Wednesday, September 20, 2006

ததஜவின் கிசுபுள்ளா பாக்கர்

அன்புள்ள முகவைத்தமிழனுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

கிசுபுள்ளா பாக்கர் விஷயமாக தாங்கள் எழுதியிருந்த கிசுகிசுக்களை பார்த்தோம். இன்று நேற்றல்ல ததஜவின் உயர்மட்டக்குழுவில் உள்ள அனைத்து நிர்வாகிகள் பெயரிலும் இதைப் போன்ற உறுதியான ஆதாரங்கள் உள்ள பல கிசுகிசுக்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதனை எவ்வளவு தான் நீங்கள் வெளிக்கொண்டு வந்தாலும் உண்மையை திரிப்பதற்கென்றே அவதாரம் எடுத்துள்ள உளறுவாய் உமர், அதனை சர்வசாதாரணமாக நியாயப்படுத்தத்தான் செய்வார்.

ஏனெனில், தவறுகள் மிகைத்து விட்டால் அவையெல்லாம் நியாயமானதாகவே தோன்றும். எந்தவொரு குற்றவாளியும் தனது செயலை நியாயப்படுத்தி வருவதையே நாம் காண்கிறோம்.

யூதருக்கும் கிருத்தவருக்கும் என்ன பெரிய வித்தியாசம் என்று கேட்டுள்ளார் திரு உளறுவாய் உமர் உண்மையில் யூதர்கள் தமது சமூகத்திற்கு வந்த தூதர்களையும் சமூகத்தில் இருந்த நல்லோர்களையும் கொலை செய்தே பழக்கப்பட்டவர்கள்.

கிருத்தவர்கள் தமது சமூகத்திற்கு வந்த இறைத்தூதரை அளவுக்கு அதிகமாக புகழ்ந்து அல்லாஹ்விற்கு இணையாக அல்லது அல்லாஹ்விற்கு மேலாக உயர்த்திக் கொண்டவர்கள்.

இந்த ததஜவினர் யூதர்களின் வழிமுறையை பின்பற்றி இஸ்லாமிய சமூகத்திற்குள்ளாகவே கொலை வெறித் தாண்டவமாடி வருகின்றனர்.

அதே போல் கிருத்தவர்களின் வழியைப் பின்பற்றி தனது தலைவரை (கிரிமினல் பிஜேவை) அளவுக்கு அதிகமாக உயர்த்தியும் புகழ்ந்தும் வருகின்றனர்.

இந்த யூத கிருத்தவர்களை தமது முன்மாதிரியாக எடுத்துக் கொண்ட காரணத்தினால் அவர்களுக்கு யூதருக்கும் கிருத்தவர்களுக்கும் வித்தியாசம் தெரியவில்லை போலும்.

சஹாபாக்களை சகட்டு மேனிக்கு விமர்சனம் செய்து விட்ட காரணத்தினால் அடுத்த பரிணாம வளர்ச்சியாக உம்முல் முஃமின்களையும் சஹாபிய பெண்மணிகளையும் விமர்சிக்க இறங்கி விட்டார்கள் போலும்.

கடந்த ரமளானில் அந்த 'அந்த 72 கூட்டத்தினர்' என்ற பெயரில் சஹாபா பெருமக்களை விமர்சித்தவர்கள் இன்று இப்படி இறங்கி இருக்கிறார்கள் என்றால், இந்த வருட ரமளானின் முன்னோட்டமோ இது.

பொதுவாகவே, மரியாதைக்குரிய எவரையும் கிழவன் கிழவி என்று எவரும் விமர்சனம் செய்ய மாட்டார்கள். இப்படி உம்முல் முஃமின்களை விமர்சனம் செய்த பாக்கருக்கு என்ன 18 வயதா? அவர் குடும்பத்தில் உள்ளவர்களை உறவு முறையை சொல்லாமல் இப்படித்தான் கிழவன் என்றும் கிழவி என்றும் குறிப்பிடுவாரோ?

நாம் அறிந்தவரை இராமநாதபுர மாவட்டம் என்றில்லாமல் எந்த பகுதியிலுமே நெருக்கமான உறவினர்களை கிழவன் கிழவி என்று குறிப்பிடக்கூடியவர்கள் இல்லை.

ஒருவேளை ததஜவின் தரத்தை உறுதி செய்யக்கூடிய வகையில் இப்படித்தான் நாங்கள் எங்களது குடும்ப உறுப்பினர்களை (தாய் தந்தையரை) அழைப்போம் என்று கூட ஒருவேளை வக்காளத்து வாங்க உளறுவாய் உமர் முன்வரலாம்.

உம்முல் முஃமினீன்கள் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் தாய் ஸ்தானத்தில் உள்ளவர்கள் ஆவார்கள். இதனை மறுப்பவர்கள் உண்மையான முஸ்லிம்களாக இருக்க தகுதியற்றவர்கள்.

முகவைத்தமிழன் அவர்களே! ததஜவோடு மல்லுக்கு நிற்பதனால் சற்று மூலை குழம்பி விட்டீர்களோ? எந்த விவாதத்திற்கய்யா அவர்கள் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒப்புக் கொண்ட களியக்காவிளை விவாதம் அவர்களுக்கு எவ்வளவு பெரிய தோல்வியை தந்ததென்று அறிந்த பிறகும் உங்களின் சவாலை ஒப்புக் கொள்ள அவர்கள் என்ன மாங்கா மடையர்களா?

பொறுத்திருந்து பாருங்கள், இதற்கும் ஏதாவது சால்ஜாப்பு சொல்லி அபுஅப்துல்லாஹ்விடமிருந்து, பழுலுல் இலாஹியிடமிருந்து, ஹாமித் பக்ரியிடமிருந்து, முஜீபு உமரிடமிருந்து நாடகமாடி தப்பித்து ஓடியது போல் உங்களிடமிருந்தும் ஓடுவதற்கு நாடகம் தயார் செய்வார்கள். எனவே காத்திருந்து ஏமாற வேண்டாம்.

'அடுத்து அவர் அள்ளி வீசிய பொய்களில் நவ்பல் பின் வரக்கா அவர்களை யூதர் என்று குறிப்பிட்டதாகும்' என்பது உ.உ.கூ.உமரின் கூற்றாகும்.

நவ்பல் என்பவரின் வாப்பா வரக்காவா? வரக்கா என்பவரின் வாப்பா நவ்பலா?

வரக்கா பின் நவ்பல் என்பது தான் ஹதீஸ்களில் நமக்குக் கிடைக்கும் தகவலாகும்.

உ.உ.கூ.உமர் ஆத்திரப்படாமல் கவனமாக ஹதீஸ்களை படிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ஆத்திரப்பட்டால் முகவைத்தமிழனிடம் சரியாக மாட்டிக் கொள்ள வேண்டியது வரும்.

நிதியளிப்பவர்களே நியாயவான்களே உங்களின் பொருளாதாரத்தை இத்தகைய இஸ்லாமிய எதிரிகளுக்கா வழங்கப்போகிறீர்கள்.

கான் சாயபு 20.09.2006

No comments: