Friday, June 02, 2006

விவாதத்திற்கு தயாரா?


ஏகனின் திருப்பெயரால்..
ஃபித்னா பரப்புவோரும் தமுமுகவும் விவாதத்திற்கு தயாரா?
அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்று சகோ.பிஜெ மற்றும் மற்ற தாயிக்களின் தவ்ஹித் பிரச்சாரத்தை கண்டு மிரண்டு தவ்ஹித் கொள்கையை ஒழிப்பதற்காக தர்காவாதிகள், மத்ஹபுவாதிகள், தரிக்காவாதிகள் போன்றோர் பல வழிமுறைகளை அதவாது கூட்டத்தை தடுப்பது, தவ்ஹிதை பேசுபவனை அடிப்பது, ஊர் நீக்கம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டனர். அவர்களின் இத்தகைய செயல்கள் எல்லாம் தவ்ஹிதின் வளர்சியை அதிகபடுத்தியதே தவிர குறைக்க முடியவில்லை. கடைசியில் அவர்கள் சகோ.பிஜெவும் அவர்களை சார்ந்தவர்களும் இவர்கள் நபி(ஸல்) அவர்களை திட்டுகிறார்கள், சஹாபாக்களை திட்டுகிறார்கள், குர்ஆன், ஹதிசுக்கு தவறான விளக்கம் கொடுக்கிறார்கள் என்று மக்கள் மத்தியில் பொய்யை பரப்ப ஆரம்பித்தனர். அது எந்த அளவுக்கு மக்களை சென்றடைந்ததோ அந்த அளவுக்கு தவ்ஹித் வளர்சி தமிழகத்தில் ஏற்பட்டது. ஓவ்வொருவரும் இந்த இரு கூட்டத்தினரும் என்னதான் சொல்கிறார்கள் என்று ஆராய ஆரம்பித்தனர். அதன் விளைவு இன்று எந்த முஸ்லிம் அமைப்பையும், பிரிவினரையும் விட தவ்ஹித் கொள்கைக்கு ஆதரவாளர்கள் பல மடங்கு கூடியிருக்கின்றார்கள்.


அன்று எந்த பிரச்சாரத்தை சொல்லி தவ்ஹித் வளர்சியை குலைக்க மத்ஹப்வாதிகள் சதி செய்தார்களோ அதே பிரச்சாரத்தை இன்று தமுமுகவினர் செய்து வருகிறார்கள். தங்களை விட்டு வெளியேறி மாபெரும் இஸ்லாமிய மக்கள் இயக்கத்தை (ததஜவை) தங்களை விட வலுவாக உறுவாக்கி விட்டார். மற்றும் இன்று பித்ரா, சுனாமி என்று தாங்கள் செய்கிற திருட்டு வேளைகளை அம்பலபடுத்தி விடுகிறார் என்பதற்காக அன்று மத்ஹப்வாதிகள் செய்த அவதூறுபரப்பும் வேளையை இன்று தமுமுக என்ற போர்வையில் செய்கிறார்கள்.

ஒருபுறம் தொழுகையில் தொப்பி போடாமல் இருப்பது தவறு, தொழுகையில் விரலசைப்பது தவறு, தர்கா வழிபாடு சரியானது என்று கடையநல்லூர் போன்ற ஊர்களில் தமுமுகவின் பெயரை போட்டு நோட்டிஸ் அடித்து வெளியிடுகிறார்கள்(இதன் காப்பி வேண்டுவோர் மெயிலில் தொடர்பு கொள்ளவும);. மறுபக்கம் தவ்ஹித் கொள்கை, ஜகாத், சரியாக மொழிபெயர்ப்பு என்று கத்துகிறார்கள். தர்கா வழிபாடு கூடும் என்று வெளிப்படையாக கூறி இஸ்லாமிய அடிப்படையை தகர்கின்ற இந்த தமுமுகவினர் மற்றதை பற்றி வாய்கிழிய பேசுவது வேடிக்கையாக உள்ளது.

பிஜெ சொன்னாலும் யார் சொன்னாலும் குர்ஆன், ஹதீசுக்கு ஒத்துப்போனால் மட்டுமே ஏற்றுக்கொள்வதை நான் வழக்கமாக கொண்டுள்ளேன். சில காலம் முன்புவரை பிஜெயின் ஜகாத்
விசயத்தில் கூட எனக்கு உடன்பாடில்லாமல் இருந்தது. வருடாவருடம் ஜக்காத் கொடுப்பதற்க்கு ஏராளமான ஹதீஸ்கள் ஆதரமாக உள்ளது என்பது போன்று தமுமுகவினர் பேசி
வந்தனர். தற்போது அவர்கள் ஒட்டிகொண்டுள்ள தமுமுக ஹராம் பத்வா புகழ் ஜாக் தங்கள் மாத இதழில் 1 ஹதீஸை தவிர மற்ற அனைத்தும் லயிபானது என்பதை ஒத்துக்கொண்டது. அந்த ஒரு ஹதீசும் லயிபானதுதான் என்று ததஜ ஏகத்துவத்தில் விளக்கிய பிறகு ஜாக் தரப்பில் இருந்து எந்த பதிலையும் காணவில்லை. ஆக வருடா வருடம் ஜக்காத் என்பதற்க்கு எந்த ஒரு ஆதரமும் இல்லை என்பது தெளிவாகிறது.(விபரம் வேண்டுவோர் ஆன்லைன் பிஜெவில்
பார்கவும்).இவர்கள் எந்த ஆதாரமும் இல்லாமல் எப்படி வருடாவருடம் ஜக்காத் கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார்களோ தெரியவில்லை.

இன்றும் எனக்கு தெரிந்து ஜக்காத் விசயத்தில் மாற்று கருத்துடைய பல பேர் ததஜவில் இருக்கத்தான் செய்கிறார்கள். மார்க்கத்தை விளங்கி கொள்வதில் ஏற்படும் முரணால் ததஜவில் இருக்க கூடாது என்று எந்த தடையும் இல்லை. சில மஸாயில் விசயங்களில் அன்றிலிருந்து இன்றுவரை சஹாபாக்கள், தாபியீன்கள், இமாம்கள் மற்றும் மார்க்க மேதைகளுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. அது போன்ற ஒன்றைதான் சகோ.பிஜெயிடம் பார்க்கிறேன். தமுமுகவுக்கு உள்ள இயக்க போதையின் காரணமாக இஸ்லாத்தை அதன் தூய வடிவில் எடுத்து வைத்த சகோ.பிஜெ அவரது 25 வருடகால உழைப்பை கேவலப்படுத்துவது தவறானது.

இன்று தவ்ஹிதை விளங்கியுள்ள நாம் ஒவ்வொருவருக்கும் சகோ.பிஜெயின் பேச்சோ, எழுத்தோ ஏதோ ஒரு விதத்தில் அதற்க்கு காரணமாக இருந்ததை மறுக்க முடியுமா? சகோ.பிஜெ அவர்கள் சதாரண வட்டார மொழிவாக்கில் சஹாபாக்களை பற்றி குறிப்பிட்டதை அவர் வேண்டுமென்றே சஹாபாக்களை இழிவு செய்வதற்காக அவர் அவ்வாறு சொன்னதாக தமுமுக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நமது பேச்சின் நடுவே சிலரை அவர் சரியான கிரிமினல் என்று கூறுவதுண்டு அது அவர் அதிக மூளை திரன் உள்ளவர், நல்ல புத்திசாலி என்பதுதான் நமது வட்டார மொழியில் அர்த்தம். கிரிமினல் என்று சொன்னதுக்கு கொளை, கொள்ளை போன்றவற்றில் ஈடுபட்டவர் என்று தமுமுகவினர் தவறாக அர்தம் செய்வது அபத்தமானது.

உண்மையிலேயே சஹாபாக்கள் பற்றிய தன்னுடைய நிலையை சகோ.பிஜெ மாற்றி கொண்டார் என்றால் அவரது தற்போதைய உரைகளிலும் சஹாபாக்களுக்கு கண்ணியமளிப்பது ஏன்?. அவர்களின் சிறப்பை பற்றி மணிக்கனக்கில் பேசுவது ஏன்?.சஹாபாக்களின் சிறப்பு குறித்து பல கட்டுரைகளை வெளியிடுவது ஏன்?. ஆனாலும் அது போன்ற வட்டார மொழிகளை பயன்படுத்துவதை, பயண்படுத்தியதற்காக கண்டிக்காமல் இருக்க முடியாது. சகோ.பிஜெவும் அதற்க்கு விளக்கமளித்து தான் எந்த தவறான அர்தத்திலும் அவ்வாறு குறிப்பிடவில்லை என்று கூறி இருக்கிறார்.

சகோ.பிஜெ அவர்கள் பேசிய அந்த 72 கூட்டத்தினர யார்? என்ற 29 சிடியை வேறு வேலை இல்லாமல் எதில் குறைகண்டுபிடிக்கலாம், எதில் நொட்டு சொல்லலாம் என்பதற்காக முழுவதுமாக தேடி எடிட்டிங் செய்து 1 சிடியாக்கி பித்னா செய்யும் இந்த இயக்க வெறி
தமுமுகவினரை என்ன வென்று சொல்வது?. சகோ.பிஜெ சஹாபாக்களை திட்டமாட்டார் என்று தெளிவாக தெரிந்தும் அவர் மீது பழி போடுவது எதற்கு? தமுமுகவை விட்டு வெளியாகி இன்று ததஜ என்ற இயக்கத்தை தமுமுகவை விட பல மடங்கு வளர்சியடைய செய்துவிட்டார் என்ற பொறாமையே அதற்க்கு மூல காரணமாக இருக்க முடியும்.

அன்று அந்த 72 கூட்டத்தினர் சிடியை விட அனைவரும் ஒன்றாக இருந்த காலத்தில் இதே போன்று வட்டார மொழி வார்த்தைகளை பல முறை பல இடங்களில் உபயோகப்படுத்தி இருக்கிறார். இன்று சகோ.பிஜெ சஹாபாக்களை திட்டுகிறார் என்று பிரச்சாரம் செய்யும் தமுமுகவினர் அன்று சகோ.பிஜெயின் வட்டார மொழி பேச்சை கண்டிக்காதது ஏன்? இன்று அவரை எதிர்பது போல் அன்று எதிர்காதது ஏன்?. ஏனென்றால் சகோ.பிஜெ வேண்டுமென்றே திட்டமிட்டு சஹாபாக்களின் கண்ணியத்தை குறைக்க வேண்டும் என்பதற்காக அவ்வாறு அன்றும் சொல்லவில்லை, இன்றும் சொல்லவில்லை என்பது இந்த தமுமுகக்கு தெளிவாக தெரியும்.

அடுத்து சில குர்ஆன் வசனங்களுக்கு சகோ.பிஜெ தவறான அர்த்தம் கொடுத்து விட்டார் என்று தமுமுகவினர் கூறகிறார்கள். சரி தவறானது என்று மட்டுமே பிரச்சாரம் செய்யும் இவர்கள் அது எப்படி தவறானது, அதன் சரியான மொழிபெயர்ப்பு எது என்பதை வெளிக்காட்டாமல் இருப்பது ஏன்?. அடுத்து சகோ.பிஜெ ஒரு மொழிப்பெயர்பை சொல்கிறார், மற்றவர்கள் சில மொழிபெயர்ப்பை சொல்கிறார்கள். இதில் மண்டையை போட்டு உடைத்து கொள்வது பொதுமக்கள் நாம்தான். இந்த இரு கருத்துடைய மார்க்க அறிஞர்கள் ஒன்றாக அமர்ந்து. சில பார்வையாளர்களை வைத்து அவர்கள் சர்சையாக உள்ள விஷயத்தை பற்றி கலந்துரையாடி அதை விடியோவாக வெளியிட்டால். இவர்கள் சொல்வதில் எது உண்மை, எது சரியானது என்பது வெளிவரும். சகோ.பிஜெயை பொருத்தவரை அனைத்து கலந்துரையாடலுக்கும் எப்பொழுதும் தயாராக உள்ளதாக பல முறை அறிவித்துள்ளார். எனவே தமுமுகவினர் நோட்டிஸ், மெயில் என்று குற்றச்சாட்டுகளை அடுக்காமல் கலந்துரையாமல், விவாதம் என்று வருவதே சரியானது.


தன்னை நபி என்று வாதிட்ட மிர்ஷா குலாமோடு, நபி(ஸல்) அவர்களுக்கு பிறகு நபியே கிடையாது என்று உலகிற்க்கு குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் விளக்கிய சகோ.பிஜெவையும் ஒப்பிட்டு பேசுவது மிகப்பெரிய தவறாகும். இது குறித்து தமுமுகவினர் அல்லாஹ்வுக்கு அஞ்சி கொள்ளட்டும். அவதூறுலேயே மிகப்பெரியது இதுவாகத்தான் இருக்கும். இதை தமுமுகவினர் நிறுத்தமறுத்தால் அவர்களுக்கு இம்மையிலும், மறுமையிலும் மாபெரும் கேடுதான்.


வஸ்ஸலாம்,
சைதை அஹமது அலி.
ahamedali2006@gmail.com


5 comments:

அபூ முஹம்மத் said...

//தமுமுக ஹராம் பத்வா புகழ் ஜாக் தங்கள் மாத இதழில் 1 ஹதீஸை தவிர மற்ற அனைத்தும் லயிபானது என்பதை ஒத்துக்கொண்டது. அந்த ஒரு ஹதீசும் லயிபானதுதான் என்று ததஜ ஏகத்துவத்தில் விளக்கிய பிறகு ஜாக் தரப்பில் இருந்து எந்த பதிலையும் காணவில்லை.//

ஜாக் சார்பாக வெளிவந்தால்தான் ஏற்றுக்கொள்வீர்களா? மேற்கண்ட ஏகத்துவ இதழுக்கு பதில் வெளியாகி சுமார் 3 மாதங்கள் உருண்டோடி விட்டன. மக்களெல்லாம் மறந்து இருப்பார்கள் என சைதை அஹ்மது அலியும் ததஜவினரும் வழக்கமான பொய்களை பரப்ப ஆரம்பித்துள்ளார்கள்.

இதே தமிழ்முஸ்லிம் அரசியல் மேடை வலைப்பதிவில் இதற்கான சுட்டியை "தவ்ஹீத் பெயரால் தக்லீத் செய்யாதீர்கள்" என்ற இதற்கு முந்தைய பதிவில் சகோதரர்கள் இட்டிருந்தார்கள். ஆனால் கோயபல்ஸ் பாணியில் பொய் சொல்லும் ததஜவினர் ஏகத்துவ இதழுக்கு பதில் அளிக்கவில்லையென்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கிறார்கள்.

டான் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இதே பொய்யை (மறுப்பு தரப்படவில்லை என) பி.ஜே. சொல்லியுள்ளார்.

இந்த பொய்கூட, ததஜவினரை மக்கள் அடையாளம் கண்டுக்கொள்ள நல்ல ஒரு சந்தர்ப்பமாகும்.

உங்களுக்காக அந்த லிங்க்

ஜகாத் சட்டங்கள்: ஜனவரி(2006) 'ஏகத்துவம்' மாத இதழில் மீண்டும் குழப்பங்கள்

Anonymous said...

Dear Abu Muhammed,

Collect all that which is wrong with PJ.
Get ready for (direct) debate.
Don't try to make the people fool with Online debate. It will make Many Unknowns like 200 Fazlul Ilahi.
Do You??????/
Abdallah

Unknown said...

குர்ஆன் அரபியில் இறங்கியது. ஹதீஸ் மூலங்களும் அரபியிலேயே உள்ளது. எனவே அதைப் பற்றி தமிழில் விவாதிப்பதற்கு மேலாக அதை அரபியிலேயே தெளிவு பெற வேண்டியது அவசியம்.
எனவே சகோதரர் ( இலங்கை மௌலவி) யு.கே. முஹம்மது ஜமீல் மதனீ சவூதியிலிருந்து கேட்டுக் கொண்டது போல் குர்ஆன் மற்றும் ஹதீஸ் கலையில் தேர்ச்சி பெற்ற அரபியைத் தாய்மொழியாகக் கொண்ட ஒருவரை நடுவராகக் கொண்டு அவர் (முதன் முதலில் பீ.ஜே. பிரச்னையைக் கிளப்பிய) ஸலபிக் கொள்கை முதல் ஒவ்வொன்றாக பீ.ஜேயிடமோ (அல்லது அவர் ஒப்புக் கொள்ளும்) நபரிடமோ அரபி யிலேயே விவாதிக்கத் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளார்.
http://worldmuslimmedia.com/islamkalvi/sahabi/
பீ.ஜே.வை அழைத்து வர பொறுப்பெடுத்துக் கொள்ளும் நபர் யாரேனும் உண்டா?

அபூ முஹம்மத் said...

மேற்கண்ட பதிவில் எழுதப்பட்ட விஷயம்:

//தமுமுக ஹராம் பத்வா புகழ் ஜாக் தங்கள் மாத இதழில் 1 ஹதீஸை தவிர மற்ற அனைத்தும் லயிபானது என்பதை ஒத்துக்கொண்டது. அந்த ஒரு ஹதீசும் லயிபானதுதான் என்று ததஜ ஏகத்துவத்தில் விளக்கிய பிறகு ஜாக் தரப்பில் இருந்து எந்த பதிலையும் காணவில்லை.//

என்னுடைய பதில்:
ஜாக் சார்பாக வெளிவந்தால்தான் ஏற்றுக்கொள்வீர்களா? மேற்கண்ட ஏகத்துவ இதழுக்கு பதில் வெளியாகி சுமார் 3 மாதங்கள் உருண்டோடி விட்டன. மக்களெல்லாம் மறந்து இருப்பார்கள் என சைதை அஹ்மது அலியும் ததஜவினரும் வழக்கமான பொய்களை பரப்ப ஆரம்பித்துள்ளார்கள்.

உங்களுக்காக அந்த லிங்க்

ஜகாத் சட்டங்கள்: ஜனவரி(2006) 'ஏகத்துவம்' மாத இதழில் மீண்டும் குழப்பங்கள்


//Dear Abu Muhammed,
Collect all that which is wrong with PJ.
Get ready for (direct) debate.//

பி.ஜே. பதில் தரப்படவில்லை என்கிறார். அதுதான் இப்பொழுது மைய பிரச்னையே. லிங்க்-ல் மவ்ஸ் வைத்து சொடுக்கினால் பதில் அளிக்கப்பட்டுள்ளதா இல்லையா என்று தெரிந்துவிடும். சொடுக்குவதற்குகூட உங்கள் பி.ஜேயிடம் போய் விவாதம் செய்யனுமா?

எனவே உங்கள் பி.ஜே.யிடம், 3 மாதத்திற்கு முன்பே ஏகத்துவ இதழுக்கு அதே மவ்லவியால் பதிலளிக்கப்பட்டுவிட்டது என்று சொல்லி, மக்களுக்கு வேறு பொய்களை தயார் செய்து சொல்லச் சொல்லுங்கள்.

Anonymous said...

Dear,
What I say that, Dont try to make Online Debate. Try to do it Face to Face. Otherwise meny fake people will appear Online (from Fazlul Ilahi's Side also)

wassalam