Tuesday, May 05, 2009

அந்த 40ஆயிரம் வாக்கு யாருக்கு...?

அந்த 40ஆயிரம் வாக்கு யாருக்கு...?



இந்த நோட்டீஸில் கூறியபடி, தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் (அதிரை கிளை) கொடுத்த வாக்கை காப்பாற்றவில்லை;


என்பதோடு மட்டுமில்லாமல் முஸ்லிகளிடையே குழப்பதை ஏற்படுத்தும் முகமாக அல் அமீன் பள்ளி சம்மந்தமாக பொய்களை மக்கள் மத்தியில் பரப்புரைத்து வருவதாகவும் அரசியல் வேண்டாம் எனக்கூறிவிட்டு அரசியல் ஆதாயத்திற்காக இறையில்லத்தையே விட்டுக்கொடுக்கச் சொல்லும் இவர்களை எப்படி "ஏகத்துவ வாதிகள்" என கூற முடியும்...?



இதிலிருந்தாவது இவர்களை சமுதாயம் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் என்கிறார் தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தஞ்சை மாவட்ட (தெற்கு) செயலாளர் AJ. ஜியாவூதீன் அவர்கள் !

அது அவருடைய கேள்வி மட்டுமன்று அதிராம்பட்டினம், அதை சுற்றியுள்ள முத்துப்பேட்டை,மல்லிப்பட்டினம்,மதுக்கூர்,புதுப்பட்டினம் உள்ளிட்ட அனைத்து ஊர் முஸ்லிம்களின் வினாவும் இதுதான்!


என்ன பதில் சொல்லப்போகிறது தவ்ஹீத் ஜமாஅத் தலைமை?




தமிழ் மணத்தில் வாக்களிக்க அழுத்தவும்:




இதற்கிடையே கடந்த டிசம்பர் மாதம் அதிரையில் ஒட்டப்பட்ட போஸ்டரும் யாரையோ திருப்திப்படுத்துவதற்காக தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை சேர்ந்தவர்கள்தான் ஒட்டினார்கள் என்ற செய்தியும் ஊர் சுற்றி வருகிறது. அது உன்மையா அல்லது வதந்தியா என்பதையும் அதன் தலைமை விளக்கவேண்டிய அவசியத்தில் உள்ளது.



//அல் அமீன் பள்ளி விஷயத்தில் ஒருதலைபட்சமாக செயல்பட்ட காவல்துறை உதவி ஆய்வாளர் மணிவன்னனை ஆதரித்து இஸ்லாமிய சங்ககளின் சார்பில் அதிரைநகர் முழுவதும் நேற்று நள்ளிரவு மர்மஆசாமிகள் "வேண்டுகோள்" என்ற தலைப்பிலான சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.



இதை பார்த்த அதிரை இளைஞர்கள் சம்சுல் இஸ்லாம் இளைஞர் அமைப்பை தொடர்புகொண்டு இதுவிஷயமாக கேட்டபொழுது இதுபற்றிதங்களிடம் யாரும் அனுமதி கேட்கவில்லை எனவும், எங்கள் பெயரை கலங்கபடுத்தும் நோக்கோடு செயல்பட்ட இவர்களை நாங்கள் வண்மையாக கண்டிக்கிறோம் என சம்சுல் இஸ்லாம் இளைஞர் அமைப்பினர் தெரிவிக்கின்றனர். இதற்கு மறுப்பு போஸ்ட்டர் ஒட்டியும் உள்ளனர். அல்அமீன் பள்ளி விஷயத்தில் விளையாடிய காவல்துறையின் கறுப்புஆடு மணிவன்னனை இடமாற்றம்செய்ய இஸ்லாமிய அமைப்புகள் பெரும் முயற்சி மேற்கொண்டு இடமாற்றம் செய்தது. இதை பொறுக்காத சில "தலைகள்" இதுபோன்ற ஈனத்தனமான செயல்களில் ஈடுபட்டதாக தெரிகிறது.// நன்றி:அதிரைXpress






தமிழக முஸ்லிம் சமுதாயமே உங்கள் கருத்து என்ன...?


தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்த இறைவிரோத செயலை ஆதரிக்கீர்களா...?



இறைவனை தொழ இறையில்லம் எழுப்புவது குற்றமா...?


தி மு கவை ஆதரிப்பதால் இறைவிரோத செயல்களில் ஈடுபடலாமா...?




கடைசி செய்தி:

தி மு க , காங்கிரஸ் மற்றும் தவ்ஹீத் ஜமாஅத் முஸ்லிகளுக்கு துரோகம் செய்ததைத் தொடர்ந்து அனைத்து கட்சியினரும் பள்ளி நிர்வாக குழுவினரை சந்த்தித்து தங்கள் கட்சிக்கு ஆதரவு தருமாறு கோரிவருகின்றனர்!

ஆனால், தங்களது முடிவை நாளை (06/05/09) அறிவிக்கிறார்கள்!!

சில இடங்கள் தவிர்த்து தி மு க கூட்டணியை PFIஆதரித்தாலும் அதிரையில் அல் அமீன் பள்ளியை மீட்டேடுக்கும் முயற்ச்சியில் முழுமையாக அற்பணித்துள்ளது குறிப்பிடத்தக்கது!


மேலும் செய்திகளை அறிந்துக்கொள்ள....!

அதிரை POST

4 comments:

Anonymous said...

இந்த கட்டுரையை பதிந்தவருக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்.

ததஜ அல் அமீன் பள்ளி பிரச்சினையை முடிப்பதற்க்காக பல முயற்சிகளை எடுத்துள்ளது.

முதலவதாக, இந்த பிரச்சனையை முடித்து தரும்படி தஞ்சை தொகுதியின் திமுக வேட்பாளர் பழனிமானிக்கம் அவர்களிடம் ததஜ வின் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக ஏழு கிளைகளில் இந்த கோரிக்கை வைக்கப்பட்டது. இது சம்பந்தமாக இந்த வேட்பாளரிடம் ஆலேசனையும் நடத்தப்பட்டுள்ளது. இந்த பிரச்சனையை முடித்து தருவதாக வேட்பாளரும் உறுதி கொடுத்துள்ளார்.

மேலும், இந்த பிரச்சனையை சம்பந்தமாக திமுக வின் குணசேகரன் மற்றும் MMS அவர்களை ததஜ சந்தித்து பேசியுள்ளது. இதன் பின்னர், அதிரை திமுகவின் சார்பாக இந்த பிரச்சினையை முற்றீலுமாக (பின்னர் எந்த பிரச்சனையும் எற்படாத வகையில்) முடித்து தர ததஜ விற்கு எழுத்துபுர்வமான வாக்குறுதி (கடிதம்) கொடுக்கப்பட்டுள்ளது. இதை ததஜ அதிரை அல் அமீன் பள்ளி நிர்வாகிகளிடமும் தெரிவித்துள்ளனர். இதன் பின்னர், தான் அல் அமீன் பள்ளி நிர்வாகம் நீங்கள் போட்டுள்ள நோட்டிசை வெளியிட்டது.

உண்மை என்னவெனில், அல் அமீன் பள்ளி நிர்வாகத்தில் உள்ள சில அரசியல்வாதிகள் இந்த பிரச்சினையை வைத்து நாடகம் ஆடிவருகிறார்கள். அல் அமீன் பள்ளி நிர்வாகம் ஒத்துழைப்பு தந்தால் ததஜ இந்த பிரச்சினையை முடித்து தர தயாராக உள்ளது. இவர்கள் இதற்கு ஒத்துவர வில்லை என்பது தான் இப்போதைய பிரச்சினை.

கோ்ட்டில் உள்ள இந்த பிரச்சினையை நான்கு நாட்களில் முடித்து தர வேண்டும் என்று கூறி தங்களின் அறியாமையை வெளிப்படுத்தியுள்ளார்கள். தேர்தலுக்கு பிறகு இதை உரிய முறையில் அணுகி ததஜ முடித்து தர தயாராக உள்ளது. வாக்குறுதிகளை மீறினால், அரசியல்வாதிகளிடம் எப்படி சந்திக்க வேண்டுமே அப்படி சந்தித்து ததஜ அதை நிறைவேற்றும்.

ததஜ ஒன்றுமே செய்யவில்லை என்று தனது கற்பனையும், தனது பொய் முகத்தையும் உங்களுக்கே உரிய பாணியில் வெளிப்படுத்தியுள்ளீர்கள். ஒரு செய்தியை சொல்லும் போது அதை ஆய்வு செய்து சொல்ல வேண்டும்.

தமுமுக வின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் சொன்னதாக ஒரு செய்தியை சொல்லியுள்ளீர்கள். இதை அவர் கூறியிருந்தால், இவர்களின் அயோக்கியாதனத்தை அவர்களே வெளிப்படுத்தியுள்ளார்கள் என்பதை தெரிய வேண்டும். இவர்கள் திமுக வுடன் தான் கூட்டணியில் இருந்தார்கள். இந்த பிரச்சினை சம்பந்தமாக இவர்கள் திமுகவுடன் இருக்கும் போது அவர்களை எதிர்க்காமல் இப்போது சீட்டு கிடைக்கவில்லை என்பதற்க்காக இதை பிரச்சினையாக்கி பி.ஜே.பி.யின் அரசியலை நடத்திவருகிறார்கள். அல்லாஹ் இவர்களின் முகத்திரைகளை விரைவில் கிழிப்பான் (இன்ஷா அல்லாஹ்).

ஒரு நோட்டிசை ததஜ வெளியிட்டதாகவும் ஒரு சந்தேகத்தை கிளப்பி விட்டுள்ளீர்கள், இது போன்ற கள்ள வேளைகளில் ததஜ ஈடுபடாது. லண்டனில் இருந்து கொண்டு கப்சாக்களை அள்ளிவிசாதீர்கள்.

தமுமுக, PFI செய்தை விட அதிகமான முயற்சிகளையும், நல்ல தீர்வு அமைவதற்க்கான வேளைகளையும் ததஜ செய்துள்ளது. இது அல் அமீன் பள்ளி நிர்வாகிகளுக்கு நன்றாக தெரியும். இதை விளைவாகத்தான் சில தினங்களுக்கு முன் ததஜவின் பள்ளியில் வந்து அல் அமீன் பள்ளி நிர்வாகிகள், PFI மற்றும் மற்ற அமைப்புகளை சேர்ந்தவர்களும் ததஜ நிர்வாகிகளை சந்தினர்.

அதிரை திமுகவை சார்ந்த குணசேகரன் மற்றும் சிலரும் ததஜ பள்ளிக்கு வந்து “நாங்கள் இந்த பள்ளிக்கு எந்த வகையில் தடையாக இல்லை என்றும், இதை நாங்கள் நோட்டிஸ் வாயிலாகவும் தெரிவிக்க தயார் என்று குணசேகரன் திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும், சில முஸ்லிம் பெயர்களை குறிப்பிட்டு இவர்கள் தான் இதை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்று குறிப்பிட்டார்”. அல்லாஹ்வின் பள்ளியில் அரசியல் செய்பவர்களை நினைத்து வேதனை தான் அடைய முடிந்தது.

நீங்கள் எப்படிப்பட்ட பொய்யர் என்பது எல்லாருக்கும் தெரிந்தது தான், இருந்தாலும் சற்று ஆய்வு செய்து செய்தியை வெளியிடுங்கள்.

அன்புடன்,
தாவுத்

INTJ said...

முஸ்லீம்கள் ஓட்டு யாருக்கு? என்ற தலைப்பில் சென்னை மன்னடியில் நடந்த ஐஎன்டிஜே பொதுக்கூட்டத்தில் பீஜேவின் வண்டவாளங்களை முதல் முறையாக சகோ. செங்கிஸ்கான் அவர்களால் தோலுரிக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் இன்று (06-05-2009) இந்திய நேரப்படி இரவு 10.30 - 11.30 வரை வின் டிவியில் ஒளிப்பரப்பப்படுகின்றது. கானத்தவறாதீர்கள்.

இந்த நிகழ்சியில் மிக முக்கியமாக பீஜே பள்ளிவாசலுக்கு வந்து தொழாதது சம்பந்தமான உன்மைகளும், பீஜேயின் மகன் லட்சுமி என்ற பெண்னை காதலித்து, அந்த பென் இஸ்லாத்தை தழுவுவதாக பீஜேயிடம் சொன்னது, அந்த பென் இஸ்லாத்திற்கு வர விடாமல் பிஜே செய்த தில்லுமுல்லுகள் போன்றவையும் தோழுறிக்கப்படுகின்றது.

பீஜேயின் வன்டவாளங்களை தெரிந்துக்கொள்ள இந்த நிகழ்ச்சியை அவசியம் பாருங்கள்.

Anonymous said...

INTJ,

என்ன தலைவா? பி.ஜே செய்வது ஒரு பக்கம் இருகட்டும்.

உங்கள் தலைவர் பெண்கள் கூட சும்மா புகுந்து விளையாடுகிறாரே! அவருடன் நீங்கள் இருக்க காரணம் நீங்களும் பெண்களை புகுந்து விளையாடுகிறீர்களா? அடுத்தவன் பணத்தை கொள்ளையடித்துள்ளார். பள்ளிக்காக கொடுத்த பணத்தை கூட தனது வாயில் போட்டுள்ளார் இந்த பாவி.


உங்கள் தலைவரே ஒத்துக்கொண்ட காம வேளைகளை பாருங்கள்,

http://www.pjonline.info/Bakker_Neekkam/Bakker_Neekkam_Ean_1.wmv

http://www.pjonline.info/Bakker_Neekkam/Bakker_Neekkam_Ean_2.wmv

இதற்கு பதில் கூறிவிட்டு பிறகு சொல்லுங்கள் பிறரைபற்றி.

Anonymous said...

இந்த தாவூத் சொல்வது அனைத்தும் பொய் என்பது நான் அதிரைக்கு போன்போட்டு கேட்டதும் கிடைத்த தகவல். இது சம்பந்தமாக இன்று (06-05-2008) அனைத்து முஹல்லா சார்பாகவும் (ததஜவைத் தவிர்த்து) முடிவு எடுக்கப்படுவதாகவும் அதன் பிறகு முழு உன்மையான தகவலும் தெரிவிக்கப்படும் என்றும் அந்த சகோதரர் கூறினார். இன்ஷா அல்லாஹ் நாளை இது சம்பந்தமான முடிவை உன்மை நிலையுடன் கூடிய கட்டுரையும் tmpolitics தளத்திற்கு அனுப்பிவைக்கப்படும்.

(இந்த அல் அமீன் பள்ளி சம்பந்தமாக ததஜ நடத்திய அனைத்து சமுதாய விரோதபோக்கும் எனக்குத் தெரியும் என்றாலும் இன்று நடக்க இருக்கும் மஷூராவின் முடிவிற்குப் பின் அது சம்பந்தப்பட்ட கருத்துக்களை தேவை ஏற்படின் பின்னுட்டமோ அல்லது உன்மையான தகவலையோ tmpolitics க்கு அனுப்பிவைக்கின்றேன்.)