Thursday, November 09, 2006

முகவைத்தமிழன் ஃபோர்ஜரியா?

முகவைத்தமிழன் ஃபோர்ஜரியா?



கடந்த 28/10/2006 அன்று நம்மாள் "வானை விஷமாக்கும் வதந்திகள்" என்ற தலைப்பில் தமிழ்நாடு தரங்கெட்ட ஜமாத்தினரின் பித்தளாட்டங்களை அம்பலப்படுத்தி தமிழகத்திலும் மற்ற பகுதிகளிலும் இணையத்திலும் போலிப் பெயர்களிலும் இன்ன பிற இயக்கங்களின் பெயர்களிலும் பிட் நோட்டிஸ்கள் கள்ள மின்னஞ்சல்கள் வெளியிட்டு சமுதாயத்தில் குழப்பத்தை உண்டாக்குவது இந்த தமிழ்நாடு தரங்கெட்ட ஜமாத்தினர்தான் என்றும் அதற்கு அனுமதியளித்து அதன் தலைவர் கிரிமினல் பி.ஜெயினுல்லாபுதீன் அவர்களால் கையெலுத்திடப்பட்டு அனுப்பப் பட்ட மடலையும், கள்ள வெப்சைட் மற்றும் கள்ள மின்னஞ்சல் அனுப்புவதற்கு புனித மக்கா நகரில் கூடி இந்த தமிழ்நாடு தரங்கெட்ட ஜமாத்தினர் எடுத்திருந்த தீர்மானத்தின் நகலையும் வெளியிட்டிருந்தோம்.

தற்போது அதற்கு பதில் கொடுக்கும் விதமாக தமிழ்நாடு தரங்கெட்ட ஜமாத்தினர் தங்கள் கள்ள வெப்சைட் நிறுவனத்தின் மூலம் கள்ள மின்னஞ்சல்களை அனுப்பியுள்ளனர் அதில் முகவைத்தமிழனும் தமுமுக வினரும் மற்றும் தமிழ்நாடு தரங்கெட்ட ஜமாத்தின் முன்னால் நிர்வாகியும் இவர்களின் ததஜவின் ஃபோர்ஜரி , திருட்டு வேலைகளாலும் ஃபித்ரா, சுனாமி ஊலள்களாலும், தவ்ஹித் பெயரால் வசூலித்த பணத்தால் தங்கள் சுய ஆதாயத்திற்காக சவா கார்ட், ஷேர் பிசினஸ், கதிஜா ரெஸ்ட்டாரென்ட போன்ற தொழில்களை துவக்க முனைந்ததாலும் அவற்றை எதிர்த்து கேளவி கேட்டதால் ததஜ வின் திருட்டுக் கூட்டத்தால் கட்டம் கட்டப்பட்டு தகவலே இல்லாமல் ததஜ வில் இருந்து தூக்கப்பட்ட அப்துர் ரஹ்மான் என்பவராலும் ஃபோர்ஜரியாக தயாரிக்கப்பட்ட லெட்டர் ஹெட்டுகளில் எழுதப்பட்ட ?ஃபோர்ஜரி மடலடகளே அவை என்றும் முகவைத்தமிழனால் வெளியிடப்பட்ட அந்த ஆதாரங்கள் அனைத்தும் ஃபோர்ஜரி என்றும் நாம் முன்னமே எதிர் பார்த்தபடி எழுதியுள்ளார்கள். அதற்கு ஆதாரமாக சிலவற்றையும் படடியளிட்டுள்ளார்கள். அது தம்மாம் நிர்வாகிகள் சிலரால் இத்தனை நாட்களாக சிந்தித்து எழுதப்பட்டு ததஜ வின் கள்ள மின்னஞ்சல் குழுவால் அனுப்பப்பட்டுள்ளது.

இவர்களால் அனுப்பப்பட்ட அந்த மறுப்பு கள்ள மின்னஞ்சல் படிக்க இங்கு சொடுக்கவும்

அந்த மடலில் முகவைத்தமிழனால் வெளியிடப்பட்ட "கள்ள வெப்சைட் நடத்த கள்ள நோட்டிஸ் போட பி.ஜே அனுமதியளித்து அனுப்பப் பட்ட கடிதம்" பொய் அது ஃபோர்ஜரியாக உருவாக்கப்பட்டது என்பதற்கு வலுவான ஆதாரமாக அவர்களால் கூறப்பட்டுள்ளது என்ன வென்றால் :

" TNTJ தலையால் வெளியிடப்படும் கடிதங்களில் எப்போதும் "அல்லாஹ்வின் திருப்பெயரால்" என்று தமிழில் மட்டுமே டைப் செய்வார்கள் ஆனால் இந்த ஃபோர்ஜரி கடிதத்தில் அரபியில் எழுதப்பட்டுள்ளது!" -TNTJ



என்பதால் இந்த கடிதம் ஃபோர்ஜரி என்றும் அது முகவைத்தமிழனால் ஃபோர்ஜரியாக தயாரிக்கப்பட்டது என்பதற்கு வலுவான ஆதாரமாக உள்ளதால் இதை முதல் பாயின்டாக குறிப்பிட்டுள்ளார்கள்.

நாம் இப்போது எதை ஆதாராமாக காட்டியுள்ளார்களோ அந்த முதல் பாயின்டையே பொய் என்று நிறுபித்து இந்த தமிழ்நாடு தரங்கெட்ட ஜமாத்தின் மொத்த கூட்டமுமே பொய்யர்கள் என்று உங்களுக்கு அடையாளம் காட்ட கடமைப்பட்டுள்ளோம்.

TNTJ தலையால் வெளியிடப்படும் கடிதங்களில் எப்போதும் "அல்லாஹ்வின் திருப்பெயரால்" என்று தமிழில் மட்டுமே டைப் செய்வார்கள் என்றால் கடந்த 30/06/2006 அன்று பி.ஜே யின் தலைமையால் இலங்கையை சேர்ந்த முனாப் நுபார்தீன் அவர்களுக்கு விவாதத்திற்கு வருமாறு பகிரங்க அழைப்பு விடுத்து பி.ஜே யால் எழுதப்பட்டு ததஜ வின் அதிகாரப் பூர்வ இணையத்திலும் பி.ஜே யின் அதிகாரப் ப_ர்வ இணையத்திலும் வெளியிடப்பட்ட பி.ஜே யின் கையெலுத்துடன் கூடிய ததஜ வின் லெட்டர் ஹெட்டில் டைப் செய்யப்பட்ட அந்த கடிதத்தில் بسم الله الرحمن الرحيم என்று அரபிபில் டைப் செய்யப் பட்டுள்ளது அப்படியானால் அந்த கடிதம் ததஜ வின் தலையால் எழுதப் படாமல் காலால் எழுதப் பட்டதா? அல்லது தமுமுக வினரால் விலைக்கு வாங்கப்பட்ட முகவைத்தமிழனாலும் தமுமுக வினராலும் ஃபோர்ஜரி செய்யப்பட்டு ததஜ வின் இணையத்திலும் பி.ஜே வின் இணையத்திலும் கள்ளத் தனமாக வெளியிடப்பட்டதா?


TNTJ தலைமையால் பி.ஜே கையெழுத்துடன் بسم الله الرحمن الرحيم அரபியில் எழுதப் பட்ட கடிதம்


மேலே உள்ளது சமீப கால உதாரனம் ஆனால் இதற்கு முன்னால் பி.ஜேயால் கைப்பட் எழுதப் பட்ட கடிதங்களில் கூட அவர் بسم الله الرحمن الرحيم என்பதை அரபியில் தான் எழுதியுள்ளார் என்பதற்கு கீழ்க்கண்ட இரன்டு கடிதங்களை உதாரனமாக வெளியிட்டுள்ளோம் தேவைப்பட்டால் இவர்களின் பித்தளாட்டங்களை அம்பலப்படுத்தும் விதமாக இன்னும் மடல்கள் வெளியிடப்படும்.


சகோ. பள்ளுல் இலாஹிக்கு வசூல் செய்வது குறித்து பி.ஜே எழுதிய கடிதம் இதிலும் بسم الله الرحمن الرحيم அரபியிலேயே எழுதப் பட்டுள்ளது.




சீனி நெய்னா முகம்மது குறித்து பி.ஜே யால் கைப்பட எழுதப் பட்ட கடிதம் இதிலும் بسم الله الرحمن الرحيم அரபியிலேயே எழுதப் பட்டுள்ளது.




தற்போது ததஜ வின் கொள்கை சகோதரர்களும், கொள்ளைச் சகோதரர்களும் மற்றும் பொது மக்களும் நியாயவான்களும் நடுநிலையாளர்களும் இந்த தமிழ்நாடு தரங்கெட்ட ஜமாத்தினரின் பித்தலாட்டங்களை அறிந்து கொண்டிருப்பீர்கள். இன்னும் இவர்களை பாயின்ட் பை பாயின்ட் ஆக பிறித்து மேயலாம் ஆனால் நமக்கு நேரமில்லை ஆக ஓரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதால் இந்த ஒரு சோத்தையே பதம் பார்க்க விடுகின்றோம். தமுமுக வினரும் ஜாக் மற்றும் தமிழகத்தில் இந்த ததஜ வின் கள்ள நோட்டிஸ்களால் பாதிக்கப் பட்ட அமைப்பினரும் இந்த உண்மையை தமிழகத்தில் மக்களிடம் கொண்டு சேர்க்க கடமைப் பட்டுள்ளார்கள். ஏனென்றால் இவ்வாறுதான் தமுமுக பெயரிலும் ஜாக் போன்ற அமைப்புகள் பெயரிலும் கள்ள நோட்டிஸ்களை போட்டு தமிழகத்தில் பித்தலாட்டங்களை இந்த பி.ஜே நிகழ்த்தியுள்ளார். இவாக்ளை மக்களுக்கு அடையாளப் படுத்தி உங்களின் பரிசுத்த தன்மையை நிறுபிப்பது தமுமுக, ஜாக், விடியல் போன்ற இயக்கதினர் மீது கடமையாகும்.

இன்னுமு் அந்த கால கட்டத்தில் எழுதிய தனது ஒவ்வொரு கடிதத்திலும் ததஜ பெயரால் மற்றவர்கள் வசூல் செய்துவிடாமல் கவணமாக பார்த்துக் கொள்ளுமாறு இறுதியில் குறிப்பிட்டுள்ளார் அதற்கு ஆதாரமாக வரக்கூடிய நமது பதிவுகளில் இன்னும் பி.ஜே யின் கையெழுத்துடன் கூடிய மடல்கள் வெளியிடப்படும். இன்னும் தங்களின் திருட்டுத்தனங்களும் பித்தலாட்டங்களும் பிடிக்காமல் அதை எதிர்த்து கேட்டதற்காக ததஜ வில் இருந்து வெளியேற்றப்பட்ட சகோ. அப்துர் ரஹ்மான் மீது அநியாயமாக அவர் ஃபோர்ஜரி கையெழுத்திட்டு வசூல் செய்ய முயன்றார் என்று திருட்டுப் பட்டம் சூட்டியுள்ளார்கள். இது ஒன்றும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தக் கூடியதல்ல வேண்டுமானால் சகோ. அப்துர் ரஹ்மானுக்கு இது ஆச்சர்யமாக இருக்கலாம். எங்களைப் போன்றவர்களுக்கு இதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.

தன்னை எதிர்ப்பவர்கள் மீது அல்லது தன்னிடம் இருந்து தனது திருட்டுத்தனங்கள் தெறிந்து பிறிந்து சென்றவர்கள் மீது பி.ஜே யால் எப்போதும் வைக்கப் படும் குற்றச்சாட்டு ஒன்று "இவன் திருடன் ஃபோர்ஜரி: அல்லது "இவன் விபச்சாரம் செய்தான்" சமீபத்திய உதாரனம் பிஜேயால் திருட்டுக் குற்றமும் விபச்சாரக் குற்றமும் சுமத்தப்பட்ட ஹாமித் பக்ரி, மக்கா பள்ளி இமாம் இபுறாஹிம் காசிமி, ஹாமித் பக்ரி மனைவி இன்னும் பட்டியளிடலாம் தற்போது அந்த வரிசையில் தம்மாம் ததஜ முன்னால் நிர்வாகி சகோ. அப்துர் ரஹ்மான் இன்னும் சகோ. அப்துர் ரஹ்மான் தம்மாமில் விபச்சாரம் செய்தார் அதனால் அவரை ததஜ வில் இருந்து விலக்கினோம் என்று கூட குற்றம் சாட்டப்படலாம் ஆகவே சகோ. அப்துர் ரஹ்மான் அதையும் எதிர் பார்த்து இருப்பது நல்லது. ததஜ வின் மூலை கழுவி விடப்பட்ட கொள் கை சர்கதரர்களுக்கும், ததஜ வை குறை சொல்லு பி.ஜே யை குறை சொல்லாது என்று கூறித்திறியும் தக்லீத் வாதிகளுக்கும் எச்சரிக்கை உங்கள் மீதும் நாளை இதே குற்றச்சாட்டுக்கள் வைக்கப்படும்.

நம்மை ஃபோர்ஜரி என்றும் கள்ள லெட்டர் ஹெட் உண்டாக்குபவர் என்றும் கூறியுள்ளார்கள், கீழே ஒரு சாம்பிள் வெளியிடப் பட்டுள்ளது இதன் மூலம் அதில் என்ன திருட்டுத் தனம் ததஜ வின் ரியாத் மன்டலத்தினரால் செய்யப் பட்டுள்ளது என்று கண்டுபிடிக்க மக்களின் பார்வைக்கே விட்டு விடுகின்றேன். தங்கள் சொந்த அமைப்பின் லெட்டர் ஹெட்டிலேயே திருட்டுத் தனம் செய்துள் ரியாத் ததஜ வின் போலி முகம் இங்கு அம்பலப்படுத்தப் பட்டுள்ளது. இந்த ரியாத் லெட்டர் என்ன நமக்கு ததஜ வின் ஃபைசலால் கொடுக்கப் பட்டதா? அல்லது தமுமுக வினரால் ஃபோர்ஜரி செய்யப் பட்டதா? இன்னும் இவர்களின் போலி முகங்கள் அடையாளப் படுத்தப் படும். நாம் தெளிவாக கூறியுள்ளளோம் நமக்கு ஆதாரங்கள் அனைத்தும் ததஜ வின் திருட்டுத் தனங்கள் பிடிக்காத அதிருப்தியாளர்களாலும் மற்றுமு் அதன் முன்னால் நிர்வாகிகளாலும் கையளிக்கப் பட்டவை என்று. இன்னும் நம்பவில்லை என்றால் இவர்களால் மிகச் சமீபத்தில் சில நாட்களுக்கு முன் தம்மாம் தாஜ் ஹோட்டலின் மேல் உள்ள ரூமில் கூடி எடுக்கப் பட்ட சில முடிவுகள் வெளியிடப் படும் அதுவும் ஆடியோ பைலாக வெளியிடப் படும். இன்னும் ரியாதில் உள்ளவர்களால் எடுக்கப்பட்ட சில தீர்மானங்களின் நகல்களும் வெளியடப்படும்.


ரியாத் மன்னடல ததஜ வால் அனுப்பப் பட்ட கடிதம் இதில் உள்ள ஃபோர்ஜரியை நீங்களே கண்டு பிடியுங்கள்!!

விரைவில் ததஜ வினரால் தவ்ஹித் பெயரால் வசூல் செய்து சென்னையில் ததஜ வின் தலைமையின் வருமானத்திற்காக தங்கும் விடுதி கட்ட எடுக்கப் பட்ட தீர்மானமும். தவ்ஹித் பெயரால் வசூல் செய்யப் படும் காசில் சவுதியில் தொழில் துவங்கி அதன் மூலம் வரும் வருமானத்தை ததஜ வின் தலைமைக்கும் இங்கு உள்ள் உள்ளூர் நிர்வாகிகளும் விகிதாச்சார அடிப்படையில் பிரித்து கொள்ள செய்யப் பட்ட ஒப்பந்தமும் வெளியிடப்படும்.

"பிழைப்பு போயிடப் போகுது பாத்துக்கோ" என்றும் வல்ல நாயனிடம் TNTJ கொள்கைச் சகோதரர்கள் அனைவரும் உணக்கு எதிராக கையேந்துவோம் என்றும் எழுதி மிரட்டியுள்ளார்கள். இவர்களுக்கு இந்த மிரட்டல்களே பிழைப்பாக போய் விட்டது. முட்டாள்களே உங்கள் நிர்வாகிகளில் ஒருவர் எனது அலுவலகத்திற்கு போன் செய்து என் மேனேஜரிடம் பேசுவதாக நினைத்துக் கொண்டு என்னிடமே அரபியில் "ரைசுதீன் ஹராமி, அலிபாபா வாஜித் புலுஸ், ஹாதா நபர் காஃபிர் ஈஜி டுப்லிகேட் பாஸ்போட் ஸேம் ஸேம் முஸ்லிம், பில்லைல் சிரப் விஸ்கி லாஜிம் சவ்வி குருஜ்" என்று கூறி நம்மிடம் மாட்டிக் கொண்டு அசடு வளிந்ததை பெயரோடு வெளியிடவா?

நாம் இதற்கெல்லாம் பயந்தவர்கள் இல்லை வேனுமென்றால் எனது அலுவலகம் உங்கள் ததஜ நிர்வாகிகள் பலருக்கும் தெறியும் வாருங்கள் எனது மேனேஜரிடம் அறிமுகம் செய்கின்றே என்னைப் பற்றி என் வேண்டுமானாலும் சொல்லுங்கள். இல்லையென்றால் எனது அலுவலக ஃபேக்ஸ் எண் உங்கள் அனைவருக்கும் தெறியும் உங்களில் தான் அரபி பண்டிதர்கள் உள்ளனரே அரபியில் எழுதி அனுப்புங்கள் அதைப் பற்றி நாம் கவலைப் பட போவதில்லை ஏனெனில் (இதையும் எழுதி என் கம்பெனியில் போட்டுக கொடுங்கள்) என் கம்பெனிக்கு நான் தேவை எனக்கு இதை விட்டால் உலகெங்கும் கம்பெனிகள் எம்மிடம் திறமை உள்ளது அதைப் பயன் படுத்த பல கம்பெனிகள் இங்கு சவுதி அரேபியாவிலேயே தயாராக உள்ளன.

நான் எனது கம்பெனிக்கு தேவையாக உள்ளவரை உங்களின் பேச்சுக்களை எமது நிர்வாகத்திலவ் யாரும் கேட்க மாட்டார்கள் இன்னும் என்னை எனது நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு மிக நன்றாக அறிவார்கள் எனது செயல் பாடுகள் அரசியல் ஈடுபாடு குறித்தும் அறிவார்கள் சமயத்தில் எனது நிர்வாகமே எனது இந்த ஆர்வத்தினை ஊக்கமூட்டியது உண்டு. இன்னும் இறைவனிடம் கொள்கைச் சகோதராக்ள் அனைவரும் ஒன்று கூடி உங்கள் கொள்கைககு எதிராக (கூட்டுத்துவா) கையேந்தினால் இறைவனின் பிடி இறுகும் என்று எழுதியிருந்தீர்கள். நல்லது செய்யுங்கள். யார் பக்கம் பொய் உள்ளதோ அவர்களின் கழுத்தில் இடப் பட்டுள்ள இறைவனின் முடிச்சே இறுகும். எமது பக்கம் உண்மை உள்ளதால் நாம் அது குறித்தும் அஞ்சப்போவதில்லை மாறாக நாமும் இறைவனிடம் அறைஞ்சுவோம் எப்படியென்றால் " ஷைத்தானின் தீங்குகளில் இருந்தும் பொய்யர்களின் தீங்குகளில் இருந்தும், தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் என்ற தரங்கெட்ட ஜமாதினரின் தீங்குகள் மற்றுமு் இவர்களால் நாட்டில் ஏற்படுத்தப் படும் குழப்பங்களில் இருந்தும் தமிழ் முஸ்லிம் சமுதாயத்தையும் எம்மையும் காத்தருள்வாயாக" என்று.


இன்னும் எமது அடையாளப் படுத்தும் பணி தொடரும்...

No comments: