Thursday, February 19, 2009

பாராளுமன்ற தேர்தல்_ கருத்துக்கணிப்பு

பிரபல தொலைக்காட்சி மற்றும் ஆய்வு நிறுவனங்கள் (CNN-IBN CSDS) இணைந்து நடத்திய பாராளுமன்ற தேர்தல் முடிவு முன்னோடி கணிப்பு நேற்று (17/2/09) இரவு 10 மணிக்கு CNN-IBN தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டது.

நாளை பாராளுமன்ற தேர்தல் நடந்தால் மக்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்று மக்கள் வினவப்பட்டு அதன் அடிப்படையிலான - முன்னோடி கணிப்புகள் தரப்பட்டன.

தமிழகத்தில் அ.தி.மு.க - வலுவடைந்து வருகிறதாம். கடந்த இரண்டு ஆண்டுகளில் தி.மு.க தனது செல்வக்கை இழந்து விட்டதாம். .

2007ல் 67 சதவிகித வாக்களர்கள் தி.மு.க கூட்டனியின் செயபாடுகள் திருப்திகரமாக உள்ளதாக கூறியதாகவும் ஆனல் தற்போது (2009) 63 சதவிகிதத்தினரே அவ்வாறு கூறுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

தி.மு.க மற்றும் அ.தி.மு.க தலா 28 சதவிகித வாக்குகளையும் காங்கிரஸ் 13% வாக்குகளை பெறுமென்று கணிக்கப்பட்டிருக்கிறது..

நடிகர் விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிட கழகம் 9 சதவிகித வாக்குகளை பெற்று மற்ற கட்சிகளை விட குறிப்பாக பா.ம.க (4%), இடது சாரிகள் (3%) விட முன்னனியில் உள்ளது.

அதிகமாக வாக்குகளை பெறும் என்று எதிர்ப் பார்க்கப்பட்ட ம.தி.மு.க ஒரே ஒரு சதவிகித வாக்கைத்தான் பெறுமாம். வகுப்பு வாத பா.ஜ.க வரும் தேர்தலில் தமிழகத்தில் 6 சதவிகித வாக்குகளை பெறும் என்று இந்த முன்னோடி முடிவுகள் கணித்திருப்பது - அதிர்ச்சிடனும் - துக்கத்துடனும் சற்று சிந்திக்க வைக்கிறது.

அ.தி.மு.க வுக்கு செல்வாக்கு யார் மத்தியில் உயர்ந்திருக்க்கிறது தெரியுமா?

உயர் வகுப்பினர்கள் மத்தியில் 35 சதவிகிதமும்வன்னியர்கள் மத்தியில் 33 சதவிகிதமும் நாடார்கள் மத்தியில் 17 சதவிகிதமும்பெண்கள் மத்தியில் 13 சதவிகிதமும் அதிகரித்திருக்கிறதாம்.

தமிழக இஸ்லாமியர் மத்தியிலும் அ.தி.மு.க வின் செல்வாக்கு அதிகரித்திருக்கிறதாம்.கடந்த தெர்தலில் அதிமுக வுக்கு வாக்களித்த முஸ்லிம்களின் எண்ணிக்கையை விட 10 சதவிகித அதிக தமிழக முஸ்லிம்கள் இந்த முறை அ.தி.மு.க வுக்கு வாக்களிப்பார்களாம்.

இயக்கமின்றி முடங்கி கிடக்கும் அமைப்புக்கள் நிறைய இருந்தும்- நிறைவில்லாமல் - புற்றீசல்களாய் புதுப்புது இயக்கங்களை தொடங்கி வரும் சுயநலமில்லாத (!) 'சமுதாயக்காவலர்களின் (?)' 'அதாபு' தாங்காமல் - தமிழக முஸ்லிம்களே சலிப்படைந்து 'அம்மாவுக்கு' வாக்களித்து விடுவோம் என்று முடிவு செய்து விட்டார்கள் போலிருக்கிறது..

நன்றி
தோழமையுடன் பிறைநதிபுரத்தான்

No comments: