Sunday, August 31, 2008

புதிய கட்சி உதயம் : தேசிய ஜனநாயக் கட்சி (DJK)

மேடையில் தேசிய ஜனநாயக கட்சி (DJK) தலைவர்கள்

தமிழகத்தில் முஸ்லிம்களின் அரசியல் விழிப்புணர்வை வெளிப்படுத்தும் விதமாக மீண்டும் ஒரு புதியதோர் அரசியல் கட்சி உருவாகியுள்ளது. முன்னால் வெளிவந்து தற்போது நின்று போய்விட்ட "மாஸ்ட்டர் ரிப்போர்ட்டர்" பத்திரிகையின் ஆசிரியரும் பத்திரிகையாளருமான திரு. வசீகரன் (எ) நாசர் அவர்கள் தமிழ் முஸ்லிம் அரசியல் வெளியில் தனது பங்கிற்கு ஒரு புதிய அரசியில் கட்சி ஒன்றினை நிறுவி அதற்கு தேசிய ஜனநாயக கட்சி (DJK) என்று பெயரிட்டள்ளார்கள்.

தேசிய ஜனநாயக கட்சி (DJK) நிறுவனர் வசீகரனின் வீரமிகு உரை

தேசிய ஜனநாயக கட்சி (DJK) யின் முதல் அரசியல் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் சென்னை மண்ணடியில் அமைந்துள்ள தம்புச்செட்டி தெருவில் கடந்த 09.08.2008 அன்று வெகு விமரிசையுடன் நடைபெற்றது.தேசிய ஜனநாயக கட்சி (DJK) யின் நிறுவனரும் "மாஸ்ட்டர் ரிப்போர்ட்டர்" பத்திரிகையின் ஆசிரியரும் பத்திரிகையாளருமான திரு. வசீகரன் (எ) நாசர் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.தேசிய ஜனநாயக கட்சி (DJK) தலைவர் திரு. எம் ரபீக் அஹமது அவர்கள், பொதுச்செய்லாளர் திரு. தர்மராசன், து.பொதுச் செயளாலர் திரு. அமீன் அவர்கள்,துனைத் தலைவர் திரு. சந்தோஷ் குமார் ஜாலன் அவர்கள், வர்த்தகர் அணி செயலாளர் திரு. ஜாகீர் அவர்கள், அமைப்புச் செயலாளர் ராஜ்குமார், நிர்வாகக்குழு உறுப்பினர் திரு. ஆறுமுகம், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திரன்டிருந்த மக்கள் வெள்ளம்

தேசிய ஜனநாயக கட்சி (DJK) யின் நிறுவனரும் "மாஸ்ட்டர் ரிப்போர்ட்டர்" பத்திரிகையின் ஆசிரியரும் பத்திரிகையாளருமான திரு. வசீகரன் (எ) நாசர் அவர்களின போற்றத்தக்க சிறப்புரையை பொதுக்கூட்டத்தில் பெருந்திரளாக கலந்து கொண்ட ஆயிரக்கனக்கான மக்கள் பாராட்டினர்.

செய்திகள் மற்றும் புகைப்படம்

திரு. விஜயன்
ஊடக செயலாளர்
தேசிய ஜனநாயக கட்சி (DJK) தொலைபேசி : 9003260744

No comments: