Thursday, March 12, 2009

புனித வெள்ளி, ஈஸ்டர் - ஒரு வரலாற்றுப் புரட்டு


உன்மையில் யோனாவின் அடையாளம் என்றால் என்ன? (பாகம் 2)
கிறிஸ்தவ தளத்துக்கு பதில்

தலைச்சிறந்த இஸ்லாமிய அறிஞரும், உலகலாவிய அளவில் கிறிஸ்தவர்களுக்கு குர்ஆன் மற்றும் பைபிளை ஒப்பிட்டு இஸ்லாத்தை எடுத்துரைத்தவருமான காலம் சென்ற இஸ்லாமியப் பிரச்சாரகர் சகோதரர். அஹமத் தீதாத் அவர்கள், இயேசுவின் சிலுவை மரணம் பற்றிய அவர்களின் ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக 'WHAT WAS THE SIGN OF JONAH? என்ற புத்தகத்தை வெளியிட்டார்கள். அந்த புத்தகத்தின் கருத்தை உள்ளடக்கிய ஒரு கட்டுரையை சமீபத்தில் இஸ்லாமிய இணையப்பேரவை (IIP ONLINE) தமிழில் வெளியிட்டது.

இந்த கட்டுரைக்கு பதில் என்ற பெயரில் உமர் என்ற கிறிஸ்தவர் ஆங்கிலத் தளத்திலிருந்து எடுத்து மொழிப்பெயர்த்து வெளியிட்ட கட்டுரை எந்த அளவுக்கு முரண்பாட்டையும், குழப்பத்தையும் கொண்டிருந்தது என்பதை 'உன்மையில் யோனாவின் அடையாளம் என்றால் என்ன? (பாகம் 1)' என்ற எமது பதில் கட்டுரையின் மூலம் வெளிச்சம்போட்டு காட்டி இருந்தோம்.

சகோதரர்.அஹமத் தீதாத் அவர்கள், மேற்சொல்லப்பட்ட தனது புத்தகத்தில் இயேசு சிலுவையில் அறையப்பட்ட பின்னரும் உயிருடன் தான் இருந்திருக்க வேண்டும் என்பதை பைபிளின் வசனத்தின் மூலம் நிரூபிக்கும் அதே வேலையில் மற்றொரு உன்மையையும் அதில் வெளிச்சம் போட்டு காட்டி இருந்தார்கள். அதாவது, இயேசு முன்னறிவித்ததாகச் சொல்லப்படும் 3 பகல் 3 இரவு என்ற அடையாளம் இன்றைய கிறிஸ்தவர்களின் நம்பிக்கைக்கு ஒத்துபோகாததுடன், புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் என்பது ஒரு வரலாற்றுப் புரட்டு என்பதையும் நிரூபித்திருந்தார்கள். ஆனால் அதையும் தனது மொழிப்பெயர்ப்புக் கட்டுரையின் மூலம் அந்த கிறிஸ்தவர் மறுத்திருந்தார். அந்த மறுப்பும் எந்த அளவுக்கு முரண்பாடானது குழப்பம் நிறைந்தது என்பதை இனி பார்ப்போம்:

இயேசுவிடம் ஒரு அடையாளத்தைத் காட்டும் என்று வேதபாரகரிலும் பரிசேயரிலும் சிலர் கேட்டதற்கு அவர் பின்வருமாறு பதில் அளித்தாக பைபிளில் எழுதப்பட்டுள்ளது :

இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள். ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார். - மத்தேயு 12:39

For as Jonas was three days and three nights in the whale's belly; so shall the Son of man be three days and three nights in the heart of the earth

அதாவது, யோனா தீர்க்கதரிசி மீனின்வயிற்றில் உயிருடன் இருந்தது போல தானும் 3 பகல் 3 இரவு (3 days and 3 nights) பூமியின் இருதயத்தில் இருப்பேன் என்கிறார். இந்த 3 பகல் 3 இரவு என்ற காலக்கணக்கை வைத்து தான் பல அப்பாவிக் கிறிஸ்தவர்கள், இயேசு தான் சொன்னதன் படியே சிலுவையில் அறையப்பட்டு 3 நாள் கழித்து உயிர்த்தெழுந்தார், அதன் மூலம் தங்களது 'ஆதிபாவம்' என்னும் ஜென்ம பாவம் மண்ணிக்கப்பட்டது என்று நம்பிக்கொண்டிருக்கின்றனர். இப்படித்தான் கிறிஸ்தவ மிஷினரிகள் அவர்களின் அறியாமையைப் பயன் படுத்தி நம்பவைத்துக்கொண்டிருக்கின்றன. இது தான் இன்றைய கிறிஸ்தவத்தின் அடிப்படை நம்பிக்கையும் கூட. இதை நம்பாதவன்; மோட்சம் அடைய மாட்டான் என்று சொல்வதுடன், நம்மையும் இவ்வாறு நம்புங்கள், இல்லை என்றால் நீங்கள் பரலோக இரஜ்யத்தை அடைய முடியாது என்று பூச்சாண்டி காட்டுவோரும் உண்டு. அதனால் தான் வருடந்தோரும் இயேசு சிலுவையில் அறையப்பட்ட தினத்தை புனித வெள்ளி என்றும், அதற்கு அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமையை ஈஸ்டர் அதாவது இயேசு மூன்று நாள் கழித்து உயரித்தெழுந்த தினம் என்றும் கொண்டாடுகின்றனர்.

இந்த நம்பிக்கை சரியா? இவர்கள் சொல்வது போன்று தான் பைபிளும் கூறுகின்றதா? இன்றைய அப்பாவிக் கிறிஸ்தவர்கள் நம்பிக்கொண்டிருப்பது போல் உன்மையிலேயே இயேசு 3 இரவு 3 பகல் பூமியில் இருதயத்தில் இருந்து பின்னர் உயிர்த்தெழுந்தாரா? அவர் முன்னறிவித்த காலக்கணக்கு பைபிளுடன் ஒத்துப்போகின்றதா? புனித வெள்ளியும் ஈஸ்டர் தினமும் சரியானது தானா? என்பதை எல்லாம் பைபிளின் ஒளியில் சற்று விரிவாக ஆராய்வோம்.


தொடர்ந்து படிக்க இங்கே அழுத்தவும்...

No comments: