Friday, July 04, 2008

ஷேவ் செய்யாத ஆண்களிடம் பெண்கள் அதிக மோகம்

தாடி வைக்கும் இஸ்லாமியர்களை ஏதோ தீவிரவாதி என்று பார்த்த காலம் மாறி கொண்டு இருக்கிறது. இனி இந்த செய்தியை பார்த்தபின்னர் இனி எல்லோரும் தாடி வைக்கும் பழக்கம் ஆகி விடுவார்கள்தானே!.நண்பர்களே கீழே படியுங்கள்:

லண்டன் : முழுமையாக முகச்சவரம் செய்தவர்கள், தாடி வைத்து இருப்பவர்களை விட, இரண்டு நாள் தாடியுடன் இருப்பவர்கள் தான் பெண்களை பெரிதும் கவர்வோராக இருக்கின்றனர்.நார்த் அம்பிரியா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. ஆண்களின் புகைப்படம், கம்ப்யூட்டர் மூலம் முழுமையாக முகச்சவரம் செய்தது போலவும், சில நாட்கள் முகச்சவரம் செய்யாதது போலவும், இளம் தாடி வைத்திருப்பது போலவும், முழு தாடி வைத்திருப்போர் போலவும் மாற்றி, பெண்களிடம் தரப்பட்டது.

இவர்களில் ஆண்மையும், மிடுக்கும், கம்பீரமும், ஆளுமையும் கொண்டவர்களாக யாரைக் கருதுகிறீர்கள் என்று பெண்களிடம் கேட்கப்பட்டது.அப்போது, சில நாட்கள் முகச்சவரம் செய்யாத நிலையில் இருப்பவர்களே பெண்களை பெரிதும் கவர்வது தெரியவந்தது. சில நாள் தாடியுடன் இருப்பவர்கள் அதிக ஆண்மை கொண்டவர்களாகவும், ஆளுமையும், கம்பீரமும் கொண்டவர்களாகவும் பெண்களால் கருதப்படுகின்றனர்.இளம் தாடி, முழுமையாக தாடி வைத்திருப்பவர்கள் இதற்கு அடுத்த இடத்தை பெறுகின்றனர். முழுமை யாக முகச்சவரம் செய்தவர்கள் பெண்களை கவர்வதில் கடைசி இடத்தில் தான் உள்ளனர்.

சில நாள் தாடியுடன் இருப்பவர்கள், தாங்கள் முழுமையான தாடி வைத்துக்கொள்ள முடியும் என்பதை காட்டுவதாக பெண்கள் உணர்கின்றனர்.சில நாட்கள் முகச்சவரம் செய்யாத நிலையில் இருப்பவர்களையே வாழ்க்கை துணைவராக தேர்வு செய்ய பெண்கள் விரும்புகின்றனர். முழுமையாக ஷேவ் செய்தவர்கள், செக்ஸ் ரீதியாக முதிர்ச்சி இல்லாதவர்களாக பெண்களால் கருதப்படுகின்றனர்.

நன்றி தினமலர்

No comments: