Saturday, July 29, 2006

சென்னையில் பொதுக்கூட்டம் - ஒன்றிணையும் இஸ்லாமியர்கள்


இறைவனின் திருப்பெயரால்...

அப்பாவி சிறைவாசிகள் விடுதலை கோரிக்கை
சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம்

சென்னை, ஜீலை 29, தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் என்ற அமைப்பு நீங்கலாக தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான இஸ்லாமிய இயக்கங்களும் அரசியல் அமைப்புக்களும் இணைந்து நாளை 30.07.2006 அன்று மாலை 5.00 மணி அளவில் சென்னை மண்ணடி தம்புச்செட்டி தெருவில் தமிழகத்தின் சிறைகளில் வாடும் அனைத்து அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளையும் விடுதலை செய்ய வேண்டி தமிழக அரசை வலியுறுத்தி மாபெரும் கோரிக்கை போராட்டம் நடத்த இருக்கின்றன. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் தனிப்பட்ட முறையில் அரசை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தி வருவதால் இதில் கலந்து கொள்ள இயலவில்லை என்றும் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் என்ற அமைப்பினர் சிறைவாசிகளின் விடுதலையில் தங்களுக்கு விருப்பமில்லை என்று தங்களது பத்திரிகையான உணர்வில் அறிவித்து விட்டதால் தங்கள் கொள்கைக்கு புறம்பாக இதில் கலந்து கொள்ள இயலாது என்று தெறிவித்துள்ளதாக தகவல்கள் தெறிவிக்கின்றன.

தமிழகத்தில் முதல் முறையாக ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக, பிறிந்து கிடந்த பெரும்பான்மையான இஸ்லாமிய இயக்கங்களும் ஒருங்கினைந்து செயல்படுவது தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெறிவிக்கின்றனர். அதே சமயத்தில் ததஜ என்ற இயக்கத்தின் நிலைப்பாடு நெருடலாக உள்ளதாகவும் இது இவ்வியக்கத்தினரை தணிமைப்படுத்தும் என்று மாற்று மதத்தவரும் கருதுகின்றனர். இந்த போராட்டமும் பொதுக்கூட்டமும் தமிழக அரசியலில் ஒரு மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தி முஸ்லிம்களுக்கு வலிமை சேர்க்கும் என்பது பலரது கருத்தாகும்.

நளை நடக்க இருக்கும் நிகழ்ச்சி பற்றிய விவரம் :

தலைமை : மௌலவி ஹாமித் பக்ரி அவர்கள்
தலைவர்-ஐக்கிய சமாதானப் பேரவை


வரவேற்புரை : A.சுலைமான் சேட் அவர்கள்
பொருப்பாளர் ஐக்கிய சமாதானப் பேரவை

உரை நிகழ்த்துவோர்

மெளலானா ஸையத் மஹ்மூத் அஸ்அத் மதனீ, M.P.,அவர்கள் டெல்லி
ஜாமியத் உலமாயே ஹிந்த், பாராளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்


மெளலவி T.J.M. ஸலாஹீத்தின் ரியாஜி அவர்கள்
மாநில துனைத்தலைவர், ஜமாத்துல் உலமா சபை


வழக்கறிஞர். பாப்பா மோகன் அவர்கள்
சட்ட ஆலோசகர் சிறுபான்மை உதவி அறக்கட்டளை


A.ஃபாத்திமா முஸஃப்பர் அவர்கள்
இந்திய யுனியன் முஸ்லிம் லீக் அமைப்பாளர்


ஜனாப். இனாயத்துல்லாஹ் அவர்கள்
ஆல் இந்தியா மில்லி கவுன்சில்


அல்ஹாஜ். பசீர் அஹ்மத் அவர்கள்
மாநிலத் தலைவர் - இந்திய தேசிய லீக்


மெளலவி சம்சுதீன் காசிமி அவர்கள்
மக்கா பள்ளி இமாம், சென்னை


மெளலவி தர்வேஷ் ரஷாதி அவர்கள்
பொதுச்செயளாலர், இஸ்லாமிய விழிப்புணர்வு கழகம்


மெளலவி ஷாகுல் ஹமிது ரஹ்மானி அவர்கள்
சென்னை மாவட்ட ஜமாத்துல் உலமா சபை


தடா ரஃபீக் அஹ்மத் அவர்கள் - சென்னை

ஜனாப் உமர் ஃபாருக் அவர்கள்
மறுமலர்ச்சி முஸ்லிம் லீக்

ஜனாப். கேட்டை தங்கப்பா அவர்கள்
சிறுபான்மை உதவி அறக்கட்டளை

சே.மு. முஹம்மது அலி அவர்கள்
தமிழ் நாடு இஸ்லாமிய தொண்டு இயக்கம்

ஜனாப் K.M. ஷரீப் அவர்கள்
வஞ்சிக்கப்பட்ட சமூகங்களின் கூட்டமைப்பு


மெளலவி அப்துர் ரஹ்மான் ஷிப்லி அவர்கள்
இந்திய யுனியன் முஸ்லிம் லீக்


மெளலவி முஹம்மத் இபுறாஹிம் மன்பஈ அவர்கள்
ஐக்கிய சமாதான பேரவை


காயல் மஹ்பூப் அவர்கள்
செயளாலர்-இந்திய யுனியன் முஸ்லிம் லீக்


A.K.பீர் முஹம்மத் அலவர்கள்
காயல் பட்டணம் ஐக்கிய பேரவை


ஜனாப். A.V.A.கஸ்ஸாலி அவர்கள்
மாநில துனை தலைவர், பாட்டாளி மக்கள் கட்சி


துறைமுகம் சீமா பஷீர் அவர்கள்
அமைப்பு செயளாலர் ம.தி.மு.க


வழக்கறிஞர். முஸ்தஃபா அவர்கள்
மக்கள் விழிப்புணர்ச்சி இயக்கம்


மெளலவி Z.நசீர் அஹமது அவர்கள்
ஐக்கிய சமாதானப் பேரவை- மதுரை


மெளலவி சையது அஹமது ஸலஃபி
இமாம். ஜீம்மா மஸ்ஜித் இராமநாதபுரம்


நன்றியுரை

ஜனாப். முஜிபுர்ரஹ்மான் பாக்கவி அவர்கள்
இமாம் கே.கே நகர் மஸ்ஜித்


பொதுக்கூட்டப் பொருப்பாளர்கள்


M. அப்துல்லாஹ், M.H. அப்துல் வாஹித், முஹ்யித்தீன்
ஷாகுல் ஹமித், வடகரை A. முஹம்மது சாலிஹ்


வாருங்கள் சகோதரர்களே! கவலைப்படுவோம்! ஒன்றிணைவோம்!
சிறைவாசிகள் விடுதலை கோரிக்கை
போராட்டத்தில் அணி திரள்வோம்!
இன்ஷா அல்லாஹ் நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம்!!

என அழைக்கின்றார்கள் அப்பாவி சிறைவாசிகள் விடுதலை இயக்கத்தினர்.

நிகழ்ச்சி சம்பந்தமான நோட்டிஸ் டவுன்லோட் செய்ய :


பக்கம் 1

பக்கம் 2

1 comment:

ஆத்தூர்வாசி said...

Alhamdhulillah, Allahu akbar, Ooh Boy, it took so long to get the community united. I guess our umma has just now realized the importance of getting together.

I really dont understand TNTJ and TMMK here?, when the whole community is united what happened to you guys.
You better join the umma otherwise soon you guys are gonna be kicked out. People are waking up.