Tuesday, November 04, 2008

கீழக்கரை இட ஒதுக்கீடு குறித்த கருத்தரங்கம் - செய்திகள்

மேடையில் தலைவர்கள்

நவம்பர் 04, கீழக்கரை, இன்று கீழக்கரையில் இந்திய தேசிய மக்கள் கட்சியால் நடத்தப்பட்ட இட ஒதுக்கீடு குறித்த கருத்தரங்கு சிறப்பாக நடைபெற்றது. தமிழக அரசால் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு ஒரு ஏமாற்று வேலை அந்த இட ஒதுக்கீடு தேவையில்லை என்று கிருஸ்த்தவர்கள் அதை திருப்பி கொடுத்து விட்டனர் ஆனால் இன்னும் முஸ்லிம்களில் சிலர் கிடைக்காத ஒன்றை கிடைத்ததாக கூறி ஏமாற்றி வருகின்றார்கள்.

இந்நிலையில் இந்திய தேசிய மக்கள் கட்சியின் கீழக்கரை கிழை "தமிழக இட ஒதுக்கீடு ஏமாற்று வேலையா? " என்ற தலைப்பில் கீழக்கரை மாநாகரில் கருத்தரங்கு ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தது. ஹீசைனியா மஹாலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கருத்தரங்கை திரு. எஸ். முஹைதீன் அடுமை அவர்கள் , நகர் தலைவர் - கீழக்கரை தலைமையேற்று துவக்கி வைத்தார்கள்.


திரு. குத்புதீன் ஐபக், திரு. முகவைத்தமிழன், திரு. சான்பாஷா, திரு. அப்துல் ரவூஃப் பாக்கவி

திரு. முகவைத்தமிழன் அவர்கள், இந்திய தேசிய மக்கள் கட்சியின் ஆலோசகர் மற்றும், இணைய தள பத்திரிகையாளர், திரு, எம்.ஐ. ஜஹாங்கீர் அவர்கள் இந்திய தேசிய மக்கள் கட்சியின் முகவை மாவட்ட செயளாலர், திரு. ஏ. செய்யது இபுறாஹிம் அவர்கள் இந்திய தேசிய மக்கள் கட்சியின் நகர் துனை பொருளாலர் - கீழக்கரை, திரு. எஸ். அயூப்கான் அவர்கள், இந்திய தேசிய மக்கள் கட்சியின் நகர் துனை செயளாலர் - கீழக்கரை ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

திரு. சான் பாஷா அவர்கள், இந்திய தேசிய மக்கள் கட்சியின் வட சென்னை மாவட்ட அமைப்பாளர், திரு. அஹமது அனீஸ் அவர்கள், இந்திய தேசிய மக்கள் கட்சியின் முகவை மாவட்ட இளைஞர் அணி செயளாலர், திரு. முகம்மது இக்பால் அவர்கள் இந்திய தேசிய மக்கள் கட்சியின் மாநில துனை பொதுச்செயளாலர், திரு. எம். முகம்மது நஜீம் அவர்கள் இந்திய தேசிய மக்கள் கட்சியின் பொருப்பாளர் அமீரகம், திரு. கிங்காங் முகம்மது இபுறாஹிம் அவர்கள் இந்திய தேசிய மக்கள் கட்சியின் திருப்புல்லானி ஒன்றிய செயளாலர், திரு. தேவ சந்துரு அவர்கள் மாநில செயளாலர் - தமிழ்நாடு சிறுபான்மை இளைஞர் பேரவை, திரு. க. நாகேஸ்வரன் அவர்கள் தலைவர் - தமிழர் பாதுகாப்பு பேரவை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் முஸ்லிம் இட ஒதுக்கிடா ? மோசடியா ? என்ற தலைப்பில் இந்திய தேசிய மக்கள் கட்சியின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் டாக்டர். பக்ருதீன் B.H.M.S அவர்கள் மிகச்சிறப்பாக விளக்க உரை ஆற்றினார்கள். பின்னர் பேச வந்த பன்நூல் ஆசிரியரும், திருக்குர்ஆன் விரிவுரையாளரும் ஆன திரு. காஞ்சி அப்துல் ரவூஃப் பாக்கவி அவர்கள் " சமுதாய அரசியல் வீழ்ச்சிக்கு யார் காரணம்?" என்ற தலைப்பில் ஆவேச உரையாற்றினர்கள். தனது உரையில் இந்த 15 வருடங்களுக்குள் தோன்றிய சில அமைப்பினர் தெளகீத், ஏகத்துவம் என்ற பெயரில் எப்படி தாங்களும் பிரிந்து சமுதாயத்தையும் கூறு போட்டார்கள் என்று மெளலவி அப்துல் ரவூஃப் பாக்கவி அவர்கள் ஆவேச உரையாற்றினார்கள்.

திரு. நாகேஸ்வரன், திரு. தமிழகம் இக்பால், திரு. நிரோஸ், திரு. கிங்காங் இபுறாஹிம்

அதன் பின்னர் பேச வந்த இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைவர் திரு. குத்புதீன் ஐபக் அவர்கள் "இந்திய தேசிய மக்கள் கட்சியின் அவசியமும், அவசரமும்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள். தனது உரையில் இந்திய தேசிய மக்கள் கட்சியை துவக்க வேண்டியதன் அவசியம் ஏற்பட்டதன் காரனத்தையும் தற்சயமயம் அதன் அவசியம் என்ன என்பதையும் விளக்கினார்கள்.


பின்னர் நடந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் பொது மக்களின் அறிவார்ந்த கேள்விகளுக்கு இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைவர்கள் தெளிவான பதிலை வழங்கினார்கள். இறுதியாக இந்திய தேசிய மக்கள் கட்சியின் கீழக்கரை நகர் செயளாலர் திரு முகம்மது நிரோஸ் அவர்கள் நன்றியுரை கூற நிகழ்ச்சி இனிதே முடிவடைந்தது.


இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மக்கள் அரங்கின் உள்ளேயும் வெளியேயுமாக தலைவர்கள் ஆற்றிய உரையினை கவனமாக கேட்டனர்.இந்திய தேசிய மக்கள் கட்சியின் திருப்புல்லானி ஒன்றிய செயளாலர் திரு. கிங்காங் முகம்மது இபுறாஹிம் அவர்கள் உள்ளூரில் உள்ள பிரச்சினைகளை பற்றி பேசியதும், அந்த பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால் இந்திய தேசிய மக்கள் கட்சி மக்களை திரட்டி போராடும் என்றும் இன்னும் சட்ட ரீதியான நடவடிக்ககைகளில் ஈடுபடு்ம் என்று பேசியது அனைவரின் பாராட்டுதலையும் பெற்றது.


இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK)
9790318182, 994050565, 9842461363,

WWW.IDMK.ORG

No comments: