Saturday, June 19, 2010

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு பற்றி முஸ்லிம் லீக் மாநில செயலாளர்

கொங்கு மண்டலத்தில் நடைப்பெற இருக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் வெற்றிச் செய்திகளை நாள் தோறும் கேட்டு மகிழ்கிறோம் முத்தமிழ் காவலர் டாக்டர் கலைஞர் அவர்கள் தலைமையில் நடைப்பெற இருக்கும் இந்த சிறப்பான உலகத் தமிழ் செம்மொழி மாநாடு போன்று உலகில் இது வரையில் யாரும் மாநாடு நடத்தவில்லை என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள் சொல்லிக்காட்டி இருப்பது சரியான செய்தியாகும்.

 உலகெங்குமிருந்தும் அறிஞர் பெருமக்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கிறார்கள் அரபு நாடுகளிலிருந்தும் அறிஞர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்ப்பத்தின் மூலம் தமிழகத்துக்கும் -அரபகத்துக்குமுள்ள நெருக்கத்தையும் நேசத்தையும் காட்டுகிறது நம் நாட்டு அரசியல் நிர்ணயச் சபையில் என் தாய் மொழியான தமிழ் மொழியை இந்திய நாட்டின் ஆட்சி மொழியாக ஆக்குங்கள்


தமிழ் மொழி இந்திய நாட்டின் ஆட்சி மொழியாக திகழ்வதற்கு எல்லாத் தகுதியையும் பெற்ற மொழியாக திகழ்கிறது என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காயிதே மில்லத் கூறினார்கள்

இன்று நம் தாய் மொழியான தமிழ் மொழிக்கு உலகம் தழுவிய அளவில் மாநாடு நடத்தி தமிழ் மொழியின் சிறப்பை பற்றியும் அதன் இனிமையைப்பற்றியும் உலகெங்கும் அறியச்செய்த முத்தமிழ் காவலர் டாக்டர் கலைஞர் அவர்களின் பணி சிறப்பானதாகும்

இஸ்லாம் எங்கள் வழி இன்பத்தமிழ் எங்கள் மொழி என்று நாடெல்லாம் நறுமணம் வீசச்செய்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவராக பணியாற்றிய அப்துல் சமத் அவர்களின் சந்தனத்தமிழ் உரைகளை எண்ணி மகிழ்கிறோம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களின் வேண்டுகோள் ஏற்று நாடெங்குமுள்ள இஸ்லாமிய சமுதாயத்தினர் இந்த மாநாட்டில் அணி அணியாய் பங்கேற்ப்பது நமக்கெல்லாம் மகிழ்ச்சியாகும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு சிறக்க வாழ்த்துகிறோம்


இங்ஙனம்

ஏ.ஷபிகுர் ரஹ்மான்

மாநில செயலாளர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

36,காயிதே மில்லத் மன்ஜில்,மண்ணடி சென்னை -01

அலைபேசி- 9787280133

No comments: