Sunday, April 26, 2009

ஏன் முஸ்லிம்கள் இராமநாதபுரம் தொகுதியில் மட்டும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க கூடாது?

ஏன் இஸ்லாமியர்கள் தி.மு.க விற்கு வாக்களிக்க வேண்டும் ?

• 1960 முதல் தி.மு.க ஆட்சியமைத்த காலத்தில் இருந்து ஒவ்வொரு தி.மு.க ஆட்சியின் போதும் ஏனைய ஆட்சிகளில் மறுக்கப்பட்டு வந்த சமூக நீதி இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டது.

• இஸ்லாமியர்கள் கல்வி அறிவு பெற்று வேலை வாய்ப்புக்களிலும், பொருளாதாரத்திலும் ஏனைய சமூகத்தினரை போல் முன்னேற வேண்டும் என்ற காரனத்தினால் டாக்டர் கலைஞர் அவர்கள் 1960 ல் தான் ஆட்சியமைத்தவுடன் இஸ்லாமிய சமூகத்தினருக்காக முதலில் மதுரையில் வக்பு வாரிய கல்லூரி அமைக்க இட ஒதுக்கீடு செய்து கல்லூரி கட்ட நிதி ஒதுக்கினார். பின்னர் அது பத்தாது என்று சென்னையில் கலைஞரின் அரசியல் குரு காயிதே மில்லத் பெயரில் கல்லூரி அமைக்க இட ஒதுக்கீடு செய்து கல்லூரி கட்ட நிதி ஒதுக்கினார்.

• உருது மொழி பேசக் கூடிய சிறுபான்மையின மக்களுக்காக உருது அக்காடமி அமைத்து தந்தார் தமிழினக் காவலர் கலைஞர்; அவர்கள்.

• 1990 முதல் முஸ்லிம் சமுதாயத்தினரை குறிவைத்து ஜெயலலிதாவாலும் மதவெறி பா.ஜ.க வாலும் போடப்பட்ட ஆயிரக்கணக்கான தடா மற்றும் பொடா வழக்குகளை விடுதலை செய்து அவற்றை சாதாரன வழக்குகளாக மாற்றி தடா சட்டத்தை ரத்து செய்ய வைத்தார்.

• ஜெயலலிதா ஆட்சியில் முஸ்லிம்களால் என்ன செய்து விட முடியும் என்ற அகம்பாவத்தில் முஸ்லிம்களின் ஜீவாதார உரிமையான வக்பு வாரியத்திற்கு முஸ்லிமை நியமிக்காமல் ஒரு முஸ்லிம் அல்லாத நபரை அமைச்சராக நியமித்தது. ஆதை மாற்றி டாக்டர் கலைஞர் அவர்கள் தனது ஆட்சியில் இரன்டு முஸ்லிம்களுக்கு அமைச்சர் பதவி அளித்து ஒரு முஸ்லிமை வாரியத் தவைராக ஆக்கியது.

• முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 3.5 மூ இட ஒதுக்கீடு. மறுக்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்கியது.

• உலமாக்கள் நல வாரியம் அமைத்து உலமா பெருமக்களின் நீண்ட கால அவல நிலைக்கு முற்றுப் புள்ளி வைத்தது.

• பி.ஜே.பியின் நீண்ட நாள் கணவான பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெறிவித்து அதை வராமல் தடுத்து நிறுத்தியது.

• ஜெயலலிதாவால் முதல் முறையாக சமுதாயத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக புகுத்தப்பட்ட 'தலித் முஸ்லிம் என்ற வாசகத்தை நீக்கியது.

• ஏழை சிறுபான்மை குடும்பங்களுக்கு எட்டாக் கனியாக இருந்த கேஸ் அடுப்பு, தொலைக்காட்சி பெட்டி முதலியவற்றை இலவசமாக வழங்கியது.

• ஏழை விவசாயிகளின் கடன் தள்ளுபடி, ஒரு ரூபாயில் அரிசி, சிறுபான்மை மானவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் என வழங்கியது. இலவசமாக முஸ்லிம் மாணவர்களுக்கான தொழில் பயிற்சி மற்றும் கல்வி திட்டம்.

• அப்பாவி ஊனமுற்ற சிறைவாசியான மதானிக்கு ஜெயலலிதாவால் மறுக்கப்பட்டு வந்த அவரது நோய்க்கான சிகிச்சை அளிக்க உத்தரவிட்ட காரனத்தால் முஸ்லிம் அதிகாரி என்ற ஒரே காரனத்தல் உள்துறை செயலாளராக இருந்த முனீர் ஹோடாவை தேச துரோக குற்றம் சாட்டி ஜெயலலிதா பதவி நீக்கம் செய்தார். கலைஞர்; ஆடசிக்கு வந்தவுடன் முதல் காரியமாக முனீர் ஹோடாவின் பதவி நீக்க உத்தரவை ரத்து செய்து மீண்டும் பதவியில் அமர்த்தி முஸ்லிம்களுக்கு பாதுகாப்பான உணர்வை ஏற்படுத்தியது.
ஏன் சிறுபான்மை இனத்தவர்கள் இந்த தேர்தலில் இராமநாதபுரம் தொகுதியில் மட்டும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க கூடாது?

• முஸ்லிம் வேட்பாளர்களுக்கு சிறுபான்மை சமுதாயத்தினர் வாக்களித்தால் ஏறத்தாள நமது சமுதாயத்தின் 185,000 வாக்குகள் பிறிந்து போகும் அதனால் மிக எளிதாக பி.ஜே.பி (B.J.P) மற்ற சமூக ஆதரவுடன் வெற்றி பெறக்கூடிய சூழ்நிலை உருவாகிறது. (செட்டியார், நாடர், அகமுடையார் என பல சங்கங்கள் பி.ஜே.பி க்கு ஆதரவு தெறிவித்துள்ளன)

• தி.மு.க வேட்பாளர் திரு. சிவக்குமார் (எ) ரித்தீஸ் அவர்கள் ஜாதி, மத பேதமற்ற ஒரு சிறந்த மனிதராவார். இது வரை அவர் சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக செயல்பட்டதாக எந்த ஒரு ஆதாரமான தகவல்களும் இல்லை. திரு. சிவக்குமார் (எ) ரித்தீஸ் அவர்கள் நமது சமுதாய மக்கள் மீது அளப்பாறிய பாசமும், அன்பும், மறியாதையும் கொண்ட கண்னியமான நபர்.

• மற்றவர்களுக்கு வாக்களித்தால் நமது மாவட்டத்தின் வாழ்வாதார திட்டமான சேது சமுத்திர திட்டம் ரத்து செய்யப்பட்டு நம் மாவட்டம் மீண்டும் வறுமை மாவட்டமாக்கப்படும்.

முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாக்களித்து அதன் மூலம் மதவாத பா.ஜ.க (B.J.P) ஆட்சிக்கு வந்தால் நமது மாவட்டம் 'ராமர் பாலம் பெயரால் மதக்கலவரங்களை தோற்றுவித்து குஜராத்தை போல் சிறுபான்மை மக்கள் இனப்படுகொலைக்கு உள்ளாகும் அபாயம்.

• பா.ஜ.க முன்வைத்துள்ள ஹிந்துத்துவம் எனும் செல்திட்டம் இந்தியாவின் ஜனநாயகத்திற்கும், மதச் சார்பின்மைக்கும், அரசியல் சாசன சட்டத்திற்கும் ஏன் ஒட்டுமொத்த மனித சமுதாயத்திற்கும் எதிரானதாகும். நீங்கள் இந்த தேர்தலில் மட்டும் நமது தொகுதியில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதன் மூலம் இந்த செயல் திட்டத்தை செயல் படுத்தும் பா.ஜ.க வின் வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கின்றீர்கள்.

• இராமநாதபுரம் மக்களவை தேர்தலில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் பா.ஜ.க வின் வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

சிந்திப்பீர்!! கலைஞர் அவர்கள் தான்' நமது சமுதாயத்திற்கு 4 எம்.பி சீட்டுகளுக்கும் மேல (10%); வழங்க முன்வந்தார்கள் (காங்கிரஸ் -1 மு.லீக் -1 தமுமுக -1 மாநிலங்களவை – 1 (ரஹ்மான்கான்) ) ஆனால் ஒட்டுமாத்த 4 சீட்டும் தங்களுக்கே வேண்டும் என்று கேட்டு சமுதாயத்தை நட்டாற்றில் விட்டுவிட்டு இன்று உங்களிடம் கலைஞர் துரோகி என்கிறார்கள். சுற்று சிந்திப்பீர் சமுதாய நல்லுள்ளங்களே! கலைஞரா துரோகி? யார் துரோகிகள் என்பதை முடிவு செய்யுங்கள். உங்கள் வாக்குகளை நமது வேட்பாளர் திரு. சிவக்குமார் (எ) ரித்தீஸ் அவர்களுக்கு வழங்குங்கள்.

• இது சட்டமன்ற தேர்தல் அல்ல! பாராளுமன்ற தேர்தல்!! சுpந்தியுங்கள் யார் ஆட்சி வேண்டும் நமக்கு? பாபர் பள்ளியை இடித்து, நமது சமூகத்திற்கு தீவஜரவாத முத்திரை குத்திய பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சியா? ஆல்லது மதச்சார்பற்ற காங்கிரஸ் ஆட்சியா? சுpந்திப்பீர் செயல்படுவீர்.

நமது சமுதாய ஓட்டுக்களை சிந்தாமல் சிதறாமல் திரு. சிவக்குமார் (எ) ரித்தீஸ் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாரி வழங்குவீர்.

இவன்
அக்பர் ராஜா B.A.B.L
ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்
மாவட்ட தலைவர்
தொடர்புக்கு : 9047507665 - 9894262100 - 9865252519

இந்திய தேசிய மக்கள் கட்சி
மாவட்ட தலைமையகம்
66, திருச்சி ரோடு
கேணிக்கரை, இராமநாதபுரம்
தொலைபேசி : 04567 - 221545

No comments: