Saturday, March 16, 2013

முகவையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம்



இலங்கை அரசை போர்குற்ற நாடாக அறிவிக்க கோரி மாபெரும் உண்ணாவிரத போராட்டம் ஒன்றிற்கு 18.03.2013 திங்கள் கிழமை அன்று காலை 9.00 மணியளவில் இராமநாதபுரம் அரன்மனை முன்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கட்சி, அமைப்பு பேதமின்றி உணர்வாளர்கள் அனைவரும் ஒன்று கூடி இந்த அறநெறி போராட்டத்தில் பங்கெடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இசுலாமிய அமைப்புகளில், பாப்புலர் ஃப்ரன்ட், கேம்பஸ் ஃபரன்ட், எஸ்.டி.பி.ஐ , த.மு.மு.க , மனித நேய மக்கள் கட்சி, இன அழிப்பிற்கெதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் என பல்வேறு பட்ட ஒத்த கருத்துடைய அமைப்பினர்கள் அழைக்கப்பட்டுள்ளார்கள். இதை பார்க்கும் தோழர்கள் இதையே அழைப்பக ஏற்று இந்த உணர்வு போராட்டத்தில் கலந்து  கொள்ளுமாறு உங்களை அழைக்கிறோம். இந்த போராட்டம் அனைத்து அமைப்பினராலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை முன்னின்று ம.தி.மு.க தோழர் சுப்பு (பஜாஜ்) ஒருங்கினைத்து வருகிறார்.மேலதிக தகவல்களுக்கு தோழர் சுப்பு : 9786699060 அல்லது முகவைத்தமிழன் : 9047507665

இவன்
இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்
இராமநாதபுரம் மாவட்டம்


No comments: