Friday, February 27, 2009

சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் நியமனங்களை உடனே நிறைவேற்றி தாருங்கள் முதல்வர் கலைஞருக்கு பேராசிரியர்வேண்டுகோள்


சிறுபான்மை கல்வி நிறு வனங்களில் காலியாக உள்ள இடங்களில் ஆசிரியர் நியமனங்களை உடனடி யாக செய்து தரும்படியும், பணிபுரியும் ஆசிரியர்க ளுக்கு அரசு ஊதியத்தை வழங்கி உதவும்படியும் முதல் வர் கலைஞரிடம் முஸ்லிம் லீக் சார்பில் கேட்டுக் கொள்வோம். என்று பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி., தெரிவித் தார்.


சென்னை புதுக் கல்லூரியில் வரலாற்று ஆய்வு மன்றம் துவக்க விழா இன்று (வெள்ளி) நடை பெற்றது.


இந்திய யூனியன் முஸ் லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும் தமிழ்மாநில தலைவரு மான பேராசி ரியர் கே.எம். காதர் மொகி தீன் எம்.பி., சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்டு வர லாற்று ஆய்வு மன்றத்தை துவக்கிவைத்து உரையாற்றி னார்.


அப்போது அவர் குறிப் பிட்டதாவது:
இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பினை எனக்கு அளித்த கல்லூரி யின் முதல்வர், துணை முதல்வர், பேராசிரியர்கள், துறை மாணவர்கள் அனை வருக்கும் முதற் கண் எனது வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


இங்கு நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றுள்ள மாணவர்களையும் வாழ்த்த கடமைப் பட்டுள்ளேன்.


இங்கு வரவேற்புரை யாற்றுகையில் கல்லூரியின் தேவைகள் குறித்தும் பிரச்சினைகள் குறித்தும் சுட்டிக் காட்டினார்கள். குறிப்பாக கல்லூரி ஆசிரி யர் நியமன பிரச்சினை குறித்து குறிப்பிட்டார்கள்.


இன்று மாலை முதல்வர் கலைஞர் அவர்களை முஸ் லிம் லீக் சார்பில் சந்திக்க உள்ளோம். அப்போது இந்த பிரச்சினை குறித்து அவரிடம் எடுத்துக் கூறி விரைவில் நல்ல முடிவு கான வலியுறுத்துவோம் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.


சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங் களில் ஆசிரியர்களாக நிய மிக்கப்படுபவர்களுக்கு அவர்களின் பணிக்கு ஏற்ற சரியான ஊதியங்களை பெறுவதற்கு சான்றிதழ்கள் அவசியமாக இருக்கின்றன.


பல்கலைக் கழகங்கள் குறிப்பாக சென்னைப் பல் கலைக் கழகம் இந்த விஷயத்தில் இடையூறு அளிக்கும் வகையில் செயல் பட்டு வருவது நமது கவ னத்திற்கு வந்துள்ளன.


அவை விரைவில் சரி செய்யப்பட முதல்வரிட மும் அரசிடமும் வலியுறுத் துவோம்.
ஏற்கெனவே, இது போன்ற பிரச்சினை திருச்சி ஜமால் முஹம்மது கல்லூ ரிக்கு ஏற்பட்டது. அதனை கல்லூரி சார்பில் நாம் எதிர் கொண்டு வெற்றி பெற் றோம் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.


நேற்று முன்தினம் பாரா ளுமன்றத்திலே சிறுபான் மையினர் கல்வி திருத்த மசோதா ஒன்று நிறை வேற்றப்பட்டுள்ளது. நான் காண்டுகளுக்கு முன்பு நிறைவேற்றப்பட இருந்த இந்த மசோதாவில் பல் வேறு குறைபாடுகள் இருந்தன. அவற்றையெல் லாம் நாம் சுட்டிக்காட்டி மத்திய அரசிடம் தொ டர்ந்து வலியுறுத்தி வந் தோம்.


இப்போழுது மத்திய அரசு அந்த தவறுகளை குறைபாடுகளை சரிசெய்து திருத்தப்பட்ட மசோ தாவை தாக்கல் செய்துள் ளது.


சிறுபான்மையினர் கல்வி நிலையங்களை தொடங்க மாநில அரசின் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டிய நிலை இத் துனை காலமும் இருந்து வந்தது.


மாநில அரசுகள் அவ் வளவு எளிதாக என்.ஓ.சி., கொடுப்பது கிடையாது. இந்தப் பிரச்சினையை கருத்தில் கொண்டு இப் போழுது தாக்கல் செய்யப் பட்டுள்ள புதிய மசோதா வில் சிறுபான்மையினர் மாநில அரசின் அனுமதி இல்லாமலேயே கல்வி நிலையங்களை துவங்கி நடத்திட வலிவகை செய் யப் பட்டுள்ளது என்பதை யும் இந்த நேரத்தில் குறிப் பிட விரும்புகின்றனர்.


இப்பொழுதுள்ள நமது தமிழக அரசானாலும், மத் திய அரசானாலும் இரண்டு அரசுகளுமே சிறு பான்மையினர் நலனை அக் கரை கொண்டு அவர்க ளின் உணர்வுகளை மதித்து நடக்கின்றன.


இத்தகைய நல்லாட் சியில் சிறுபான்மையினர் கல்வி நிலையங்களில் ஆசி ரியர் நியமனங்கள் நல்ல முறையில் நடந்தேறும் என்று நான் உறுதியாக நம்புகின்றேன். இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேசும் பொழுது குறிப்பிட்டார்.


இந்நிகழ்ச்சியில் புதுக் கல்லூரி முதல்வர் டாக்டர் அல்தாப் தலைமை தாங் கினார், பேராசிரியர் ஜப ருல்லா கான் வரவேற்புரை யாற்றினார். துணை முதல் வர் நயீமுர் ரஹ்மான், பேராசிரியர் முஹம்மது மன்சூர், ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் துணை முதல்வர் டாக்டர் நிஜா முத்தீன், டாக்டர் சே.மு.மு. முஹம்ம தலி, பேராசிரியர் நத்தர் ஷா, இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைமை நிலைய செயலாளர் அபூபக்கர், மாநில செய லாளர் கமுதி பஷீர், தென் சென்னை மாவட்ட தலை வர் இஸ்மத் பாட்சா, செயலாளர் ப+வை முஸ் தபா, ஒருங்கினைப்பாளர் பீர் முஹம்மது, நத்தம் ஜஹாங்கீர், ஆலம் கான், கவிஞர் ஷேக் மதார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments: