Saturday, August 12, 2006

முந்துங்கள் முஸ்லிம்களே! ஆள் எடுக்கிறார்கள்!!


முந்துங்கள் முஸ்லிம்களே! காவல்துறைக்கு ஆள் எடுக்கிறார்கள்!!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பின் தமிழ் முஸ்லிம் சமுதாயமே,

தமிழக காவல்துறையில் 517 உதவி ஆய்வாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சப்-இன்ஸ்பெக்கடர் பதவிக்கு பட்டாதாரிகள் விண்ணப்பிக்கலாம். வயது 20 முதல் 28 க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரார் உயரம் குறைந்தபட்சம் 168 செ.மீ இருக்க வேண்டும். மார்பளவு 81 செ.மீ இருக்க வேண்டும், 5 செ.மீ விரிவடைய வேண்டும்.

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதற்கான மாதிரி விண்ணப்பத்தை பயன்படுத்த வேண்டும். தேர்வுக கட்டணம் ரூ.250 மட்டும். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தோடவாணையம், சென்னை என்ற பெயரில் பாரத ஸ்டேட் வங்கியில் பெறப்பட்ட டி.டி. யாக செலுத்த வேண்டும். விண்ணப்பம் அனுப்பும் தபால் கவருடன் கல்வி, சாதி சான்றிதழ்களின் நகல்கள், ரூ.6 மதிப்புள்ள ஸ்டாம்ப் ஒட்டப்பட்ட தபால் கவரையும் இணைத்து அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை வரும் ஆகஸ்ட் 19 க்குள் அனுப்ப வேண்டும். அனுப்ப வேண்டிய முகவரி:

தலைவர்,
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழு,
எல்.ஐ.சி எதிரில்,
அண்ணா சாலை,
சென்னை - 600002

சகோதரர்களே, இது ஒரு நல்ல வாய்ப்பு, படித்த மேற்கண்ட தகுதிகளை உடைய பட்டாதாரி முஸ்லிம் இளைஞர்களே கையில் உள்ள பாஸ்போர்ட்டை தூர எரிந்து விட்டு இப்பணிக்கு விண்ணப்பியுங்கள். காவல் துறையில் நமது விகிதாச்சாரத்தை அதிகப்படுத்த முயலுங்கள். சகோதரர்களே இதற்கு தகுதியான உங்கள் நன்பர்கள், உறவினர்களை இதற்கு விண்ப்பிக்க செய்யுங்கள்.

நன்றி : மக்கள் உரிமை செய்தி ( ஆகஸ்ட் 04-10, 2006)

தமுமுக வின் இது போன்ற பணிகள் தொடரட்டும், இன்னும் இது போல் தமிழக அரசு பணிகளிலும், பாதுகாப்பு துறைகளிலும் உள்ள காலி பணியிடங்களை கண்டறிந்து நம் சமுதாய மக்களுக்கு தெறியப்படுத்தி அதற்கு விணணப்பிக்க செய்தால் நாம் அரசு மற்றும் பாதுகாப்பு துறைகளில் ஒரு குறிப்பிடட விகிதாச்சாரத்தை எட்டலாம் இதற்கு தமுமுக போன்ற இயக்கங்கள் உழைக்கும் என்று எதிர்பார்க்கின்றோம்.

No comments: