Wednesday, May 03, 2006

மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால்..

மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால்..

இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் எம்.பஷீர் அஹமது அவர்கள் வாணியம்பாடியில் நிருபர்களுக்கு பேட்டியளித்ததிலிருந்து..
மீண்டும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையினர் இடஒதுக்கீடு மேம்பாட்டு கமிஷன் பரிந்துரையை ஏற்று, சிறுபான்மை மக்களுக்கு உரிய இடஒதுக்கீடு அளிப்போம் என தேர்தல் பிரச்சாரத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். இதற்காக எங்களின் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
கருணாநிதியின் கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் போலியானவை. இதனை தமிழக மக்களும், சிறுபான்மை மக்களும் நம்பமாட்டார்கள். பலமுறை கருணாநிதியிடம் ஏமாந்த சிறுபான்மை மக்கள் இந்த முறை அவரை ஏமாற்ற தயாராகி விட்டார்கள்.

No comments: