Wednesday, January 09, 2013

எல்லா ஆண்மாக்களும் மரணத்தை சுவைத்தே தீரும்

எல்லா ஆண்மாக்களும் மரணத்தை சுவைத்தே தீரும்




ரிஸானா நஃபீக்

என் பெயரால்

முக நூல்களில்

அகநூல்களில்

பிரநூல்களில்

தர்க்கம்புரியும்

தர்க்கவாதிகளே

உங்களோடு

சிலநிமிடங்கள்

நான் ஒன்ரும் கோழை அல்ல

அழுதுபுலம்பி ஓடி ஒழிந்துகொள்ள

நான் எப்போதும்

அன்னையர்கள்

ஆயிஷா , பாத்திமா

பாசறையில்

பக்குவப்பட்டவள்

திருமறையின்

நபிவழியில்

ஷரியா நன்னெறியில்

மரணித்துப்போவதில்

மனவேதனை ஒன்றும் இல்லை

உங்களுக்கெல்லாம் ஒன்றுமட்டும் சொல்லிக்கொள்ள ஆசை எனக்கு

எனக்காக கண்ணீர்வடிக்க வேண்டாம்

ஏன் பிராத்தனைகூட செய்யவேண்டாம்

குருவிக்கூடு போன்ற என் குடும்பத்தைகொஞ்சம் எட்டிப்பாருங்கள்

அல்லாஹ்வின் மீது ஆணையாக என் அண்ணை அழமாட்டாள்

தயவுசெய்து ஆறுதல் என்ற பெயரால்

அவளைநீங்கள் கோழை ஆக்கி விடாதீர்கள்

உங்களால் முடிந்தால்

உங்கள் ஆண்பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுங்கள்

சீதனம் என்பது குடும்ப அனுமதியோடு செய்யப்படும் விபச்சாரம் என்று

நாளை என் தங்கைகளும்

உங்கள் பெண்பிள்ளைகளும்

தீன் ஒளியில் ஊரினில் வாழட்டும்

by- காத்தான்குடி பிரகசக்கவி எம் .பீ அன்வர். ( 1/9/2013 )

No comments: