Monday, August 14, 2006

சிங்கள தீவிரவாதிகளின் அரச பயங்கரவாதம்

சிங்கள தீவிரவாதிகளின் அரச பயங்கரவாதம்
பாகிஸ்தான் வழங்கும் ஆயுதங்களால் கொல்லப்படும் எம் சிசுக்கள்
சிங்கள இனவெறியர்கள் நடத்திய படுகொலைகளை பாரீர் !!
கொல்லப்பட்ட தமிழ் இன சிசுக்கள் !!
இந்திய அரசே சிங்கள தீவிரவாதிகளுக்கு அளிக்கும் ஆதரவை நிறுத்து !!





பரந்தன் - முல்லைத்தீவு சாலையில் வல்லிபுனம் பகுதியில் உள்ள செஞ்சோலை வளாகத்தின் மீது ஸ்ரீலங்கா வான்படையின் கிபிர் வானூர்திகள் மேற்கொண்ட கோரக்குண்டு வீச்சில் 59 பள்ளி மாணவிகள் கொல்லப்பட்டதுடன் மேலும் 163பேர் வரை படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் 42 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக அறியமுடிகிறது. செஞ்சோலை வளாகத்தில் இன்று நடைபெற்றுக் கொண்டிருந்த முதல் - உதவி பயிற்சி நெறியில் பல்வேறு பாடசாலைகளைச் சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் இன்று காலை 7.00 மணியளவில் இவர்களை இலக்கு வைத்து ஸ்ரீலங்கா வான்படையின் கிபிர் குண்டு வீச்சு வானூர்திகள் நடத்தி கொலை வெறித்தாக்குதலில் 50 மாணவிகள் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தில் அகப்பட்ட அனைவரும் 13 வயது 14 வயது 15 வயதுச் சிறுமிகள் என அறியமுடிகிறது. எமக்கு கிடைத்த தகவல்களின்படி 59பேர் இறந்ததாகவும் 200பேர்வரை காயமடைந்ததாகவும் அறியமுடிந்தது எனினும் சில பிரபலமான ஊடகங்கள் இந்த உண்மை தொகையினை குறைத்து முரன்பாடான தகவல்களை வெளியிடுவதாக அறியமுடிகிறது. தற்போது சார்வதேச தொலைக்காட்சி ரி.ரி.என்கு விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தபடி 163 படுகாயமடைந்த மாணவிகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் ஆகவே இறப்புகளும் காயமடைந்த சிறுமிகளின் எண்னிக்கையும் அதிகரிக்கும் என்று அறியமுடிகிறது.

நன்றி : நிதர்சனம்




சிதறடிக்கப்பட்ட எம் இன மொட்டுக்கள்



தமிழக முதல்வர் அவர்களே!!

சிதறடிக்கப்பட்டு கிடக்கும் உம் இனப்பிஞ்சுகளின் குருதி உம் மனதை உருக்கவில்லையா ?

உத்தரவிடுங்கள் ஐயா உம் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு !!

இவ்வினப்படுகொலையை வன்மையாக கண்டிக்க சொல்லி மத்திய அரசிற்கு உத்தரவிடுங்களய்யா!!

இச்சிங்கள பேரினவாதிகளின் தீவிரவாதத்திற்கு துனை நிற்கும் மத்திய அரசின் அனைத்து போக்குகளையும் வன்மையாக கண்டியுங்களய்யா!!

இதை நீர் செய்யாவிட்டால் ...வேறு யாரும் செய்வதற்கில்லை !!

தமிழினத் தலைவனான நீர் ஆட்சியிலிருக்கும் போது நம் இனம் அழிவுக்குள்ளாக்கப்படுகின்றதய்யா !!

இதை நீர் கேட்காவிட்டால், யார் கேட்பது??

தமிழினமே பொங்கி எழு ...சிங்கள பேரினவாதிகளின் அரச பயங்கரவாதத்தை முறியடிக்க போராடு!!



நன்றி
முகவைத்தமிழன்

யாழ் மட்டக்களப்பு மூதூர் வெருகல்

No comments: