Showing posts with label பாபரி மஸ்ஜித். Show all posts
Showing posts with label பாபரி மஸ்ஜித். Show all posts

Thursday, December 06, 2007

பாபரி மஸ்ஜித் மீட்பு போராட்டம்

திரன்டிருந்த மக்கள் கூட்டத்தின் ஒரு பகுதி

இன்று தமிழகமெங்கும் முஸ்லிம்களால் பர்பரி மஸ்ஜித் மீட்பு நாள் அனுசரிக்கப்பட்டது. சங்பரிவார தீவஜரவாதிகளால் இடிக்கப்பட்ட பாபரி மஸ்ஜிதை மீண்டுமு் கட்டித்தர கோரியும் முஸ்லிம்களின் உரிமைகளை கோரியும் தமிழகமெங்கும் முஸ்லிம்கள் த.மு.மு.க வினரோடு போரட்டங்களில் ஈடுபட்டார்கள்.

மாவட்ட தலைவர் சலிமுல்லா கான்

முகவையிலும் பாபரி மஸ்ஜித் மீட்பு போராட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. த.மு.மு.க மாவட்ட தலைவர் திரு. சலிமுல்லா கான் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் மாவட்டடெங்கும் இருந்து வந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டு எழுச்சியுடன் கோசமிட்டனர்.

திரன்டிருந்த மக்கள் கூட்டத்தின் ஒரு பகுதி

முகவை மூன்றாக பிரிக்கப்பட்டு அம்மாவட்டத்தில் மூன்று இடங்களில் த.மு.மு.க வினர் போராட்டங்களை இதே தினத்தில் நடத்தினாலும் மூன்று இடங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் பெருந்திரளாக வந்து கலந்து கொண்டனர்.

பதாகை தாங்கி கோசமிடும் முஸ்லிம் ஒருவர்

நூற்றுக் கணக்கான வாகனங்களில் வந்திருந்த முஸ்லிம்கள் த.மு.மு.க வினர் முகவை மாவட்ட நீதிமன்றமும் மாவட்ட ஆட்சியர் அலுவலகமும் அமைந்துள்ள வளாகத்தின் வெளியே நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

போராட்டத்திற்கு வந்த மக்கள் வந்த நூற்றுக்கணக்கான வாகனங்களின் ஒரு பகுதி

சித்தார்கோட்டையில் நடைபெற்ற கொலையில் அப்பாவி முஸ்லிம்கள் மீது பதியப்பட்ட வழக்கை வாபஸ் பெறவேண்டுமெனவும் பாபரி மஸ்ஜிதை மீளக் கட்டித்தர வேண்டும் எனவும், குஜராததில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களின் இனப்படுகொலைக்கு காரனமான மோடி அரசை கலைத்து அவனை கைது செய்ய வேண்டும் எனவும் கோசங்கள் எழுப்பப்பட்டன.

போராட்டத்திற்கு வந்த மக்கள் வந்த நூற்றுக்கணக்கான வாகனங்களின் மற்றொரு பகுதி