Saturday, March 14, 2009

IDMK யாருடன் கூட்டணி?

திரு. செல்வப் பெருந்தகையுடன் தலைவர்கள்


வரக்கூடிய லோக்சபா தேர்தலை முன்னிட்டு இந்திய தேசிய மக்கள் கட்சி தமிழகத்திலும் தேசிய அளவிலும் பல்வேறுபட்ட மாநில, தேசிய அரசியல் கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றது. சமீபத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக நிர்வாகிகளை அதன் அலுவலகத்தில் சந்தித்து இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைவர் திரு. குத்புதீன் ஐபக், ஆட்சிமக்றக் குழு உறுப்பினர் டாக்டர் பகுருதீன், முகவை மாவட்ட செயலாளர் திரு. ஜஹாங்கீர், தமிழகம் திரு. இக்பால், பொதுச் செயலாளர் திரு. வருசைக்கனி ஆசியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இராமநாதபுரம் லோக்சபா தொகுதி உள்ளிட்ட 10 தொகுதிகள் இந்திய தேசிய மக்கள் கட்சி சார்பில் கேட்கப்பட்டுள்ளது.

தேர்தல் நெருங்கி விட்ட நிலையில் பல்வேறு பட்ட தேசிய, மாநில கட்சிகள் இந்திய தேசிய மக்கள் கட்சியுடன் கூட்டண குறித்து பேசி வருகின்றன. யாருடன் கூட்டணி என்பது குறித்த இறுதி முடிவு பின்னர் அறிவிக்கப்படும் என்று இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைவர் தெறிவித்துள்ளார்.

2 comments:

திப்பு சுல்தான் said...

உ.பி யை ஆண்டு வரும் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி சிறுபான்மை மக்களின் முன்னேற்றத்திற்காக எதையும் இது வரை செய்யாத நிலையில் இந்திய தேசிய மக்கள் கட்சி அவர்களுடன் கூட்டணி அமைக்க காரணம் என்ன?

Anonymous said...

இந்திய தேசிய மக்கள் கட்சி, த.மு.மு.க, முஸ்லிம் லீக் என அனைவரும் சென்னையில் கூடி பேசியுள்ளார்கள்.