Monday, May 21, 2012

ஓய்வு பெற்ற முஸ்லிம் ஐ ஏ எஸ் அதிகாரியின் மகள் தனது காதலன் ரகுபதி சுந்தரம் மீது போலிஸில் புகார்

சென்னை, மே.20-ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி மகள் தனது கணவர் மீது புகார் மனு கொடுத்துள்ளார்.ரகமத் பானுஅணாநகர் திருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ரகமத் பானு (வயது 35). எம்.பி.பி.எஸ். டாக்டரான இவர் சொந்தமாக ஆஸ்பத்திரி வைத்துள்ளார். இவருடைய தந்தை ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார்.ரகமத்பானுவுக்கு ஏற்கனவே திருமணமாகி முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டார். முதல் கணவர் மூலம் ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு ரகுபதி சுந்தரம் (36) என்பவரை ரகமத் பானு காதலித்து 2-வது திருமணம் செய்து கொடார்.இனிதாக தொடங்கிய இவர்களின் இல்லற வாழ்க்கையில் புயல் வீசி விட்டதாக தெரிகிறது. நேற்று ரகமத் பானு தனது கணவர் ரகுபதி சுந்தரம் மீது திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.அடித்து துன்புறுத்துகிறார்அந்த புகார் மனுவில், தனது கணவர் தினமும் குடிபோதையில் வந்து அடித்து துன்புறுத்துகிறார் என்றும், அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கவேடும் என்றும் பரபரபான குற்றச்சாட்டுகளை சுமத்தி இருந்தார். அந்த புகார் மனு மீது பெ போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா பெகள் வன்கொடுமை தடுபுச் சட்டத்தின்கீழ் நேற்று இரவு வழக்குபதிவு செய்தார்.தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. புகார் கூறபட்டுள்ள ரகுபதி சுந்தரம் ஈரோட்டைச் சேர்ந்தவர். எம்.பிஏ. பட்டதாரியான அவர் சென்னையில் உள்ள வங்கி ஒன்றில் அதிகாரியாக வேலை பார்க்கிறார். அவரை விசாரணை நடத்தி அதன் பிறகு மேல் நடவடிக்கை எடுக்கபடும் என்று போலீசார் தெரிவித்தனர் தினத்தந்தி : 20.05.2012 http://dailythanthi.com/article.asp?NewsID=731667&disdate=5/20/2012&advt=2

No comments: