Thursday, October 10, 2013

ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ கார் விபத்தில் தப்பினார்கள் (அல்ஹம்துலில்லாஹ்)


முகவை தொகுதி எம்.எல்.ஏ.வும், மனிதநேய மக்கள் கட்சியின் மூத்த தலைவருமான ஜனாப் ஜவாஹிருல்லா அவர்கள் நேற்று இராமநாதபுரத்தில் இருந்து காரில் சென்னைக்கு வந்து கொண்டிருந்தபோது இரவு 9 மணியளவில் மதுராந்தகம் தெற்கு பைபாஸ் ரோட்டில் எதிர்பாராதவிதமாக கார் கவிழ்ந்து விபத்துக்கள்ளாகியள்ளது. இறைவனின் மாபெரும் கருனையினால் ஜனாப் ஜவாஹிருல்லா அவர்களும், கார் டிரைவரும் காயமின்றி தப்பியுள்ளார்கள். தகவல் கிடைத்தவுடன் உடனடியாக இன அழிப்புக்கு எதிரான இஸ்லாமிய இளைஞர்கள் இயக்கத்தின் மாநில ஒருங்கினைப்பாளர் என்ற முறையில் நான் (முகவைத்தமிழ்ன (எ) ரைசுதீன்) ஜனாப் ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ அவர்களை அலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தேன். தான் நலமாக உள்ளதாகவும், இறைவனின் மாபெரும் கருனையினால் காயங்களின்றி தப்பித்ததாகவம் பிறார்த்தனை செய்யும் படியும் சொன்னார்கள். இன்சா அல்லாஹ் ஜனாப் ஜவாஹிருல்லாஹ் அவர்களுக்கு இறைவன் நீண்ட ஆயுளை வழங்கி இந்த சமுதாயத்திற்கு அவரத சேவைகள் தொடர பிறார்த்திப்போம்.

https://www.facebook.com/photo.php?fbid=10152239797273154&set=a.10150831919698154.507584.592838153&type=1&theater

No comments: