Thursday, September 30, 2010

இந்தியா இந்துயா ஆனது

அறுபது ஆண்டுகாலமாக கோமாவில் கிடந்த நீதி இன்று ஒரேயடியாய் செத்து விட்டது...

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...

நல்லடக்கமா அல்லது தகனமா... அது... (அதாங்க... மேல்முறையீடு செய்தபின்னர் வரணுமே ...சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு... அதுதான்...) அது எப்போது என்று தெரியவில்லை.

இருபங்கு இந்துக்களுக்கும் ஒருபங்கு முஸ்லிமுக்கும் என்னடா நீதி.
அநேகமாய், இன்று முஸ்லிம்களிடம் கொடுக்கப்பட்ட மீதம் உள்ள மூன்றில் ஒரு பகுதி நிலத்தையும் அன்று முழுசாய் பிடுங்கிக்கொண்டு அம்போவென முஸ்லிம்களை ஓட ஓட விரட்டி அடித்து அனுப்பப்போகிறார்கள், சுப்ரீம் கோர்ட்டில்...

என்னைக்கேட்டால், முஸ்லிம்கள் முட்டாள்த்தனமாய் மேல்முறையீடு எல்லாம் செய்யாமல், ஓரமாய் தரப்பட்ட அந்த ஒரு துக்கடா நிலத்தை தங்கள் மயான நிலமாக ஆக்கிக்கொள்ள கேட்டுக்கொள்கிறேன். இந்தியாவில் மதக்கலவரத்தில் கொல்லப்படும் அனைத்து முஸ்லிம்களையும் கொண்டு போய் அங்கே அடக்கம் செய்யலாம்.

இனி மேலும் மேலும் பல பல மசூதிகளில் இரவோடு இரவாக கதவை-பூட்டை உடைத்து ஹிந்து கடவுள் சிலைகளை உள்ளே வைத்து அப்புறம் கேஸ் போட்டு அந்த மசூதிகளை பூட்டி பாழடைய வைத்து பின்னர் ஒருநாள் இடித்துத்தள்ளிவிட்டு அவற்றை தங்கள் வசமாக்கிக்கொள்ள ஹிந்துத்துவாக்களை உற்சாகப்படுத்தும்படியான ஒரு கெட்ட அழிவுப்பாதையின் தொடக்கம்தான் இன்று வந்த இந்த தீர்ப்பு.

வாழ்க ... இந்துயா...

நன்றி ... அநீதி மன்றம்...

1 comment:

ஹேராம் said...

காரணம் இந்தியா இந்துக்களுக்குச் சொந்தமான நாடு. சிறுபான்மை இனமான நீங்கள் அடிபட்டுத்தான் ஆக வேண்டும். வேறு வழியே இல்லை!இதே தீர்ப்பு முஸ்லிம்களுக்கு சாதகமாக அமைந்திருந்தால் இந்நேரம் இந்தியா முழுதும் கலவர பூமியாகியிருக்கும். முன்பு மும்பையில் பேண்டைக் கழற்றிக் காண்பிக்கச் சொல்லி அடித்துக் கொன்றது போல் பல ஆயிரம் இஸ்லாம் நண்பர்களை நீங்கள் இழந்திருப்பீர்கள். எனவே இந்தத் தீர்ப்பால் நீங்கள் மகிழ்ச்சி கொள்ள வேண்டுமேயொழிய கோபம் கொள்ளக் கூடாது!

Dont angry... Be cool....