Sunday, March 03, 2013

பி.ஜே போன்றவர்கள் இல்லையென்றால்.. பி.ஜே.பி எப்படி வளரும்?



இஸ்லாத்தின் தனித்துவத்தைப்
பேசுவதன் வாயிலாக..
பொது சமூகத்திடம் இருந்து
முதலில் அந்நியப்படுத்த வேண்டும்.

பொது சமூகத்திடம் மட்டும் இன்றி,
சொந்தச் சமூகத்திடம் இருந்தும்
வழிபாட்டை முன்வைத்து
அதை வெற்றிகரமாக..
அந்நியப்படுத்த வேண்டும்.

பிறகு பொதுவான போராட்டங்கள்,
சமூகக் கோரிக்கைகள் போன்றவற்றில்
யாரோடும், எப்போதும், எந்த சூழலிலும்
இணைந்து செயல் படக் கூடாது.

சிறுபான்மைச்சமூகங்கள்
பொது அரசியல் நீரோட்டத்தில்
மற்ற சமூகங்களால்
வெறுத்து
எப்படி ஒதுக்கப்பட வேண்டும்?
என்கிற..
எதிரிகளின் தீர்மானத்தை
நிறைவேற்றப் பாடுபடும்

அண்ணன் பி.ஜே போன்றவர்கள்
மட்டும் இல்லையென்றால்..
பி.ஜே.பி எப்படி வளர முடியும்?
நன்றி : இயக்குனர் அமீர் அப்பாஸ்

No comments: