Wednesday, January 09, 2013

நீயே எங்களின் முகவரி...

தலைவா
நாங்கள் அடையாளபடுத்தபட
நீயே எங்களின்  முகவரி...

எம்முல் ஊடுருவிய உன் இலட்சியங்கள்
என்றைக்குமே தீராநதி...

நீ
எரிமலையாய் எழுந்து நின்றவன்...
எதிரிகளை எளிதாய் வென்றவன்...

நீ
சிறைகளை சிரித்த முகத்துடன் வரவேற்றவன்...
சிம்மாசனங்களை தூக்கி  எரிந்தவன்...

வீரமாய் வாழ்ந்த நீ இம்மண்ணில் உரமாகினாய்...
வீரியமாய் நாங்கள் வாழ விதையாகினாய்...

ஒவ்வொரு ஆண்டு மட்டுமல்ல ஒவ்வொரு நாளும்
உன் நினைவுடந்தான் எங்கள் பயணம்...

உன்
இலட்சியங்களை வென்றெடுக்க...
இதோ உண்ணில் இருந்து புறப்பட்ட நாங்கள்...

பிறந்தவன் இறப்பது இயற்க்கை... ஆனால்
உன்போல இறந்தும் இருப்பதுதான் பிறப்பின் வெற்றி...

அன்று நீ இன்றோ நாளையோ நாங்கள்...
என்றாவது ஒருநாள் உன் போல் ஷஹீதாகி
சந்தோசமாய் உன்னை சந்திப்போம்... இன்ஷாஅல்லாஹ் 

No comments: