Showing posts with label கண்டனம். Show all posts
Showing posts with label கண்டனம். Show all posts

Friday, October 16, 2009

ஹைதராபாத் செய்தியாளர் கூட்டத்தில் முஸ்லிம் லீக் கடும் கண்டனம்

இந்தியாவிற்கு பொது சிவில் சட்டம்| கொண்டு வரப்பட வேண்டும் என வலியுறுத்தி கருத்தரங்கு நடத்தி அதில் இஸ்ரேல் போன்ற வெளிநாட்டு பேராசிரியர்களை பேச வைத்ததன் மூலம் இந்திய உள்நாட்டு விவகாரங்களில் அந்நிய தலையீட்டை அனு மதித்துள்ளது கடும் கண்ட னத்திற்குரியது என இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசியப் பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் ஹைதராபாதில் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்ததாவது-

இந்தியாவில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கருத்து அவ்வப்போது ஆங்காங்கே திணிக்கப்பட்டு வரும் நேரத்தில் இந்தியாவின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பால கிருஷ்ணன் புது டெல்லியில் எம்.கே. நம்பியார் நினைவு சொற் பொழிவில் சிறப்புரை யாற்றியபோது பொது சிவில் சட்டம் என்பது மிக மிக உணர்வுப்ப+ர்வமான பிரச்சினை. ஏனெனில் இந்தியாவில் பல்வேறு மத, சாதி, இன மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவர் களிடையே பொது சிவில் சட்டம் போன்ற ஒன்றை அமல்படுத்துவது என்பது மிகவும் கடினமானது என்று கருத்து தெரிவித் திருந்தார். பிரச்சினையின் ஆழத்தை புரிந்து கொண்டு வரவேற்கத்தக்க இந்த கருத்தை அவர் வெளிப்ப டுத்தியதற்காக இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் சார்பில் பாராட்டுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.

சென்னையில் எம்.கே. நம்பியார் நினைவு அறக் கட்டளை சார்பில் கடந்த 10-ம் தேதி இந்தியாவிற்கு பொது சிவில் சட்டம்| என்ற தலைப்பில் நடை பெற்ற ஒரு கருத்தரங்கில் இஸ்ரேல் நாட்டின் பேராசிரியர்கள் ஷிமோன் ஷெட் ரிட், ஹிராம் சூடோஸ் ஆகியோர் கலந்து கொண்டு இந்தியாவில் பொதுசிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

வெளிநாட்டைச் சேர்ந் தவர்கள் இந்தியாவின் உள் விவகாரத்தில் தலையிட்டு உணர்ச்சிமயமான ஒரு விஷயத்தில் கருத்து தெரிவித்திருப்பது மிகுந்த கண்டனத்துக்குரியது. இவர்கள் பங்கேற்ற இந்த விழாவிற்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல். கோகலே தலைமை ஏற்றுள்ளார் என்ற செய்தி துரதிருஷ்டவசமானது.

நாம் அறிந்த வரையில் இந்திய அரசு பண்டித ஜவஹர்லால் நேரு அளித்துள்ள உறுதிமொழி இன்னமும் தொடர்வதாகவே நம்புகிறோம். சிறு பான்மை மக்கள் தாங்க ளாகவே முன்வந்து தங்களுக்கும் பொதுவான சிவில் சட்டம் வேண்டும் என்று கூறுகின்ற வரையில் அரசு ஒருபோதும் பொது சிவில் சட்டம்| பற்றிய எந்த ஒரு முடிவையும் அறிவிக்காது என்று நேருவின் அந்த உறுதிமொழியில் தெளி வாக குறிப்பிடப்பட்டிருந்தது.

ஹபொது சிவில் சட்டம்| பற்றி அரசியல் தலைவர்களும், நீதியரசர்களும் ஆட்சியாளர்களும் பின்பற்ற வேண்டிய கருத்தை நேரு அவர்களுடைய உறுதிமொழி தெளிவுபடுத்தியிருக்கிறது. இதற்கு மாற்றமான கருத்தை யார் பேசினாலும் அது இந்த நாட்டில் தேவையற்ற குழப்பத்தையே விளைவிக்க வழி வகுக்கும் என இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் சுட்டிக் காட்ட கடமைப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் புதிய எழுச்சி
ஆந்திர மாநிலத்தில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் புதிய எழுச்சியுடன் உத்வேகம் அடைந்து வரு கிறது. மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் இன்று புதிய நிர்வாகக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் உயிர்க் கொள்கை சமூக நல்லிணக்கம். பச்சிளம்பிறைக் கொடி எங்கெல்லாம் பறக்கிறதோ அங்கெல்லாம் அமைதியும், சமூக நல்லிணக்கமும் தழைத்தோங்குகிறது என்பது வரலாற்று உண்மை. இந்த வரலாறு ஆந்திர மாநிலம் முழுவதும் எல்லா இடங்களிலும் புதுப்பிக்கப்பட வேண்டும் என புதிய நிர்வாகக் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் முஸ்லிம் லீகின் மீது அதிக ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களிலும் ஏராளமான இளைஞர்கள் பல்வேறு அமைப்புகளிலி ருந்து விலகி இந்திய ய+னி யன் முஸ்லிம் லீகில் சேர்ந்த வண்ணம் உள்ளனர். ஆந்திர மாநிலத்திலும் இதே நிலைமையைப் பார்க்கிறோம்.

கர்நாடகத் தலைநகர் பெங்களுருவில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் அகில இந்திய பிரதிநிதிகள் மாநாடு அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வாரம் நடைபெற உள்ளது. இந்த மாநாடு இந்தியாவில் ஒரு புதிய திருப்புமுனையை ஏற்படுத்தும். இந்தியா முழுவதும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் ஒரேவிதமான கொள்கை நடைமுறை களை பின்பற்ற வழி ஏற் படுத்தும்.

இந்த மாநாடு இந்திய அரசியலில் முஸ்லிம் லீகிற்கு தனிப்பெரும் முக்கி யத்துவம் பெறும் வாய்ப்பை உருவாக்கித் தரும். நாடு முழுவதிலு மிருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இம் மாநாட்டில் பங்கேற் கிறார்கள்.

இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் செய்தியாளர்களிடம் தெரி வித்தார்.

Tuesday, June 19, 2007

பிரதிபா பட்டிலுக்கு அதரவை கலைஞர் மறு பரீசீலனை செய்ய வேண்டும் - IDMK

முற்போக்கு தேசிய முன்ணணியின் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் பிரதிபா பாட்டீல் ஆதரவை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை.


மதச்சார்பற்ற தேசம் நம் இந்திய தேசம். 30 கோடி முகமுடையாள் நம் சிந்தனை ஒன்றுடையாள் என்ற ஒருமைப் பாட்டை உரக்க முழங்கிய நாடு நம் தமிழ்நாடு. தேசிய முற்போக்கு கூட்டணியரால் உயர்பதவிக்கு (குடியரசுத் தலைவர்) தேர்ந்தெடுக்கப்பட உள்ள பிரதிபா பாட்டீல் வரலாறு தெரியாமல் வாயில் வந்ததை எல்லாம் உளரி இருப்பது இந்திய சமூக நல்லிணக்கத்திற்கும், இந்திய இறையாண்மைக்கும், திராவிட பகுத்தறிவு சிந்தனைக்கும் எதிரான கருத்து.

மதச் சார்பற்ற நாட்டில் உயர் பதவிக்கு வர இருப்பவர் மத உணர்வுகளைப் புண்படுத்துகிற விதத்தில் பேசி இருப்பது அவர் சார்ந்த விழ வீரியத்தின் வெளிப்பாடு என்பது அம்பலமாகி உள்ளது. கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் ஒரு சமூகத்தின் மத உணர்வுகளுக்கு எதிராக தீக்குச்சிகளை கொளுத்திப் போடுவது அழகான செயல் அல்ல. கடந்த கால மன்னர்கள் வரலாறு என்றாலே, போரும், சூழ்ச்சியும், துரோகமும் தான் காண முடியும். அவை எல்லா மத மன்னர்களிடமும் மண்டிக் கிடந்ததை வரலாற்று வல்லுனர்கள் செப்புகின்றனர். அதில் முகலாய மன்னர்கள் மட்டும் விதி விலக்கு அல்ல.

இன்றைய நவீன இந்தியாவில் பால்ய விவாகம், சிசுக்கொலை, கணவன் இறந்தால் மனைவியை உயிருடன் எரிப்பது, விதவைத் திருமணம் மறுப்பு, வரதட்சினைக் கொடுமை இவை எல்லாம் அதிகம் அறங்கேற்றப்படும் மாநிலம் ராஜஸ்தான் என்று மனித உரிமை ஆர்வலர்கள் கூறும் சான்று. இவற்றிற்கு எல்லாம் பிரதிபா பாட்டீல் மறுப்பு தெரிவிக்காமல் மௌனம் சாதிப்பது ஏன்?


சிறு நெருப்புத்தானே என்று தங்க அனுமதி அளித்தால் தங்கும் இடத்தையே அது அழித்துவிடும். அது தீயின் இயல்பு, அப்படித்தான் அன்று நாலந்தா பல்கலைக்கழகம் தீக்கு இறையாக்கப்பட்டது.

முற்போக்கு கூட்டணியின் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களே! பிற்போக்கு கொள்கைகளைப் பிறப்பிடமாகக் கொண்ட பிரதிபா பாட்டீல் அவர்களை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுப்பதை மறுபரிசீலனை செய்ய கேட்டுக் கொள்கிறோம்.

வரலாறு வாய்மைக்குச் சான்று பகரட்டும். வரலாறு உங்கள் செயல்களை வழி மொழியட்டும்.


இவண்,

இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK), தமிழ்நாடு
No. 39/21, Maraikayar Street, Mannady, Chennai – 600 001