Monday, March 23, 2009

3 தொகுதிகளைத் தந்தால் கூட்டணி: மனித நேய கட்சி

3 தொகுதிகளைத் தந்தால் கூட்டணி: மனித நேய கட்சி

திருவாரூர்: லோக்சபா தேர்தலில் மனித நேயக் கட்சிக்கு 3 தொகுதிகளைத் தர வேண்டும். அப்படித் தரும் கட்சியுடன்தான் கூட்டணி வைப்போம் என மனித நேயக் கட்சியின் மாநிலப் பொருளாளர் ஹாரூண் ரஷீத் கூறியுள்ளார்.

திருவாரூர் வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், மனித நேயக் கட்சி வேட்பாளர்கள் லஞ்சம், ஊழலுக்கு எதிரானவர்கள். அவற்றை ஒழிக்கப் பாடுபடுவார்கள்.

எங்களுக்கு தமிழகத்தில் 10 தொகுதிகளில் வெற்றி வாய்ப்புள்ளது. இந்தத் தொகுதிகளை முன்வைத்து எங்களுடன் ஒத்துப் போகும் கட்சியுடன் பேச்சு நடத்துவோம். குறைந்தது 3 தொகுதிகளையாவது எதிர்பார்க்கிறோம். அப்படித் தரும் கட்சியுடன் கூட்டணி வைப்போம்.

திமுகவுக்கே முன்னுரிமை தர விரும்புகிறோம். அதேசமயம், அதிமுக 3 தொகுதிகளைக் கொடுத்தால் அதனுடன் கூட்டணி அமைக்கவும் தயாராக உள்ளோம். அதேசமயம், பாஜகவுடன் எதிர்காலத்தில் கூட்டணி வைக்க மாட்டோம் என அதிமுக உறுதியளிக்க வேண்டும் என்றார் ரஷீத்.

நன்றி : தட்ஸ்தமிழ்

No comments: