Sunday, February 15, 2009

நாடாளுமன்ற தேர்தல் குறித்து சோனியாகாந்தியுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் டெல்லியில் ஆலோசனை

புதுடெல்லி, பிப்.15-

நாடாளுமன்ற பொதுத் தேர்தல் அண்மையில் நடைபெற உள்ள சூழ்நிலையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சோனியா காந்தியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்கள் இ. அஹமது, தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் ஆகியோர்சந்தித்து பேசினர்.

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் அண்மையில் நடைபெறவிருப்பதால் அனைத்துக் கட்சிகளும் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் இறங்கியுள் ளன.

தேசிய அளவில் புதிய எழுச்சி பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வரும் நாடாளுமன்ற தேர்தலில் வடஇந்தியாவிலும் பல தொகுதிகளில் போட்டியிடுவதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

இதன் முயற்சியாக உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் மாநில அளவிலான இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பிரதிநிதிகள் மாநாடு நடத் தப்பட்டு தேர்தல் தொடர்பாக முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தோழமை நிலைப்பாடு மற்றும் வடஇந்திய மாநி லங்களில் போட்டியிடு கின்ற சூழ்நிலைகள் குறித்தும் ஆலோசித்து வருகிறது.

இன்று காலை புதுடெல்லியில் உள்ள தேசியத் தலைவரும், மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சருமான இ.அஹமதுவின் இல்லத்தில் உத்தரபிரதேச மாநிலத்தின் முஸ்லிம் லீக் நிர்வாகிகளின் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியத் தலைவர் இ.அஹமது தலைமையில் தேசிய பொதுச்செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி., முன்னிலையில் நடைபெறும் இக்கூட்டத்தில் தேசிய துணைத் தலைவர் வழக்கறிஞர் இக்பால் அஹமது, தேசிய செயலாளர் குர்ரம் ஹனீஸ் உமர், உ.பி. மாநிலத் தலைவர் மவ்லானா கவுஸர் ஹயாத்கான், உ.பி. மாநில பொதுச் செயலாளர் டாக்டர் மத்தீன்,
உ.பி. மாநிலச் செயலாளர்கள் நிஸார் மஹமூத், சௌத்ரி ரஸீயுதீன், இன்ஜினியர் அலி ஆரீப் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழ்நாட்டில்
தி..மு.க. கூட்டணி...
வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 40 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடும் வகையில்- அரசியல் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் மாநாடுகளை நடத்தி வருகிறது.
கேரள மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையில் அமைக்ப்பட்டுள்ள கூட் டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முஸ்லிம்கள் வாக்குகளை ஒருமுகப் படுத்தும் நிகழ்ச்சியாக பல்வேறு ஒருங்கிணைப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

சோனியாகாந்தியுடன்
முஸ்லிம் லீக் தலைவர்கள் சந்திப்பு
இதனிடையே நேற்றைய முன்தினம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவருமான சோனியா காந்தியை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியத் தலைவர் இ. அஹமது, தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் ஆகியோர் சந்தித்து நாடாளுமன்ற தேர்தல் குறித்து விவாதித்துள்ளனர்.
இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக எமது டெல்லி செய்தியாளர் தெரிவிக்கிறார்.

2 comments:

Anonymous said...

kangiras iduvari muduvula kuttunadu pattama innum anga poi picca edukka poittanunga....

up la ulla tamil nattula ulla porupalarkal perai potturungana uruppinar pera poda sollunga .. perey irukkadu.. inda E. ahmad inai amaichar padavi vangi avan kudumbattai correct pannikittu ottu motta muslimaiyum adaku vaikiran..

Anonymous said...

orey comedy tan .....