Wednesday, June 06, 2007

முபாஹலாவில் பொய்யன் பி.ஜே யின் முகமூடியை கிழிப்போம் ITJ அறிவிப்பு

தவ்ஹீத் மற்றும் ஏகத்துவம் என்ற பெயரில் வலைகுடா நாடுகளில் வசூலாகும் கோடிக்கணக்கான பணத்தை கொண்டு தமிழகத்தில் மக்களை ஏமாற்றி முஸ்லிம்களிடையே பிளவு ஏற்படுத்தி சங்பரிவாரக் கும்பலின் சகா போல் செயல்பட்டு வரும் பி.ஜெயினுல்லாபுதீன் என்பவர் சிறிது காலத்திற்கு முன்பு தனது அமைப்பில் பொதுச்செயலாளராக இருந்த திரு. எஸ்.எம் பாக்கர் என்பவர் ததஜ நடத்தும் மதரஸாவில் பயின்றுவந்த நந்தினி என்ற மாணவியுடன் தகாத உறவு வைத்திருந்தார் என்றும் இன்னும் தங்கள் மதரஸாவில் பயிலும் பல மாணவிகளுடனும் தகாத உறவு வைத்திருந்தார் என்றும் குற்றம் சாட்டி தங்கள் இயக்கத்தில் இருந்து நீக்கினார்.

ஆனால் அதே பாக்கர் தான் மக்களிடம் சென்று பி.ஜே உட்பட ததஜ வில் பலர் எவ்வாறு ததஜ நடத்தும் மதரஸாக்களில் பயிலும் மாணவிகளை பயன்படுத்தகின்றார்கள் என்றும் இன்னும் பல ஊழல்களையும் வெளியில் சொல்லப்போவதாக மிரட்டியதால் மீண்டும் ததஜ வில் (ஏகத்துவத்தை பரப்பும் தவ்ஹீத் அமைப்பாம்?? ஊர் சிரிக்குது!!) பாக்கர் சேர்த்து கொள்ளப்பட்டார். இந்த ஊழல் பிடிக்காத ததஜ வில் இருந்த சில உண்மை ஏகத்துவவாதிகள்ததஜ வை விட்டு வெளியில் வந்து மக்களிடம் உண்மையை கூறினர்.

பின்னர் பி.ஜே யை பாக்கர் மீது தான் மேலே கூறியது போல் விபச்சாரக் குற்றச்சாட்டு வைக்கவில்லை என்று கூறி முபாஹலா செய்ய அழைத்திருந்தனர். இந்த நிலையில் கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து தனது செல்வாக்கை நிருபிப்பதற்காக பல மாவடடங்களில் இருந்து ஆள் பிடித்து வந்து கடலூரில் எழுச்சி மாநாடு என்ற பெயரில் ஒன்றை நடத்தி தான் கடலூர் மாவட்ட முன்னால் ததஜ நிர்வாகிகள் விடுத்த முபாஹலாவை ஏற்றுக் கொண்டுவிட்டதாக ஒரு மாவீரத்தனமான பினாத்தல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு 10 ம் தேதிக்குள் பதில் தந்து தன்னோடு முபாஹலா செய்வதற்கு தயாராகும் படியும் உடடாலக்கடி கிரி..கிரி என்ற பானியில் பொய்யன் பி.ஜே அறிவிப்பு செய்திருந்தார்.

பி.ஜே வெளியிட்ட முபாஹலா அறிவிப்பு

இப்படி கூறினால் பயந்து ஓடி விடுவார்கள் என்று நினைத்த பி.ஜேக்கு செருப்பால் அடி கொடுப்பது போல் தவ்ஹித் என்ற பெயரில் காம லீலைகள் நடத்தும் ததஜ வின் செயல்பாடுகள் பிடிக்காமல் விலகிய முன்னால் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் உடனடியாக பதில் கொடுத்து தாங்கள் பி.ஜே அழைத்தது போல் முபாஹலாவிற்கு வருவதாக அறிவித்துள்ளார்கள். இதிலிருந்து தப்பிக்க பொய்யன் பி.ஜே இன்னும் என்ன என்ன ஜெகஜால வேலையெல்லாம் செய்வாரோ யாருக்கு தெறியும்?


பீஜேயுடன் முபாஹலா செய்ய கடலூர் மாவட்ட முன்னால் டிஎன்டிஜே நிர்வாகிகளாகிய நாங்கள் தயார்!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்


முபாஹலாவிலிருந்து தப்பிக்க பொய் புரட்டுகளை கூறும் பீஜே யின் முக மூடியை கிழித்தெறிவோம்!

கடலூர் மாவட்ட முன்னால் டிஎன்டிஜே நிர்வாகிகளாய் இருந்த நாங்கள் டிஎன்டிஜே மாநில தலைவர் பீஜே யை முபாஹலாவுக்கு அழைத்தது 11.03.2007 அன்று லால்பேட்டையில் பாக்கர் பற்றிய ஒழுக்ககேடான விசயத்தைப் பற்றி பீஜே விளக்கமாக அதுவும் பாக்கர் விபச்சாரமே செய்து விட்டார் என்ற அளவிற்கு பேசிவிட்டு பிறகு அதில் சமரசம் செய்து கொண்ட விசயத்திலும் அதனை ஒட்டி நடந்த விசயங்களுக்கு மட்டுமே! உண்மையாளர்களாகவும், உண்மையில் அல்லாஹ்வுக்கு அஞ்சக்கூடியவர்களாய் இருப்பவர்கள், தங்கள் மீது குற்றச்சாட்டு என்று வரும்போது அந்த விசயத்தில் தாம் தூய்மையானவர்தான் என்று நிரூபிக்க வேறு எதனையும் முன்வைக்காமல் நிபந்தனையேதுமின்றி முன்வருவார்கள்..

அதனை விடுத்து குற்றம் சாட்டியவர்களிடம் எதாவது குறை இருக்கிறதா? என்று துருவி துருவி ஆராய்ந்து குறையை தேடி கண்டுபிடித்து அல்லது அவதூராய் எதையாவது அவர்கள் மீது பழி சுமத்தி குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்க எத்தனிப்பவர் மகா பொய்யர் என்பதற்கு இதை தவிற வேறு ஏதும் ஆதாரம் தேவையில்லை. குற்றம் சாட்டியவர்கள் மீது மேலும் மேலும் பொய்களையும், அவதூரறுகளையும், வீன் பழிகளையும் மக்களிடம் கூறி தன்னை நியாயப்படுத்திக்கொள்பவர்கள் அல்லாஹ்வின் தன்டனைக்கு தன்னை தயார்படுத்திக்கொள்ளட்டும்.

கடந்த 03.06.2007 அன்று கடலூரில், பல மாவட்டத்து ஆட்களை அழைத்து வந்து நடத்திய கூட்டத்தில் முபாஹலாவைப்பற்றி பேசிய பீஜே, வழக்கம்போல் முபாஹலாவிற்கு அழைத்தவர்கள் மீது பொய்யான, அவதூரான வீண் பழிகளை அள்ளி வீசி அதற்கும் அவர்கள் முபாஹலா செய்யவேண்டும் என்று கூறி இருக்கிறார். மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு ஆகவே, எங்களுக்கு மடியில் கனமும் இல்லை வழியில் பயமும் இல்லை. அதனால் நாங்கள் பீஜே மீது சொன்ன அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும், மேலும் பீஜே வால் இன்று 04.06.2007 ல் எங்களுக்கு அனுப்பப்படடுள்ள வக்கீல் நோட்டீஸில் குறிப்பிட்டுள்ள, நாங்கள் வெளிநாடுகளில் டிஎன்டிஜே பெயரைச்சொல்லி ரூபாய் இருபது லட்சம் வசூல் செய்து சரியாக கணக்கு காட்டாமல் மோசடி செய்துவிட்டதாக பழி சுமத்தியதற்கும், 03.06.2007 பீஜே கடலூர் கூட்டத்தில் எங்கள் மீது கூறிய அவதூருகளுக்கும் இன்ஷாஅல்லாஹ், பீஜே அறிவித்த 16.06.2007 தேதியில் நெல்லிக்குப்பம் தேவநாதன் திருமண மண்டபத்தில் மாலை 7 மணிக்கு பீஜேயுடன் முபாஹலா செய்ய கடலூர் மாவட்ட முன்னால் டிஎன்டிஜே நிர்வாகிகளாகிய நாங்கள் தயார்! என்பதை இதன் மூலம் பீஜே வுக்கும் மற்றும் சகலமானவர்களுக்கும் அறிவிக்கின்றோம். இது சம்மந்தமாக ஒப்புதல் தபாலையும் பி.ஜைனுல்ஆபிதீன், டிஎன்டிஜே மாநில தலைவர், 30.அரன்மனைகாரன் தெரு, மன்னடி, சென்னை-1 என்ற முகவரிக்கு 05.06.2007 ல் கூரியர் தபால் மூலம் அனுப்பி விட்டோம்.


இப்படிக்கு,
கடலூர் மாவட்ட முன்னால் டிஎன்டிஜே நிர்வாகிகள்.
05.06.2007.
ஐக்கிய தெளஹீத் ஜமாத் - கடலூர்

தொடர்புடைய பதிவுகள் :

1) பாக்கர் நந்தினியுடன் ஒருவர் மார்பில் ஒருவர் சாய்ந்தவராக விபச்சாரம் நடக் கூடிய சாத்தியக் கூறுகளுடன் இருந்தனர் என்று குற்றம் சாட்டி வெளியிட்ட ஆடியோ கேட்பதற்கு இங்க கிளிக் செய்யவும்.

2) விபச்சார குற்றச் சாட்டு கூறி வெளியேற்றிய பாக்கரை விபச்சாரத்துக்கு புதிய தண்டனையாக 34 நாட்கள் போதுமானது என்று அறிவித்து திரும்பவும் சேர்த்தது தெர்ர்பான கட்டுரை படிப்பதற்கு இங்கு கிளிக் செய்யவும்.

3) கடலூர் மாவட்டத்தில் ததஜ கிளைகள் யாவும் ஏன் கலைக்கப்பட்டது என்பது குறித்து கடலூர் மாவட்ட முன்னால் ததஜ நிர்வாகிகளின் அறிவிப்பும் அவர்களிடம் பாக்கர் குறித்து பி.ஜே என்ன சொன்னார் என்ற விபரமும் படிக்க இங்கு கிளிக் செய்யவும்.

இவர்கள் பின்னால் பொதுக் மூஷகூட்டங்களக்கும் பேரணிகளுக்கும் நம்பி தங்கள் வீட்டுப் பென்களை அனுப்புபவர்களும் இன்னும் இவர்களின் மதரஸாவில் தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்கும் பெற்றோரும் நிலைமை கைமீறி செல்வதற்குமுன் சுதாரித்தால் நல்லது.

No comments: