Thursday, May 04, 2006

மக்களை திசை திருப்பும் தி.மு.க.

சிறுபான்மை இன மக்களை திசை திருப்பும் தி.மு.க.

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. சிறுபான்மை பிரிவினர்களுக்கான இட ஒதுக்கீட்டை மேம்படுத்துவது குறித்து இந்த ஆணையம் அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் உங்கள் அன்பு சகோதரியின் அரசு உரிய ஆணைகளை பிறப்பிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

சிறுபான்மை இன மக்களை திசை திருப்பும் வகையில் கட்டாய மத மாற்ற தடை சட்டம் இன்னமும் அமலில் உள்ளதாக தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றன. தமிழ்நாடு கட்டாய மதமாற்ற தடை சட்டம் 18-05-2004 அன்று பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்தின் வாயிலாக அறவே ரத்து செய்யப்பட்டுவிட்டது. தற்போது இந்த சட்டம் அமலில் இல்லை என்பதுதான் உண்மை நிலை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

சென்னை திருவல்லிக்கேணி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பதர் சயீத் மற்றும் சேப்பாக்கம் தொகுதி அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளருமான தாவூத் மியான்கான் ஆகியோரை ஆதரித்து பேசியபொழுது ஜெயலலிதா மேற்கண்டவாறு சொன்னார்.

No comments: