Sunday, September 30, 2007

உங்கள் உதவி இவர்களுக்கு மீண்டும் தேவை!!

அல்லாஹ் தனது திருமறையிலே கூறுகின்றான்....


"ஜகாத் (எனும்) தருமங்களெல்லாம் வறியவர்களுக்கும், ஏழைகளுக்கும், அவற்றிற்காக (ஜகாத்தை வசூல் செய்வது, கணக்கிடுவது போன்ற துறைகளில்) உழைப்பவர்களுக்கும், எவர்களுடைய இதயங்கள் இஸ்லாத்தின்பால் ஈர்க்கப்படுகின்றனவோ அவர்களுக்கும் (அடிமைகளை) விடுதலை செய்வதற்கும், கடனாளிகளுக்கும்... (அல்-குர்ஆன் 9:60)

ஆம் சகோதரர்களே! அடிமைகளை (சிறைவாசிகளை) விடுதலை செய்வதறடகும் அல்லாஹ் ஜக்காத்தை ஆகுமாக்கியிருக்கின்றான்.

"வறுமையினால் வாடிப்போன் முகங்கள், சோகங்களை சுமந்திருக்கும் நெஞ்சங்கள் பெற்றவனை காண ஏங்கும் பிஞ்சு நெஞ்சங்கள், தளாந்த உடல்கள், சோர்ந்த உள்ளங்கள், இதுபூன்ற சொல்லொன்னாத் துயரங்கள்....


ஏறக்குறைய 10 ஆண்டுகளாக தமிழக சிறைகளிலே 320 க்கும் மேற்ப்பட்ட அப்பாவி சிறைவாசிகள் தன் உற்றார் உறவினர்களை பிரிந்து தவித்தார்கள்,கடந்த வருடங்களில் உங்களைப்போன்ற கருனை உள்ளங்கள் காட்டிய கருனையினால் இவர்களின் வழக்குகள் நல்ல முறையில் நடத்தப்பட்டன, குடும்பங்களுக்கு உதவிகள் செய்தோம், குழந்தைகளின் கல்வித்தேவை நிறைவேற்றப்பட்டது, வழக்குகள் நல்ல முறையில் முறையாக நடத்தப்பட்டதால் சமீபத்தில் சுமார் 90 க்கும் மேற்ப்பட்டோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இன்னும் மீதம் இருப்போர் பலர் இவர்களின் குடும்பங்கள் அளவில்லாத துயரங்களால் விழி பிதுங்கி வழி தெறியாமல் நிற்கிறார்கள்.


இவர்களில் தண்டனை பெற்றோருக்காக உயர் நீதி மன்றங்களிலும், உச்ச நீதி மன்றங்களிலும் வழக்காட வேண்டியுள்ளது. விடுதலையானோர் போக ஏனையோரின் விடுதலைக்காகவும் மற்றும் அவர்களின் குடும்ப செலவுகளும், நம் முன் நிற்கின்றன. அத்துடன் விடுதலையானோரின் மறுவாழ்வும் நம்முன் உள்ளன.

இவர்களின் துயரங்களையும், குடும்பங்களின் சுமைகளையும் துடைத்தெறிந்திட வாருங்கள் கைகோர்ப்போம்!! சிறுபான்மை உதவி அறக்கட்டளை செய்து வரும் சிறைவாசிகள் குடும்ப உதவிகளை நேரடியாக வந்து கண்டோர் பலர்!! இதனுடைய கடுமையான உழைப்பின் விளைவு பல ஆண்டு காலமாக சிறைகளில் அடைந்து கிடந்த பலர் இன்று விடுதலை!! இவர்கள் ஒவ்வொருவர் விடுதலையிலும் உங்கள் பங்கு உள்ளது. ஆம் உங்கள் உதவிகளை கொண்டே இவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள்!! இறைவன் மகா பெறியவன்!! எல்லாப் புகழும் அவனுக்கே!!

இந்த அப்பாவி சிறைவாசிகளின் குடும்ப பென்கள் இணைந்து உருவாக்கியதுதான் "சிறுபான்மை உதவி அறக்கட்டளை" வழக்கு நிதிகள், மருத்துவ செலவுகள், திருமன உதவிகள், வீட்டு வாடகைகள் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்கள் போன்ற பல அறிய உதவிகளை சிறைவாசிகளின் குடும்பங்களுக்கு தமிழகமெங்கும் செய்து வருகின்றது. இன்னும் மீதமுள்ளன பல பணிகள்!! விடுதலையானோர் போக எஞ்சியுள்ளோரின் விடுதலைக்கா வழக்காட வேண்டியுள்ளது, விடுதலையானோரின் மறுவாழ்வுக்காக ஏற்பாடுகள் செய்ய வேண்டியுள்ளது!! இச்சேவையில் உங்களையும் நீங்கள் இந்த புனித ரமழான் மாதத்தில் இணைத்து கொள்ள வேண்டாமா? எஞ்சியுள்ள உங்கள் சகோதரர்களும் விடுதலை அடைந்திட வேண்டாமா?

கருனையுள்ளம் கொண்ட எமது இஸ்லாமிய சகோதரர்களே இவ்வருடமும் சிறுபான்மை உதவி அறக்கட்டளை உங்களிடம் உங்கள் சகோதர சகோதரிகளின் தேவைக்காக உதவி கேட்டு நிற்கின்றது...நீங்கள் எல்லா வருடங்களையும் போல உதவிடுவீர் என்ற நம்பிக்கையில்!!

உங்கள் ஜக்காத் மற்றும் சதக்காக்களை எமக்கு அனுப்பித் தந்திடுவீர் உமது சகோதரர்களின் விடுதலையில் பங்கேற்றிடுவீர்....உங்கள் உதவிகள் சிறைவாசிகளின் விடுதலைக்காகவும், அவர்களின் குடும்ப உதவிகளுக்காகவும், குழந்தைகளின் கல்விக்காகவும் மட்டுமே செலவளிக்கப்படுகின்றது என்பதை உங்களுக்கு அறியத் தருகின்றோம். எப்போது நீங்கள் அழைத்தாலும் உங்களுக்கு எமது சேவைகளையும் செலவுகளையும் விளக்க கடமைப்பட்டுள்ளோம்.

உங்கள் உதவிகளை எமக்கு அனுப்ப வேண்டிய முகவரி :

சிறுபான்மை உதவி அறக்கட்டளை (Govt. Regd. 882/2001)
ரஹீம் பிளாஸ்ட்டிக் ஹவுஸ்,
ஞானியார் நகர்,
சாரமேடு, கரும்புக்கடை,
கோவை - 8
தொலைபேசி : +91 422 2307673
மொபைல் : +91 944 365 4473 (தங்கப்பா)



CHARITABLE TRUST FOR MINORITIES (REGD NO. 882/2001)
Bank : UNITED BANK OF INDIA,
COIMBATORE BRANCH, TAMILNADU
Saving Account No. #57991#
OR
You can send your donation (by online) to our
ICICI Bank Account No: #605301208490#
Mill Road, coimbatore-1 branch.
Favour of “CHARITABLE TRUST FOR MINORITIES”
.

No comments: