Thursday, December 06, 2007

பாபரி மஸ்ஜித் மீட்பு போராட்டம்

திரன்டிருந்த மக்கள் கூட்டத்தின் ஒரு பகுதி

இன்று தமிழகமெங்கும் முஸ்லிம்களால் பர்பரி மஸ்ஜித் மீட்பு நாள் அனுசரிக்கப்பட்டது. சங்பரிவார தீவஜரவாதிகளால் இடிக்கப்பட்ட பாபரி மஸ்ஜிதை மீண்டுமு் கட்டித்தர கோரியும் முஸ்லிம்களின் உரிமைகளை கோரியும் தமிழகமெங்கும் முஸ்லிம்கள் த.மு.மு.க வினரோடு போரட்டங்களில் ஈடுபட்டார்கள்.

மாவட்ட தலைவர் சலிமுல்லா கான்

முகவையிலும் பாபரி மஸ்ஜித் மீட்பு போராட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. த.மு.மு.க மாவட்ட தலைவர் திரு. சலிமுல்லா கான் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் மாவட்டடெங்கும் இருந்து வந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டு எழுச்சியுடன் கோசமிட்டனர்.

திரன்டிருந்த மக்கள் கூட்டத்தின் ஒரு பகுதி

முகவை மூன்றாக பிரிக்கப்பட்டு அம்மாவட்டத்தில் மூன்று இடங்களில் த.மு.மு.க வினர் போராட்டங்களை இதே தினத்தில் நடத்தினாலும் மூன்று இடங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் பெருந்திரளாக வந்து கலந்து கொண்டனர்.

பதாகை தாங்கி கோசமிடும் முஸ்லிம் ஒருவர்

நூற்றுக் கணக்கான வாகனங்களில் வந்திருந்த முஸ்லிம்கள் த.மு.மு.க வினர் முகவை மாவட்ட நீதிமன்றமும் மாவட்ட ஆட்சியர் அலுவலகமும் அமைந்துள்ள வளாகத்தின் வெளியே நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

போராட்டத்திற்கு வந்த மக்கள் வந்த நூற்றுக்கணக்கான வாகனங்களின் ஒரு பகுதி

சித்தார்கோட்டையில் நடைபெற்ற கொலையில் அப்பாவி முஸ்லிம்கள் மீது பதியப்பட்ட வழக்கை வாபஸ் பெறவேண்டுமெனவும் பாபரி மஸ்ஜிதை மீளக் கட்டித்தர வேண்டும் எனவும், குஜராததில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களின் இனப்படுகொலைக்கு காரனமான மோடி அரசை கலைத்து அவனை கைது செய்ய வேண்டும் எனவும் கோசங்கள் எழுப்பப்பட்டன.

போராட்டத்திற்கு வந்த மக்கள் வந்த நூற்றுக்கணக்கான வாகனங்களின் மற்றொரு பகுதி



1 comment:

சிந்திக்க உண்மைகள். said...

இராம சென்ம பூமிப் பிரச்சினைக்கு மரண அடி கொடுக்கும் அறிவாயுதம்

பந்தர்பூர், பூரி செகந்நாதர், சபரிமலை அய்யப்பன் திருப்பதி கோயில் இவையெல்லாமே ஒரு காலத்தில் புத்தர் விகாரமே!

பந்தர்பூர், பூரி செகந்நாதர், சபரிமலை அய்யப்பன் திருப்பதி கோயில் இவையெல்லாமே ஒரு காலத்தில் புத்தர் விகாரமே!

பந்தர்பூர், பூரி செகந்நாதர், சபரிமலை அய்யப்பன் இவையெல்லாமே ஒரு காலத்தில் புத்த விகாரங்களாகேவே இருந்து, பிற்காலத்தில் இந்துக் கோயில்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இந்து மதக் கோயில்களை எல்லாம் மாற்றி மீண்டும் புத்த விகாரங்களாக வடிக்கும் ஒரு காரியத்தில் ஈடுபட வேண்டியிருக்கும்.

பாபர் மசூதி இருக்கும் இடம் இராமன் பிறந்த இடம்: இராமன் கோயிலை இடித்துவிட்டுத்தான் அந்த இடத்திலேயே பாபர் மசூதி கட்டப்பட்டுள்ளது என்று பார்ப்பனர்கள் கூறிப் பாபர் மசூதியை இடித்துவிட்டு, அதே இடத்திலே இராமர் கோயில் எழுப்பப்பட வேண்டும் என்று வெறிப் பிரச்சாரம் செய்து, நாட்டில் மதத்தின் பெயரால் இரத்த வெள்ளத்தைப் பெருக்கோடச் செய்யத் திட்டமிட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில்

“Tirupati Balaji was a Budhist Shrine” என்ற ஒரு நூல் வெளி வந்துள்ளது. அதை மராட்டியத்தைச் சேர்ந்த டாக்டர் கே. சமனாதாசு F.R.C.S என்பவர் எழுதியுள்ளார். இந்நூலைப் பற்றிய குறிப்புரை இதோ:-

Lord Venkatesvara, the Presiding Deity on the famous Tirumala Hills. popularly known as Balaji of Tirupati. is an important Vaishnava Shrine of South India. The nature of Lord Venkatesvara has always been a matter of dispute for centuries.

Some Consider him as Vishnu. some as Siva. some as Sakthi, some as Skanda and some as Harihara.

Infact it was an old Buddhist worshlp during the general fall of Buddhism. He was a god of Tribal Buddhists and was Vaishnavized by pundits to his present form.

The weapons on Him are not original but provided at a latter date. How this was brought about. is explained with all historical and archaeological evidences/ Cults of Vitthala of Pandharpur, Jagannatha of puri. Ayappa on Sabarimla etc., which were originally Buddhist are discussed and many other Buddhist shriness which were hinduized and the history of india in general and South india in particular from, seventh to tenth century, during the period of fall, of Buddhism and rise of Brahmanic Tirupatl,is traced.”

“வெங்கடாசலபதி கடவுள் இருக்கும் திருப்பதி கோயில் என்பது தென்னகத்தில் உள்ள புகழ் பெற்ற விட்டுணுக் கோயிலாகும்.

வெங்கடாசலபதியின் வடிவம் பல நூற்றாண்டுக் காலமாகப் பிரச்சினைக்குரியதாகவே இருந்து வந்திருக்கின்றது. சிலர் அந்தக் கடவுளை விட்டுணு என்றும், வேறு சிலர் சிவா என்றும், சக்தி என்றும் கந்தா என்றும் அரி அரண் என்றும் பலவாறாகக் கருதுகிறார்கள்.

உண்மையிலேயே திருப்பதி கோயில் என்பது தொடக்கத்தில் புத்தர் கோயிலாகவே இருந்தது; உள்ளே இருக்கும் மூர்த்தி சிலை என்பது புத்தபிரானே ஆவார்.

புத்த மார்க்கம் இந்தியாவில் வீழ்ச்சி அடைந்தபோது, அது பார்ப்பனீயத்தால் தங்களுடைய வழிபாட்டிக்குரிய இடமாக மாற்றப்பட்டது.

புத்தர் கோயில் வைணவ கோயிலாக இப்போதுள்ள தன்மையில் பார்ப்பன மயமாக்கப்பட்டது அப்பொழுது இந்தப் பார்ப்பனப் பண்டிதர்களால். தொல்பொருள் ஆய்வு, வரலாற்று ஆய்வு அடிப்படையிலே இந்தக் கருத்தை இந்நூலில் நூலாசிரியர் நிறுவியுள்ளார்.

பந்தர்பூர், பூரி செகந்நாதர், சபரிமலை அய்யப்பன் இவையெல்லாமே ஒரு காலத்தில் புத்த விகாரங்களாகேவே இருந்து, பிற்காலத்தில் இந்துக் கோயில்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

7 ஆம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரை புத்த மார்க்கம் வீழ்ச்சி அடைந்த காலகட்டத்தில் இந்தியத் துணைக் கண்டத்திலும், சிறப்பாகத் தென்னிந்தியாவிலும், புத்த விவகாரங்கள் எல்லாம் இந்துக் கோயில்களாக மாற்றப்பட்டுள்ளன பற்றி இந்நூல் விவரிக்கிறது” என்று இந்நூலைப் பற்றிய குறிப்புரை கூறுகின்றது.

“பவுத்தமும் தமிழும்” என்ற நூலிலும் மயிலை சீனி வெங்கடசாமி அவர்களும் இதுபோல ஏராளமான தகவல்களைக் கொடுத்துள்ளார் என்பதைக் தமிழ்நாட்டு மக்கள் ஓரளவு அறிந்துள்ளார்கள்.

இந்த வகையில் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர் கே. சமன்தாசு எழுதியுள்ள புதிய நூல். இராம சென்ம பூமிப் பிரச்சினைக்கு மரண அடி கொடுக்கும் அறிவாயுதம் மட்டுமன்று. பார்ப்பனீயத்தை வேறு கோணத்தில் பார்ப்பனரல்லாதார் அனைவரும் பார்க்கும் ஒரு கண்ணோட்டத்தையும் வழங்கியுள்ளது என்றே கூறவேண்டும்.

வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்து, இராமர் கோயில் இருந்த இடத்தில்தான் அதனை இடித்துவிட்டுப் பாபர் மசூதி கட்டப்பட்டு இருக்கிறது. எனவே பாபர் மசூதியை இடித்துவிட்டு, அதன்மேல் மீண்டும் இராமர் கோயிலைக் கட்டவேண்டும் என்று பார்ப்பனீயம் அழுத்தம் கொடுக்குமேயானால், அதே கண்ணோட்டத்தில், திருப்பதி கோயில் உள்பட பல கோயில்களையும் வரலாற்று முறையாகவும், தொல்பொருள் ஆராய்ச்சி முறையாகவும் கணித்து, இந்து மதக் கோயில்களை எல்லாம் மாற்றி மீண்டும் புத்த விகாரங்களாக வடிக்கும் ஒரு காரியத்தில் ஈடுபட வேண்டியிருக்கும்.

மனுநீதி ஒரு குலத்துக்கொரு நீதி என்கிற தன்மையில் இராம சென்ம பூமி பற்றி மட்டும் பார்ப்பனீயம் பேசுமானால், அதனைச் சந்திக்கக் கோடானகோடி ஒடுக்கப்பட்ட மக்கள் தயார்! தயார்!

இராமன் என்பவன் கலாச்சார சின்னம் என்று பார்ப்பனர்களால், பாரதீய சனதாவால், ஆர்.எசு.எசு., விசுவ இந்து பரிசத்து வகையறாக்களால் கூறப்படுவது உண்மைதான். ஆம்; அது பார்ப்பனர்களின் கலாச்சாரச் சின்னம்தான்.

ARTICLE FROM " VIDUTHALAI.com "


சிந்திக்க உண்மைகள்.