Friday, September 26, 2008

திரை விலகும் ஜாமிஆ நகர் என்கவுண்ட்டர் நாடகம்


நாட்டை உலுக்கிய அஹ்மதாபாத், பெங்களூர், டில்லி தொடர் குண்டு வெடிப்புகளால், எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்குத் தாக்குப் பிடிக்க இயலாமல், உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் தலையை ஆளாளுக்கு உருட்டிக் கொண்டிருந்தனர். கடந்த வெள்ளி, செப்டம்பர் 19 அன்று காலை, ஏறத்தாழ முழுதும் நடுத்தர முஸ்லிம்கள் வாழும் டில்லி ஜாமிஆ நகரில் பரபரப்பான காட்சிகள் சில அரங்கேறின. "என்கவுண்ட்டர்" என்று காவல்துறையினரால் வர்ணிக்கப்படும் அந்நிகழ்வில், அண்மையில் அஹ்மதாபாத், பெங்களூர், டில்லி ஆகிய நகரங்களில் நடந்த தொடர்குண்டு வெடிப்புகளுக்கான மூலகர்த்தா என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஆதிஃப் என்பவரும் அவருடைய தோழர் ஃபக்ருத்தீன் (எ) சாஜித் என்பவரும் கொல்லப் பட்டனர். தீவிரவாதி என்று 'கருதப்படும்' மூன்றாமவர் சம்பவ இடத்திலும் தப்பியோடிய இருவரில் ஒருவர் அன்று மாலையிலும் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றொருவர் தலைமறைவாகி விட்டார். இதில், டில்லி காவல்துறை சிறப்புப் பிரிவில் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றிய 'என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்' மோகன் சந்த் சர்மா காயமடைந்து, மருத்துவ மனையில் உயிரிழந்தார்...மேலும் வாசிப்பதற்கு
நன்றி : சத்தியமார்க்கம் தளம்

No comments: