கு சேர் (பங்கு) கொடுத்து ஏமாந்தவர்களின் ஆதரவைப் பெறும் முயற்சியை செய்து கொண்டு அங்கிருந்தபடியே பி.ஜெ.யை மிரட்டினார். ஜே.டி. மர்கஸ் நிர்வாகிகள் பாக்கர் ஆதவாளர்களாக மாறியதை அறிந்த பி.ஜெ. தொடர்ந்து பாக்கர் துபையில் இருந்தால் யு.ஏ.இ. முழுக்க வென்றெடுத்து விடுவார் என்பதை உணர்ந்தார்.

பாக்கரிடம் பி.ஜெ. வீழ்ந்தார்.

யு.ஏ.இ.யை வென்றெடுத்து விட்டால் அப்படியே கத்தார், குவைத் என சென்று பி.ஜெ.யின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றி விடுவார் பாக்கர். பி.ஜெ.யின் சுக போக வாழ்வுக்கு வாரி வழங்கிக் கொண்டிருக்கும் அரபக வருமானத்தில் மண் விழுந்து விடும் என்பதையும் உணர்ந்தார். எனவே தாயகம் வாருங்கள் பேசிக் கொள்வோம் என பாக்கரிடம் பி.ஜெ. வீழ்ந்தார்.

பி.ஜெ.யின் தலைவர் பதவிக்கு ஆபத்து

துபை சென்றதால் புதிய தெம்மை பெற்ற பாக்கர் தாயகம் வந்ததும் மீண்டும் பொதுச் செயலாளர் பதவி தனக்குத் தர வேண்டும். இல்லை என்றால் மானம் காற்றில் பறக்கும். உங்கள் அந்தரங்களை அரங்கத்தில் ஏற்றி நாறடித்து விடுவேன் என்று பி.ஜெ.யை மிரட்டினார். நிர்ப்பந்தத்தால் பி.ஜெ.யிடம் அடிமை போல் கிடக்கும் த.த.ஜ. மாநில நிர்வாகிகளும் பாக்கர் பின் அணி வகுத்தனர். இதனால் நிர்வாகிகள் மட்டத்திலும் பாக்கரின் கை ஓங்கியது. கருப்புக் கண்ணாடி போட்டுக் கொண்டு மேடையில் பேசும்போது பி.ஜெ. பெண்கள் பக்கமே அதிகம் பார்க்கிறார் என்ற குற்றச்சாட்டு மூலம் பி.ஜெ.யின் தலைவர் பதவிக்கு ஆபத்து என்ற நிலை உருவானது.

செயற்குழுவிலிருந்து வெளி நடப்பு.

பாக்கரின் மிரட்டலுக்கு அடி பணிந்தார் பி.ஜெ. அடி பணிந்த பி.ஜெ. பாக்கரை மீண்டும் பொதுச் செயலாளர் ஆக்கும் நிர்ப்பந்தத்துக்குள்ளானார். எனவே பி.ஜெ.யே பாக்கருக்காக கேன்வாஸ் செய்யும் பணியில் ஈடு பட்டார். மீண்டும் பாக்கர் பொதுச் செயலாளராக ஆக்கப்படுவதை எதிர்த்த கலீல் ரசூலும் அவரது ஆதரவாளர்களும் செயற்குழுவிலிருந்து வெளி நடப்பு செய்தனர். பி.ஜெ. முயற்சியால் மீண்டும் பாக்கர் பொதுச் செயலாளராக ஆனார். பி.ஜெ. தனது சுய நலத்துக்கா மார்க்கப் பணியை பின் தள்ளி விட்டு அரசியல் பண்ணுகிறார் என்பதை உணர்ந்த உண்மை தவ்ஹீதுவாதிகள் பி.ஜெ.யிடமிருந்து விடை பெற்று வருகின்றனர்.

நன்றி : கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹி

காரைக்குடி, இஸ்லாம்