Friday, February 27, 2009

ஆஸ்கார்......

ஆஸ்கார்......





வந்தது ஆஸ்கார்...
உலகமே வந்ததோ உள்ளே?
அலறுகிறது தொலைகாட்சிகள்!
புல்லரிக்கிறது ஊடகங்கள்!

அருகிலேயே கொத்து கொத்தாய்
விழுகின்றன தமிழனின் பிணங்கள்!
கேட்பார் யாரோ?
கேட்டவன் யாரோ?

பிணத்தின் மீது ஆனந்திக்கும்
ஆஸ்கார் யாருக்கு வேண்டும்?
கொடுங்கள் ஒரு ஆஸ்கார்
இலங்கை அதிபருக்கும்!

- மயிலை கவியப்பா!

No comments: