Thursday, February 28, 2013

தீப்பொறி ஆறுமுகத்தின் வாரிசிடம் இருந்து அல்லாதான் காப்பாத்தனும்...

தீப்பொறி ஆறுமுகம் என்றொரு
தி.மு.க. பேச்சாளர் இருக்கிறார்.
ஆபாசச்சொற்களால்..
வசைப் பாடுவதில் வல்லவர்.

அவருக்குப்பின்னால்..
அந்த வெற்றிடத்தை
பி.ஜைனுல் ஆபிதீன்
நிரப்பி விட்டார்.

மனித நேய மக்கள் கட்சியை
மாமா கட்சி என்கிறார்.

கமல்ஹாசனின் திரைப்படத்தை
கருத்தியல் சார்ந்து விமர்சிக்காமல்
அவரின் அந்தரங்க வாழ்வு குறித்து
வரம்பு மீறிய அவதூறு பரப்புகிறார்.

பாலியல் வக்கிரங்களால்
நிரம்பிய தன் மனதை
குப்பைக்கூடையைப் போல
வைத்திருக்கும்..
இவர் மார்க்க அறிஞராம்.
மாபெரும் வழிகாட்டியாம்
.

போதிய அளவு
கல்வியறிவு பெறாத
இஸ்லாமிய சமூகத்தை
இவரைப்போன்ற
கண்ணியமற்றவர்கள்
களங்கப்படுத்துகிறார்கள்..!

இவரிடம் இருந்து..
இஸ்லாமிய சமூகத்தை..
எல்லாம் வல்ல
அல்லாஹ் தான்
காப்பாற்ற வேண்டும்..! - நன்றி இயக்குனர் அமீர் அப்பாஸ்

No comments: