Thursday, December 07, 2006

முகவையில் டிசம்பர் ஆறு (MUGAVAI)

முகவையில் டிசம்பர் ஆறு



மேடையில் கண்டன கோஷங்கள் முழங்கும் தமுமுக நிர்வாகிகள்

முகவை மாவட்ட தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் டிசம்பர் 6-ந்தேதியை முன்னிட்ட பாபர் மசூதி இடிப்பை கண்டித்தும், பாபர் மசூதி இடத்தை மீண்டும் முஸ்லிம்களிடம் ஒப்படைக்க கோரி யும் ராமநாதபுரம் அரசு போக் கு வரத்து கழக டெப்போ எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது பாபர் மஸ்ஜித் இடிப்பு விசாரனை நடத்திய லிபர்ஹான் கமிஷனின் விசாரனை முடிவுகளை வெளியிட வலியுருத்தியும், ரத யாத்திரை என்ற பெயரில் அத்வானி நடத்திய ரத்த யாத்திரை மூலம் நாடெங்கும் பல உயிர்கள் சூரையாடப்பட்டு 400 ஆண்டு கால வரலாற்று சின்னமான பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட அந்த துயர தினத்தை நிணைவு கூர்ந்தும் இந்திய அரசயில் சாசனத்தை கொலை செய்த அயோக்கிய ஹிந்து வெறி கும்பலான அத்வானி, பள்ளிவாசல் இடிக்கப்பட்ட போது கட்டிப்பிடித்து களிநடனம் ஆடிய பென் சன்னியாசி உமா பாரதி, முரளி மனோகர் ஜோஸி, சாத்வி ரிதம்பரா உள்ளிட்ட பயங்கரவாதிகளை கைது செய்து நீதியை நிலை நாட்ட கோரியும் தமுமுக சார்பில் நடத்தப்பட்ட கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

இதில் தமுமுக வின் மாநில செயலாளர் ஜனாப். அப்துல் சமது அவர்கள் கழந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள். பாம்பன், மன்டபம், இராமேசுவரம், கீழக்கரை, பனைக்குளம், பெரியபட்டினம், உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இருந்து ஆயிரக்கணக்கில் முஸ்லிம்கள் தங்களின் கண்டனத்தை தெறிவிக்கவும் நீதி கோரியும் வந்து கோஷங்கள் எழுப்பியது அதிசயிக்கத் தக்கதாக இருந்தது.

கூடிய கூட்டத்தின் ஒரு பகுதி

தமுமுக வின் மாநில செயளாலர் ஜனாப் அப்துல் சமது அவர்கள் உரையாற்றுகையில், பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட துயர வரலாற்றை நிணைவு கூர்ந்தார்கள் அத்துடன் பாதிக்கப்பட்ட சமுதாயமான முஸ்லிம்களுக்கு நயாயம் கிடைக்க மத்தியில் பதவியில் உள்ள அரசுகள் ஆவன செய்திட வேண்டும் என்றும், தொடாந்து நீதி இந்த சமுதாயத்திற்கு மறுக்கப்பட்டு வருமானால் ஒரு நாள் இந்த சமுதாயம் தானே நீதியை உஎடுத்துக்கொள்ள நேரிடும் அதற்கு ஒருக்காலும் இந்த சமுதாயம் அஞ்சாது என்று கூறியபோது அல்லாஹீ அக்பர் என்ற குரல் வின்னைத் தொட்டது.

ஆர்ப்பாட்டத்திற்கு தமுமுக வின் மாவட்ட செயலாளர் சலிமுல்லாகான் அவர்கள் தலைமை தாங்கினார்கள் ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் தஸ்பீக் அலி, பொரு ளாளர் சைபுல்லா, துணை தலை வர் ஹுமாயுன் கபீர், துணை செய லாளர் அஜ்மல்கான், மருத்துவ அணி செயலாளர் பாக்கர், மக் கள் தொடர்பாளர் பீர் முக மது ஆகியோர் முன்னிலை வகித்த னர். ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் அப்துல் சமது கலந்து கொண்டு கண்டன உரை யாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் தொண்டரணி செயலாளர் அன் வர், ஒன்றிய செயலாளர்கள் ராமநாதபுரம் ருகைபு, மண்டபம் ரசூல்கான், போகலூர் அப்தா கீர், பரமக்குடி அப்பாஸ், ராம நாதபுரம் நகர் தலைவர் சுல் தான், நகர் செயலாளர் சாகுல் உள்பட பல்வேறு கிளைகளில் இருந்து த.மு.மு.க.வினரும், ஜமாத் தார்களும், முஸ்லிம் சங்கத்தினர் களுமாக ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.

கூடிய பெண்களும் குழந்தைகளும்

அத்துடன் தமிழகமெங்கும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் முஸ்லிம் ஜமாத்தினர்களையும், சங்கங்களையும், அமைப்புக்களையும் ஒன்றினைத்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காவல் துறை அனுமதி மறுத்ததால் தடையை மீறி ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் ஆர்பாட்டம் செய்து கைதாகினர்.


மேலப்பாளையத்தில் தமுமுக வின் மாநில செயலாளர் ஜே.எஸ் ரிபாயி தலைமையில் தடையை மீறி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சுல்த்தான் அமீர் உள்பட தமுமுக வின் நிர்வாகிகளும் ஜமாத்தினர்களுமாக சுமார் 800 க்கும் மேற்ப்பட்ட முஸ்லிம்கள் கைதாகினர்.

பேனர் ஏந்திய பெண்கள்

பொள்ளாச்சியில் தமுமுக வின் மாநில செயலாளர் தலைமையில் தடையை மீறி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் அப்பாஸ் உள்பட தமுமுக வின் நிர்வாகிகளும் ஜமாத்தினர்களுமாக சுமார் 300 க்கும் மேற்ப்பட்ட முஸ்லிம்கள் கைதாகினர்.

ஊட்டியில் தடையை மீறி ஆர்ப்பாட்டமும் பாபரி மஸ்ஜித் இடிப்பிற்கும் அநீதி இழைக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதி வழங்க கோரியும் மாபெரும் கடையடைப்பும் நடத்தப்பட்டது. அத்துடன் தமிழகமெங்கும் பல்வேறு பகுதிகளில் தடையை மீறி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர்.

No comments: