Wednesday, August 16, 2006

லூசுப்பய கருனாநிதி-நல்லவர் கருனாநிதி - பிஜே

லூசுப்பய கருனாநிதி-நல்லவர் கருனாநிதி - பிஜேயின் மோடி வித்தை

بسم الله الرحمن الرحيم


قُلْ إِن تُخْفُواْ مَا فِي صُدُورِكُمْ أَوْ تُبْدُوهُ يَعْلَمْهُ اللّهُ وَيَعْلَمُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الأرْضِ وَاللّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

يَوْمَ تَجِدُ كُلُّ نَفْسٍ مَّا عَمِلَتْ مِنْ خَيْرٍ مُّحْضَرًا وَمَا عَمِلَتْ مِن سُوَءٍ تَوَدُّ لَوْ أَنَّ بَيْنَهَا وَبَيْنَهُ أَمَدًا بَعِيدًا وَيُحَذِّرُكُمُ اللّهُ نَفْسَهُ وَاللّهُ رَؤُوفُ بِالْعِبَادِ

(நபியே!) நீர் கூறும்; ''உங்கள் உள்ளத்திலுள்ளதை நீங்கள் மறைத்தாலும், அல்லது அதை வெளிப்படையாகத் தெரியப்படுத்தினாலும் அதை அல்லாஹ் நன்கறிகின்றான். இன்னும், வானங்களில் உள்ளதையும், பூமியில் உள்ளதையும் அவன் நன்கறிகின்றான்;. அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் ஆற்றலுடையவன் ஆவான்.''

ஒவ்வோர் ஆத்மாவும், தான் செய்த நன்மைகளும்; இன்னும், தான் செய்த தீமைகளும் அந்த(த் தீர்ப்பு) நாளில் தன்முன்கொண்டு வரப்பட்டதும், அது தான் செய்த தீமைக்கும் தனக்கும் இடையே வெகு தூரம் இருக்க வேண்டுமே என்று விரும்பும்;. அல்லாஹ் தன்னைப்பற்றி நினைவு கூறுமாறு உங்களை எச்சரிக்கின்றான்;. இன்னும் அல்லாஹ் தன் அடியார்கள் மீது கருணை உடையோனாக இருக்கின்றான்.(அல்குர்ஆன் 3:29 மற்றும் 30)

மு. கருணாநிதி தலைமையில் உள்ள தமிழக அரசு நியாயமாகவும் நேர்மையாகவும் நடந்து வருகிறது – ததஜ-வின் மாநில தலைவர் பிஜெ அவர்களின் புகழ்ஆரம்


கடந்த சில தினங்களுக்குமுன் ததஜ-வின் அதிகாரபூர்வ இணையதளத்தினை விஜயம் செய்தபோது அதில் துபையிலிருந்த ஒரு முஸ்லிம் சகோதரர் ததஜ மாநில தலைவரிடம் தொலைபேசியில் கேட்ட கேள்விக்கு பதில் என்று சுமார் 4.28 நிமிட ஆடியோ கிளிப் போட்டுள்ளார்கள். அதை டவுன் லோட் செய்து கேட்ட நமக்கு அண்ணன் பிஜெ-யின் சரணகதி சாஸனம் பளிச்சிட்டதை காண முடிந்தது..


இன்று பிஜெ....ததஜ இணையதள கேள்வி பதில் அடியோ கிளிப்-லிருந்து....

கேள்வி.... அதாவது நாம் ஆதரித்த கட்சி தமிழகத்தில் ஆட்சி அமைக்கவில்லை எதிர் கட்சி தான் ஆட்சி அமைத்துள்ளது இந்நிலையில் நமக்கு எதாவது எதிர்பு உண்டா?


பிஜெ : நமக்கு எதாவது இடைஞ்சல் பண்ணுகிறார்களா? என்று கேட்கின்றீர்களா? அதாவது இந்த ஆட்சி மாற்றம் எற்பட்ட பிறகு தமிழகத்திலுள்ள நடவடிக்கைகளை நாம்பார்த்தோம்ணு சொன்ன நம்மளைவந்து இந்த அரசாங்கம் நம்மை நசுக்கவேண்டுமென்றோ பாரபட்சமாக நடத்துகிறார்களோயென்று நினைப்பதற்க்கு எந்தவித அறிகுறிகளும் தென்படவில்லை இன்னும் சொல்லப்போன நமக்கு கிடைத்திருக்கின்ற தகவர் படி முத்துப்பேட்டை அன்சாரி அவர்கள் நோட்டீஸ் போட்டதற்காக ஒருபொய் வழக்கு போட்டார்கள் அதுகூட பொய்வழக்குயில்ல வழக்குபோடகூடாதுதென்று வழக்குபோட்டார்கள்.

நோட்டீஸ் கொடுத்துநெசந்தா நோட்டீஸ் கொடுத்து கலட்டா பன்னார் என்கிறமாதிரி வழக்குபோட்டார்கள் தவிர ஒரு கொலைகேஸ் ஒன்னும்போடவில்லை அதுகூட நாம் ஆர்பாட்டமெல்லாம் பண்ணிபிறகு தழிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் விசயத்தில் வந்து நேர்மையாக மட்டும் நடந்துகொள்ளுங்கள் என்று அதிகாரிகளுக்கெல்லாம் உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது அது ஏன்னுகேட்ட நாம ஒரு வலிமையா இருக்கோம் அடுத்து நாமவந்து தேர்தல்உறவு தேர்தலோடு போச்சு என்கிறவிஷயத்தில் தெளிவா இருக்கிறோ மறுபடியும் அவங்கள வந்து நாமவந்து பகைச்சுக்கவேண்டாம் என்றுசொல்லி கவர்மென்ட் வந்து ரொம்ப சாப்ட்கார்னராக இருப்பதைதான் நாமவந்து பல சம்பவங்கள பார்க்கிறோம்.....(இதனை தொடர்ந்து மேலப்பாளையம் பள்ளி விசயத்தில் காவல்துறை மற்றும் ஆட்சிதுறை இரண்டும் ததஜ-விற்கு சாதகமாக நடந்ததாகவும் மற்றும் தமுமுக-க்கு வேல்யூ இல்லை அவர்கள் இயக்கவாதிகள் கைது செய்து ரவுடி லிட்டில் சேர்த்தாகவும் அதுபோல் கடையநல்லூர் பள்ளிவிஷயத்தில் ஒன்றும் செய்ய முடியவில்லை தமுமுகவால் என்று செய்திகளை சொல்லுகிறார் (CLICK HERE TO LISTEN)


4வது நிமிடம் 8 செகன்டிலிருந்து....
நமக்கு எந்த சங்கடமோ இடைஞ்சலோ கிடையாது இன்னுசொல்லபோன நமக்கு வந்து வீட்டில எனக்து போலீஸ் பாதுகாப்பு போட்டுயிருக்காங்க ஒருவாரகாலமா வெளங்குதா? வீட்டுக்குள்ள போகமுடியல அந்தஅளவுக்கு போலிஸ் பாதுகாப்பு இது எதுக்குசொல்றன்கேட்ட அந்தஅளவுக்கு நம்மவிசயத்தில கூடுதல்கவன செலுத்துறாங்க எந்தவொறு அடக்குமுறையு கிடையாது நேர்மையா கரெக்டா நடக்கறாங்க.... (CLICK HERE TO LISTEN)


இப்படி முடிக்கின்றார் அண்ணன் பிஜெ அவர்கள்


அன்று பிஜெ....


www.onlinepj.net என்ற இணையதளத்தில் தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு 'தேர்தல் முடிவுகளும் ததஜவின் நிலைபாடும்' என்ற தலைப்பில் நான்கு வீடியோ கிளிப்ஸ் போட்டுயிருந்தார்கள் அதில் 2வது கிளிப்ஸ் 10:40வது செகன்டிலிருந்து...

என்ன தயக்கோம் ஏம்மா வந்துருச்சே.. கருணாநிதி ஏற்கனவே போட்டு மிதிமிதின்னு மிதிச்சாரே உள்ளபுடிச்சுபோட்டாரே பொய்வழக்கெல்லாம் போட்டாரே இரும்புகரம் கொண்டு நசுக்குவேன்னு சொன்னரே ஒவ்வொரு டிசம்பர் ஆறுலேயும் அம்பது, நாப்பதுநாயிரம் பேர புடிச்சு புடிச்சு உள்ள போட்டரே அந்த ஆளுவந்துடரே... வரடடுமே அட..இவங்தேன் பாதுகாவலர்களா? அவரு புடிச்சுபோட்டு என்னத்த பணனிபுட்டாருன்னு கேட்டேன் ........(திடிரென அவேசமாக) கருணாநிதி பழைய கருணாநிதியா வந்து எங்களுவள போட்டு மிதிச்சு உள்ளபோட்டு தள்ளி பொய்வழக்கு போட்டு உனக்கு என்னென்ன செய்ய முடியுமோ செய்.....

அதனால இந்த உருட்டல் மெரட்டலுக்கெல்லாம் பயந்து நாங்கள் இறங்க மாட்டோம்.....எவனுக்கும் பயபடமாட்டோம் எங்களோட பிரச்சாரத்துக்கு நீ நினைக்கலாம் பிரச்சாரத்துக்கு இப்படி முட்டுகட்டைபோட்டு தடுத்துடலாம் பள்ளிவாசலுக்கு வரவிடமா முடக்கிலாம்னு.....(திடிரென அவேசமாக) முடியுமா உன்னலா அடக்கிருவியா பாரு பாப்போம் என்று நாங்க சேலஞ்சு நெஞ்சைநிமிர்த்தி சொல்லகூடியவர்கள் நாங்கள்......இதுனால யாருக்கும உருத்தலோ..(வாயை ஒரு மாதிரி ஆக்கி கொண்டு ...ச்சுசோ...ஹே....ஹே.. என்று ஒரு மாதிரி குரல் எழுப்புகின்றார்) அவனெல்லாம் ஜீஜீபி...(திடிரென அவேசமாக) டேய்... அல்லாஹ்வே நம்பி நிப்போ வா .......வாடா டேய்..வா..எவன வேண்டாலும் கூட்டிட்டு வா..(திடிரென அவேசமாக) இந்த மிரட்டலெல்லா அதாவது ரெய்டா இருந்தாலு சரி ஜெயிலா இருந்தாலும் சரி காப்பா இருந்தாலும் சரி இதுக்கு பயப்படுற ஆளு... நீ பயப்படுவே...காப்பையும் ஆப்பையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்..


தயவுசெய்து நம்புங்கள் மேற்கண்ட வசனங்கள் அனைத்தும் அண்ணன் பிஜெ-யின் அவேசமான வசனங்கள்தான் அவர் வாயிலிருந்து வந்தவைதான் (CLICK HERE TO SEE THE VIDEO)

அடுத்து குடந்தை குலுங்கிய?? பேரணியில் பேசும்போது...


உங்களுக்கு எட ஒதுக்கீடு தருகிறோம் ..கருனாநிதி சொன்னானா??? தேர்தல் அறிக்கையில சொன்னாரா? ...காங்கிரஸ் கட்சி சொன்னதா?? பாட்டாளி மக்கள் கட்சி சொன்னதா??? (ரசிகர் மன்றத்தினர் ..ஆமாம்...ஆமாம்...) அதையிலாம் நீ நம்புனியா ??? வாக்களிச்சில்ல ...நம்புனம்ல ...இப்ப என்ன சொல்ரான் கருனாநிதி...லூஸ் ...லூசு மாதிரி பேசுகிறான்.. (CLICK HERE TO SEE THE VIDEO)


இப்படி கருணாநிதியை மூன்று மாதங்களுக்கு முன் விமர்சனம் செய்து பிஜெக்கு என்ன நேர்ந்தது என்று சற்று அலசி பார்த்தபோது கிடைத்தவை....


திமுக அரசுக்கு களங்கம் கற்பிக்க நினைக்கும் அதிகாரிகளுடன் கூட்டு:


மேலப்பாளையம் ஜாக் பள்ளியை தன்னகத்தே வைதுள்ள ததஜ அந்த பள்ளியை தொடர்ந்து தங்களது கட்டுபாட்டில் இருப்பதற்க்காக ததஜ அப்பபோது கூஜா தூக்கும் வேலையை செய்யும் அதாவது மேலப்பாளையம் பகுதிக்கு வரும் புதிய அதிகாரிகள, காவல் துறை அதிகாரிகள், நெல்லை வழியாக பயணம் செய்யும் அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு மணம்கமழும் வகைவகையான சிக்கன் பிரியானி மட்டன் பிரியானி விருந்து வைத்து ஒரே கவுத்தா கவுத்தி தங்கள் பிரியார்களாக வைத்துக்கொள்வார்கள் (சில சமயம் பார்சல் பிரியானி மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் மாட்டுகறி பிரியானியும் புகைவண்டி நிலையத்தில் உள்ள ஓய்வறைக்கே சென்று டோர்டெலிவரியும் உண்டு நெல்லை வழியாக பயணம் செய்யும் அதிகாரிகளுக்கான பம்பர் பரிசு) அடுத்து அதிரடியாக படைபட்டாளத்துடன் புதிய அதிகாரியின் அலுவலகத்திற்கே விஜயம் செய்து பள்ளி பணத்தில் அன்பளிப்புகள் கொடுத்து அசத்தி விடுவார்கள் இதெல்லாம் ததஜ-வின் ஆன்மீக ரௌடி (இது நமது வார்த்தையல்ல என்பதனை வாசகர் அறியவும்) என்று மேலப்பாளையம் வாசிகளால் அன்புடன் அழைக்கப்படும் ஷம்ஸுல் ளுஹா ரஹ்மானி அவர்களின் தலைமையில் சீரிய கண்காணிப்பில் நடைபெறும் என்பது தான் சிறப்பு செய்தி.


பிரியானி விருந்துக்கு கட்டுபடாத அரசியல்வாதிகளை அடுத்த கட்டமாக பொது நிகழ்ச்சி அதாவது சமூகபணி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து தேதி வாங்கி நிகழ்ச்சி நடத்துவது. முன்னால் அமைச்சர் நைனார் நகேந்திரன் அவர்கள் கடைசி வரை பிரியானி வைபவத்திற்க்கு பிடிகொடுக்காமல் நழுவியவரை தேர்தல் சமயம் நெருங்கியபோது அதற்கு முன்பும் சமூக பணி நிகழ்ச்சிக்கு அழைத்து முன்னால் அமைச்சரை அசத்திவிட்டார்கள்
விசயம் இதுதான் அதாவது மேலப்பாளையம் பள்ளியை தங்கள் காட்டுபாட்டில் இருப்பதற்காக சில இலட்சங்கள் வரை செலவு (இலஞ்சம்) செய்யலாம் என பச்சை விளக்கு எரிந்தவுடன் (அட.. நீங்கள் எல்லாம் அழைப்புபணிக்காக அனுப்பிய பணம் தான் வேறன்ன) விரைவாக காய்கள் நகர்த்தப்பட்டது.

பள்ளியை சொந்தம் கொண்டாடும் ஜாக்கின் மாவட்ட நிர்வாகம் நெல்லை சார்பு நீதிமன்றத்தில் இடைகால தடையுத்தரவு பெற்று பள்ளியை கையில் எடுக்க இருந்த வேளையில் உள்ளுர் காவல் துறையினர் உதவியுடன், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்றும் அதனால் நீதிமன்ற உத்தரவை உடனடியாக செயல்படுத்த தயக்கம் என்று மாவட்ட நிர்வாத்திற்க்கு தகவல் கொடுக்கபட்டது அதனடிப்படையில் ஆர்டிஓ விசாரனைக்கு உத்தரவிடப்பட்டது. இது இரண்டும் நடந்தவுடன் ததஜ-வினர் கோலகலம் அடைந்தனர் காரணம் காவல் துறையின் கருப்பாடு பீர் முஹம்மதுக்கு சுமார் 25 முதல் 50 ஆயிரம் வரை கையூட்டு வழங்கப்பட்டுள்ளது. அடுத்து ஆர்டிஓ துரைசாமி-க்கு பேரம் பேச இரவோடு இரவாக ஆள் ஆனுப்பி பேரம் படிந்தது 75 ஆயிரம் வரை. எல்லோரும் சட்டத்தின் ஒட்டையில் புகுந்து விளையாடினார்கள் பீர் முஹம்மத் கூறினார் சட்டம் ஒழுங்கு, துரைசாமியோ துட்டு கொடுத்த துரைமார்க்கு சாதகமான தீர்ப்பு தான் நீதிமன்ற தீர்ப்பு வரும்வரை தற்போதுள்ள நிர்வாகத்தில் தடையிட ஜாக் மாவட்ட நிர்வாகிகளுக்கு தடைகொடுத்தார் அவ்வளவுதான்.

இதன் பின்பு நடந்ததை தான் மிகபெரிய கூத்து அண்ணனின் மேற்கண்ட அதிரடி அந்தபல்டி அடியோ கிளிப் அடுத்து மாவட்ட நீதிதுறை நீதிவான்களை மடக்க நெல்லை சீமையின் மைந்தன் சட்டமன்ற சபாநாயகர் ஆவூடையப்பன் அவர்களை தங்களுக்கு வேண்டியவர்களா காட்டி கொள்ள எடுத்த முயற்சி அதாவது திமுகவின் நெல்லை மாநகரட்சியின் மேலப்பாளையம் மண்டல தலைவர் எஸ் எஸ் மைதீன் அவர்களை மூலமாக சமூக நிகழ்ச்சிக்கு தேதி வாங்கி கொண்டு நிகழ்சியை விளம்பாரம் செய்ய தயாரானபோது நெல்லை சீமை கழக கண்மணிகளின் கண்கள் சிவந்தன காரணம் கடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது கேவலமான முறையில் திமுக-வையம் அதன் தலைவர் மு.கருணாநிதியையும் விமர்ச்சனம் செய்த பிஜெ-யின் பினாமி ளுஹா நடத்தும் நிகழ்ச்சியில் சபாநாயகரா? என்று
உடனடியாக கழக கண்மணிகள் விசாரணை செய்து மேற்கண்ட இரண்டு பாராவில் சொன்ன செய்திகளை திமுகவின் தலைமைக்கு பத்திரமாக அறிக்கையாக வழங்கினார்கள்.

அறிக்கையை படித்த திமுக உயர் மட்ட தலைவர்கள் உடனடி நடவடிக்கைக்கு உத்தரவிட்டனர் விளைவு?? பீர் முஹம்மத் காவல் துறையினர் செல்லமாக அழைக்கும் ஓய்வு துறைக்கு மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டு புதிய பணியிடத்தில் பணியில் சேர்ந்துள்ளார். அதை போல் துரைசாமிக்கு மாறுதல் உத்தரவு ஆனால் இன்னும் புதிய இடம் அறிவிப்பு இல்லை. அதேபோல் நெல்லை சீமையின் மைந்தன் நிகழ்ச்சி அம்போவானது...
ஆனாலும் நெல்லை திமுகவினரின் கோபம் தனியவில்லையாம் காரணம் புல்லுருவி எஸ்எஸ் மைதீன் மீது நடவடிக்கைக்கு பரிதுரைத்து, திமுக தலைமை இன்னும் நடவடிக்கை எடுக்க வில்லையாம். (இவர் தேர்தல் சீட் கேட்டு கிடைக்காமல் மைதீன்கானுக்கு சீட் கிடைத்தால் எரிச்சல்யடைந்தவர் மேலும் அமைச்சருக்கு எதிரான உள்ளடிவேலையும் செய்து வருகின்றார் என்று திமுகவினர் அனல் வீசுகிறார்கள்) உடனடியாக கழக தொண்டர்கள் தங்கள் கட்சிக்கு எதிராக வேலைபார்த்ததோடு மட்டுமல்லாமல் தங்கள் தலைவர் முதலவர் கருனாநிதி அவர்களை வயதில் மூத்தவர் என்ற மறியாதை சிறிதும் இல்லாமல் ஜெயலலிதாவோடு சேர்ந்து கொண்டு எஸ்.எஸ்.எ சந்திரனைப்போல் தமிழக முதல்வரை லூஸ்...அயோக்கியன்...கொடுங்கோலன் மற்றும் எழுத இயலாத ஆபாச வாhத்தைகளால் திட்டியதோடல்லாமல் பி.ஜேயும் பாக்கரும் மற்றும் ததஜவின் நிர்வாகிகளும் ஊர் ஊராக முதல்வர் கருனாநிதியையும் அவரது குடும்பத்தாரையும் முக்கியமாக அமைச்சர் ஸ்டாலினையும் திட்டி வந்துள்ளார்கள் அப்படி பேசிய பி.ஜே மற்றும் ததஜவினர் குறித்த தகவல்களை திமுக வினர் திரட்டி வருகின்றார்கள் என்ற தகவல் அறிந்ததும் நம் அண்ணன் அந்தாட் பல்டி அடிக்க தயாராகிவிட்டார்.


அண்ணன் பிஜெ அவர்கள் தனக்கும் தனது பினாமிகளுக்கும் பிரச்சனையென்றால் யாரை வேண்டுமானல் அடமானம் வைப்பார் எதைவேண்டுமானலும் செய்வார்கள், அந்தர் பல்லடி அடித்து தெருவோர வித்தைகாரன் போன்று பல பாரக்கிர வித்தைகளை காண்பிப்பார் என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவையா?


மூன்று மாதங்களுக்கு முன்பு வரை மோடிக்கு இணையாக வர்ணிக்கப்பட்ட கருணாநிதி தற்போது நேர்மையாளராம், தனிகவனம் செலுத்தி போலீஸ் பாதுகாப்பு கொடுத்ததுள்ளாராம் ததஜ-வினருக்கு. முத்துபேட்டையில் காவல் துறை பொய்வழக்கு போட்டதாக கூறி பெண்களையும்
அழைத்துகொண்டு அரசுக்கும் காவல் துறைக்கும் எதிராக ஆர்பாட்டம் செய்து அதன் ஈரம் கூட காயவில்லை தற்போது பல்டி அடித்து பொய்வழக்கு போடவில்லையாம் வழக்கு போடகூடாது என்று வழக்கு போட்டார்களாம் கொலை கேஸா போட்டார்கள்? நக்கல் கேள்வி வேறு. 'கருனாநிதி
லூஸ்...லூசு மாதிரி பேசுறான்'
என்று கூறியவர்கள் இன்று முதல்வர் அவர்கள் என்று மறியாதையாக வழிவது ஏன்?


இன்னும் இவர்கள் பின்னால் செல்லும் முளை கழுவி விடப்பட்டு ததஜ-விற்காக அல்லும் பகலும் உழைக்கும் வளைகுடா வாழ் ததஜ-வினரே சற்று சிந்தியுங்கள். பொன்னான உங்கள் நேரத்தினையும், விலைமதிப்பற்ற உடல் உழைப்பையும், கடின பாலைவன வெப்பத்தில் வியர்வை சிந்தி உழைத்த உங்கள் பொருளாதாரததினையும் இஸ்லாம் என்ற பெயரில் மேற்கண்ட தெருவோர வித்ததைகாரர்களை மிஞ்சும் இவர்களுக்கு செலவு செய்பவர்களே சிந்தியுங்கள் செயல் படுங்கள்.


குறிப்புகள்:என்வோ இவர்கள் சட்டத்திற்க்கு கட்டுபட்டு RDO தீர்ப்பை ஏற்றுக்கொண்டார்கள் என எண்ண வேண்டாம் இது விலைகொடுத்து வாங்கி இடைகாலத்தீர்ப்பு. காரணம் கடையநல்லூர் பள்ளி விசயமாக நேர்மையாக விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கிய தென்காசி ஆடிஓ-வின் தீர்ப்புக்கு இவர்கள் கட்டுபடவில்லை என்பதனையம் அதிகாரியை அன்றைய அட்சியாளர்களை (நைனார் நாகேந்திரன்) கொண்டு மிரட்டி தீர்ப்பு திருத்தப்பட்டதும் அனைவரும் அறிந்தது தான்
இதை படித்துவிட்ட வழக்கம் போல் நம்மை அடுத்த இயக்கதுடன் தொடர்பு படுத்தி எழுதக்கூடியவர்களுக்கு மீண்டும் எச்சரிக்கை நாங்கள் நீங்கள் தொடர்பு படுத்தும் இயக்கதின் உறுப்பினர் என்பதனை நிருப்பியுங்கள் இல்லையென்றால் நீங்கள் பொய்யர் தான்.


மேற் கூறியவைகள் அனைத்து நடந்த சம்பவங்கள், உதாரணமாக நாம் ததஜவினர் சட்ட விரோதமாக இரன்டு அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்ததையும் அதை அறிந்த அரசு உடனடியாக அந்த அதிகாரிகளை மாற்றல் செய்து உத்தரவிட்டுள்ளதையும் சுட்டிகாட்டியுள்ளோம், நாங்கள் வைக்கும் வாதம் பொய்யென்றால் அதை நிறுபியுங்கள். வலைகுடாக்களில் வாழும் முஸ்லிம்களிடம் தாவா என்ற அழைப்பு பணிக்காக வசூல் செய்யப்படும் பணம் இதுபோன்று இலஞ்சம் கொடுப்பதற்கும் ரவுடிகளை அல்லாஹ்வின் பள்ளிக்குள் வைத்து சோறு போட்டு சம்பளம் கொடுப்பதற்கும் சமுதாயத்தில் பிளவு ஏற்படுத்துவதற்கும் தான் பயன்படுத்தப்படுகின்றது. இது குறித்து விவாதிக்கவும் நாஙகள தயாராக உள்ளோம் அதற்கு முழு முகவரி தேவைப்படுவோர் தங்களின் முழு முகவரியுடன் தொலை மற்றும் அலைபேசி எண்களுடன் தள நிர்வாகிக்கு மின்னஞ்சல் ( tmpolitics@gmail.com ) அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்.


பார்த்தீர்களா சமூதாய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சொல்கிறாhர்கள், என கூப்பாட போடுபவர்களுக்கு நீங்கள் பிரிந்து வந்த இயக்கத்தில் ஒன்றாக இருந்தபோதும், ஜாக்கிலிலிருந்தபோதும், இரண்டு இயக்கதிற்க்கு இடைபட்ட காலத்திலும் முஸ்லிம் முன்னனி உறுமாறி பேரவையான சமயத்திலும் புல்லுருவிகளுக்கு எதிராக நீங்கள் அளித்த புகார்களையும் நடவடிக்கைகளையும் இந்த தருனத்தில் நினைவு கூறுகின்றோம். அதுபோல் தமிழகமெங்கும் எத்தனை அப்பாவி முஸ்லிம்களுக்கு எதிராக புகார் கொடுத்திருப்பீர்கள்? அப்போதெல்லாம் அவர்கள் சமுதாயமாக தெறியவில்லையா?

சமுதாயம் என்றால் ததஜ வின் மூலை கழுவி விடப்பட்ட
ரசிகர் மன்றத்தினர் மட்டுமா? மற்றவர்களை 'மாவு' அல்லது காஃபிர் என்று நினைத்துள்ளீர்களோ? அதனால்தான் தங்கள் முன்னால் சாக்களின் பத்திரிகையை அவர்கள் சக
முஸ்லிம்கள் என்ற நிணைவு கூட இல்லாது முஸ்லிம்களின் பணத்தில் நடத்தப்படும் ஏகத்துவத்தில் 'மாவுப்பத்திரிகை' (காஃபிர் பத்திரிகை) என்று எழுதியுள்ளீர்களோ? அப்படியெனில் ததஜ ஆரம்பிப்பதற்கு முன் வரை நீங்கள் காஃபிர்களுடன் தான் உறவு வைத்திருந்தீரோ?

உணருங்கள் வலைகுடா வாழ் முஸ்லிம்களே !! உங்களிடம் அழைப்பு பணிக்கென்று வசூலிக்கப்படும் பணம் எதற்கு பயன்படுத்தப்படுகின்றதென்று?

சக முஸ்லிமை சிறிது கூட வெட்கமின்றி காஃபிர் என்று அழைக்க பயன்படுத்துகின்றாhர்கள். ரமழான் வந்துவிட்டது உண்டியல் திருடர்கள் ஜக்காத் என்றும் ஃபித்ரா என்றும் அழைப்பு பணி என்றும் வசூலுக்கு வருவார்கள் சல்லிக்காசு
கொடுக்காதீர்கள் ஏனென்றால் அவர்களின் தலைவர் பி.ஜே அவர்கள் அரபுச்சல்லி தனக்கு தேவையில்லையென்று உங்கள் உழைப்பை அவமானப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாது நீங்கள் அளிக்கக்கூடிய பணம் சுய லாபத்திற்காக முதலீடு செய்யப்படுகின்றது (அழைப்பு பணிக்காக
வசூலான பணங்கள் எவ்வாறு உருமாறியுள்ளன என்று புகைப்படங்களுடனும் தக்க ஆதாரங்களுடனும் அடுத்த பதிவில்) உஷாராக இருங்கள் இந்த உண்டியல் திருடர்களிடத்தில்.


முந்தைய நமது பதிவுகளை ஒப்புதல் வாக்குமூலங்கள் மூலம் வெளிச்சம் போட்டு உண்மைபடுத்திய அஹமத் அலி மற்றும் உரத்து உரத்து உண்மைபடுத்திய உமருக்கும் நன்றிகள் உரித்தாகட்டும் இதுபற்றி விரிவான செய்தி அடுத்த பதிவில் இன்ஷh அல்லாஹ்.


குறிப்பு : இந்த கட்டுறை எழுத உறுதுனையாக இருந்த மேலப்பாளையம் சகோதரர்களுக்கும் அமீரக சொந்தங்களுக்கும் எனது நன்றிகள்.


அன்புடன்

தென்காசி பட்டனத்தான்

திராவிடப்பேரவை காரைக்குடி இஸ்லாம்

No comments: