Tuesday, May 27, 2008

வேடாதாரிகளை இனம் காண்போம்

வேடாதாரிகளை இனம் காண்போம்


நாங்கள் இஸ்லாமிய ஆட்சி அமைக்கப் போகிறோம், வாருங்கள் என்று கூறி சமுதாயத்தை ஏமாற்றும் ஒரு கூட்டம் நம்மிடைய உளா வருவதை நாம் அறிந்ததே! இவர்கள் வோடதாரிகள் என்பதை மக்களுக்கு உணர்த்தவே இந்த ஆக்கம். இவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம், அந்த இடங்களில் இஸ்லாத்தை எப்படி புரிந்து நடக்கிறார்களோ, அவ்வாறு இவர்கள் வோடமிட்டு மக்களை தங்களின் கொள்கையற்ற இயக்கத்தில் சேர்ப்பார்கள். இவர்களின் வோடத்தை அறிய இவர்கள் தற்போது செயல்படும் இடங்களை ஆராய்ந்தால் நன்றாக தெரிய வரும். இவர்களின் வோடத்தை பாருங்கள்,

  • சவூதியில் முழு தவ்ஹீத் வேடம்
  • துபாயில் முக்கா தவ்ஹீத் வேடம்
  • தமிழகத்தில் அரை தவ்ஹீத் வேடம்
  • கேரளவில் கால் தவ்ஹீத் வேடம்
  • கர்நாடகாவில் முழு தர்ஹா வேடம்

தவ்ஹீத் கொள்கையில் உள்ளவர்களிடம் தவ்ஹீத் வோடத்தில் சென்று அவர்களிடம் வசுல் வோட்டை நடத்துவார்கள். சுன்னத் வல் ஜமாத் என்று கூறி கொள்பவர்களை அவர்களின் வோடத்தில் சென்று வசுல் வோட்டை நடத்துவார்கள். இவர்களின் வோடத்தால் அதிகமான மக்கள் ஏமாற்றப்பட்டு இந்த கொள்கையற்ற இயக்கத்தில் இணைகிறார்கள். இந்த இயக்கத்தில் இணைந்த பின்னர் இந்த இயக்கத்தை விட்டு வெளியேறவும் முடியாமல், உள்ளே இருக்கவும் முடியாமல் திணறுகிறார்கள். இந்த கொள்கையற்ற கோமான்கள், சவுதியில் இடும் முழு தவ்ஹீத் வோடத்தாலும், தமிழகத்தில் இடும் அரை தவ்ஹீத் வோடத்தாலும், தவ்ஹீத் கொள்கையில் உள்ள மக்களும் மற்றும் பல தவ்ஹீத் மார்க்க அறிஞர்களும் கூட இவர்களின் சதி வலையில் விழ்ந்து இவர்களை தூக்கி பிடிக்கிறார்கள். இஷ்வான்களின் கொள்கையை (இவர்களுக்கு கொள்கை என்று ஒன்று கிடையாது) ஆரம்பம் முதலே அதன் குறைகளை சுட்டிக்காட்டி எதிர்த்து வரும் ஸலபிகளின் கல்விக் கூடங்களில் படித்து வரும் பல ஆலிம்களும் கூட இவர்களின் சதி வளையில் சிக்கியுள்ளார்கள்.

நாங்கள் இஸ்லாமிய ஆட்சி அமைக்க போகிறோம் என்று ஏமாற்றும் இவர்கள், இஸ்லாமிய ஆட்சி செய்ய வேண்டிய எதையாவது செய்தார்களா என்றால், இல்லை என்பது தான் பதில். தியாகிகளை போல உலா வரும் இவர்கள் எப்படிபட்டவர்கள் என்பதை தெரிந்து கொள்ளுவது நல்லது. தமிழகத்தில் இந்த கொள்கையற்ற இயக்கத்தின் முன்னால் தலைவர் பொருந்தகை மு. குலாம் முஹம்மது க்கு இந்த கொள்கையற்ற இயக்கத்தில் மாத சம்பளம் ரூபாய் 22 ஆயிரம் ஆகும். நாங்கள் தஃவா செய்கிறோம் என்று கூறி மக்களை ஏமாற்றி பணம் வசுலித்து 22 ஆயிரம் ரூபாயை தங்களது தரிக்கா தலைவருக்கு சம்பளமாக கொடுத்து கொலுக்க வைத்தவர்கள், இவர்கள். இன்று அதை குறை கூறுகிறார்கள். அதுபோல, இந்த கொள்கையற்ற இயக்கத்தின் கொள்கையற்ற தலைவர் திருவாளர் குலாம் முஹம்மது தனது மகளின் திருமணத்தில் இந்த கொள்கையற்ற இயக்கத்தின் அனைத்து இயக்க பொருப்பாளர்களையும் அழைத்து திருமணத்தை ஆடம்பரமாகவும், பெண்களை ஃபர்தா இன்றி மேடையில் ஏற்றியும் சாதனை படைத்தார். இதை இயக்கத்தில் உள்ள சிலரும் இயக்கத்தில் வெளியில் உள்ளவர்களும் இந்த மேகா திருமணத்தைப் பற்றி கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள், அப்போது இந்த உத்தமா இயக்கம் என்ன செய்தது தெரியுமா? தனது இயக்க தாயிகளுக்கு (இந்த தாயிகளுக்கு 10 முதல் 15 திருக்குர்ஆன் வசனங்கள் மட்டும் தான் தெரியும் என்பது வேறு விஷயம்) திருவாளர் குலாம் நடத்திய திருமணத்திற்கு இஸ்லாமிய சாயம் புசுவது எப்படி? என்று பயிற்சி அளித்தது. இன்று அந்த திருமணம் தவறு என்று தம்பட்டம் அடிக்கிறது அதே கும்பல்.

அன்று ஜனநாயகம் ஷிர்க் என்று ஊர் ஊராக தம்பட்டம் அடித்து திரிந்த இந்த கும்பல் இன்று ஜனநாயகத்தை தனது தர்மிக வழியாக தேர்ந்தெடுத்து உண்ணா விரதம் இருக்கிறது. அல்லாஹ் தான் நமக்கு ஆட்சியாளன், அவனிடம் தான் நாம் எல்லாவற்றையும் கேட்க வேண்டும் என்று ஏமாற்றிய இவர்கள், இன்று சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கூறி கருணாநிதியிடம் பிச்சை கேட்கிறார்கள்.

இன்னும் இவர்களின் அறியாமையையும் ஏமாற்று வித்தையையும் கேளுங்கள். 'நான் இஸ்லாமிய ஆட்சி அமைத்து வெற்றியாளனக மதினா மற்றும் மக்காவில் நுழையும் போது செய்ய வேண்டிய முதல் காரியம் அபுபக்கர் (ரலி) மற்றும் உமர் (ரலி) அவர்களின் ஜனாஸாவை தோண்டி எடுப்பது தான் (நவுதுபில்லாஹ்)' என்ற இமாம் (?) கொமைனியின் புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு, எதிர்ப்புகள் கிளம்பிய பின்னர் இமாம் கொமைனி இஸ்லாமிய ஆட்சிதான் அமைத்தார் என்றார்கள். பின்னர் இல்லை என்றார்கள். அபுபக்கர் (ரலி) மற்றும் உமர் (ரலி) அவர்களின் ஜனாஸாவை தோண்டி எடுப்போன் என்று சொன்னவருக்கு இஸ்லாமிய சாயம் புசினார்கள், இந்த மகான்கள். அதுபோல், 'கிலாஃபத் இல்லாததால் ஜும்ஆ தொழ தேவை இல்லை' என்று கூறி ஜும்ஆ தொழ மறுத்த உலக புகழ் (?) பெற்ற அறிஞர் (?) செய்யத் குதுப் அவர்களை போற்றி புகழ்ந்து 'நவீன இஸ்லாமிய எழுச்சியின் சிந்தனைச் சிற்பி' என்ற புத்தகத்தை சமீபத்தில் வெளியிட்டுள்ளார்கள். இது போன்ற ஒரு அறியாமையை எவரும் உலகில் வெளிபடுத்தியது கிடையாது. இப்படிபட்ட அறிஞரை (?) இவர்கள் போற்றி மக்களையும் தனது இயக்கதவர்களையும் ஏமாற்றி வருகிறார்கள். இவர்கள் எளிதாக ஏமாற்ற காரணம், இவர்களின் இயக்கத்தில் உள்ளவர்களில் அதிகமானோர், செய்யத் குதுப் என்று எழுத கூட தெரியதா பள்ளி மாணவர்கள் மற்றவர்கள் தலையாட்டி பொம்மைகள்.

இன்று இவர்கள் சுதந்திர தின அணிவகுப்பு நடத்த போகிறார்களாம். நாம் இவர்களிடம் கேட்கிறோம், இன்று உங்கள் இயக்கத்தின் பலத்தை காட்ட வேண்டும் என்று உயரிய (?!) நோக்கத்தில் அணிவகுப்பு நடத்துகிறீர்கள். ஆனால், இஸ்லாமிய ஆட்சி செய்ய வேண்டிய ஒரு விஷயத்தை கூட இவர்கள் செய்யவில்லை. இசை ஹராம் என்று கருதும் உங்களின் கொள்கைப்படி இசையில்லாமல் இந்த அணிவகுப்பு நடக்குமா? அல்லது உங்களின் வழிகாட்டி அறிஞர் யுசுப் அல் கர்ளாவி அவர்களின் கருத்துப்படி இசை கூடும் என்று அடிப்படையில் இசை அடிக்க படுமா? அல்லது உங்களின் கேரளா பிரிவின் சுன்னத்துபடி இசை அடிக்கப்படுமா? என்ன? குழம்பிவிட்டிர்களா? பாவம்! இவர்கள் தான் குழப்பத்தின் மறு பெயர். இவர்களின் வோடங்கள் இனி கிழிக்கப்படும் இன்ஷா அல்லாஹ். கிழிக்க போவது யாருமல்ல, முன்னால் சகோதரர்களும் இவர்களின் கூற்றுப்படி இன்னால் முனாஃபிக்களுமான (இவர்களின் கருத்துப்படி இவர்களின் தவறை எதிர்த்தால் முனாஃபிக்) இந்த கொள்கையற்ற இயக்கத்திற்க்காக அல்லும் பகலும் உழைத்தவர்கள்.

குறிப்பு: தற்போது இவர்களிடம் என்ன குறை சொன்னாலும் குலாம் தான் அப்படி செய்தார், நாங்கள் அப்படி செய்வில்லை என்கிறார்கள். இது சுத்த பொய். குலாம் இவர்களுடன் இருக்கும் போது இவர்களும் முடிவெடுக்கும் விசயங்களில் ஈடுபட்டு இருந்தார்கள்.

தொடரும் இன்ஷா அல்லாஹ்......

55 comments:

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

உண்மையான விஷயத்தை வெளியி்ட்டுள்ளீர்கள். நானும் இந்த குப்பை இயக்கத்திற்க்காக உழைத்தவன். இவர்கள் ஏமாற்று பேர்வழிகள். இவர்கள் வோடதாரிகள். இவர்களின் எல்லா பித்தலாட்ங்களையும் வெளியிடுங்கள். இவர்களின் ஏமாற்று வேலை கொஞ்சம் நஞ்சமல்ல......

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்

த த ஜ -விற்கு இவர்கள் எவ்வளவோ பரவாயில்லை

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

ஒருவர் செய்யும் தவறை இன்னோருவர் செய்யும் தவறை சொல்லி நியாயபடுத்த முடியாது. தவறு யாரிடம் இருந்தாலும் அதை சுட்டிக் காட்டுவோம்.

Muslim Sago said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹு)
அன்புள்ள சகோ..

ஆச்சிரியம் படுவதற்கு ஒன்றும் புதியதல்ல. என்னக்கு ஒரு விஷயம் மட்டும் புரியமாட்ட்டிகுது, ஒவ்வெரு இயக்கதவரும் அதிலுருந்து வெளியேறிய பிறகு வெளியிடும் முதல் செய்தி இப்படித்தான் இருக்கும். இதை பற்றிக்கேட்டால் இப்போதுதான் அல்லாஹ் நமக்கு தெளிவை தந்தான் என்றொரு பதில். அல்லாஹ் தான் அனைத்திற்கும் போதும்மனவன் இதில் எந்த மாற்றுகருதும் இல்லை. ஒன்று மட்டும் நிச்சயம் கண்முடிஇதனமாக தன்னையும் தன் அறிவையும் அடகுவைக்கும் ஒவ்வெரு சகோதரனுக்கும் இந்த நிலைதான். என்றைக்கு தான் ஒரு இஸ்லாமியன் , முஸ்லீம் என்று கூறிய காலம் போய் இயக்கத்தின் பெயரால் அறிமுகபடுதிகொள்ளும் காலம் வந்ததோ இதுபோன்ற விஷயங்கள் ஒன்றும் பெரிதல்ல . நம்முடைய அல்லாஹு தான் நம்மை காக்கவேண்டும்.

Anonymous said...

Anna sathiyavan summa pinathatheenga makkal theliva irukkanga Ok

Anonymous said...

மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்று கூறி சமாளிக்காதீர்கள். உங்கள் இயக்கத்தைப் பற்றி ஏதுவும் அறியா மக்களின் அறியாமையை வைத்து தப்பித்து விடாதீர்கள். கேட்ட கேள்விகளுக்கு பதில் தெரிந்தால் சொல்லுங்கள், இல்லாவிட்டால் அமைதியாக இருங்கள். உளறி மாட்டிக் கொள்ளாதீர்கள். பதில் தெரியாவிட்டால் இப்படி தான் எதையாவது சொல்ல வேண்டும் என்று தோன்றும். ஒரு வேளை மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்று வைத்துக் கொண்டாலும், நீங்கள் தெளிவில்லாமல் இருக்கிறீர்கள். அதை சரி செய்யுங்கள்.

முகவைத்தமிழன் said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அநானியாக வந்து கமென்ட் போடும் சகோதரருக்கு, கொஞ்சம் கொன்டையை மறைக்க பாருங்கள். நீங்களே கருத்தை எழுதிவிட்டு நீங்களே வேற ஆள் மாதிரி பதிலும் அளிக்க வேண்டாம், மேலே உள்ளதில் பெரும்பாலான கமென்ட் நீங்கள் இட்டதே என்பதை நான் அறிவேன். ஆகவே சற்று கவணமாக இருக்கவும்.

உண்மையாக கருத்துக்களுக்கு இடமளியுங்கள், நீங்களாகவே கேள்வியு்ம் பதிலும் இட்டு போலியான ஒரு தோற்றத்தை ஏற்படுத்த வேண்டாம்.

நன்றி
நிர்வாகி

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரா...

நீங்கள் MNP யில் இருந்த போதிலும் இஷ்வானிஸத்தைப் பற்றி குறைவாக அறிந்துள்ளது இரக்கத்திற்குரியது. நீங்கள் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் மிகவும் பலமையானது. இவை அனைத்தும் எங்களால் பல நேரங்களில் பதில் அளிக்கப்பட்டு வந்துள்ளது. உங்களுக்கு தான் புரியவில்லை. உதாரணத்திற்கு, முழு தவ்ஹீத், அரை தவ்ஹீத் போன்றவற்றை எடுத்து கொள்வோம். மக்களிடம் உள்ள தவறுகளை சுட்டிக் காட்டாமல் இருப்பதில் என்ன தவறு இருக்க முடியும். மக்கள் அனைவரும் கிலாஃபத்தின் கிழ் ஒன்றுபட்ட பின்னர் தவ்ஹீதை பிரச்சாரம் செய்யலாம். ஒற்றுமையுடன் வாழ நம்மை அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். சத்தியவானே பதில் அளியுங்கள்.....

பிறைநதிபுரத்தான் said...

MNP குலாம் முகம்மது பற்றிய - நான் கேள்விப்படாத பல செய்திகளை தந்துள்ளீர்கள்.நன்றி.

ஒவ்வொரு இயக்கத்தவரும் தங்களது வலிமையை - மக்கள் ஆதரவை ஜனநாயக வழியில் காட்டிக்கொள்வதில் தவறில்லை.

தவ்ஹீது மாநாடு என்றும் - உரிமை மீட்பு பேரனியென்றும் ஒவ்வொரு இயக்கமும் தனது வலிமையை பறைசாற்றும் போது ‘சுத்ந்திர தின பேரணி' மூலம் MNP - தனது வலிமையை வெளிச்சம் போட்டு காட்டட்டும்.

பொறுத்திருந்து பார்ப்போம் - MNP ன்னா கொக்கா அல்லது ‘டுபாக்கூர்' இயக்கமாவென்று..

சத்தியவான் said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரா....


நான் இஷ்வானிஸத்தைப் பற்றி குறைவாக அறிந்து வைத்துள்ளேனா அல்லது அதிகமாக அறிந்து வைத்துள்ளேனா என்பதை பின்னர் தெரிந்து கொள்வீர்கள். நான் எழுப்பிய கேள்விகள் அனைத்தும் பலமையானது என்றும், அவை உங்களால் பல நேரங்களில் பதில் அளிக்கப்பட்டு வந்துள்ளது என்றும் அளகாக கூறியுள்ளீர்கள். அது உண்மையானால், அந்த பதில்களை இங்கே கொஞ்சம் சொல்லுங்கள், அது உங்களின் முகத்திரையை கிழிப்பதற்கு வசதியாக இருக்கும். நாங்கள் இதற்கு அங்கே பதில் கூறி விட்டோம், இங்கே பதில் கூறி விட்டோம் என்று கூறி சமாளிக்காதீர்கள். சமாலித்தது போதும். உங்கள் பதிலை இங்கே பதிவு செய்யுங்கள். அடுத்தாக, மக்களிடம் உள்ள குறையை சுட்டிக் காட்டாமல் இருப்பதில் தவறு என்ன என்று கேட்டு தங்களின் மார்க்க அறிவை நீருபித்துள்ளீர்கள். முதலில் இஸ்லாத்தை நன்றாக படியுங்கள். பின்னர் பேசுவதற்கு வாருங்கள். உங்களின் இயக்க தலைவர்கள் சொல்வதை அப்படியே நீங்களும் தலையாட்டி பொம்மைகளாக வாந்தி எடுத்துள்ளீர்கள். யார் எதை சொன்னாலும் சிந்தித்து செயல்படுங்கள். கிலாஃபத் வந்த பிறகு மக்களை சீர்படுத்தலாம் என்று கூறிவுள்ளீர்கள். இது கேட்பதற்கு அளகாக இருக்கிறது. நீங்கள் வோடமிட்டு வோடமிட்டு கிலாஃபத்தை எற்படுத்துவதற்குள், பல கோடி மக்கள் நரகத்திற்கு சென்றுவிடுவார்கள். மார்க்கத்தில் சொல்லப்படாதே கிலாஃபத்தை தூக்கி பிடித்து கொண்டு, வலியுறுத்தப்பட்ட தவ்ஹீதை பிரச்சாரத்தை விட்டு விட்டு குலம்பி போய் விட்டிர்கள். ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டுள்ளதாக கூறி ஆதாரம் எதையும் கூறாமல் விட்டுள்ளீர்கள். அல்லாஹ் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்று கட்டளையிட்டதாக நமக்கு தெரியவில்லை. அல்லாஹ் குர்ஆனை பற்றி பிடித்து கொள்ளதான் கட்டளையிட்டுள்ளன்.

"அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடியுங்கள்" என்று 3:103 வசனம் கூறுகிறது. அல்லாஹ்வின் கயிறு என்பது குர்ஆனும் அதன் விளக்கவுரையுமான நபி மொழிகளும் தான். அனைவரும் சேர்ந்து திருக்குர்ஆன் மற்றும் நபி வழியைப் பற்றி பிடியுங்கள் எனக் கூறும் வசனமே இது. தங்களை பெரிய மார்க்க அறிஞராக நினைத்து குர்ஆனுக்கு தவறான விளக்கம் அளிக்காதீர்கள்.

தயவு செய்து பதில் அளிக்கும் முன் சிந்தியுங்கள். உங்களின் பதிலை எதிர் பார்க்கும்.... சத்தியவான்....

சத்தியவான் said...

பிறைநதிபுரத்தான் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்.

MNP மற்றும் தியாகி (?) குலாம் முஹம்மது பற்றி இன்னும் பல அதிர்ச்சி தகவல்களை நாம் வெளியிடவுள்ளோம்.

ஒவ்வோரு இயக்கமும் தங்களின் வலிமையை ஜனநாயக வழியில் காட்டிக் கொள்வதில் தவறு இல்லை. இவர்கள் ஜனநாயகம் ஒர் இணைவைப்பு என்று தம்பட்டம் அடிக்க கூடியவர்கள். இப்படி இவர் கண்ணில் ஷிர்க்கான் ஒரு காரியத்தை இவர்கள் செய்வதற்க்கு இவர்களுக்கு என்ன உரிமை உள்ளது. பிறர் செய்தால் தவறு நாங்கள் செய்தால் தவறு இல்லை என்று இவர்கள் மக்களை ஏமாற்ற முனைகிறார்கள். மற்ற இயக்கங்கள் தனது இயக்கத்தின் வலிமையை மட்டுமே காட்டுவதை காரணமாக கொண்டு எந்த விஷயத்தையும் செய்வது இல்லை. மற்ற இயக்கங்கள் ஏதோனும் ஒரு கோரிக்கையை முன்னுருத்தி தான் எதையும் செய்கின்றன. இவர்கள் எதையும் முன்னுருத்தாமல் அணிவகுப்பு நடத்துகின்றனார்.

இவர்களின் அணிவகுப்பில் காட்டும் வலிமையினால் இவர்களை கொக்கா அல்லது டுபாக்கூரா என்றும் முடிவு செய் இயலாது. இவர்களுக்கு என்று ஒரு கொள்கையே கிடையாது. கொள்கையில்லாத கோமான்கள் இவர்கள், அதனால் தான் சொல்லும் இடங்களில் எல்லாம் வோடரிகளாக வோடமிட்டு திரிகின்றனார். இவர்களுக்கு என்று ஒரு கொள்கை இல்லாததால் நாலுக்கு ஒரு கொள்கை பேசி திரிகின்றனர்.

...சத்தியவான்

Anonymous said...

இந்த இயக்கத்தை தடை செய்வதற்கும், குறை சொல்வதற்கும் எத்தனையோ முயற்சிகளை உளவுத்துறையும், முனாபிக்குகளும் எடுத்துவிட்டார்கள். தற்போது நீங்கள் முயற்சி செய்கிறீர்கள் என்பது மட்டும் நன்றாக தெறிகின்றது. அல்லாஹ் உண்மையாளர்களுடன் இருக்கிறான். சத்தியவான் என்று பெயர் வைத்து கொண்டு பொய்யுரைக்க வேண்டாம். தமிழ் முஸ்லிம் அரசியல் மேடைக்கும் இது அழகல்ல.

பிறைநதிபுரத்தான் said...

அஸ்ஸலாமு அலைக்கும் சத்தியவான்,

MNP பற்றிய புதிய தகவல்களுக்கு காத்திருக்கிறேன்.

MNP - பேரணி நடத்த காரணம் தேவையில்லை என்றே கருதுகிறேன். சுதந்திர-குடியரசு தினத்தன்று மதவாத ஆர்.எஸ்.எஸ் நடத்தவில்லையா? அதனால் இவர்களும் நடத்திவிட்டு போகட்டுமே!.

அவர்களின் மாறிவரும் கொள்கைகளுக்கு (ஜன நாயக ஆதரவு) - புதிய பரிமானத்துக்கு அடிப்படைகாரணமாக நான் கருதுவது - Popular Front of India என்ற தேசிய அளவிலான கட்சியின் மூலம் தேர்தலில் போட்டியிடும் திட்டமாக கூட இருக்கலாம். தேர்தலில் போட்டியிட வேண்டுமானல் ஜனநாயகத்தை ஆதரித்துத்தானே ஆகவேண்டும்.

சத்தியவான் said...

அன்புள்ள அப்துல் அவர்களுக்கு,

உங்கள் இயக்கத்தை தடை செய்ய வேண்டும் என்று நோக்கம் எங்களுக்கு கிடையாது. அது எங்களுக்கு தேவையும் இல்லை. நாங்கள் அப்படி ஒரு முயற்சி செய்வதாக கப்ஸா விட்டு தப்பிக்க முயற்சி செய்கிறீர்கள். நாங்கள் உங்கள் இயக்கத்தை பற்றி குறை செல்வதாக கூறிவுள்ளீர்கள். குறை இருந்தால் நாங்கள் சொல்லத்தான் செய்வோம். அது குறை இல்லை என்றால் நீங்கள் பதில் அளிக்க வேண்டும். சும்மா குறை சொல்லுகிறார்கள் என்று பிதற்றி உங்கள் இயக்கத்தின் குறையை நீங்களே நீருபித்துவிட்டிர்கள். அல்லாஹ் உண்மையாளர்களுடன் தான் இருக்கிறான், அதனால் தான் நான் கேட்ட கேள்விகளுக்கு உங்களால் பதில் கூற முடியவில்லை. நான் பொய் பிரச்சாரம் செய்வதாக கூறிவுள்ளீர்கள். நான் சொன்னதில் எது பொய் என்று கொஞ்சம் சொல்லுங்கள். உளரி மாட்டிக் கொள்ளதீர்கள்........

Anonymous said...

அன்புள்ள சத்தியவான் அவர்களே MNP தங்களின் வலிமையை காட்ட முயற்சிக்கும் நேரத்தில் தங்கள் குய்யோ முய்யோ ன்டு கத்துவதனால் ஒரு பிரயேஜனமும் இல்லை மக்களின் செல்வாக்கு மற்ற இயக்கத்தைபோல இவர்களுக்கும் உண்டு இவர்களின் செயல்பாடுகளை மக்கள் நன்றாக அறிவார்கள் எனவே சும்மா உங்கள் நேரத்தை வேஷ்ட் பன்னாதீங்க சரியா

Anonymous said...

//'நான் இஸ்லாமிய ஆட்சி அமைத்து வெற்றியாளனக மதினா மற்றும் மக்காவில் நுழையும் போது செய்ய வேண்டிய முதல் காரியம் அபுபக்கர் (ரலி) மற்றும் உமர் (ரலி) அவர்களின் ஜனாஸாவை தோண்டி'//

இதற்கு ஆதாரங்களை தெறிவியுங்கள் (புத்தக பெயர், வெளியீட்டாளர் பெயர், பக்கம், பத்தி)

//'கிலாஃபத் இல்லாததால் ஜும்ஆ தொழ தேவை இல்லை' என்று கூறி ஜும்ஆ தொழ மறுத்த உலக புகழ் (?) பெற்ற அறிஞர் (?) செய்யத் குதுப் அவர்களை போற்றி புகழ்ந்து 'நவீன இஸ்லாமிய எழுச்சியின் சிந்தனைச் சிற்பி' தோண்டி'//

இதற்கும் ஆதாரங்களை தெறிவியுங்கள் (புத்தக பெயர், வெளியீட்டாளர் பெயர், பக்கம், பத்தி)

சத்தியவான் said...

அன்புள்ள சத்தியவான் அவர்களே MNP தங்களின் வலிமையை காட்ட முயற்சிக்கும் நேரத்தில் தங்கள் குய்யோ முய்யோ ன்டு கத்துவதனால் ஒரு பிரயேஜனமும் இல்லை மக்களின் செல்வாக்கு மற்ற இயக்கத்தைபோல இவர்களுக்கும் உண்டு இவர்களின் செயல்பாடுகளை மக்கள் நன்றாக அறிவார்கள் எனவே சும்மா உங்கள் நேரத்தை வேஷ்ட் பன்னாதீங்க சரியா

*******************************************************************************************************

மேலே உள்ள கமேண்டை பதிந்தவருக்கு,

உங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டவதாக.

நான் மேலே கேட்டுள்ள கேள்விகளுக்கு பதில் அளிக்காமல், கண்டதையெல்லாம் உளரி, நான் எனது ஆக்கத்தில் சொன்ன அனைத்து விஷயங்களும் உண்மைதான் என்று நீருபத்து வருகிறிர்கள். நன்றி. பொய்யர்கள் உளரி தான் மாட்டிக் கொள்வார்கள். இந்த ஆக்கம் சம்பந்தமாக பலர் ஏற்கனவே உளரி மாட்டிக் கொண்டு ஒடி விட்டார்கள். அந்த வரிசையில் நீங்கள் புதியவர். அவ்வளவுதான். நீங்கள் தயவு செய்து குய்யோ முய்யோ என்று கத்தி உங்கள் இயக்கத்தின் தவறுகளை ஏற்கனவே பலர் நீருபித்தது போன்று நீங்களும் நீருபித்து விடாதீர்கள்.
மக்கள் செல்வாக்கு தங்களின் இயக்கத்துக்கு அதிகம் இருப்பதாகவும் அதனால் எல்லாம் சரி என்று கூறி தங்களின் அறியாமையை வெளிபடுத்திவுள்ளீர்கள். மக்கள் செல்வாக்கு அதிகம் இருந்தால் சரி என்பது தான் ஜனநாயகம். அது தான் உங்களின் கொள்கைப்படி ஷிர்க். கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள், இல்லாவிட்டால் தயவு செய்து ஒடி விடுங்கள்.

சத்தியவான் said...

//'நான் இஸ்லாமிய ஆட்சி அமைத்து வெற்றியாளனக மதினா மற்றும் மக்காவில் நுழையும் போது செய்ய வேண்டிய முதல் காரியம் அபுபக்கர் (ரலி) மற்றும் உமர் (ரலி) அவர்களின் ஜனாஸாவை தோண்டி'//

இதற்கு ஆதாரங்களை தெறிவியுங்கள் (புத்தக பெயர், வெளியீட்டாளர் பெயர், பக்கம், பத்தி)

//'கிலாஃபத் இல்லாததால் ஜும்ஆ தொழ தேவை இல்லை' என்று கூறி ஜும்ஆ தொழ மறுத்த உலக புகழ் (?) பெற்ற அறிஞர் (?) செய்யத் குதுப் அவர்களை போற்றி புகழ்ந்து 'நவீன இஸ்லாமிய எழுச்சியின் சிந்தனைச் சிற்பி' தோண்டி'//

இதற்கும் ஆதாரங்களை தெறிவியுங்கள் (புத்தக பெயர், வெளியீட்டாளர் பெயர், பக்கம், பத்தி)

*************************************************************************************************************************************************************************************************************
மேலே உள்ள கமேண்டை பதிந்தவருக்கு,

உங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டவதாக.

உங்களை நான் பாராட்டுகிறோன். பிறரைப் போல் சமாளிக்காமல், ஆதாரங்களை கேட்டுள்ளீர்கள். நல்ல அணுகுமுறை.

உங்களின் கேள்விகளுக்கு பதில் கிழே.......

//'நான் இஸ்லாமிய ஆட்சி அமைத்து வெற்றியாளனக மதினா மற்றும் மக்காவில் நுழையும் போது செய்ய வேண்டிய முதல் காரியம் அபுபக்கர் (ரலி) மற்றும் உமர் (ரலி) அவர்களின் ஜனாஸாவை தோண்டி'//

மேலே உள்ளவை கொமைனி அவர்கள் இளைஞர் பேரணியில் உரையாற்றிய போதும் சொன்ன செய்தி.

ஆதாரம்:
http://www.allaahuakbar.net/shiites/beliefs_of_khomeni_the_leader_of_iran.htm

மேலே உள்ள Link கை நன்றாக படியுங்கள். கொமைனியின் முகமுடி உங்களுக்கு தெரியும்.

//'கிலாஃபத் இல்லாததால் ஜும்ஆ தொழ தேவை இல்லை' என்று கூறி ஜும்ஆ தொழ மறுத்த உலக புகழ் (?) பெற்ற அறிஞர் (?) செய்யத் குதுப் அவர்களை போற்றி புகழ்ந்து 'நவீன இஸ்லாமிய எழுச்சியின் சிந்தனைச் சிற்பி' தோண்டி'//

இந்த விஷயம் "The Secret History of the al-Ikhwaanul Muslimoon (at-Taareekh as-Sirree li-Jamaa'atil-Ikhwaan il-Muslimeen)" என்ற புத்தகத்தில் அதன் ஆசிரியர் அலி அஸ்மாவி இந்த விசயத்தை கூறுகிறார். இது அவரின் புத்தகம் பக்கம் 112 ல் இடம் பெற்றுள்ளது. இந்த செய்தி பல புத்தகம் மற்றும் ஆக்கங்களில் இடம் பெற்றுள்ளது. அவைகளில் சில கிழே,

1. http://www.allaahuakbar.net/jamaat-e-islaami/QUTB/mistakes_and_innovations_of_sayyid_qutb.htm.

2. http://www.salafipublications.com/sps/sp.cfm?subsecID=NDV01&articleID=NDV010008&articlePages=3
.


3. ஹனிப் ஜேம்ஸ் ஆலிவர் என்பவர் எழுதிய "The Wahhabi Myth" என்ற புத்தகத்திலும் இந்த செய்தி இடம் பெற்றுள்ளது. இந்த புத்தகம் சமிபத்தில் வெளியிடப்பட்ட புத்தகம். இந்த ஆசிரியர் ஸலபிகள் மற்றம் அவர்களின் கொள்கை சம்பந்தமாக பல புத்தங்களை எழுதியுள்ளார். For more information, visit:.


இதற்கு பதில் இருந்தால் பதியுங்கள். இல்லாவிட்டால் உங்களை ஏமாற்றும் உங்களின் இயக்கத்தை திருத்த முயலுங்கள், முடியாவிட்டால் அதை விட்டு ஒதுங்கிவிடுங்கள்.

Anonymous said...

1) Islamiya aatchi seyya vendiadu enna vendru sollavillai, dayavu seidu adai mudallil sollavum.

2) Democracy shirk endru MNP karen sollavillai, it is baathil. Ippa kooda ada halal nnu MNP sollavillai, ippavum adu baathil nnu than solrom. But democracy use panni muslims i bala batutha MNP kaiyil eduthu vittom. ellorom democracy ikku kattupattu than india vil irukirom. ungalluku guts irundha CM kitte poi naan democracy a follow panna mudiyadu nnu solli paarunga.. appo namma nirbandathil follow panra democracy i muslims i bala padutha yen use panna koodadu?

3) Enga kolhai, muslims nalanukku ulaipadu thane thavira adutha muslimhalin muga thirai ellam kilipadu illai, adutha muslims edavadu nalladu seidal naanga romba sandosha paduvom, including urself.

4) Naangal ani vahuppu nadathuvadey muslims strenght i kaatuvadakku than, muslims mela yaravadu kai vecha naagna irukom solradukku than. adanala special a korikai ellam thevai illai sir.

Oru kaalathula muslims ikku ganniyam, uyirukku security illam kidaiyadu.(tamilnadu la yum than) adanala inda work a MNP 100% seidom, ippa neenga muslim enbadakaaga ungala yaarum ganniya kuraiva nadatha mudiyadu, insha Allah. inimey next step, muslims i bala paduthuvadu than. naaga adutha kattathukku poi irukom, neenga innum 1980s la irukeenga. muslims a bala paduthina next kilafathuku pogalam.
inda thittathukku maatru thittam -practical a possible irundha sollavum, appuram islamiya aatchi nnu solreengaley, ada eppadi kondu varuvadu nnu, naanga sonna vali illadey oru vali irudha sollavum, kandippa MNP enda muslim nalla visayam sonnalum,ada pareseelanai seyuum.

ippadikku- mohamed

சத்தியவான் said...

சகோதரர் முஹம்மது அவர்களுக்கு,

உங்களின் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.

உங்களின் கருத்தை தமிழில் பதிந்துயிருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.

உங்களின் கேள்விகளுக்கு பதில்கள் கிழே,

1. இஸ்லாமிய ஆட்சி செய்ய வேண்டிய விஷயங்கள் என்ன என்று என்னிடம் கூற சொல்லி பணித்துள்ளீர்கள். அதை இஸ்லாமிய ஆட்சி என்று தம்பட்டம் அடிக்கும் உங்கள் இயக்கத்திடம் முதலில் கேளுங்கள். பின்னர் நான் கூறுகிறோன்.

2. MNP ஜனநாயக்தை ஷிர்க் என்று சொல்லவில்லை என்று புளுகியுள்ளீர்கள். உங்களை போன்று இந்த இயக்கத்தின் புதியவர்களுக்கு இந்த விஷயங்கள் தெரியாது. உங்களின் இயக்கதவர்களும் உங்களின் வழிகாட்டிகளான இஷ்வானிகளும் இதை ஷிர்க் என்று தம்பட்டம் அடித்து வந்துள்ளார்கள். இன்று அந்தர் பெல்டி அடித்துள்ளார்கள். உங்களை போன்றவர்களுக்கு இது தெரியாது. அதனால் தான் இவர்களுக்கு சால்டரா தட்டுகிறீர்கள். MNP ஜனநாயகத்தை கையில் எடுத்துள்ளது என்று கூறி, உங்கள் இயக்கம் அடித்த அந்தர் பெல்டியை நீங்களே ஒத்து கொண்டுள்ளீர்கள். நன்றி. ஜனநாயகத்தை எதிர்க்கும் நீங்கள் தான் CM யிடம் போய் அவ்வாறு செய்ய வேண்டும். ஜனநாயக போராட்டங்கள் செய்யக் கூடிய தமுமுக போன்ற இயக்கங்களை குறை கூறி திரிந்த உங்கள் இயக்கம் இன்று செய்வதை நினைத்து பலருக்கு அலுவதா அல்லது சிரிப்பதா என்று தெரியவில்லை.

3. உங்களின் கொள்கை முஸ்லிம்களின் நலனுக்கு உழைப்பது என்று உளரி உள்ளீர்கள். கொள்கை என்றால் என்ன என்று முதலில் தெரிந்து கொள்ளுங்கள். முஸ்லிம்களின் நலனுக்காக உழைப்பது என்பது உங்களின் நோக்கம். கொள்கை என்பது தர்ஹா, மத்ஹப், மவ்லிது, ஹத்தம் பாத்திஹா, கந்தூரி ஊர்வலம் இன்னும் போன்ற விஷயங்களை உங்கள் இயக்கம் ஆதரிக்குமா அல்லது எதிர்க்குமா. அல்லது ஊருக்கு தகுந்தார் போல் வோடாமிடுமா என்பது தான் நமது கேள்வி.

4. அணிவகுப்பு நடத்தி முஸ்லிம்களுக்கு நல்லது செய்தால் சந்தேஷம். இந்த அணிவகுப்பை பற்றி நமது கேள்வி, அதில இசை அடிக்க படுமா என்று. காரணம், உங்களின் கேரளா பிரிவு அவ்வாறு இசை அடித்துதான் அணிவகுப்பு நடத்தியது. உங்களின் வழிகாட்டி (?) யுசுப் அல் கர்ளாவி இசை ஹலால் என்று ஃபத்வா கொடுத்துள்ளார். நீங்கள் இசை கூடாது என்று புத்தகம் விற்று பணம் பார்க்கிறிர்கள்.

ஒரு காலத்தில் முஸ்லிம்களுக்கு இருந்த அபாயத்தை உங்கள் இயக்கம் மாற்றியதாக புளுகியுள்ளீர்கள். இதற்கு உங்கள் இயக்கம் ஒன்றும் செய்யவில்லை. நாங்கள் தான் செய்தோம் என்று உங்கள் இயக்க தலைவர்கள், ரகசிய கூட்டங்களில் கப்ஸா விடுவார்கள். அதை நீங்கள் நம்பி விட்டிர்கள். முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சனைகள் அதிகமாக குறைந்ததுக்கு காரணம் தமுமுக போன்ற இயக்கங்கள் மக்களை திரட்டி அரசாங்கத்தை பயமுறுத்தியது தான். இவர்களின் பலாத்தால் தான் முஸ்லிம்கள் தமிழகத்தில் பல பலன்களை பெற்றார்கள் என்பது ஊர் அறிந்த உண்மை. தமுமுக போன்ற இயக்கங்கள் முஸ்லிம்கள் பாதிக்கபடும் போதெல்லாம் விதியில் இறங்கி போராடியது. உங்களை போன்று இருட்டறை இருந்து பேசவில்லை. உங்களின் இயக்கத்தின் அணுகுமுறையை விட வேறு திட்டங்கள் இருந்தால் கூறுங்கள் என்று கேட்டுள்ளீர்கள். நல்லது. சத்திய இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவத்தில் முஸ்லிம்களிடமும் முஸ்லிம் அல்லாதவர்களிடமும் பிரச்சாரம் செய்யுங்கள். மக்களை உங்கள் இயக்கத்தில் சேர்க்க வேண்டும் என்பதற்க்காக வோடமிடாதீர்கள். தர்ஹா, மத்ஹப், மவ்லிது, ஹத்தம் பாத்திஹா, கந்தூரி ஊர்வலம் போன்றவற்றை தவறு என்று மக்கள் மத்தியில் பகிரங்கமாக பிரச்சாரம் செய்யுங்கள், இஸ்லாமிய ஆட்சி தானாக வந்துவிடும். உங்கள் இயக்கத்தை இந்த விஷயத்தை பரிசிலினை செய்ய சொல்லுங்கள்.

Anonymous said...

நல்ல திட்டமிட்டு தமுமுக-காரன் போன்று வேடமிடுகிறீர்கள். யாரென்று நன்றாகவே தெரிகிறது.

Anonymous said...

this is fault massage.hereafter please donot publish like this.allah only punish him.we will see in ahira our duty only for allah .allah accepts our all duty insha allah.

சத்தியவான் said...


நல்ல திட்டமிட்டு தமுமுக-காரன் போன்று வேடமிடுகிறீர்கள். யாரென்று நன்றாகவே தெரிகிறது.



மேலே உள்ள கம்மண்ட்டை பதிந்தவருக்கு,

உங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டதாவதாக...


நான் யார் என்று எனது கட்டுரையில் கூறிப்பிட்டுள்ளோன். அதை நன்றாக படியுங்கள்.

நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறுங்கள். உளரி மாட்டிக் கொள்ளதீர்கள்.

சத்தியவான் said...

this is fault massage.hereafter please donot publish like this.allah only punish him.we will see in ahira our duty only for allah .allah accepts our all duty insha allah.
********************************************************************************************************************
மேலே உள்ள கம்மண்ட்டை பதிந்தவருக்கு,

உங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டதாவதாக...


எனது ஆக்கத்தில் எது பொய் என்று சுட்டிக் காட்டுங்கள். நீங்கள் முறையிடும் முறையே உங்களின் இயக்கத்தின் முகத்திரை கிழிக்கப்பட்டதை நன்றாக காண்பிக்கிறது. பாவம், உங்களின் உள்ளக் குமுறல். நான் சொன்னதை அழகாக நீருபித்துள்ளீர்கள். நன்றி. அல்லாஹ் ஏமாற்றுபவர்களை தண்டிக்கட்டும்.

அல்லாஹ் நம்மை அவனது நேர் வழியில் நடத்துவனாக.

Anonymous said...

சத்தியவான் அவர்களுக்கு உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உன்டாவதாக,

வெறும் இனையத்தளங்களை மட்டும் ஆதாரமாக காட்டுவது மிகவும் அபாயகரமானது. செய்யது குத்துபு அவர்கள் ஜும்மா தொழமாட்டரரா இல்லையா என்பதை அவரின் தனிப்பட்ட வரலாற்றின் மூலமாகவே அறியமுடியும். அவரின் வாழ்வின் பெரும்பகுதி சிறைச்சலைகளில்ததான் கழிந்தது.மேலும் அவர் எந்த ஒரு நிலையிலும் கிலாஃபத்திற்கு பிறகுதான் ஜும்மா என்று சொன்னதாக அறியமுடியவில்லை. யரரோ ஒருவர் தனது புத்தகதில் சொன்னார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பொதுவாக சலபிகள் சவுதி அரசின் அலுவலர்கள் போல செயல்பட கூடியவர்கள்.எனவே சற்று எச்சரிக்கையுடன் எதையும் அனுகவும்.அவதுரர் செய்வதிலிருந்தும் புறம் பேசுவதிலிருந்தும் அல்லாஹ் ந்ம்மை காப்பாற்றுவானாக

Anonymous said...

இங்கு சத்தியவான் (???) வைக்க கூடிய ஆதாரங்கள் அனைத்தும் எப்படிப்பட்டலை என்றால் எதுவும் நேரடியாக தொடர்புடையதாக இல்லை அனைத்துமே ""அவர் சொன்தாக, அவர் சொன்னார், அதை இவர் கேட்டார் அதை எனக்கு அவர் சொன்னார்"" என்பதாகவே உள்ளன.

இன்னும் விரைவில் எதிர்பாருங்கள் ஆதாரங்களுடன் இரன்டாம் பாகம் எனவும் இந்த கட்டுரை முன்னுரை மட்டுமே எனவும் எழுதியிருந்தார் ஆனால் வாரங்க்ள பல ஆகிவிட்டன இது வரை இரன்டாம் கட்டுரை வரவில்லை (சரக்கிருந்தால்தானே வருவதற்கு??).

இவர் இங்கு மறுமொழியாக பதிந்து வரும் பல விசயங்கள் ஏற்கனவே பி.ஜெயினுல்லாபுதீன் அவர்களால் உணர்வில் எழுதப்பட்டவைதான்.

Anonymous said...

//ல்ல திட்டமிட்டு தமுமுக-காரன் போன்று வேடமிடுகிறீர்கள். யாரென்று நன்றாகவே தெரிகிறது.


மேலே உள்ள கம்மண்ட்டை பதிந்தவருக்கு,

உங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டதாவதாக...


நான் யார் என்று எனது கட்டுரையில் கூறிப்பிட்டுள்ளோன். அதை நன்றாக படியுங்கள்.
//
எங்கே ஐயா குறிப்பிட்டுள்ளீர்கள்.. ???

Anonymous said...

//Alee Ashmaawee says in his book: "The Secret History of Ikhwaan ul-Muslimeen" (at-Taareekh as-Sirree li-Jamaa'atil-Ikhwaan il-Muslimeen): "And the time for the Jumu'ah prayer arrived so I said to him: 'Let us leave and pray' and it was a surprise that I came to know - and for the first time - that he did not used to pray Jumu'ah" (p.112)//

Mr. Jamal ??????? ?????? - Who is this Alee Ashmaawee ?

சத்தியவான் said...

சத்தியவான் அவர்களுக்கு உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உன்டாவதாக,

வெறும் இனையத்தளங்களை மட்டும் ஆதாரமாக காட்டுவது மிகவும் அபாயகரமானது. செய்யது குத்துபு அவர்கள் ஜும்மா தொழமாட்டரரா இல்லையா என்பதை அவரின் தனிப்பட்ட வரலாற்றின் மூலமாகவே அறியமுடியும். அவரின் வாழ்வின் பெரும்பகுதி சிறைச்சலைகளில்ததான் கழிந்தது.மேலும் அவர் எந்த ஒரு நிலையிலும் கிலாஃபத்திற்கு பிறகுதான் ஜும்மா என்று சொன்னதாக அறியமுடியவில்லை. யரரோ ஒருவர் தனது புத்தகதில் சொன்னார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பொதுவாக சலபிகள் சவுதி அரசின் அலுவலர்கள் போல செயல்பட கூடியவர்கள்.எனவே சற்று எச்சரிக்கையுடன் எதையும் அனுகவும்.அவதுரர் செய்வதிலிருந்தும் புறம் பேசுவதிலிருந்தும் அல்லாஹ் ந்ம்மை காப்பாற்றுவானாக

விமர்சனம் பதிந்தவர்Anonymous Anonymous | June 09, 2008

*********************************************************************************************************

மேலே உள்ள கம்மண்ட்டை பதிந்தவருக்கு,

உங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!

நான் வெறும் இணைய தளங்களை மட்டுமே ஆதாரமாக காட்டவில்லை. ஒரு ஆதார புர்வமான புத்தகத்தை கூட நான் ஆதாரமாக கூறிப்பிட்டுள்ளோன். நான் கூறிப்பிட்டுள்ள இணைய தளங்கள் கூட பல விஷயங்களை மேற்கோள் காண்பித்து, ஆதாரத்துடன் தான் எழுதியுள்ளன. நான் எதை ஆதாரமாக காட்டினாலும் என்ன, அதை பொய் என்று நிருபியுங்கள். செய்யது குதுப் ஜும்மா தொழத விஷயம் அவரின் தனிப்பட்ட விஷயம் தான், இருந்தாலும் அவரை தலையில் தூக்கி ஆடும் உங்களின் இயக்கத்தின் முகத்திரையை கிழிக்கதான் அதை நான் இங்கு சொல்லியுள்ளோன். செய்யது குதுப் ஜும்மா தொழவில்லை என்பதை நேரில் கேட்ட ஒருவர் தான் அந்த விஷயத்தை "The Secret History of the al-Ikhwaanul Muslimoon (at-Taareekh as-Sirree li-Jamaa'atil-Ikhwaan il-Muslimeen)" என்ற தனது புத்தகத்தில் சொல்லுகிறார். இதை பொய் என்று நிருபியுங்கள். பார்ப்போம். ஸலபிகள் சவுதி அரசின் அலுவலர்கள் போல செயல்படுகிறார்கள் என்று உளரியுள்ளீர்கள். அப்படிபட்டவர்களிடம் தயவு செய்து நீங்கள் நன்கொடை பிச்சை கேட்காதீர்கள். சவுதி ஒன்றும் காஃபிர் நாடு கிடையாது. தயவு செய்து உளராமல், கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்.

சத்தியவான் said...

இங்கு சத்தியவான் (???) வைக்க கூடிய ஆதாரங்கள் அனைத்தும் எப்படிப்பட்டலை என்றால் எதுவும் நேரடியாக தொடர்புடையதாக இல்லை அனைத்துமே ""அவர் சொன்தாக, அவர் சொன்னார், அதை இவர் கேட்டார் அதை எனக்கு அவர் சொன்னார்"" என்பதாகவே உள்ளன.

இன்னும் விரைவில் எதிர்பாருங்கள் ஆதாரங்களுடன் இரன்டாம் பாகம் எனவும் இந்த கட்டுரை முன்னுரை மட்டுமே எனவும் எழுதியிருந்தார் ஆனால் வாரங்க்ள பல ஆகிவிட்டன இது வரை இரன்டாம் கட்டுரை வரவில்லை (சரக்கிருந்தால்தானே வருவதற்கு??).

இவர் இங்கு மறுமொழியாக பதிந்து வரும் பல விசயங்கள் ஏற்கனவே பி.ஜெயினுல்லாபுதீன் அவர்களால் உணர்வில் எழுதப்பட்டவைதான்.

விமர்சனம் பதிந்தவர்Anonymous Anonymous | June 09, 2008
*************************************************************************************************************************************************

மேலே உள்ள கம்மண்ட்டை பதிந்தவருக்கு,

உங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!

நான் வைக்க கூடிய ஆதாரங்கள் அனைத்தும் நேரடியாக தொடர்புடையதாக இல்லை என்று கூறிப்பிட்டுள்ளீர்கள். நான் வைத்து இருக்கும் ஆதாரம் பலகீனமாக இருப்பதைப் போல் ஒரு தோற்றத்தை எற்படுத்த முயலுகிறீர்கள். அப்படி கருதும் நீங்கள், நான் வைத்த ஆதாரத்தை பொய் என்று நிருபியுங்கள், பார்ப்போம்.

எனது அடுத்த பாகம் விரைவில் வெளிவரும். இந்த ஆக்கம் சம்பந்தமாக பல கருத்துகள் பதியப்படுவதால், அதற்கு பதில் அளிப்பதில் அதிக நேரம் போகிறாது. சரக்கு இருந்தால் தானே வரும் என்று உளரியுள்ளீர்கள். மேலே போடப்பட்டுள்ள சரக்குகளுக்கு முதலில் பதில் சொல்லுங்கள்.

பி.ஜெயினுல்லாபுதீன் அவர்களால் உணர்வில் எழுதப்பட்டவற்றைத் தான் நான் பதிந்து வருகிறோன் என்று உளரியுள்ளீர்கள், பரவாயில்லை இங்கு கேட்கப்படும் விஷயங்களுக்கு பதில சொல்லுங்கள்.

சத்தியவான் said...

//ல்ல திட்டமிட்டு தமுமுக-காரன் போன்று வேடமிடுகிறீர்கள். யாரென்று நன்றாகவே தெரிகிறது.


மேலே உள்ள கம்மண்ட்டை பதிந்தவருக்கு,

உங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டதாவதாக...


நான் யார் என்று எனது கட்டுரையில் கூறிப்பிட்டுள்ளோன். அதை நன்றாக படியுங்கள்.
//
எங்கே ஐயா குறிப்பிட்டுள்ளீர்கள்.. ???

விமர்சனம் பதிந்தவர்Anonymous Anonymous | June 10, 2008


*************************************************************************************************************************************************
மேலே உள்ள கம்மண்ட்டை பதிந்தவருக்கு,

உங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!

நான் எனது ஆக்கத்தில் நான் யார் என்று கிழே உள்ளது போல் குறிப்பிட்டுள்ளோன்,

//இன்ஷா அல்லாஹ். கிழிக்க போவது யாருமல்ல, முன்னால் சகோதரர்களும் இவர்களின் கூற்றுப்படி இன்னால் முனாஃபிக்களுமான (இவர்களின் கருத்துப்படி இவர்களின் தவறை எதிர்த்தால் முனாஃபிக்) இந்த கொள்கையற்ற இயக்கத்திற்க்காக அல்லும் பகலும் உழைத்தவர்கள்.//

நன்றாக படித்து கேள்வி கேளுங்கள். நான் யார் என்பதில் ஆர்வம் கட்டும் நீங்கள் நான் மேலே எனது ஆக்கத்தில் கேட்கும் கேள்விகளுக்கு பதில சொல்லுங்கள்.

சத்தியவான் said...

//Alee Ashmaawee says in his book: "The Secret History of Ikhwaan ul-Muslimeen" (at-Taareekh as-Sirree li-Jamaa'atil-Ikhwaan il-Muslimeen): "And the time for the Jumu'ah prayer arrived so I said to him: 'Let us leave and pray' and it was a surprise that I came to know - and for the first time - that he did not used to pray Jumu'ah" (p.112)//

Mr. Jamal ??????? ?????? - Who is this Alee Ashmaawee ?

விமர்சனம் பதிந்தவர்Anonymous Anonymous | June 10, 2008

*************************************************************************************************************************************************
மேலே உள்ள கம்மண்ட்டை பதிந்தவருக்கு,

உங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!

அலி அஸ்மாவி "The Secret History of Ikhwaan ul-Muslimeen" (at-Taareekh as-Sirree li-Jamaa'atil-Ikhwaan il-Muslimeen) என்ற புத்தகத்தின் ஆசிரியர். இவர் தான் செய்யது குதுப்பை ஜும்மா தொழ அழைத்தாகவும் அதற்கு செய்யது குதுப் அவர்கள் மறுத்தாகவும் கூறிப்பிடுகிறார்.

Anonymous said...

// அலி அஸ்மாவி "The Secret History of Ikhwaan ul-Muslimeen" (at-Taareekh as-Sirree li-Jamaa'atil-Ikhwaan il-Muslimeen) என்ற புத்தகத்தின் ஆசிரியர். இவர் தான் செய்யது குதுப்பை ஜும்மா தொழ அழைத்தாகவும் அதற்கு செய்யது குதுப் அவர்கள் மறுத்தாகவும் கூறிப்பிடுகிறார். //

ரொம்ப தமாஸ் பண்ணாதப்பா...

யார் இந்த ஆள்ணு கேட்டா திரும்பவும் அதையே ரிப்பீட் பண்ணிறியேப்பா? இந்த ஆள் யார்? மார்க்க அறிஞரா இல்லை அழைப்புப்பணியில் தன்னை அர்ப்பணித்தவரா? அல்லது ஏதாவது இயக்கத்தைச் சேர்ந்தவரா என்று தான் கேள்வி. அதை விட்டுவிட்டு அவர் புத்தகத்தை எழுதினார் என்று சொன்னால் எப்படியப்பா?

நபிகள் நாயகம் அவர்களைப் பற்றி மலர்மன்னனும், நீலகண்டனும் கூட எழுதியிருக்கிறார்கள். அவைகள் எப்படிப்பட்டவை என்று நமக்குத் தெரியும். யாராவது ஒருவன் முகம்மது நபி(ஸல்) அவர்களைப் பற்றிய கருத்துக்கு இவர்களது ஆதாரத்தை முன்வைத்தால் எப்படியிருக்கும். அது போல செய்யித் குதுப் அவர்களைப் பற்றியும் இஹ்வான்களைப் பற்றியும் எழுதிய இவர் யார்?

இஸ்லாமிய விரோதியாகவோ அல்லது சல்லிக்கு அழைப்புப்பணி செய்யும் ஷெய்குமார்களாகவோ இருக்கப்போகிறார்கள். எனவே யாரென்று விளக்குவீர்களா???

Anonymous said...

இன்ஷா அல்லாஹ். கிழிக்க போவது யாருமல்ல, முன்னால் சகோதரர்களும் இவர்களின் கூற்றுப்படி இன்னால் முனாஃபிக்களுமான (இவர்களின் கருத்துப்படி இவர்களின் தவறை எதிர்த்தால் முனாஃபிக்) இந்த கொள்கையற்ற இயக்கத்திற்க்காக அல்லும் பகலும் உழைத்தவர்கள்.//
..................................இதில் எது உங்கள் பெயர்? உங்களுக்கு பெற்றோர் பெயர் வைக்கவில்லையா? இதே போல் யார் வேண்டுமானலும் நானும் MNP-yil இருந்தேன் என்று கூறினால் நாஙகல் நம்ப முடியுமா? நீங்கல் உண்மையில் சத்தியவானாக இருந்தால் எந்த பகுதியில் இருந்தீர்கள்? எந்த ஆண்டு?உங்கள் உண்மையான பெயரை வெளியிடுங்கள் பார்க்கலாம்.......

mohamed said...

இன்ஷா அல்லாஹ். கிழிக்க போவது யாருமல்ல, முன்னால் சகோதரர்களும் இவர்களின் கூற்றுப்படி இன்னால் முனாஃபிக்களுமான (இவர்களின் கருத்துப்படி இவர்களின் தவறை எதிர்த்தால் முனாஃபிக்) இந்த கொள்கையற்ற இயக்கத்திற்க்காக அல்லும் பகலும் உழைத்தவர்கள்.//
..................................
இதில் எது உங்கள் பெயர்? உங்களுக்கு பெற்றோர் பெயர் வைக்கவில்லையா? இதே போல் யார் வேண்டுமானலும் நானும் MNP-yil இருந்தேன் என்று கூறினால் நாஙகல் நம்ப முடியுமா? நீங்கல் உண்மையில் சத்தியவானாக இருந்தால்... எந்த ஆண்டு? எந்த பகுதியில் இருந்தீர்கள்? உங்கள் உண்மையான பெயரை வெளியிடுங்கள் பார்க்கலாம்.......

சத்தியவான் said...

// அலி அஸ்மாவி "The Secret History of Ikhwaan ul-Muslimeen" (at-Taareekh as-Sirree li-Jamaa'atil-Ikhwaan il-Muslimeen) என்ற புத்தகத்தின் ஆசிரியர். இவர் தான் செய்யது குதுப்பை ஜும்மா தொழ அழைத்தாகவும் அதற்கு செய்யது குதுப் அவர்கள் மறுத்தாகவும் கூறிப்பிடுகிறார். //

ரொம்ப தமாஸ் பண்ணாதப்பா...

யார் இந்த ஆள்ணு கேட்டா திரும்பவும் அதையே ரிப்பீட் பண்ணிறியேப்பா? இந்த ஆள் யார்? மார்க்க அறிஞரா இல்லை அழைப்புப்பணியில் தன்னை அர்ப்பணித்தவரா? அல்லது ஏதாவது இயக்கத்தைச் சேர்ந்தவரா என்று தான் கேள்வி. அதை விட்டுவிட்டு அவர் புத்தகத்தை எழுதினார் என்று சொன்னால் எப்படியப்பா?

நபிகள் நாயகம் அவர்களைப் பற்றி மலர்மன்னனும், நீலகண்டனும் கூட எழுதியிருக்கிறார்கள். அவைகள் எப்படிப்பட்டவை என்று நமக்குத் தெரியும். யாராவது ஒருவன் முகம்மது நபி(ஸல்) அவர்களைப் பற்றிய கருத்துக்கு இவர்களது ஆதாரத்தை முன்வைத்தால் எப்படியிருக்கும். அது போல செய்யித் குதுப் அவர்களைப் பற்றியும் இஹ்வான்களைப் பற்றியும் எழுதிய இவர் யார்?

இஸ்லாமிய விரோதியாகவோ அல்லது சல்லிக்கு அழைப்புப்பணி செய்யும் ஷெய்குமார்களாகவோ இருக்கப்போகிறார்கள். எனவே யாரென்று விளக்குவீர்களா???

விமர்சனம் பதிந்தவர்Anonymous Anonymous | June 11, 2008

**************************************************************************************************************************************************************
மேலே உள்ள கம்மண்ட்டை பதிந்தவருக்கு,

உங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!

அந்த புத்தகத்தை எழுதியவர் தான் செய்யது குதுப்பிடம் நேரடியாக கேட்டாதாக தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். இந்த புத்தகம் அரபியில் உள்ளது. இதை பிரபல இணைய தளாமாக salafipublications.com இவரின் இந்த செய்தியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது. இந்த செய்தி அவரின் புத்தகத்தில் 112 பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. செய்யது குதுப்பிற்கு மார்க்க ஞானமே கிடையாது என்பதை அல்பானி போன்ற அறிஞர்கள் கூறியுள்ளார்கள். இந்த புத்தகத்தை வாங்கி யுசுப் அல் கர்ளாவி போன்ற உங்களின் வழிகாட்டிகளை வைத்து உண்மையா அல்லது பொய்யா என்று நிருபியுங்கள்.

உங்களின் மீது ஒருவர் ஒரு குற்றச்சாட்டை சொன்னால் அவர் யார் என்று பார்ப்பதை விட, அவரின் செய்தி பொய்யா அல்லது உண்மையா என்று நிரூபித்துவிட்டால், நீங்கள் உண்மையாளர் என்று ஆகிவிடுவீர்கள். எனவே இந்த விஷயத்தை அவ்வாறு அணுகுங்கள்.

சத்தியவான் said...

இன்ஷா அல்லாஹ். கிழிக்க போவது யாருமல்ல, முன்னால் சகோதரர்களும் இவர்களின் கூற்றுப்படி இன்னால் முனாஃபிக்களுமான (இவர்களின் கருத்துப்படி இவர்களின் தவறை எதிர்த்தால் முனாஃபிக்) இந்த கொள்கையற்ற இயக்கத்திற்க்காக அல்லும் பகலும் உழைத்தவர்கள்.//
..................................இதில் எது உங்கள் பெயர்? உங்களுக்கு பெற்றோர் பெயர் வைக்கவில்லையா? இதே போல் யார் வேண்டுமானலும் நானும் MNP-yil இருந்தேன் என்று கூறினால் நாஙகல் நம்ப முடியுமா? நீங்கல் உண்மையில் சத்தியவானாக இருந்தால் எந்த பகுதியில் இருந்தீர்கள்? எந்த ஆண்டு?உங்கள் உண்மையான பெயரை வெளியிடுங்கள் பார்க்கலாம்.......

விமர்சனம் பதிந்தவர்Anonymous Anonymous | June 11, 2008

*****************************************************************************************************************************************************************************
மேலே உள்ள கம்மண்ட்டை பதிந்தவருக்கு,

உங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!

எனது பெயரையும் பகுதியையும் தெரிந்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள். கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் சார்.

Anonymous said...

// அந்த புத்தகத்தை எழுதியவர் தான் செய்யது குதுப்பிடம் நேரடியாக கேட்டாதாக தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். இந்த புத்தகம் அரபியில் உள்ளது. இதை பிரபல இணைய தளாமாக salafipublications.com இவரின் இந்த செய்தியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது. இந்த செய்தி அவரின் புத்தகத்தில் 112 பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. செய்யது குதுப்பிற்கு மார்க்க ஞானமே கிடையாது என்பதை அல்பானி போன்ற அறிஞர்கள் கூறியுள்ளார்கள். இந்த புத்தகத்தை வாங்கி யுசுப் அல் கர்ளாவி போன்ற உங்களின் வழிகாட்டிகளை வைத்து உண்மையா அல்லது பொய்யா என்று நிருபியுங்கள்.

உங்களின் மீது ஒருவர் ஒரு குற்றச்சாட்டை சொன்னால் அவர் யார் என்று பார்ப்பதை விட, அவரின் செய்தி பொய்யா அல்லது உண்மையா என்று நிரூபித்துவிட்டால், நீங்கள் உண்மையாளர் என்று ஆகிவிடுவீர்கள். எனவே இந்த விஷயத்தை அவ்வாறு அணுகுங்கள். //

ஒரு தகவல் உண்மையா பொய்யா என்று அறிய 2 வழி உள்ளது. ஒன்று தகவலை நாம் கண்ணால் கண்டிருக்க வேண்டும். அப்படி நாம் காணவில்லை என்றால் தகவல் தருபவர் உண்மையாளராக இருக்கவேண்டும்.

செய்யித் குதுப் ஜூம்ஆ தொழ மறுத்தார் என்ற தகவலை இவரைத் தவிர வேறெவரும் எங்கும் சொல்லவில்லை. எங்கும் நம்மால் காணவும் முடியவில்லை (பல தகவல் மையங்களை தொடர்பு கொண்டபிறகு தான் சொல்கிறேன்). இது ஒரு முக்கியமான விஷயமாகும். ஒரு பிரபல அறிஞர் (ஒரு வேளை செய்யது குதுப் உங்களுக்கு வேண்டுமானால் பிரபலமும் இல்லாமல் அறிஞரும் இல்லாமல் இருக்கலாம்.. ஆனால் நான் அவரை ஒரு பிரபல அறிஞராகவே கருதுகிறேன்) ஜூம்ஆ தொழாமல் இருந்திருந்தால் கண்டிப்பாக அது ஒரு பெரிய விஷயமாக ஆகியிருக்கும். எனவே தான் இந்த ஆசிரியரின் நம்பகத்தன்மையை சந்தேகிக்க வேண்டியுள்ளது.

அடுத்து, அந்த செய்தி உண்மையா இல்லையா என்பதை நீங்கள்தான் உறுதி செய்யவேண்டும். காரணம், குற்றச்சாட்டு சுமத்தும் உங்களுக்கே அதைப்பற்றிய அறிவு இல்லை. அந்த புத்தகம் மட்டுமே உங்களுக்கும் ஆதாரம்.

சல்லி கிடைக்கிறது என்பதற்காக வேலை நேரம் நியமித்து (அதற்கு கூடுதலாக பணிசெய்யமாட்டார்கள்) அழைப்புப் பணி செய்யும் ஷெய்குமார்கள் சொன்னார்கள் என்பதற்காக மட்டும் அதை நம்பிவிட முடியாது.

ஒரு செய்தியை காதால் கேட்பதால் அல்லது படிப்பதால் மட்டும் அதை பரப்புபவனின் நிலையை அந்த ஷெய்குமார்களிடம் சென்று கேளுங்கள் - இவர்களைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) என்ன சொல்லியுள்ளார்கள் என்பதை. நான் சொன்னால் ...............

இவரைத்தவிர வேறெவராவது இந்த தகவலை சொல்லியிருக்கிறார்களா அல்லது இவரது வரலாறுதான் என்ன?

Unknown said...

அன்புள்ள சத்தியவான்?! அவர்களுக்கு, உன்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக,
நான் எந்த விதத்திலும், எந்த இயக்கத்தோடும் தொடர்பில்லாத சமுதாய அக்கரையுள்ள ஒரு வாசகன்.
உங்களுடைய ஆக்கத்தில் எனக்கு சில ஐய்யஙகள் உள்ளன. அவற்றிற்கு சத்தியத்தை கொண்டு பதிலள்லிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
1.நீங்கள் வேடதாரிகளை இனம் காண்போம் என்ற இந்த ஆக்கத்தில் தங்களது பெயரை சத்தியவான் என கூறியுள்ளீர்கள்.தங்களது உண்மையான பெயரை கூறாதது ஏனோ? இது இரட்டை வேடமில்லையா?

2.தவ்ஹீதை முழு தவ்ஹீத்,முக்கா தவ்ஹீத்,அரை தவ்ஹீத், கால் தவ்ஹீத் என பிரிது கூறியுள்ளீர்கள். இப்படி பிரிப்பதற்கு குர் ஆன்,ஹதிஸில் ஆதாரமுண்டா? (அவர்கள் தான் அப்படி பிரித்து வைத்துள்ளார்கள் எனக் கூறி மழுப்பாமல் ஆதாரங்களை இங்கே எழுதுங்கள்)

3.//இஸ்லாமிய ஆட்சி செய்ய வேண்டிய எதையாவது செய்தார்களா என்றால், இல்லை என்பது தான் பதில்// என்று கூறும் நீங்கள் இஸ்லாமிய ஆட்சியில் என்ன செய்ய வேன்டும் என்பதை ஏன் கூறவில்லை?

4.கொள்கையற்ற இயக்கம் என்று கூறியுள்ளீர்கள்.அண்த கொள்கையற்ற இயக்கத்தில் நீங்கள் இணைந்தது ஏன்? (தெரியாமல் சேர்ந்துவிட்டேன் என்று கூறி மழுப்ப வேண்டாம்- இது பழைய டயலாக்)

5.அந்த இயக்கத்தின் முன்னாள் தலைவரின் சம்பளத்தை பற்றி கூறியுள்ளீர்கள். இன்று தமிழகத்தில் எந்த இயக்கதின் தலைவர்கள் சம்பளம் வாங்காமல் இயக்கத்தை வழி நடத்துகிறார்கள்?

6.அந்த தாயிகளுக்கு 10 முதல் 15 திருக்குர்ஆன் வசனங்கள் மட்டும் தான் தெரியும் என்பது வேறு விஷயம்) என்று கூறியுள்ளீர்கள்.அவர்கள் அன்றாடம் தொழுகையில் ஓதும் வசனங்களே 25க்கும் மேல் இருக்கும். அப்படியானால் நீங்கள் கூறுவது பொய்யல்லவா?

7.அதுபோல, இந்த கொள்கையற்ற இயக்கத்தின் கொள்கையற்ற தலைவர் திருவாளர் குலாம் முஹம்மது தனது மகளின் திருமணத்தில் இந்த கொள்கையற்ற இயக்கத்தின் அனைத்து இயக்க பொருப்பாளர்களையும் அழைத்து திருமணத்தை ஆடம்பரமாக நடத்தினார் என்று கூறியுள்ளீர்கள். அது எப்பொழுது? எங்கே நடந்தது?என்பதையும், யார்? யார் கலந்துக் கொண்டார்கள்? என்பதையும் ஏன் வெளியிடவில்லை?

8.தனது இயக்க தாயிகளுக்கு திருவாளர் குலாம் நடத்திய திருமணத்திற்கு இஸ்லாமிய சாயம் புசுவது எப்படி? என்று பயிற்சி அளித்தது என்று கூறியுள்ளீர்கள். அந்த பயிற்சி முகாம் எப்பொழுது? எங்கே நடந்தது?என்பதையும், யார்? யார் கலந்துக் கொண்டார்கள்? என்பதையும் ஏன் கூறவில்லை?

9.ஜனநாயகம் ஷிர்க் என்று அவ்வியக்கத்தினர் கூறுவதாக எழுதியுள்ளீர்கள்.ஜனநாயகம் ஷிர்க்கா?இல்லையா?என்பதை பற்றி நீங்கள் ஏன் விளக்கவில்லை? இதில் உங்கள் நிலை என்ன?

10.அல்லாஹ் தான் ஆட்சியாலன் அவனிடமே நம் தேவைகளை கேட்க வேண்டும் என்பது இறைவனின் கட்டளை.அதை குறை கூறுவதற்கு நீங்கள் யார்?

11.இவர்கள் நட்டை ஆள்பவர்களிடம் பிச்சை கேட்பதாக எழுதியுள்ளீர்கள்.நமது உரிமைகளை பெறுவதற்கான வழிமுறை என்னவென்று கூறவில்லையே ஏன்? நாம் அனைவரும் அரஸிடம் பிச்சையா கேட்கிறோம்?

12இக்வாநிஸத்தை ப்ற்றி குறை கூறும் நீங்கள்.அவர்கள் போராடக் கூடிய ஃபலஸ்தீனையும்,லெபனானையும் ஆதரிக்கிறீர்கல?இல்லையா?

13.இமம் கொமைனி பற்றியும்,செய்யது குதுப் பற்றியும் எழுதியுள்ளீர்கள். அவர்கள் பேசிய அல்லது கைப்பட எழுதிய நேரடி ஆதாரங்கள் இல்லமல் குறை கூறுவது சரியா? இவ்வாறு குறைகூறுபவர் பொய்யரில்லையா?

14.இவர்கள் இயக்கத்தில் இருப்பவர்கலில் பெரும்பாலோர் செய்யது குதுப் என்று கூட எழுதெ தெரியாத பள்ளி மாணவர்கள் என்று எழுதியுள்ளீர்கள். அப்படியானால் இவ்வியக்கதில் இணையும்போது நீங்கள் பள்ளி மாணவரா? அல்ல்து தலையாட்டி பொம்மையா?

15.அந்த இயக்கத்திலுள்ள மாணவர்கள் செய்யது குதுப் என்பதை சரியாக எழுதிவிட்டால்..தாங்கள் சொல்வது அனைதும் பொய் என்பதையும்,தாங்கள் பொய்யர் என்பதையும் பகிரங்கமாக ஒப்புக்கொண்டு அறிவிக்க தயாரா?

16.இன்று உங்கள் இயக்கத்தின் பலத்தை காட்ட வேண்டும் என்று உயரிய (?!) நோக்கத்தில் அணிவகுப்பு நடத்துகிறீர்கள் என்று எழுதியுள்ளீர்கள்.இயக்கத்தின் பலத்தை காட்டவே அணிவகுப்பு என்று யார்?எங்கே?எப்பொழுது கூறிய்து? அவர் அந்த இயக்கத்தில் என்ன பொறுப்பில் உள்ளார்.(ஆதாரத்துடன் கூறவும்)

17இசை ஹராம் என்று கூறியுள்ளீர்கள்.எப்படிபட்ட இஸை ஹராம் என்று கூறவில்லையெ ஏன்?

18.முரசு கொட்டி அழைப்பது இகையாகுமா?அப்படியென்ரால் மக்களின் கவனத்தை திருப்ப என்னதான் வழி?

19.இவர்களை குழப்பத்தின் மறு பெயர் என்று அவர்களை எழுதியுள்ளீர்கள். குழம்பியது அவர்களா? அல்லது நீங்களா? குழப்பவாதிகள் அவர்கள் என்றால் குழப்பவாதிகள் இருக்கும் இயக்கத்தில் நீங்கள் ஏன் இணைந்தீர்கள்? ஏன் இரவு பகலாக உழைத்தீர்கள்?

20.முன்னால் சகோதரர்களும் இவர்களின் கூற்றுப்படி இன்னால் முனாஃபிக்களுமான (இவர்களின் கருத்துப்படி இவர்களின் தவறை எதிர்த்தால் முனாஃபிக்) என்று எழுதியுள்ளீர்கள். உங்கலை முனாஃபிக் என்று கூறிய நபர் யார்?எப்பொழுது?எங்கு கூறினார்?சாட்சிகள் உண்டா? மழுப்பாமல் னேரடியாக பதிலளிக்கவும்.

21.இந்த கொள்கையற்ற இயக்கத்திற்க்காக அல்லும் பகலும் உழைத்த நீங்கள் ஏன் அவ்வியக்கதைவிட்டு வெளியெற்றப் ப்ட்டீர்கள் என்பதை ஏன் நீஙள் கூறவில்லை? (உண்மையான காரனத்தை கூறவும்)

22.தற்போது இவர்களிடம் என்ன குறை சொன்னாலும் குலாம் தான் அப்படி செய்தார், நாங்கள் அப்படி செய்வில்லை என்கிறார்கள். இவ்வாறு கூறியது யார்? எங்கே?எப்பொழுது கூறிய்து? அவர் அந்த இயக்கத்தில் என்ன பொறுப்பில் உள்ளார்.(ஆதாரத்துடன் கூறவும்)

23. தாங்கள் இந்த ஆக்கத்தை மிகவும் காலம் தாழ்த்தி எழுதுவதற்கான காரணம் என்ன? யாருடைய தூன்டுதலினால் எழுதியுள்ளீர்கள்

24.கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக
செயல்படும் அந்த இயக்கத்தை பற்றியும்,அதன் கொள்கைகள் பற்றியும் இப்போதுதான் தங்களுக்கு தெரிந்ததா?

இறுதியாக....
உண்மையில் நீங்கள் சத்தியவானாக இருந்தால்,இந்த கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்கவும், ஆதாரங்களை வெளியிடவும், ஐயங்கள் தொடரும்.........

என்றும் அன்புடன்,
SHAIFULLAH,ADIRAI

Anonymous said...

அன்புள்ள சத்தியவான்?! அவர்களுக்கு, உன்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக,
நான் எந்த விதத்திலும், எந்த இயக்கத்தோடும் தொடர்பில்லாத சமுதாய அக்கரையுள்ள ஒரு வாசகன்.
உங்களுடைய ஆக்கத்தில் எனக்கு சில ஐய்யஙகள் உள்ளன. அவற்றிற்கு சத்தியத்தை கொண்டு பதிலள்லிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
1.நீங்கள் வேடதாரிகளை இனம் காண்போம் என்ற இந்த ஆக்கத்தில் தங்களது பெயரை சத்தியவான் என கூறியுள்ளீர்கள்.தங்களது உண்மையான பெயரை கூறாதது ஏனோ? இது இரட்டை வேடமில்லையா?

2.தவ்ஹீதை முழு தவ்ஹீத்,முக்கா தவ்ஹீத்,அரை தவ்ஹீத், கால் தவ்ஹீத் என பிரிது கூறியுள்ளீர்கள். இப்படி பிரிப்பதற்கு குர் ஆன்,ஹதிஸில் ஆதாரமுண்டா? (அவர்கள் தான் அப்படி பிரித்து வைத்துள்ளார்கள் எனக் கூறி மழுப்பாமல் ஆதாரங்களை இங்கே எழுதுங்கள்)

3.//இஸ்லாமிய ஆட்சி செய்ய வேண்டிய எதையாவது செய்தார்களா என்றால், இல்லை என்பது தான் பதில்// என்று கூறும் நீங்கள் இஸ்லாமிய ஆட்சியில் என்ன செய்ய வேன்டும் என்பதை ஏன் கூறவில்லை?

4.கொள்கையற்ற இயக்கம் என்று கூறியுள்ளீர்கள்.அண்த கொள்கையற்ற இயக்கத்தில் நீங்கள் இணைந்தது ஏன்? (தெரியாமல் சேர்ந்துவிட்டேன் என்று கூறி மழுப்ப வேண்டாம்- இது பழைய டயலாக்)

5.அந்த இயக்கத்தின் முன்னாள் தலைவரின் சம்பளத்தை பற்றி கூறியுள்ளீர்கள். இன்று தமிழகத்தில் எந்த இயக்கதின் தலைவர்கள் சம்பளம் வாங்காமல் இயக்கத்தை வழி நடத்துகிறார்கள்?

6.அந்த தாயிகளுக்கு 10 முதல் 15 திருக்குர்ஆன் வசனங்கள் மட்டும் தான் தெரியும் என்பது வேறு விஷயம்) என்று கூறியுள்ளீர்கள்.அவர்கள் அன்றாடம் தொழுகையில் ஓதும் வசனங்களே 25க்கும் மேல் இருக்கும். அப்படியானால் நீங்கள் கூறுவது பொய்யல்லவா?

7.அதுபோல, இந்த கொள்கையற்ற இயக்கத்தின் கொள்கையற்ற தலைவர் திருவாளர் குலாம் முஹம்மது தனது மகளின் திருமணத்தில் இந்த கொள்கையற்ற இயக்கத்தின் அனைத்து இயக்க பொருப்பாளர்களையும் அழைத்து திருமணத்தை ஆடம்பரமாக நடத்தினார் என்று கூறியுள்ளீர்கள். அது எப்பொழுது? எங்கே நடந்தது?என்பதையும், யார்? யார் கலந்துக் கொண்டார்கள்? என்பதையும் ஏன் வெளியிடவில்லை?

8.தனது இயக்க தாயிகளுக்கு திருவாளர் குலாம் நடத்திய திருமணத்திற்கு இஸ்லாமிய சாயம் புசுவது எப்படி? என்று பயிற்சி அளித்தது என்று கூறியுள்ளீர்கள். அந்த பயிற்சி முகாம் எப்பொழுது? எங்கே நடந்தது?என்பதையும், யார்? யார் கலந்துக் கொண்டார்கள்? என்பதையும் ஏன் கூறவில்லை?

9.ஜனநாயகம் ஷிர்க் என்று அவ்வியக்கத்தினர் கூறுவதாக எழுதியுள்ளீர்கள்.ஜனநாயகம் ஷிர்க்கா?இல்லையா?என்பதை பற்றி நீங்கள் ஏன் விளக்கவில்லை? இதில் உங்கள் நிலை என்ன?

10.அல்லாஹ் தான் ஆட்சியாலன் அவனிடமே நம் தேவைகளை கேட்க வேண்டும் என்பது இறைவனின் கட்டளை.அதை குறை கூறுவதற்கு நீங்கள் யார்?

11.இவர்கள் நட்டை ஆள்பவர்களிடம் பிச்சை கேட்பதாக எழுதியுள்ளீர்கள்.நமது உரிமைகளை பெறுவதற்கான வழிமுறை என்னவென்று கூறவில்லையே ஏன்? நாம் அனைவரும் அரஸிடம் பிச்சையா கேட்கிறோம்?

12இக்வாநிஸத்தை ப்ற்றி குறை கூறும் நீங்கள்.அவர்கள் போராடக் கூடிய ஃபலஸ்தீனையும்,லெபனானையும் ஆதரிக்கிறீர்கல?இல்லையா?

13.இமம் கொமைனி பற்றியும்,செய்யது குதுப் பற்றியும் எழுதியுள்ளீர்கள். அவர்கள் பேசிய அல்லது கைப்பட எழுதிய நேரடி ஆதாரங்கள் இல்லமல் குறை கூறுவது சரியா? இவ்வாறு குறைகூறுபவர் பொய்யரில்லையா?

14.இவர்கள் இயக்கத்தில் இருப்பவர்கலில் பெரும்பாலோர் செய்யது குதுப் என்று கூட எழுதெ தெரியாத பள்ளி மாணவர்கள் என்று எழுதியுள்ளீர்கள். அப்படியானால் இவ்வியக்கதில் இணையும்போது நீங்கள் பள்ளி மாணவரா? அல்ல்து தலையாட்டி பொம்மையா?

15.அந்த இயக்கத்திலுள்ள மாணவர்கள் செய்யது குதுப் என்பதை சரியாக எழுதிவிட்டால்..தாங்கள் சொல்வது அனைதும் பொய் என்பதையும்,தாங்கள் பொய்யர் என்பதையும் பகிரங்கமாக ஒப்புக்கொண்டு அறிவிக்க தயாரா?

16.இன்று உங்கள் இயக்கத்தின் பலத்தை காட்ட வேண்டும் என்று உயரிய (?!) நோக்கத்தில் அணிவகுப்பு நடத்துகிறீர்கள் என்று எழுதியுள்ளீர்கள்.இயக்கத்தின் பலத்தை காட்டவே அணிவகுப்பு என்று யார்?எங்கே?எப்பொழுது கூறிய்து? அவர் அந்த இயக்கத்தில் என்ன பொறுப்பில் உள்ளார்.(ஆதாரத்துடன் கூறவும்)

17இசை ஹராம் என்று கூறியுள்ளீர்கள்.எப்படிபட்ட இஸை ஹராம் என்று கூறவில்லையெ ஏன்?

18.முரசு கொட்டி அழைப்பது இகையாகுமா?அப்படியென்ரால் மக்களின் கவனத்தை திருப்ப என்னதான் வழி?

19.இவர்களை குழப்பத்தின் மறு பெயர் என்று அவர்களை எழுதியுள்ளீர்கள். குழம்பியது அவர்களா? அல்லது நீங்களா? குழப்பவாதிகள் அவர்கள் என்றால் குழப்பவாதிகள் இருக்கும் இயக்கத்தில் நீங்கள் ஏன் இணைந்தீர்கள்? ஏன் இரவு பகலாக உழைத்தீர்கள்?

20.முன்னால் சகோதரர்களும் இவர்களின் கூற்றுப்படி இன்னால் முனாஃபிக்களுமான (இவர்களின் கருத்துப்படி இவர்களின் தவறை எதிர்த்தால் முனாஃபிக்) என்று எழுதியுள்ளீர்கள். உங்கலை முனாஃபிக் என்று கூறிய நபர் யார்?எப்பொழுது?எங்கு கூறினார்?சாட்சிகள் உண்டா? மழுப்பாமல் னேரடியாக பதிலளிக்கவும்.

21.இந்த கொள்கையற்ற இயக்கத்திற்க்காக அல்லும் பகலும் உழைத்த நீங்கள் ஏன் அவ்வியக்கதைவிட்டு வெளியெற்றப் ப்ட்டீர்கள் என்பதை ஏன் நீஙள் கூறவில்லை? (உண்மையான காரனத்தை கூறவும்)

22.தற்போது இவர்களிடம் என்ன குறை சொன்னாலும் குலாம் தான் அப்படி செய்தார், நாங்கள் அப்படி செய்வில்லை என்கிறார்கள். இவ்வாறு கூறியது யார்? எங்கே?எப்பொழுது கூறிய்து? அவர் அந்த இயக்கத்தில் என்ன பொறுப்பில் உள்ளார்.(ஆதாரத்துடன் கூறவும்)

23. தாங்கள் இந்த ஆக்கத்தை மிகவும் காலம் தாழ்த்தி எழுதுவதற்கான காரணம் என்ன? யாருடைய தூன்டுதலினால் எழுதியுள்ளீர்கள்

24.கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக
செயல்படும் அந்த இயக்கத்தை பற்றியும்,அதன் கொள்கைகள் பற்றியும் இப்போதுதான் தங்களுக்கு தெரிந்ததா?

இறுதியாக....
உண்மையில் நீங்கள் சத்தியவானாக இருந்தால்,இந்த கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்கவும், ஆதாரங்களை வெளியிடவும், ஐயங்கள் தொடரும்.........

என்றும் அன்புடன்,
SHAIFULLAH,ADIRAI

Unknown said...

என்ன சத்தியவான்? பதிலையே காணோம்.............?

சத்தியவான் said...

அன்புள்ள சைஃபுல்லா அவர்களுக்கு,

உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக

நான் எழுதிய கருத்திற்கு சம்பந்தமில்லாமல் பல் கேள்விகளை எழுப்பியுள்ளீர்கள். அதற்க்கான பதில் கிழே,

நான் எந்த இயக்கத்தோடும் தொடர்பில்லாதவன் என்று கூறியுள்ள நீங்கள், இந்த கொள்கையற்ற இயக்கத்தின் மீது காட்டும் அக்கரையை வைத்து நீங்கள் யார் என்று நாங்கள் புரிந்து கொண்டோம்.

1.நீங்கள் வேடதாரிகளை இனம் காண்போம் என்ற இந்த ஆக்கத்தில் தங்களது பெயரை சத்தியவான் என கூறியுள்ளீர்கள்.தங்களது உண்மையான பெயரை கூறாதது ஏனோ? இது இரட்டை வேடமில்லையா?

நாங்கள் ஒன்றும் வேடமிடவில்லை. வோடதாரிகளை இனம் காட்டியுள்ளோம். நாங்கள் எங்கள் பெயரை வெளியிட்டால், இந்த கொள்கையற்ற இயக்கம் எங்களை இரும்பு பைப்பால் தாக்கும். இவ்வாறு கேள்வி கேட்ட பலரை தாக்கியும் உள்ளது.

2.தவ்ஹீதை முழு தவ்ஹீத்,முக்கா தவ்ஹீத்,அரை தவ்ஹீத், கால் தவ்ஹீத் என பிரிது கூறியுள்ளீர்கள். இப்படி பிரிப்பதற்கு குர் ஆன்,ஹதிஸில் ஆதாரமுண்டா? (அவர்கள் தான் அப்படி பிரித்து வைத்துள்ளார்கள் எனக் கூறி மழுப்பாமல் ஆதாரங்களை இங்கே எழுதுங்கள்)

இவ்வாறு நாங்கள் ஒன்றும் பிரிக்கவில்லை, அவர்களும் பிரிக்கவில்லை. இவ்வாறு இந்த கொள்கையற்ற இயக்கம் வோடமிடுகிறது என்று தான் சொல்லி உள்ளோம். பிரிவு என்ற போச்சுகோ இங்கு இடமில்லை. இவர்களின் வோடத்தை அவர்கள் வோடமிட்டுள்ளவாறே விளக்கியுள்ளோம். தயவு செய்து எனது ஆக்கத்தை நன்றாக மீண்டும் படியுங்கள்.

3.//இஸ்லாமிய ஆட்சி செய்ய வேண்டிய எதையாவது செய்தார்களா என்றால், இல்லை என்பது தான் பதில்// என்று கூறும் நீங்கள் இஸ்லாமிய ஆட்சியில் என்ன செய்ய வேன்டும் என்பதை ஏன் கூறவில்லை?

"நாங்கள் இஸ்லாமிய ஆட்சி அமைக்க போகிறோம்" என்று மக்களை அழைக்கும் போலிகள் தான், இஸ்லாமிய ஆட்சி என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்ல வேண்டும். இஸ்லாமிய ஆட்சி பற்றி தம்பட்டம் அடிக்கும், இந்த கும்பல், "எங்களுக்கு இஸ்லாமிய ஆட்சி என்ன செய்ய வேண்டும் என்று தெரியாது" என்று ஒத்துக் கொண்டால், பிறகு நாம் இஸ்லாமிய ஆட்சி என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுவோம்.

4.கொள்கையற்ற இயக்கம் என்று கூறியுள்ளீர்கள்.அண்த கொள்கையற்ற இயக்கத்தில் நீங்கள் இணைந்தது ஏன்? (தெரியாமல் சேர்ந்துவிட்டேன் என்று கூறி மழுப்ப வேண்டாம்- இது பழைய டயலாக்)

நாங்கள் ஏமாற்றப்பட்டு இந்த கொள்கையற்ற இயக்கத்தில் சேர்ந்தோம். இவர்கள் ஏதோ நல்லது செய்கிறார்கள் என்று நம்பி ஏமாந்து போனனோம். தவறை உணர்ந்து அதை திருத்த முயற்சி செய்து விட்டு, இவர்கள் திருந்த மாட்டார்கள் என்று உணர்ந்து வெளியேறிவிட்டோம். இது மார்க்க அடிப்படையில் சரியான முடிவு. தவறு செய்பவர்களை என்னால் தடவி கொடுக்க முடியாது, உங்களை போன்று.

5.அந்த இயக்கத்தின் முன்னாள் தலைவரின் சம்பளத்தை பற்றி கூறியுள்ளீர்கள். இன்று தமிழகத்தில் எந்த இயக்கதின் தலைவர்கள் சம்பளம் வாங்காமல் இயக்கத்தை வழி நடத்துகிறார்கள்?

எல்லா இயக்கத்தில் உள்ள தலைவர்களும் சம்பளம் வாங்கவி்ல்லை. ஒரு சிலர் தனது தேவையை விட குறைவாக சம்பளம் வாங்கிறார்கள். யாரும் தஃவா செய்கிறோம் என்று வசுலித்து 22 ஆயிரம் ரூபாயை தனது தலைவருக்கு சம்பளமாக கொடுக்கவில்லை.

6.அந்த தாயிகளுக்கு 10 முதல் 15 திருக்குர்ஆன் வசனங்கள் மட்டும் தான் தெரியும் என்பது வேறு விஷயம்) என்று கூறியுள்ளீர்கள்.அவர்கள் அன்றாடம் தொழுகையில் ஓதும் வசனங்களே 25க்கும் மேல் இருக்கும். அப்படியானால் நீங்கள் கூறுவது பொய்யல்லவா?

தொழுகையில் ஒத கூடிய விஷயங்கள் எல்லாருக்கும் தெரியும், சகோதரா. தாயி என்று சொல்லும் இந்த இயக்கத்தின் தாயிகளுக்கு தொழுகை உள்ளதை தவிர 10 முதல் 15 வசனங்கள் தான் தெரியும். அதை தான் நான் இங்கே குறிப்பிட்டுள்ளோன். நீங்கள் தவறாக விளங்கியுள்ளீர்கள். நான் சொல்ல வந்த கருத்து இந்த தாயிகளுக்கு அதிகமாக மார்க்க ஞானம் கி்டையாது என்று.

7.அதுபோல, இந்த கொள்கையற்ற இயக்கத்தின் கொள்கையற்ற தலைவர் திருவாளர் குலாம் முஹம்மது தனது மகளின் திருமணத்தில் இந்த கொள்கையற்ற இயக்கத்தின் அனைத்து இயக்க பொருப்பாளர்களையும் அழைத்து திருமணத்தை ஆடம்பரமாக நடத்தினார் என்று கூறியுள்ளீர்கள். அது எப்பொழுது? எங்கே நடந்தது?என்பதையும், யார்? யார் கலந்துக் கொண்டார்கள்? என்பதையும் ஏன் வெளியிடவில்லை?

எல்லாரும் அறிந்த விஷயத்திற்கு ஆதாரம் வெளியிட வேண்டியது இல்லை. இதைப்பற்றி அதிக தகவலுக்கு MNP உள்ளவர்களிடம் கேளுங்கள், நன்றாக சொல்லுவார்கள்.

8.தனது இயக்க தாயிகளுக்கு திருவாளர் குலாம் நடத்திய திருமணத்திற்கு இஸ்லாமிய சாயம் புசுவது எப்படி? என்று பயிற்சி அளித்தது என்று கூறியுள்ளீர்கள். அந்த பயிற்சி முகாம் எப்பொழுது? எங்கே நடந்தது?என்பதையும், யார்? யார் கலந்துக் கொண்டார்கள்? என்பதையும் ஏன் கூறவில்லை?

இந்த பயிற்சி பல இடங்களில் நடத்தப்பட்டது. இயக்கத்தில் உள்ளவர்களுக்கு நன்றாக தெரியும். உங்களுக்கு அது தெரியாது அல்லது தெரிந்து கொண்டே நடிக்கிறீர்கள்.

9.ஜனநாயகம் ஷிர்க் என்று அவ்வியக்கத்தினர் கூறுவதாக எழுதியுள்ளீர்கள்.ஜனநாயகம் ஷிர்க்கா?இல்லையா?என்பதை பற்றி நீங்கள் ஏன் விளக்கவில்லை? இதில் உங்கள் நிலை என்ன?

ஜனநாயகம் ஷிர்க் என்று இந்த கூட்டம் தம்பட்டம் அடித்து திரிந்தது. இப்போது ஜனநாயகத்தை முழுமையாக பின்பற்ற ஆரம்பித்துள்ளது. ஜனநாயகம் ஷிர்க் என்று சொல்லி விட்டு அந்தர் பெல்டி அடிப்பவர்களிடம் தான், அது ஷிர்க்கா இல்லையா என்று நீங்கள் கேட்ட வேண்டும். நமது நிலை என்னா வேன்றால், ஜனநாயகம் எல்லாவற்றிருக்கும் தீர்வு என்று சொல்லவில்லை. ஜனநாயகத்தை யாரிருடமும் பின்பற்றவும் சொல்லவில்லை.

10.அல்லாஹ் தான் ஆட்சியாலன் அவனிடமே நம் தேவைகளை கேட்க வேண்டும் என்பது இறைவனின் கட்டளை.அதை குறை கூறுவதற்கு நீங்கள் யார்?

நாங்கள் ஒன்றும் அதை குறை கூறவில்லை அன்பரே. "அல்லாஹ் தான் ஆட்சியாலன் அவனிடமே நம் தேவைகளை கேட்க வேண்டும்" என்று கூறி, அரசிடம் நாம் எந்த தேவைகளையும் கேட்க கூடாது என்ற இந்த கும்பல், பின்னர் அடித்த அந்தர் பெல்டியை தான் நாம் குறை கூறியுள்ளோம்.

11.இவர்கள் நட்டை ஆள்பவர்களிடம் பிச்சை கேட்பதாக எழுதியுள்ளீர்கள்.நமது உரிமைகளை பெறுவதற்கான வழிமுறை என்னவென்று கூறவில்லையே ஏன்? நாம் அனைவரும் அரஸிடம் பிச்சையா கேட்கிறோம்?

நாம் அரசிடம் நம்முடைய தேவைகளை போராடி கேட்பதை தவறு என்று கூறவில்லை. ஆனால், இவர்கள் அதை தவறு என்று அன்று சொன்னார்கள். அவ்வாறு செய்பவர்களை கிண்டல் அடித்தார்கள். அது ஷிர்க் என்றும் தம்பட்டம் அடித்தார்கள். இன்று இவர்களே அவ்வாறு செய்கிறார்கள்.

12. இக்வாநிஸத்தை ப்ற்றி குறை கூறும் நீங்கள்.அவர்கள் போராடக் கூடிய ஃபலஸ்தீனையும்,லெபனானையும் ஆதரிக்கிறீர்கல?இல்லையா?

ஒருவரின் தவறை கூட்டிக்காட்டும் போது அவர்களின் ஒரு நல்ல விஷயத்தை காட்டி, அவர்களின் தவறை நியாயபடுத்த இயலாது. ஃபலஸ்தினிலும், லெபனானிலும் போராடுவது இஷ்வான்கள் தானா என்று முதலில் நிருபியுங்கள். இவர்களுக்கு இஷ்வான்களுக்கும் சம்பந்தம் இல்லை.

13.இமம் கொமைனி பற்றியும்,செய்யது குதுப் பற்றியும் எழுதியுள்ளீர்கள். அவர்கள் பேசிய அல்லது கைப்பட எழுதிய நேரடி ஆதாரங்கள் இல்லமல் குறை கூறுவது சரியா? இவ்வாறு குறைகூறுபவர் பொய்யரில்லையா?

கொமைனியை பற்றி நாங்கள் அவர் பேசிய, எழுதிய ஆதாரத்தை கொடுத்துள்ளோம். செய்யது குதுப் "நான் ஜும்மா தொழ மாட்டோன்" என்று நேரடியாக சொல்லியிருந்தால், அவரை முஸ்லிம்கள் பட்டியலில் யாரும் வைத்து இருக்க மாட்டார்கள். செய்யது குதுப்பை இஷ்வான்கள் கூட நீங்கள் மதிப்பது போல் மதிப்பதில்லை. காரணம், அவர்களுக்கு நன்றாக தெரியும், செய்யது குதுப்பை பற்றி.

14.இவர்கள் இயக்கத்தில் இருப்பவர்கலில் பெரும்பாலோர் செய்யது குதுப் என்று கூட எழுதெ தெரியாத பள்ளி மாணவர்கள் என்று எழுதியுள்ளீர்கள். அப்படியானால் இவ்வியக்கதில் இணையும்போது நீங்கள் பள்ளி மாணவரா? அல்ல்து தலையாட்டி பொம்மையா?

நான் தற்போது இந்த இயக்கத்தின் நிலையை விளக்குவதற்க்காக, அவ்வாறு கூறிப்பிட்டுள்ளோன். நான் தலையாட்டி பொம்மையும் கிடையாது. பள்ளி மாணவனும் கிடையாது. எனக்கு இரண்டு குழந்தைகள் உண்டு. நாம் எமது ஆக்கத்தில் கேட்டுள்ள கேள்விகளுக்கு பதில் கூறுங்கள். உளராமல் பதில் சொல்லுங்கள்.

15.அந்த இயக்கத்திலுள்ள மாணவர்கள் செய்யது குதுப் என்பதை சரியாக எழுதிவிட்டால்..தாங்கள் சொல்வது அனைதும் பொய் என்பதையும்,தாங்கள் பொய்யர் என்பதையும் பகிரங்கமாக ஒப்புக்கொண்டு அறிவிக்க தயாரா?

உங்களின் அறிவு திறமை இந்த கேள்வியில் தான் உள்ளது.

16.இன்று உங்கள் இயக்கத்தின் பலத்தை காட்ட வேண்டும் என்று உயரிய (?!) நோக்கத்தில் அணிவகுப்பு நடத்துகிறீர்கள் என்று எழுதியுள்ளீர்கள்.இயக்கத்தின் பலத்தை காட்டவே அணிவகுப்பு என்று யார்?எங்கே?எப்பொழுது கூறிய்து? அவர் அந்த இயக்கத்தில் என்ன பொறுப்பில் உள்ளார்.(ஆதாரத்துடன் கூறவும்)

இவர்கள் எதற்க்காக இந்த அணிவகுப்பு என்பது இந்த இயக்கத்திற்க்காக உழைத்த எங்களுக்கு தெரியும். எந்த இயக்கத்திலும் இல்லாத உங்களுக்கு தெரியாது.

17இசை ஹராம் என்று கூறியுள்ளீர்கள்.எப்படிபட்ட இஸை ஹராம் என்று கூறவில்லையெ ஏன்?

இசை ஹராம் என்று நான் கூறவி்ல்லை. அதை ஹலால் என்று யூசுப் அல் கர்ளாவி கூறியுள்ளார். அதை ஹாரம் என்று உங்களின் தமிழநாடு பிரிவு கூறுகிறாது. உங்களின் கேரளா பிரிவு இசை அடித்து அணிவகுப்பு நடத்துகிறது. இதில் எது சரி என்று நாம் கேட்டுயிருந்தோம். சரியாக எனது ஆக்கத்தை படிக்காமல், உளறியுள்ளீர்கள்.

18.முரசு கொட்டி அழைப்பது இகையாகுமா?அப்படியென்ரால் மக்களின் கவனத்தை திருப்ப என்னதான் வழி?

நீங்கள் முரசு மட்டும் கொட்டவில்லை, இசையும் அடித்தீர்கள். மக்களின் கவனத்தை திருப்ப உதவும் அனைத்தும் ஹலால் இல்லை. நடிகைகளை வைத்து நாடகம் நடத்தினால் மக்களின் கவனம் அதிகமாக இருக்கும். அதையும் செய்துவிடுங்கள்.

19.இவர்களை குழப்பத்தின் மறு பெயர் என்று அவர்களை எழுதியுள்ளீர்கள். குழம்பியது அவர்களா? அல்லது நீங்களா? குழப்பவாதிகள் அவர்கள் என்றால் குழப்பவாதிகள் இருக்கும் இயக்கத்தில் நீங்கள் ஏன் இணைந்தீர்கள்? ஏன் இரவு பகலாக உழைத்தீர்கள்?

தவறை உணர்ந்த பின் திருந்துவதும் அதை திருத்துவது ஒரு முஸ்லிமின் கடமை. தவறை உணர்ந்த பிறகு விளகினோன். உங்களை போன்று உளறுபவர்களை நான் என் வாழ் நாளில் பார்த்தது கிடையாது.

20.முன்னால் சகோதரர்களும் இவர்களின் கூற்றுப்படி இன்னால் முனாஃபிக்களுமான (இவர்களின் கருத்துப்படி இவர்களின் தவறை எதிர்த்தால் முனாஃபிக்) என்று எழுதியுள்ளீர்கள். உங்கலை முனாஃபிக் என்று கூறிய நபர் யார்?எப்பொழுது?எங்கு கூறினார்?சாட்சிகள் உண்டா? மழுப்பாமல் னேரடியாக பதிலளிக்கவும்.

இந்த கேள்வியை இந்த இயக்கத்தை விட்டு வெளியேறிய ஆட்களிடம் கேளுங்கள். அவர்கள் பதில் சொல்லுவார்கள். இவர்கள் ஒருவரை மட்டும் இப்படி சொல்லவில்லை. இயக்கத்தைவிட்டு வெளியேறும் பெரும்பானனோரை அப்படி கூறுகிறார்கள்.

21.இந்த கொள்கையற்ற இயக்கத்திற்க்காக அல்லும் பகலும் உழைத்த நீங்கள் ஏன் அவ்வியக்கதைவிட்டு வெளியெற்றப் ப்ட்டீர்கள் என்பதை ஏன் நீஙள் கூறவில்லை? (உண்மையான காரனத்தை கூறவும்)
நீங்கள் எவ்வளவு பெரிய பொய்யன் என்பதை இந்த கேள்வி சொல்லுகிறது. "நான் இந்த இயக்கத்தைவிட்டு வெளியேற்றப்பட்டதாக கூறியுள்ளீர்கள், மெதுவாக". என்னை இந்த வெளியேற்ற வில்லை, நான் தான் அந்த இயக்கத்தை விட்டு வெளியேறினோன்.

22.தற்போது இவர்களிடம் என்ன குறை சொன்னாலும் குலாம் தான் அப்படி செய்தார், நாங்கள் அப்படி செய்வில்லை என்கிறார்கள். இவ்வாறு கூறியது யார்? எங்கே?எப்பொழுது கூறிய்து? அவர் அந்த இயக்கத்தில் என்ன பொறுப்பில் உள்ளார்.(ஆதாரத்துடன் கூறவும்)

இதற்கு ஆதாரம் வேண்டுமானால் நான் எனது ஆக்கத்தில் உள்ள விஷயங்களை இந்த இயக்கத்தில் உள்ளவர்களிடம் கேட்டு பாருங்கள். உங்களுக்கு நேரடி ஆதாரம் கிடைக்கும்.

23. தாங்கள் இந்த ஆக்கத்தை மிகவும் காலம் தாழ்த்தி எழுதுவதற்கான காரணம் என்ன? யாருடைய தூன்டுதலினால் எழுதியுள்ளீர்கள்

நான் பல மாதங்களாக இந்த விஷயங்களை பகிரங்கமாக சொல்லி வருகிறோன். இந்த Blog ல் இப்போது தான் எழுதினோன். ஒன்றும் தெரியாமல் உளறாதீர்கள்.

24.கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படும் அந்த இயக்கத்தை பற்றியும், அதன் கொள்கைகள் பற்றியும் இப்போதுதான் தங்களுக்கு தெரிந்ததா?

உங்களுக்கு மூலை இருக்கிறாதா? அல்லது இல்லையா என்று சந்தோகிக்க வைக்கிறது இந்த கேள்வி. தவறை உணர்ந்தவுடன் அதை திருத்த வேண்டும். அந்த இயக்கத்தில் உள்ள தவறுகளை திருத்த முயற்சிகள் செய்து, இவர்களை திருத்த முடியாது என்று தெரிந்தவுன், இந்த இயக்கத்தை விட்டு வெளியேறினோன். இந்து மதத்தில் இருந்து இஸ்லாத்தை தழுவிய ஒருவனை பார்த்து இந்து மதத்தில் நீ இவ்வளவு நாட்களாக இருந்தீயே, அப்போது அது தவறு என்று உனக்கு தெரியாத என்று கேட்டால், உங்களை மக்கள் எவ்வாறு பார்த்து சிரிப்பார்களோ, அதே ஸ்டைலில் தான் கேள்வியையும் நீங்கள் கேட்டுள்ளீர்கள்.

இறுதியாக....
உண்மையில் நீங்கள் சத்தியவானாக இருந்தால்,இந்த கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்கவும், ஆதாரங்களை வெளியிடவும், ஐயங்கள் தொடரும்.........

ஆதாரங்கள் அனைத்தும் மேலே வெளியிடப்பட்டுள்ளன. நன்றாக படித்து அல்லாஹ்வுக்காக செயலபட முன் வாருங்கள். உங்கள் ஐயங்களை தொடருங்கள். அப்போது உங்கள் இயக்கத்தின் முகத்திரை கிழிந்து போகும்.

** சத்தியவான்.

சத்தியவான் said...

அன்புள்ள சைஃபுல்லா அவர்களுக்கு,

உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக

நான் எழுதிய கருத்திற்கு சம்பந்தமில்லாமல் பல் கேள்விகளை எழுப்பியுள்ளீர்கள். அதற்க்கான பதில் கிழே,

நான் எந்த இயக்கத்தோடும் தொடர்பில்லாதவன் என்று கூறியுள்ள நீங்கள், இந்த கொள்கையற்ற இயக்கத்தின் மீது காட்டும் அக்கரையை வைத்து நீங்கள் யார் என்று நாங்கள் புரிந்து கொண்டோம்.


1.நீங்கள் வேடதாரிகளை இனம் காண்போம் என்ற இந்த ஆக்கத்தில் தங்களது பெயரை சத்தியவான் என கூறியுள்ளீர்கள்.தங்களது உண்மையான பெயரை கூறாதது ஏனோ? இது இரட்டை வேடமில்லையா?

நாங்கள் ஒன்றும் வேடமிடவில்லை. வோடதாரிகளை இனம் காட்டியுள்ளோம். நாங்கள் எங்கள் பெயரை வெளியிட்டால், இந்த கொள்கையற்ற இயக்கம் எங்களை இரும்பு பைப்பால் தாக்கும். இவ்வாறு கேள்வி கேட்ட பலரை தாக்கியும் உள்ளது.

2.தவ்ஹீதை முழு தவ்ஹீத்,முக்கா தவ்ஹீத்,அரை தவ்ஹீத், கால் தவ்ஹீத் என பிரிது கூறியுள்ளீர்கள். இப்படி பிரிப்பதற்கு குர் ஆன்,ஹதிஸில் ஆதாரமுண்டா? (அவர்கள் தான் அப்படி பிரித்து வைத்துள்ளார்கள் எனக் கூறி மழுப்பாமல் ஆதாரங்களை இங்கே எழுதுங்கள்)

இவ்வாறு நாங்கள் ஒன்றும் பிரிக்கவில்லை, அவர்களும் பிரிக்கவில்லை. இவ்வாறு இந்த கொள்கையற்ற இயக்கம் வோடமிடுகிறது என்று தான் சொல்லி உள்ளோம். பிரிவு என்ற போச்சுகோ இங்கு இடமில்லை. இவர்களின் வோடத்தை அவர்கள் வோடமிட்டுள்ளவாறே விளக்கியுள்ளோம். தயவு செய்து எனது ஆக்கத்தை நன்றாக மீண்டும் படியுங்கள்.

3.//இஸ்லாமிய ஆட்சி செய்ய வேண்டிய எதையாவது செய்தார்களா என்றால், இல்லை என்பது தான் பதில்// என்று கூறும் நீங்கள் இஸ்லாமிய ஆட்சியில் என்ன செய்ய வேன்டும் என்பதை ஏன் கூறவில்லை?

"நாங்கள் இஸ்லாமிய ஆட்சி அமைக்க போகிறோம்" என்று மக்களை அழைக்கும் போலிகள் தான், இஸ்லாமிய ஆட்சி என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்ல வேண்டும். இஸ்லாமிய ஆட்சி பற்றி தம்பட்டம் அடிக்கும், இந்த கும்பல், "எங்களுக்கு இஸ்லாமிய ஆட்சி என்ன செய்ய வேண்டும் என்று தெரியாது" என்று ஒத்துக் கொண்டால், பிறகு நாம் இஸ்லாமிய ஆட்சி என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுவோம்.

4.கொள்கையற்ற இயக்கம் என்று கூறியுள்ளீர்கள்.அண்த கொள்கையற்ற இயக்கத்தில் நீங்கள் இணைந்தது ஏன்? (தெரியாமல் சேர்ந்துவிட்டேன் என்று கூறி மழுப்ப வேண்டாம்- இது பழைய டயலாக்)

நாங்கள் ஏமாற்றப்பட்டு இந்த கொள்கையற்ற இயக்கத்தில் சேர்ந்தோம். இவர்கள் ஏதோ நல்லது செய்கிறார்கள் என்று நம்பி ஏமாந்து போனனோம். தவறை உணர்ந்து அதை திருத்த முயற்சி செய்து விட்டு, இவர்கள் திருந்த மாட்டார்கள் என்று உணர்ந்து வெளியேறிவிட்டோம். இது மார்க்க அடிப்படையில் சரியான முடிவு. தவறு செய்பவர்களை என்னால் தடவி கொடுக்க முடியாது, உங்களை போன்று.

5.அந்த இயக்கத்தின் முன்னாள் தலைவரின் சம்பளத்தை பற்றி கூறியுள்ளீர்கள். இன்று தமிழகத்தில் எந்த இயக்கதின் தலைவர்கள் சம்பளம் வாங்காமல் இயக்கத்தை வழி நடத்துகிறார்கள்?

எல்லா இயக்கத்தில் உள்ள தலைவர்களும் சம்பளம் வாங்கவி்ல்லை. ஒரு சிலர் தனது தேவையை விட குறைவாக சம்பளம் வாங்கிறார்கள். யாரும் தஃவா செய்கிறோம் என்று வசுலித்து 22 ஆயிரம் ரூபாயை தனது தலைவருக்கு சம்பளமாக கொடுக்கவில்லை.

6.அந்த தாயிகளுக்கு 10 முதல் 15 திருக்குர்ஆன் வசனங்கள் மட்டும் தான் தெரியும் என்பது வேறு விஷயம்) என்று கூறியுள்ளீர்கள்.அவர்கள் அன்றாடம் தொழுகையில் ஓதும் வசனங்களே 25க்கும் மேல் இருக்கும். அப்படியானால் நீங்கள் கூறுவது பொய்யல்லவா?

தொழுகையில் ஒத கூடிய விஷயங்கள் எல்லாருக்கும் தெரியும், சகோதரா. தாயி என்று சொல்லும் இந்த இயக்கத்தின் தாயிகளுக்கு தொழுகை உள்ளதை தவிர 10 முதல் 15 வசனங்கள் தான் தெரியும். அதை தான் நான் இங்கே குறிப்பிட்டுள்ளோன். நீங்கள் தவறாக விளங்கியுள்ளீர்கள். நான் சொல்ல வந்த கருத்து இந்த தாயிகளுக்கு அதிகமாக மார்க்க ஞானம் கி்டையாது என்று.

7.அதுபோல, இந்த கொள்கையற்ற இயக்கத்தின் கொள்கையற்ற தலைவர் திருவாளர் குலாம் முஹம்மது தனது மகளின் திருமணத்தில் இந்த கொள்கையற்ற இயக்கத்தின் அனைத்து இயக்க பொருப்பாளர்களையும் அழைத்து திருமணத்தை ஆடம்பரமாக நடத்தினார் என்று கூறியுள்ளீர்கள். அது எப்பொழுது? எங்கே நடந்தது?என்பதையும், யார்? யார் கலந்துக் கொண்டார்கள்? என்பதையும் ஏன் வெளியிடவில்லை?

எல்லாரும் அறிந்த விஷயத்திற்கு ஆதாரம் வெளியிட வேண்டியது இல்லை. இதைப்பற்றி அதிக தகவலுக்கு MNP உள்ளவர்களிடம் கேளுங்கள், நன்றாக சொல்லுவார்கள்.

8.தனது இயக்க தாயிகளுக்கு திருவாளர் குலாம் நடத்திய திருமணத்திற்கு இஸ்லாமிய சாயம் புசுவது எப்படி? என்று பயிற்சி அளித்தது என்று கூறியுள்ளீர்கள். அந்த பயிற்சி முகாம் எப்பொழுது? எங்கே நடந்தது?என்பதையும், யார்? யார் கலந்துக் கொண்டார்கள்? என்பதையும் ஏன் கூறவில்லை?

இந்த பயிற்சி பல இடங்களில் நடத்தப்பட்டது. இயக்கத்தில் உள்ளவர்களுக்கு நன்றாக தெரியும். உங்களுக்கு அது தெரியாது அல்லது தெரிந்து கொண்டே நடிக்கிறீர்கள்.

9.ஜனநாயகம் ஷிர்க் என்று அவ்வியக்கத்தினர் கூறுவதாக எழுதியுள்ளீர்கள்.ஜனநாயகம் ஷிர்க்கா?இல்லையா?என்பதை பற்றி நீங்கள் ஏன் விளக்கவில்லை? இதில் உங்கள் நிலை என்ன?

ஜனநாயகம் ஷிர்க் என்று இந்த கூட்டம் தம்பட்டம் அடித்து திரிந்தது. இப்போது ஜனநாயகத்தை முழுமையாக பின்பற்ற ஆரம்பித்துள்ளது. ஜனநாயகம் ஷிர்க் என்று சொல்லி விட்டு அந்தர் பெல்டி அடிப்பவர்களிடம் தான், அது ஷிர்க்கா இல்லையா என்று நீங்கள் கேட்ட வேண்டும். நமது நிலை என்னா வேன்றால், ஜனநாயகம் எல்லாவற்றிருக்கும் தீர்வு என்று சொல்லவில்லை. ஜனநாயகத்தை யாரிருடமும் பின்பற்றவும் சொல்லவில்லை.

10.அல்லாஹ் தான் ஆட்சியாலன் அவனிடமே நம் தேவைகளை கேட்க வேண்டும் என்பது இறைவனின் கட்டளை.அதை குறை கூறுவதற்கு நீங்கள் யார்?

நாங்கள் ஒன்றும் அதை குறை கூறவில்லை அன்பரே. "அல்லாஹ் தான் ஆட்சியாலன் அவனிடமே நம் தேவைகளை கேட்க வேண்டும்" என்று கூறி, அரசிடம் நாம் எந்த தேவைகளையும் கேட்க கூடாது என்ற இந்த கும்பல், பின்னர் அடித்த அந்தர் பெல்டியை தான் நாம் குறை கூறியுள்ளோம்.

11.இவர்கள் நட்டை ஆள்பவர்களிடம் பிச்சை கேட்பதாக எழுதியுள்ளீர்கள்.நமது உரிமைகளை பெறுவதற்கான வழிமுறை என்னவென்று கூறவில்லையே ஏன்? நாம் அனைவரும் அரஸிடம் பிச்சையா கேட்கிறோம்?

நாம் அரசிடம் நம்முடைய தேவைகளை போராடி கேட்பதை தவறு என்று கூறவில்லை. ஆனால், இவர்கள் அதை தவறு என்று அன்று சொன்னார்கள். அவ்வாறு செய்பவர்களை கிண்டல் அடித்தார்கள். அது ஷிர்க் என்றும் தம்பட்டம் அடித்தார்கள். இன்று இவர்களே அவ்வாறு செய்கிறார்கள்.

12. இக்வாநிஸத்தை ப்ற்றி குறை கூறும் நீங்கள்.அவர்கள் போராடக் கூடிய ஃபலஸ்தீனையும்,லெபனானையும் ஆதரிக்கிறீர்கல?இல்லையா?

ஒருவரின் தவறை கூட்டிக்காட்டும் போது அவர்களின் ஒரு நல்ல விஷயத்தை காட்டி, அவர்களின் தவறை நியாயபடுத்த இயலாது. ஃபலஸ்தினிலும், லெபனானிலும் போராடுவது இஷ்வான்கள் தானா என்று முதலில் நிருபியுங்கள். இவர்களுக்கு இஷ்வான்களுக்கும் சம்பந்தம் இல்லை.

13.இமம் கொமைனி பற்றியும்,செய்யது குதுப் பற்றியும் எழுதியுள்ளீர்கள். அவர்கள் பேசிய அல்லது கைப்பட எழுதிய நேரடி ஆதாரங்கள் இல்லமல் குறை கூறுவது சரியா? இவ்வாறு குறைகூறுபவர் பொய்யரில்லையா?

கொமைனியை பற்றி நாங்கள் அவர் பேசிய, எழுதிய ஆதாரத்தை கொடுத்துள்ளோம். செய்யது குதுப் "நான் ஜும்மா தொழ மாட்டோன்" என்று நேரடியாக சொல்லியிருந்தால், அவரை முஸ்லிம்கள் பட்டியலில் யாரும் வைத்து இருக்க மாட்டார்கள். செய்யது குதுப்பை இஷ்வான்கள் கூட நீங்கள் மதிப்பது போல் மதிப்பதில்லை. காரணம், அவர்களுக்கு நன்றாக தெரியும், செய்யது குதுப்பை பற்றி.

14.இவர்கள் இயக்கத்தில் இருப்பவர்கலில் பெரும்பாலோர் செய்யது குதுப் என்று கூட எழுதெ தெரியாத பள்ளி மாணவர்கள் என்று எழுதியுள்ளீர்கள். அப்படியானால் இவ்வியக்கதில் இணையும்போது நீங்கள் பள்ளி மாணவரா? அல்ல்து தலையாட்டி பொம்மையா?

நான் தற்போது இந்த இயக்கத்தின் நிலையை விளக்குவதற்க்காக, அவ்வாறு கூறிப்பிட்டுள்ளோன். நான் தலையாட்டி பொம்மையும் கிடையாது. பள்ளி மாணவனும் கிடையாது. எனக்கு இரண்டு குழந்தைகள் உண்டு. நாம் எமது ஆக்கத்தில் கேட்டுள்ள கேள்விகளுக்கு பதில் கூறுங்கள். உளராமல் பதில் சொல்லுங்கள்.

15.அந்த இயக்கத்திலுள்ள மாணவர்கள் செய்யது குதுப் என்பதை சரியாக எழுதிவிட்டால்..தாங்கள் சொல்வது அனைதும் பொய் என்பதையும்,தாங்கள் பொய்யர் என்பதையும் பகிரங்கமாக ஒப்புக்கொண்டு அறிவிக்க தயாரா?

உங்களின் அறிவு திறமை இந்த கேள்வியில் தான் உள்ளது.

16.இன்று உங்கள் இயக்கத்தின் பலத்தை காட்ட வேண்டும் என்று உயரிய (?!) நோக்கத்தில் அணிவகுப்பு நடத்துகிறீர்கள் என்று எழுதியுள்ளீர்கள்.இயக்கத்தின் பலத்தை காட்டவே அணிவகுப்பு என்று யார்?எங்கே?எப்பொழுது கூறிய்து? அவர் அந்த இயக்கத்தில் என்ன பொறுப்பில் உள்ளார்.(ஆதாரத்துடன் கூறவும்)

இவர்கள் எதற்க்காக இந்த அணிவகுப்பு என்பது இந்த இயக்கத்திற்க்காக உழைத்த எங்களுக்கு தெரியும். எந்த இயக்கத்திலும் இல்லாத உங்களுக்கு தெரியாது.

17.இசை ஹராம் என்று கூறியுள்ளீர்கள்.எப்படிபட்ட இஸை ஹராம் என்று கூறவில்லையெ ஏன்?

இசை ஹராம் என்று நான் கூறவி்ல்லை. அதை ஹலால் என்று யூசுப் அல் கர்ளாவி கூறியுள்ளார். அதை ஹாரம் என்று உங்களின் தமிழநாடு பிரிவு கூறுகிறாது. உங்களின் கேரளா பிரிவு இசை அடித்து அணிவகுப்பு நடத்துகிறது. இதில் எது சரி என்று நாம் கேட்டுயிருந்தோம். சரியாக எனது ஆக்கத்தை படிக்காமல், உளறியுள்ளீர்கள்.

18.முரசு கொட்டி அழைப்பது இகையாகுமா?அப்படியென்ரால் மக்களின் கவனத்தை திருப்ப என்னதான் வழி?

நீங்கள் முரசு மட்டும் கொட்டவில்லை, இசையும் அடித்தீர்கள். மக்களின் கவனத்தை திருப்ப உதவும் அனைத்தும் ஹலால் இல்லை. நடிகைகளை வைத்து நாடகம் நடத்தினால் மக்களின் கவனம் அதிகமாக இருக்கும். அதையும் செய்துவிடுங்கள்.

19.இவர்களை குழப்பத்தின் மறு பெயர் என்று அவர்களை எழுதியுள்ளீர்கள். குழம்பியது அவர்களா? அல்லது நீங்களா? குழப்பவாதிகள் அவர்கள் என்றால் குழப்பவாதிகள் இருக்கும் இயக்கத்தில் நீங்கள் ஏன் இணைந்தீர்கள்? ஏன் இரவு பகலாக உழைத்தீர்கள்?

தவறை உணர்ந்த பின் திருந்துவதும் அதை திருத்துவது ஒரு முஸ்லிமின் கடமை. தவறை உணர்ந்த பிறகு விளகினோன். உங்களை போன்று உளறுபவர்களை நான் என் வாழ் நாளில் பார்த்தது கிடையாது.

20.முன்னால் சகோதரர்களும் இவர்களின் கூற்றுப்படி இன்னால் முனாஃபிக்களுமான (இவர்களின் கருத்துப்படி இவர்களின் தவறை எதிர்த்தால் முனாஃபிக்) என்று எழுதியுள்ளீர்கள். உங்கலை முனாஃபிக் என்று கூறிய நபர் யார்?எப்பொழுது?எங்கு கூறினார்?சாட்சிகள் உண்டா? மழுப்பாமல் னேரடியாக பதிலளிக்கவும்.

இந்த கேள்வியை இந்த இயக்கத்தை விட்டு வெளியேறிய ஆட்களிடம் கேளுங்கள். அவர்கள் பதில் சொல்லுவார்கள். இவர்கள் ஒருவரை மட்டும் இப்படி சொல்லவில்லை. இயக்கத்தைவிட்டு வெளியேறும் பெரும்பானனோரை அப்படி கூறுகிறார்கள்.

21.இந்த கொள்கையற்ற இயக்கத்திற்க்காக அல்லும் பகலும் உழைத்த நீங்கள் ஏன் அவ்வியக்கதைவிட்டு வெளியெற்றப் ப்ட்டீர்கள் என்பதை ஏன் நீஙள் கூறவில்லை? (உண்மையான காரனத்தை கூறவும்)

நீங்கள் எவ்வளவு பெரிய பொய்யன் என்பதை இந்த கேள்வி சொல்லுகிறது. "நான் இந்த இயக்கத்தைவிட்டு வெளியேற்றப்பட்டதாக கூறியுள்ளீர்கள், மெதுவாக". என்னை இந்த வெளியேற்ற வில்லை, நான் தான் அந்த இயக்கத்தை விட்டு வெளியேறினோன்.

22.தற்போது இவர்களிடம் என்ன குறை சொன்னாலும் குலாம் தான் அப்படி செய்தார், நாங்கள் அப்படி செய்வில்லை என்கிறார்கள். இவ்வாறு கூறியது யார்?
எங்கே?எப்பொழுது கூறிய்து? அவர் அந்த இயக்கத்தில் என்ன பொறுப்பில் உள்ளார்.(ஆதாரத்துடன் கூறவும்)


இதற்கு ஆதாரம் வேண்டுமானால் நான் எனது ஆக்கத்தில் உள்ள விஷயங்களை இந்த இயக்கத்தில் உள்ளவர்களிடம் கேட்டு பாருங்கள். உங்களுக்கு நேரடி ஆதாரம் கிடைக்கும்.

23. தாங்கள் இந்த ஆக்கத்தை மிகவும் காலம் தாழ்த்தி எழுதுவதற்கான காரணம் என்ன? யாருடைய தூன்டுதலினால் எழுதியுள்ளீர்கள்

நான் பல மாதங்களாக இந்த விஷயங்களை பகிரங்கமாக சொல்லி வருகிறோன். இந்த Blog ல் இப்போது தான் எழுதினோன். ஒன்றும் தெரியாமல் உளறாதீர்கள்.

24.கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படும் அந்த இயக்கத்தை பற்றியும், அதன் கொள்கைகள் பற்றியும் இப்போதுதான் தங்களுக்கு தெரிந்ததா?

உங்களுக்கு மூலை இருக்கிறாதா? அல்லது இல்லையா என்று சந்தோகிக்க வைக்கிறது இந்த கேள்வி. தவறை உணர்ந்தவுடன் அதை திருத்த வேண்டும். அந்த இயக்கத்தில் உள்ள தவறுகளை திருத்த முயற்சிகள் செய்து, இவர்களை திருத்த முடியாது என்று தெரிந்தவுன், இந்த இயக்கத்தை விட்டு வெளியேறினோன். இந்து மதத்தில் இருந்து இஸ்லாத்தை தழுவிய ஒருவனை பார்த்து இந்து மதத்தில் நீ இவ்வளவு நாட்களாக இருந்தீயே, அப்போது அது தவறு என்று உனக்கு தெரியாத என்று கேட்டால், உங்களை மக்கள் எவ்வாறு பார்த்து சிரிப்பார்களோ, அதே ஸ்டைலில் தான் கேள்வியையும் நீங்கள் கேட்டுள்ளீர்கள்.

இறுதியாக....
உண்மையில் நீங்கள் சத்தியவானாக இருந்தால்,இந்த கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்கவும், ஆதாரங்களை வெளியிடவும், ஐயங்கள் தொடரும்.........

ஆதாரங்கள் அனைத்தும் மேலே வெளியிடப்பட்டுள்ளன. நன்றாக படித்து அல்லாஹ்வுக்காக செயலபட முன் வாருங்கள். உங்கள் ஐயங்களை தொடருங்கள். அப்போது உங்கள் இயக்கத்தின் முகத்திரை கிழிந்து போகும்.

** சத்தியவான்.

Anonymous said...

//

// அந்த புத்தகத்தை எழுதியவர் தான் செய்யது குதுப்பிடம் நேரடியாக கேட்டாதாக தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். இந்த புத்தகம் அரபியில் உள்ளது. இதை பிரபல இணைய தளாமாக salafipublications.com இவரின் இந்த செய்தியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது. இந்த செய்தி அவரின் புத்தகத்தில் 112 பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. செய்யது குதுப்பிற்கு மார்க்க ஞானமே கிடையாது என்பதை அல்பானி போன்ற அறிஞர்கள் கூறியுள்ளார்கள். இந்த புத்தகத்தை வாங்கி யுசுப் அல் கர்ளாவி போன்ற உங்களின் வழிகாட்டிகளை வைத்து உண்மையா அல்லது பொய்யா என்று நிருபியுங்கள்.

உங்களின் மீது ஒருவர் ஒரு குற்றச்சாட்டை சொன்னால் அவர் யார் என்று பார்ப்பதை விட, அவரின் செய்தி பொய்யா அல்லது உண்மையா என்று நிரூபித்துவிட்டால், நீங்கள் உண்மையாளர் என்று ஆகிவிடுவீர்கள். எனவே இந்த விஷயத்தை அவ்வாறு அணுகுங்கள். //

ஒரு தகவல் உண்மையா பொய்யா என்று அறிய 2 வழி உள்ளது. ஒன்று தகவலை நாம் கண்ணால் கண்டிருக்க வேண்டும். அப்படி நாம் காணவில்லை என்றால் தகவல் தருபவர் உண்மையாளராக இருக்கவேண்டும்.

செய்யித் குதுப் ஜூம்ஆ தொழ மறுத்தார் என்ற தகவலை இவரைத் தவிர வேறெவரும் எங்கும் சொல்லவில்லை. எங்கும் நம்மால் காணவும் முடியவில்லை (பல தகவல் மையங்களை தொடர்பு கொண்டபிறகு தான் சொல்கிறேன்). இது ஒரு முக்கியமான விஷயமாகும். ஒரு பிரபல அறிஞர் (ஒரு வேளை செய்யது குதுப் உங்களுக்கு வேண்டுமானால் பிரபலமும் இல்லாமல் அறிஞரும் இல்லாமல் இருக்கலாம்.. ஆனால் நான் அவரை ஒரு பிரபல அறிஞராகவே கருதுகிறேன்) ஜூம்ஆ தொழாமல் இருந்திருந்தால் கண்டிப்பாக அது ஒரு பெரிய விஷயமாக ஆகியிருக்கும். எனவே தான் இந்த ஆசிரியரின் நம்பகத்தன்மையை சந்தேகிக்க வேண்டியுள்ளது.

அடுத்து, அந்த செய்தி உண்மையா இல்லையா என்பதை நீங்கள்தான் உறுதி செய்யவேண்டும். காரணம், குற்றச்சாட்டு சுமத்தும் உங்களுக்கே அதைப்பற்றிய அறிவு இல்லை. அந்த புத்தகம் மட்டுமே உங்களுக்கும் ஆதாரம்.

சல்லி கிடைக்கிறது என்பதற்காக வேலை நேரம் நியமித்து (அதற்கு கூடுதலாக பணிசெய்யமாட்டார்கள்) அழைப்புப் பணி செய்யும் ஷெய்குமார்கள் சொன்னார்கள் என்பதற்காக மட்டும் அதை நம்பிவிட முடியாது.

ஒரு செய்தியை காதால் கேட்பதால் அல்லது படிப்பதால் மட்டும் அதை பரப்புபவனின் நிலையை அந்த ஷெய்குமார்களிடம் சென்று கேளுங்கள் - இவர்களைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) என்ன சொல்லியுள்ளார்கள் என்பதை. நான் சொன்னால் ...............

இவரைத்தவிர வேறெவராவது இந்த தகவலை சொல்லியிருக்கிறார்களா அல்லது இவரது வரலாறுதான் என்ன?

விமர்சனம் பதிந்தவர்Anonymous Anonymous | June 11, 2008

// why did u skip thisone?

Anonymous said...

எனக்கு சில கேள்விகள். நீங்கள் முகத்திரையை கிழிப்பேன் என்று கூறுவது யாருக்கு? கிழித்து யாருக்கு காட்டப்போகிறீர்கள்? அந்த இயக்கத்தின் உறுப்பினர்களுக்கா அல்லது பொதுமக்களுக்கா?

ஏற்கனவே ஒரு பின்னூட்டத்தில் பி.ஜே-க்கு பதில் கொடுத்தாயிற்று என்று எழுதியபோது அப்படி தப்பிக்கக்கூடாது, இங்கே வெளியிட வேண்டும் என கேட்டுவிட்டு இப்போது பல கேள்விகளுக்கு அவர்களின் உறுப்பினர்களை கேளுங்கள் என்று தப்பித்து கொள்வது ஏன்?

முரண்பாடே உனது பெயர்தான் சத்தியவானோ???

குறிப்பாக கேள்வி எண் 7. குலாம் முகம்மது மகள் திருமணத்திற்கு இயக்கத்தின் அனைத்து பொருப்புதாரிகளும் கலந்துகொண்டார்கள் என்று எழுதிவிட்டு யாரென்று கேட்டபோது அவர்களிடம் கேளுங்கள் என்று கூறி தப்பித்துக் கொள்வது ஏன்? அனைவருக்கும் தெரியும் என்று எப்படி சொல்லமுடியும். எனக்கு தெரியாது.. இப்போது சொல்... இயக்கத்தின் பொறுப்புதாரிகள் யாரெல்லாம் கலந்துகொண்டார்கள்?

கேள்வி 8-ற்கான பதிலில் குலாம் முகம்மது மகள் திருமணத்திற்கு இஸ்லாமிய சாயம் பூசுவது பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது என்று கூறிவிட்டு பதில் தெரியாமல் உளறுவது ஏன்? நான் கேட்கிறேன் எங்கே நடந்தது என்று அல்ல? அந்த பயிற்சியில் என்னென்ன விளக்கங்கள் கொடுக்கப்பட்டது என்று. அதில் நான் கலந்து கொள்ளவில்லை என்றோ அல்லது அவர்களிடம் கேளுங்கள் என்றோ கூறி உன் முகத்தில் நீயே கரியை பூசிக்கொள்ள வேண்டாம்.

கேள்வி 16-க்கான பதிலில் அணிவகுப்பு எதற்கு என்று கேட்டதற்கு அது பற்றி எங்களுக்குத் தெரியும் என்று மட்டும் கூறி ஒளிந்து கொள்வது ஏன்? விளக்கம் கூற வேண்டியது தானே?

நேரம் போதவில்லை... விரைவில் மற்ற கேள்விகள்

Anonymous said...

அண்ணே... எனக்கு ஒரு சந்தேகம். இந்த வோடம் வோடம் என்று வேடம் போடுபவர்களை கூறுகிறீர்களே அதுபற்றி தாண்ணே சந்தேகம் (வோடம் என்பதே ஒரு வேடம் என்று தெரிகிறது)

1. சவுதியில் முழு தவ்ஹீத் வேடம் - அப்டீன்னாக்க சவுதியில இருக்கிற இந்த இயக்கத்தின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் 100 சதவீதம் தவ்ஹீதை பின்பற்றக்கூடியவர்களா அல்லது தவ்ஹீது வாதிகள் மட்டும்தான் உறுப்பினர்களா? (புரியவில்லையா.. கவலைபடவேண்டாம் அடுத்த கேள்வியில் புரிந்துவிடும்)

2. துபாயில் முக்கா தவ்ஹீது வேடம் - அப்டீன்னா இயக்க உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் 75 சதவீதம் முழுமையான தவ்ஹீதை பின்பற்றிவிட்டு 25 சதவீதம் மற்றதை (அதற்கு என்ன வார்த்தை..ஹிஹிஹி) பின்பற்றக்கூடியவர்களா அல்லது மொத்த உறுப்பினர்களில் முக்கால் சதவீதம் பேர் முழுமையான தவ்ஹீதையும் மீதி கால்வாசி பேர் மற்றதுமா?

3. தமிழகத்தில் அரை தவ்ஹீது வேடம் - அப்டீன்னா இயக்க உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் 50 சதவீதம் தவ்ஹீதை பின்பற்றிவிட்டு 50 சதவீதம் மற்றதை பின்பற்றக்கூடியவர்களா அல்லது மொத்த உறுப்பினர்களில் பாதி பேர் தவ்ஹீதும் மீதி பாதிபேர் மற்றதுமா?

3. கேரளாவில் கால் தவ்ஹீது வேடம் - அப்டீன்னா இயக்க உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் 25 சதவீதம் தவ்ஹீதை பின்பற்றிவிட்டு மீதி 75 சதவீதம் மற்றதை பின்பற்றக்கூடியவர்களா அல்லது மொத்த உறுப்பினர்களில் 25 சதவீதம் பேர் தவ்ஹீதும் மீதி 75 சதவீதம் பேர் மற்றதுமா?

4. கர்நாடகாவில் முழு தர்ஹா வேடம் - அப்டீன்னா அந்த இயக்க உறுப்பினர்களில் உள்ள ஒவ்வொருவரும் தவ்ஹீதை கொஞ்சம் கூட பின்பற்றாத தர்ஹாவாதிகளா அல்லது மொத்த உறுப்பினர்களில் யாருமே தவ்ஹீதுவாதி இல்லையா?

விளக்குவீங்களாண்ணே... காத்திருக்கிறேன்

சத்தியவான் said...

// அந்த புத்தகத்தை எழுதியவர் தான் செய்யது குதுப்பிடம் நேரடியாக கேட்டாதாக தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். இந்த புத்தகம் அரபியில் உள்ளது. இதை பிரபல இணைய தளாமாக salafipublications.com இவரின் இந்த செய்தியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது. இந்த செய்தி அவரின் புத்தகத்தில் 112 பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. செய்யது குதுப்பிற்கு மார்க்க ஞானமே கிடையாது என்பதை அல்பானி போன்ற அறிஞர்கள் கூறியுள்ளார்கள். இந்த புத்தகத்தை வாங்கி யுசுப் அல் கர்ளாவி போன்ற உங்களின் வழிகாட்டிகளை வைத்து உண்மையா அல்லது பொய்யா என்று நிருபியுங்கள்.

உங்களின் மீது ஒருவர் ஒரு குற்றச்சாட்டை சொன்னால் அவர் யார் என்று பார்ப்பதை விட, அவரின் செய்தி பொய்யா அல்லது உண்மையா என்று நிரூபித்துவிட்டால், நீங்கள் உண்மையாளர் என்று ஆகிவிடுவீர்கள். எனவே இந்த விஷயத்தை அவ்வாறு அணுகுங்கள். //

ஒரு தகவல் உண்மையா பொய்யா என்று அறிய 2 வழி உள்ளது. ஒன்று தகவலை நாம் கண்ணால் கண்டிருக்க வேண்டும். அப்படி நாம் காணவில்லை என்றால் தகவல் தருபவர் உண்மையாளராக இருக்கவேண்டும்.

செய்யித் குதுப் ஜூம்ஆ தொழ மறுத்தார் என்ற தகவலை இவரைத் தவிர வேறெவரும் எங்கும் சொல்லவில்லை. எங்கும் நம்மால் காணவும் முடியவில்லை (பல தகவல் மையங்களை தொடர்பு கொண்டபிறகு தான் சொல்கிறேன்). இது ஒரு முக்கியமான விஷயமாகும். ஒரு பிரபல அறிஞர் (ஒரு வேளை செய்யது குதுப் உங்களுக்கு வேண்டுமானால் பிரபலமும் இல்லாமல் அறிஞரும் இல்லாமல் இருக்கலாம்.. ஆனால் நான் அவரை ஒரு பிரபல அறிஞராகவே கருதுகிறேன்) ஜூம்ஆ தொழாமல் இருந்திருந்தால் கண்டிப்பாக அது ஒரு பெரிய விஷயமாக ஆகியிருக்கும். எனவே தான் இந்த ஆசிரியரின் நம்பகத்தன்மையை சந்தேகிக்க வேண்டியுள்ளது.

அடுத்து, அந்த செய்தி உண்மையா இல்லையா என்பதை நீங்கள்தான் உறுதி செய்யவேண்டும். காரணம், குற்றச்சாட்டு சுமத்தும் உங்களுக்கே அதைப்பற்றிய அறிவு இல்லை. அந்த புத்தகம் மட்டுமே உங்களுக்கும் ஆதாரம்.

சல்லி கிடைக்கிறது என்பதற்காக வேலை நேரம் நியமித்து (அதற்கு கூடுதலாக பணிசெய்யமாட்டார்கள்) அழைப்புப் பணி செய்யும் ஷெய்குமார்கள் சொன்னார்கள் என்பதற்காக மட்டும் அதை நம்பிவிட முடியாது.

ஒரு செய்தியை காதால் கேட்பதால் அல்லது படிப்பதால் மட்டும் அதை பரப்புபவனின் நிலையை அந்த ஷெய்குமார்களிடம் சென்று கேளுங்கள் - இவர்களைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) என்ன சொல்லியுள்ளார்கள் என்பதை. நான் சொன்னால் ...............

இவரைத்தவிர வேறெவராவது இந்த தகவலை சொல்லியிருக்கிறார்களா அல்லது இவரது வரலாறுதான் என்ன?

விமர்சனம் பதிந்தவர்Anonymous Anonymous | June 11, 2008

// why did u skip thisone?


மேலே உள்ள கமேண்ட்டை பதிந்தவருக்கு,

உங்களின் மீது இறைவனின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக.

செய்யது குதுப்பை நாங்களும் பெரிய அறிஞர் என்று கூறவில்லை. இஷ்வான்களும் அவரை பெரிய அறிஞர் என்று கூறவில்லை. நீங்கள் தான் அவரை தூக்கி பிடிக்கிறீர்கள்.

//ஒரு தகவல் உண்மையா பொய்யா என்று அறிய 2 வழி உள்ளது. ஒன்று தகவலை நாம் கண்ணால் கண்டிருக்க வேண்டும். அப்படி நாம் காணவில்லை என்றால் தகவல் தருபவர் உண்மையாளராக இருக்கவேண்டும்.//

மேலே உள்ள உங்களுடைய கேள்வி நன்றாக உள்ளது. முதல் வழியில் நாம் இதை நிருபிக்க முடியாது. மேலே உள்ளவர் சொன்ன தகவலை நீங்கள் ஏற்க தயாராக இல்லை.

நீங்கள் செய்யது குதுப் ஜும்மா தொழுதாக ஒரு ஆதாரத்தை காட்டினால் போதும், நான் அமைதியாகி விடுவோன். ஜும்மா என்பது வாழ்க்கையில் ஒரு தடவை நடக்க கூடிய விஷயம் அல்ல. அது வாரம் ஒரு முறை நடக்க கூடிய விஷயம். ஏனவே மேலே கூறப்பட்ட ஆசிரியரின் கருத்தயும், அதை மேற்கோள் காட்டி எழுதியுள்ள இணைய தளங்களையும் நீங்கள் சந்தோகிக்கும் பட்சத்தில், செய்யது குதுப் அவர்கள் ஒரு வாரமாவது ஜும்மா தொழுதார் என்று நீருபியுங்கள்.

நீங்கள் பல தகவல் மையங்களை தொடர்பு கொண்டாக கூறியுள்ளீர்கள். அப்படி செய்த உங்களிடம், நான் வைக்கும் கேள்விகள் கிழே,

1. செய்யது குதுப் பல ஆண்டுகள் சிறையில் அவரது இயக்கதவர்களுடன் இருந்துள்ளார். அப்போது இவர் ஜும்மா தொழுயிருந்தார் என்றால், அதை நீங்கள் தொடர்பு கொண்ட தகவல் மையங்கள் முலமாக நீருபித்துயிருக்கலாமே?

2. அல்லது அவர் வெளியில் இருக்கும் போது வாரம் வாரம் ஜும்மா தொழது இருக்கலாம். அதை ஏதே ஒரு ஆதாரத்தை வைத்து நிருபித்துவிடலாம் அல்லவா? அவ்வாறு செய்யுங்கள் பார்ப்போம்.

salafipublications.com என்ற இணைய தளத்திருந்து இந்த புத்தக ஆசிரியர் பற்றிய விபரத்தை நான் கேட்டுள்ளோன். அது வந்த பிறகு உங்களுக்கு தெரியும் உண்மை.


குறிப்பு: நான் மேலே உள்ள கமேண்ட்டை கவனிக்க மறந்துவிட்டோன். தவறுக்க மன்னிக்கவும்.

சத்தியவான்.

சத்தியவான் said...


எனக்கு சில கேள்விகள். நீங்கள் முகத்திரையை கிழிப்பேன் என்று கூறுவது யாருக்கு? கிழித்து யாருக்கு காட்டப்போகிறீர்கள்? அந்த இயக்கத்தின் உறுப்பினர்களுக்கா அல்லது பொதுமக்களுக்கா?

ஏற்கனவே ஒரு பின்னூட்டத்தில் பி.ஜே-க்கு பதில் கொடுத்தாயிற்று என்று எழுதியபோது அப்படி தப்பிக்கக்கூடாது, இங்கே வெளியிட வேண்டும் என கேட்டுவிட்டு இப்போது பல கேள்விகளுக்கு அவர்களின் உறுப்பினர்களை கேளுங்கள் என்று தப்பித்து கொள்வது ஏன்?

முரண்பாடே உனது பெயர்தான் சத்தியவானோ???

குறிப்பாக கேள்வி எண் 7. குலாம் முகம்மது மகள் திருமணத்திற்கு இயக்கத்தின் அனைத்து பொருப்புதாரிகளும் கலந்துகொண்டார்கள் என்று எழுதிவிட்டு யாரென்று கேட்டபோது அவர்களிடம் கேளுங்கள் என்று கூறி தப்பித்துக் கொள்வது ஏன்? அனைவருக்கும் தெரியும் என்று எப்படி சொல்லமுடியும். எனக்கு தெரியாது.. இப்போது சொல்... இயக்கத்தின் பொறுப்புதாரிகள் யாரெல்லாம் கலந்துகொண்டார்கள்?

கேள்வி 8-ற்கான பதிலில் குலாம் முகம்மது மகள் திருமணத்திற்கு இஸ்லாமிய சாயம் பூசுவது பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது என்று கூறிவிட்டு பதில் தெரியாமல் உளறுவது ஏன்? நான் கேட்கிறேன் எங்கே நடந்தது என்று அல்ல? அந்த பயிற்சியில் என்னென்ன விளக்கங்கள் கொடுக்கப்பட்டது என்று. அதில் நான் கலந்து கொள்ளவில்லை என்றோ அல்லது அவர்களிடம் கேளுங்கள் என்றோ கூறி உன் முகத்தில் நீயே கரியை பூசிக்கொள்ள வேண்டாம்.

கேள்வி 16-க்கான பதிலில் அணிவகுப்பு எதற்கு என்று கேட்டதற்கு அது பற்றி எங்களுக்குத் தெரியும் என்று மட்டும் கூறி ஒளிந்து கொள்வது ஏன்? விளக்கம் கூற வேண்டியது தானே?

நேரம் போதவில்லை... விரைவில் மற்ற கேள்விகள்

விமர்சனம் பதிந்தவர்Anonymous Anonymous | June 19, 2008


மேலே உள்ள கமேண்ட்டை பதிந்தவருக்கு,

உங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.

நான் எந்த இயக்கத்தையும் சாராதவன் என்ற நீங்கள், இப்போது உளறி மாட்டிக் கொண்டிர்கள்.

உங்களது கேள்விகளுக்கு பதில், கிழே,

எனக்கு சில கேள்விகள். நீங்கள் முகத்திரையை கிழிப்பேன் என்று கூறுவது யாருக்கு? கிழித்து யாருக்கு காட்டப்போகிறீர்கள்? அந்த இயக்கத்தின் உறுப்பினர்களுக்கா அல்லது பொதுமக்களுக்கா?

வோடமிடும் வோடாரிகளின் முகத்திரை எல்லாருக்கும் கிழித்து காட்டப்படும்.

ஏற்கனவே ஒரு பின்னூட்டத்தில் பி.ஜே-க்கு பதில் கொடுத்தாயிற்று என்று எழுதியபோது அப்படி தப்பிக்கக்கூடாது, இங்கே வெளியிட வேண்டும் என கேட்டுவிட்டு இப்போது பல கேள்விகளுக்கு அவர்களின் உறுப்பினர்களை கேளுங்கள் என்று தப்பித்து கொள்வது ஏன்?

நீங்கள் எப்படியெல்லாம் ஏமாற்றுவீர்கள் என்பதை உங்களுடைய இந்த கேள்வி நீருபிக்கிறது. ஏற்கனவே பி.ஜே-விற்க்கு பதில் கொடுததாயிற்று என்று உளறியுள்ளீர்கள். அது பச்சை பொய். நீங்கள் விளக்கம் கொடுக்கவுமில்லை, நீங்கள் விளக்கம் பி.ஜே-விற்க்கு விளக்கம் கொடுத்தாயிற்று என்று எழுதவுமில்லை. அப்படி எங்களுக்கு தெரியாமல், நீங்கள் ரகசியாமாக விளக்கம் கொடுத்து இருந்தால், அதை எங்களுக்கு அனுப்பி தாருங்கள். நீங்கள் எழுதிய விஷயம் கிழே,

"""""""""""இவர் இங்கு மறுமொழியாக பதிந்து வரும் பல விசயங்கள் ஏற்கனவே பி.ஜெயினுல்லாபுதீன் அவர்களால் உணர்வில் எழுதப்பட்டவைதான்.""""""""""""

இப்போது உங்களுக்கு தெரியும் முரண்படுவது யார் என்று.

குறிப்பாக கேள்வி எண் 7. குலாம் முகம்மது மகள் திருமணத்திற்கு இயக்கத்தின் அனைத்து பொருப்புதாரிகளும் கலந்துகொண்டார்கள் என்று எழுதிவிட்டு யாரென்று கேட்டபோது அவர்களிடம் கேளுங்கள் என்று கூறி தப்பித்துக் கொள்வது ஏன்? அனைவருக்கும் தெரியும் என்று எப்படி சொல்லமுடியும். எனக்கு தெரியாது.. இப்போது சொல்... இயக்கத்தின் பொறுப்புதாரிகள் யாரெல்லாம் கலந்துகொண்டார்கள்?

நல்ல கேள்வி. மிரட்டி பார்க்காதே! சரியா. குலாம் முகம்மது மகள் திருமணத்தில் கலந்து கொண்ட பொருப்புதாரிகளின் பட்டியலை குலாமுமிடமும் உங்கள் இயக்கத்திடமும் தான் கேட்க வேண்டும். அது என் விட்டு கல்யாணம் இல்லை. உங்கள் இயக்கத்தின் பொருப்புதாரிகள் யாருமே இந்த திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை என்று சொல். பின்னர், நாம் யார் அந்த திருமணத்தில் கலந்து கொண்டார்கள் என்பதை வெளியிடுவோம்.

கேள்வி 8-ற்கான பதிலில் குலாம் முகம்மது மகள் திருமணத்திற்கு இஸ்லாமிய சாயம் பூசுவது பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது என்று கூறிவிட்டு பதில் தெரியாமல் உளறுவது ஏன்? நான் கேட்கிறேன் எங்கே நடந்தது என்று அல்ல? அந்த பயிற்சியில் என்னென்ன விளக்கங்கள் கொடுக்கப்பட்டது என்று. அதில் நான் கலந்து கொள்ளவில்லை என்றோ அல்லது அவர்களிடம் கேளுங்கள் என்றோ கூறி உன் முகத்தில் நீயே கரியை பூசிக்கொள்ள வேண்டாம்.

நீ இரட்டை வேடம் போடுகிறாய். நீ இந்த இயக்கத்தில் இருக்கிறாயா? இல்லையா? இருக்கிறோன் என்றால், நீ எங்கு உள்ளாய், உனது பொருப்பு என்ன என்று சொல். இந்த இயக்கத்தில் நீ இல்லை என்றால், நான் வைத்த கருத்துக் இந்த இயக்கம் பதில் சொல்லாத பட்சத்தில், எனது வைத்த வாதம் உண்மை என்றாகிவிடும். அவர்கள் இதை மறுக்க வில்லை. நான் வைத்த வாதம் பொய் என்றால், "இந்த இயக்க தாயிக்களுக்கு இவ்வாறு பயிற்சி அளிக்கப்படவே இல்லை" என்று நீங்கள் கூறுங்கள், பார்ப்போம்.

கேள்வி 16-க்கான பதிலில் அணிவகுப்பு எதற்கு என்று கேட்டதற்கு அது பற்றி எங்களுக்குத் தெரியும் என்று மட்டும் கூறி ஒளிந்து கொள்வது ஏன்? விளக்கம் கூற வேண்டியது தானே?

உண்மையையே பேசும் உத்தமானே. இந்த அணிவகுப்பின் நோக்கத்தை நீங்களே சொல்லுங்கள்.

நேரம் போதவில்லை... விரைவில் மற்ற கேள்விகள்

நேரம் கிடைக்கும் போது, மற்ற விஷயங்களை உளறுங்கள். எங்களுக்கு அசத்தியத்தை இனம் காட்ட வசதியாக இருக்கும்.

சத்தியவான் said...

அண்ணே... எனக்கு ஒரு சந்தேகம். இந்த வோடம் வோடம் என்று வேடம் போடுபவர்களை கூறுகிறீர்களே அதுபற்றி தாண்ணே சந்தேகம் (வோடம் என்பதே ஒரு வேடம் என்று தெரிகிறது)

1. சவுதியில் முழு தவ்ஹீத் வேடம் - அப்டீன்னாக்க சவுதியில இருக்கிற இந்த இயக்கத்தின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் 100 சதவீதம் தவ்ஹீதை பின்பற்றக்கூடியவர்களா அல்லது தவ்ஹீது வாதிகள் மட்டும்தான் உறுப்பினர்களா? (புரியவில்லையா.. கவலைபடவேண்டாம் அடுத்த கேள்வியில் புரிந்துவிடும்)

2. துபாயில் முக்கா தவ்ஹீது வேடம் - அப்டீன்னா இயக்க உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் 75 சதவீதம் முழுமையான தவ்ஹீதை பின்பற்றிவிட்டு 25 சதவீதம் மற்றதை (அதற்கு என்ன வார்த்தை..ஹிஹிஹி) பின்பற்றக்கூடியவர்களா அல்லது மொத்த உறுப்பினர்களில் முக்கால் சதவீதம் பேர் முழுமையான தவ்ஹீதையும் மீதி கால்வாசி பேர் மற்றதுமா?

3. தமிழகத்தில் அரை தவ்ஹீது வேடம் - அப்டீன்னா இயக்க உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் 50 சதவீதம் தவ்ஹீதை பின்பற்றிவிட்டு 50 சதவீதம் மற்றதை பின்பற்றக்கூடியவர்களா அல்லது மொத்த உறுப்பினர்களில் பாதி பேர் தவ்ஹீதும் மீதி பாதிபேர் மற்றதுமா?

3. கேரளாவில் கால் தவ்ஹீது வேடம் - அப்டீன்னா இயக்க உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் 25 சதவீதம் தவ்ஹீதை பின்பற்றிவிட்டு மீதி 75 சதவீதம் மற்றதை பின்பற்றக்கூடியவர்களா அல்லது மொத்த உறுப்பினர்களில் 25 சதவீதம் பேர் தவ்ஹீதும் மீதி 75 சதவீதம் பேர் மற்றதுமா?

4. கர்நாடகாவில் முழு தர்ஹா வேடம் - அப்டீன்னா அந்த இயக்க உறுப்பினர்களில் உள்ள ஒவ்வொருவரும் தவ்ஹீதை கொஞ்சம் கூட பின்பற்றாத தர்ஹாவாதிகளா அல்லது மொத்த உறுப்பினர்களில் யாருமே தவ்ஹீதுவாதி இல்லையா?

விளக்குவீங்களாண்ணே... காத்திருக்கிறேன்


மேலே உள்ள கமேண்ட்டை பதிந்தவருக்கு,

உங்களின் மீது இறைவனின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக.


அண்ணே சுப்பர் கேள்விகளை கேட்டுள்ளீர்கள். இது மாதிரி கேள்விகளை இதுவரை இங்கு யாரும் கேட்கவில்லை.

நீங்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் ஒரே பதில், உங்களுக்கு ஒன்றும் புரியவில்லை என்பது தான்.

உங்களுக்கு புரிவதற்க்காக ஒன்றரை சொல்லுகிறோன். ஒருவர் கருணாநிதி போல் வோடமிட்டுள்ளார் என்று சொன்னால், அவர் கருணாநிதியா? நீங்கள் சொல்ல வருவது அப்படித்தான் உள்ளது. இந்த இயக்கத்தில், தவ்ஹீத்வாதிகளும் உள்ளனர். அவர்களும் இந்த வோடத்தில் பலியாகியுள்ளனர். எப்படி என்று கேட்கிறீர்களா? இவர்களும் தவ்ஹீத்வாதிகளிடம் தவ்ஹீத் வோடம் போடுவார்கள். சுன்னத் வல் ஜமாத் என்பாரிடம் அவர்களை போல் வோடம் போடுவார்கள்.

இதை போல் இன்னும் ஏதோனும் அறிவுப்புர்வமான கேள்விகள் இருந்தால் அள்ளி போடுங்கள்.

Anonymous said...

//
1. செய்யது குதுப் பல ஆண்டுகள் சிறையில் அவரது இயக்கதவர்களுடன் இருந்துள்ளார். அப்போது இவர் ஜும்மா தொழுயிருந்தார் என்றால், அதை நீங்கள் தொடர்பு கொண்ட தகவல் மையங்கள் முலமாக நீருபித்துயிருக்கலாமே?

2. அல்லது அவர் வெளியில் இருக்கும் போது வாரம் வாரம் ஜும்மா தொழது இருக்கலாம். அதை ஏதே ஒரு ஆதாரத்தை வைத்து நிருபித்துவிடலாம் அல்லவா? அவ்வாறு செய்யுங்கள் பார்ப்போம்.

salafipublications.com என்ற இணைய தளத்திருந்து இந்த புத்தக ஆசிரியர் பற்றிய விபரத்தை நான் கேட்டுள்ளோன். அது வந்த பிறகு உங்களுக்கு தெரியும் உண்மை.
//


சத்தியவான்! மீண்டும் நீங்கள் முரண்படுகிறீர்கள். காரணம்! செய்யித் குதுப் ஜூம்ஆ தொழவேண்டுமென்று நான் நிரூபிக்க வேண்டுமென்று பந்தை என்னிடம் திருப்பியுள்ளீர்கள். என்னால் செய்யித்குதுப் பஜ்ர் தொழுததை நிரூபிக்க இயலாது. எனவே அவர் பஜ்ர் தொழவில்லையென்று ஆகிவிடுமா. அதுபோல மற்ற நேர தொழுகைகள் எல்லாவற்றிற்கும் இதே காரணம் பொருந்தும்.

அடுத்து! மீண்டும் நான் இதே கேள்விகளை எழுப்ப காரணம் salafipublications.com
பல மார்க்க அறிஞர்களை குறித்தும் மாற்று கருத்துக்களை பதிந்து வைத்திருக்கிறார்கள். மௌலானா அபுல் அஃலா மௌதூதி உட்பட. அதில் கீழ்கண்ட லிங்கை அழுத்தினால் செய்யித் குதுப் அவர்களுக்கு எதிரான கருத்துக்களை காணலாம்.

http://www.salafipublications.com/sps/sp.cfm?secID=NDV&subsecID=NDV01&loadpage=displaysubsection.cfm

இதில் 15 தலைப்புகளின் கீழ் கருத்துக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஷேய்ஹ் பின்பாஸ், ஷெய்ஹ் ஸாலிஹ் அல் சுஹைமீ, ஷெய்ஹ் இப்னு உதைமீன் போன்ற பல அறிஞர்களுடைய கருத்துக்கள் அங்கே உள்ளது. இவற்றில் அனைவரும் அவரவருடைய கருத்து முரண்பாடுகளை இங்கே பதிவு செய்து வைத்திருக்கிறார்கள்.

ஆனால், யாருமே அலிஅஸ்மாவியின் இந்த கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம், அவர்கள் செய்யத் குதுப் ஜூம்ஆ தொழமறுத்தார் என்பதை ஏற்றுக் கொண்டிருந்தால் மற்ற கருத்துக்களுக்கு பதிலளிக்காமல் எளிதாக அவரை புறந்தள்ளியிருக்கலாம். காரணம், அல்லாஹ்வும் அவனது தூதரும் கட்டளையிட்ட ஒன்றை செய்ய மறுத்தால் அவர் முஸ்லிமாகவே இருக்க முடியாது என்று கூறியிருப்பார்கள். ஆனால், அவர்கள் அனைவருமே மற்ற விஷயங்களில் தான் கருத்து சொல்லியிருக்கிறார்களே தவிர இதை யாருமே சொல்லவில்லை.

ஆக, இப்போது அலிஅஸ்மாவியின் கருத்துக்களை நீங்கள் எப்படி ஏற்றுக்கொண்டீர்கள்? வேண்டாத பொண்டாட்டி கைப்பட்டா குற்றம் கால்பட்டா குற்றம் என்பது போல உங்களுக்கு செய்யித் குதுப் பிடிக்கவில்லை. எனவே அவரை எதிர்த்து யார் என்ன சொன்னாலும் ஏற்றுக் கொள்ளலாம் என்ற மூன்றாந்தர மனநிலையே காரணம் என நினைக்கின்றேன். இதே கேள்வியை நீங்கள் உங்களுக்கு தகவல் தந்து கொண்டிருக்கும் (காரணம், சொந்த சரக்கில்லை என்பது உங்களை படிக்கும்போதே தெரிகிறது) கூலிக்கு மாரடிக்கும்... ஸாரி சல்லிக்கு தஃவா செய்யும் ஷெய்கு மார்களிடமே கேளுங்கள். மீண்டும் ஏதவாது உளறுவார்கள். இங்கே வந்து கொட்டுங்கள். அதற்கும் பதில் தருகிறேன்.

Anonymous said...

அண்ணே.. மீண்டும் நாந்தாண்ணே...

// அண்ணே சுப்பர் கேள்விகளை கேட்டுள்ளீர்கள். இது மாதிரி கேள்விகளை இதுவரை இங்கு யாரும் கேட்கவில்லை.

நீங்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் ஒரே பதில், உங்களுக்கு ஒன்றும் புரியவில்லை என்பது தான். //


எனக்கு ஒன்றுமே புரியவில்லை என்பதல்ல இதற்கு பதில். உங்களுக்கு என்ன புரிஞ்சுருக்குன்னு உங்களுக்கே புரியலண்ணே.. அதுதாண்ணே இதுக்கு பதில்.

// உங்களுக்கு புரிவதற்க்காக ஒன்றரை சொல்லுகிறோன். ஒருவர் கருணாநிதி போல் வோடமிட்டுள்ளார் என்று சொன்னால், அவர் கருணாநிதியா? நீங்கள் சொல்ல வருவது அப்படித்தான் உள்ளது. //

ஒருவர் கருணாநிதி போல் வேடமிட்டுள்ளார் என்றால் அவர் கருணாநிதியான்னு கேக்கப்படாது. இப்படிச்சூடு..

1. சென்னையில் - முழு கருணாநிதி வோடம்
2. திருச்சியில் - முக்கால் கருணாநிதி வோடம்
3. மதுரையில் - அரை கருணாநிதி வோடம்
4. நெல்லையில் - கால் கருணாநிதி வோடம்
5. கன்னியாகுமரியில் - முழு ஜெயலலிதா வோடம்

ச்சே... ஒன்னாண்ட பேசிப்பேசி எனக்கும் வோடம் வோடம்னுதான் வருதுண்ணே... இப்போ இதை விளக்குங்கண்ணே... விளக்கிட்டு அடுத்ததுக்கு போனா போதுண்ணே..

சரி!!! அடுத்துண்ணே... தவ்ஹீது வாதிக்கு தவ்ஹீதுவாதி போலவும், சுன்னத் ஜமாஅத் ஆளுக்கு அவர்களைப்போலவும் வோடம் போடுறாங்கன்னு சொன்னீங்கள்ளா... அப்டீன்னா...

1. சவுதியில் எல்லோரும் முழு தவுஹீதுவாதிகளா இருக்கதுனால (அப்டியா இருக்காங்க!) முழு தவுஹீது வோடமாண்ணே?

2. துபையில முக்காவாசி பேரு தவுஹீதுவாதிகளா இருக்கதுனால முக்கா தவுஹீதாண்ணே? (அது எப்டிண்ணே.. முக்கா தவுஹீதுன்னா ஒரு ஆளு ஒரே ஆளுட்ட முக்கா தவுஹீதுமாதிரி வோடம் போடுவாரா அல்லது ஒரு ஆளு முக்காவாசி ஆளுட்ட தவுஹீது மாதிரியிம் கால்வாசி ஆளுட்ட மற்றது மாதிரியும் வோடம் போடுவாராண்ணே... புரியல்ல)

3. தமிழ்நாட்டுல்ல பாதிபேரு தவுஹீதுவாதிகளா இருக்கதுனாலயாண்ணே பாதி தவுஹீது வோடமும் மீது மற்றதுமாண்ணே (ஆமாண்ணே தவுஹீது இல்லாத மற்ற பாதிக்கு என்னண்ணே பேரு... போன பதிலிலேயே சொல்லலேண்ணே..)

4. கேரளாவில் கால் தவுஹீதுன்னா... அங்க அவ்வளவு பேருதான் தவுஹீதுவாதிகளாண்ணே... ஆமா! மொத்த தவுஹீதுவாதிகளும் தமிழ்நாட்டுல இருக்கும்போது அங்க யாருண்ணே இருப்பாக.. அப்டிதானே

5. கர்நாடகாவுல... பாவம் அங்க யாருமே தவுஹீதுவாதி இல்ல அப்டிதானண்ணே.. அதுநால தான் முழு தர்ஹா வோடமாண்ணே... அப்டி இவங்க தர்ஹா மாதிரி வோடம் போடுறாங்கண்ணா இவங்க தவுஹீது வாதியாதான்னே இருப்பாங்க.. உங்க எழுத்துக்கள போல ஒண்ணுமே புரியமாட்டேங்குண்ணே..

// இதை போல் இன்னும் ஏதோனும் அறிவுப்புர்வமான கேள்விகள் இருந்தால் அள்ளி போடுங்கள். //

அறிவாளிக்குதாண்ணே அறிவாளி மாதிரி கேள்வி கேட்கணும்... அதுஇல்லாதவனுக்கு முட்டாப்பய மாதிரிதாண்ணே கேள்வி கேட்கணும். இதுவும் ஒரு வோடந்தாண்ணே...

மறந்திடாம பதில் சொல்லுங்கண்ணே.. எல்லாத்துக்கும்

Anonymous said...

// நான் எந்த இயக்கத்தையும் சாராதவன் என்ற நீங்கள், இப்போது உளறி மாட்டிக் கொண்டிர்கள். //

நான் கேள்வி கேட்டதினால் நான்தான் அதிரை ஷைபுல்லாஹ் என்று அர்த்தமல்ல. பாவம், அந்த சகோதரருக்கு வீணாக பேச்சு கிடைத்திருக்கிறது. அதுபோகட்டும்.

// குறிப்பாக கேள்வி எண் 7. குலாம் முகம்மது மகள் திருமணத்திற்கு இயக்கத்தின் அனைத்து பொருப்புதாரிகளும் கலந்துகொண்டார்கள் என்று எழுதிவிட்டு யாரென்று கேட்டபோது அவர்களிடம் கேளுங்கள் என்று கூறி தப்பித்துக் கொள்வது ஏன்? அனைவருக்கும் தெரியும் என்று எப்படி சொல்லமுடியும். எனக்கு தெரியாது.. இப்போது சொல்... இயக்கத்தின் பொறுப்புதாரிகள் யாரெல்லாம் கலந்துகொண்டார்கள்?

நல்ல கேள்வி. மிரட்டி பார்க்காதே! சரியா. குலாம் முகம்மது மகள் திருமணத்தில் கலந்து கொண்ட பொருப்புதாரிகளின் பட்டியலை குலாமுமிடமும் உங்கள் இயக்கத்திடமும் தான் கேட்க வேண்டும். அது என் விட்டு கல்யாணம் இல்லை. உங்கள் இயக்கத்தின் பொருப்புதாரிகள் யாருமே இந்த திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை என்று சொல். பின்னர், நாம் யார் அந்த திருமணத்தில் கலந்து கொண்டார்கள் என்பதை வெளியிடுவோம். //

குலாம் முஹம்மது மகள் திருமணம் உன் வீட்டு திருமணம் இல்லை. அங்கு என்ன நடந்தது என்றும் தெரியவில்லை. யார்யார் கலந்து கொண்டார்கள் என்றும் தெரியவில்லை. கேட்டால் அவர்களைக் கேள் அவர்களைக் கேள் என்றால், நீயே கேட்டுவிட்டு பதிலைப் போடவேண்டியதுதானே. முகத்திரையைக் கிழிப்பேன் மூலத்திரையை கிழிப்பேன் என்று கூக்குரலிட்டு வந்துவிட்டாய். கிழித்துவிடவேண்டியதுதானே, அதை விட்டுவிட்டு நீ சொல்லு நான் சொல்றேன் என்ற விளையாட்டு எதற்காக? நான் பதில் சொன்னாலும் நீ சொல்வேன் என்றுதான் சொல்கிறாய். அதை முதலிலேயே சொல்லேன் பார்ப்போம். எந்தெந்த தலைவர்கள் எல்லாம் கலந்து கொண்டார்கள் என்று. அங்கு என்னென்ன உரைகளை அவர்கள் நிகழ்த்தினார்கள்? பதிலுக்கு காத்திருக்கிறேன்.

// கேள்வி 8-ற்கான பதிலில் குலாம் முகம்மது மகள் திருமணத்திற்கு இஸ்லாமிய சாயம் பூசுவது பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது என்று கூறிவிட்டு பதில் தெரியாமல் உளறுவது ஏன்? நான் கேட்கிறேன் எங்கே நடந்தது என்று அல்ல? அந்த பயிற்சியில் என்னென்ன விளக்கங்கள் கொடுக்கப்பட்டது என்று. அதில் நான் கலந்து கொள்ளவில்லை என்றோ அல்லது அவர்களிடம் கேளுங்கள் என்றோ கூறி உன் முகத்தில் நீயே கரியை பூசிக்கொள்ள வேண்டாம்.

நீ இரட்டை வேடம் போடுகிறாய். நீ இந்த இயக்கத்தில் இருக்கிறாயா? இல்லையா? இருக்கிறோன் என்றால், நீ எங்கு உள்ளாய், உனது பொருப்பு என்ன என்று சொல். இந்த இயக்கத்தில் நீ இல்லை என்றால், நான் வைத்த கருத்துக் இந்த இயக்கம் பதில் சொல்லாத பட்சத்தில், எனது வைத்த வாதம் உண்மை என்றாகிவிடும். அவர்கள் இதை மறுக்க வில்லை. நான் வைத்த வாதம் பொய் என்றால், "இந்த இயக்க தாயிக்களுக்கு இவ்வாறு பயிற்சி அளிக்கப்படவே இல்லை" என்று நீங்கள் கூறுங்கள், பார்ப்போம். //

நான் இயக்கத்தில் இருக்கிறேன், என்ன பொறுப்பில் எங்கு இருக்கிறேன் என்று சொன்னால் ..... என்றெல்லாம் நான் பூச்சாண்டி வேலையெல்லாம் காட்டமாட்டேன். அதுவல்ல இங்கு கேள்வி. இங்கு எழுப்பப்படும் கேள்வி, அந்த பயிற்சியில் என்னென்ன தகவல்கள் சொல்லிக் கொடுக்கப்பட்டது, இஸ்லாமிய திருமணமாக நடந்திராத (உன் கருத்துப்படி) அந்த திருமணத்திற்கு எப்படி சாயம் பூச பயிற்சி கொடுக்கப்பட்டது. சும்மா பூசி மெழுகக்கூடாது. தெளிவான பதில் தேவை.

// கேள்வி 16-க்கான பதிலில் அணிவகுப்பு எதற்கு என்று கேட்டதற்கு அது பற்றி எங்களுக்குத் தெரியும் என்று மட்டும் கூறி ஒளிந்து கொள்வது ஏன்? விளக்கம் கூற வேண்டியது தானே?

உண்மையையே பேசும் உத்தமானே. இந்த அணிவகுப்பின் நோக்கத்தை நீங்களே சொல்லுங்கள். //

நான் உத்தமனா இல்லையா என்பதல்ல கேள்வி. அணிவகுப்பு எதற்கு என்று யாருக்குமே தெரிந்திராத அந்த ரகசிய விளக்கம் உனக்கு தெரிகிறது என்றால் அதை சொல்ல வேண்டியது தானே. நான் சொன்னால் உத்தமன் சொல்லாவிட்டால் ஊத்தமனா? உனக்கு தெரியுமா தெரியாதா? தெரியாதென்றால் எதற்காக இப்படி நடிக்கிறாய்? எவ்வளவு கூலி?

சத்தியவான் said...

அறிவிப்பு

நாம் மேலே எழுதிய நமது ஆக்கத்திற்கு பதில் அளிக்க முடியாமல் திணரி திண்டாடி கொண்டு இருப்பதை நாம் அறிந்ததே. சிலர் பல கேள்விகளை ஆரம்பத்தில் கேட்டு விட்டு, நாம் அதற்கு சரியான ஆதாரத்தை முன் வைத்தவுடன், பதறி ஒடிவிட்டார்கள். விபரம் தெரியாத சிலர் ஏதோ கேள்வி கேட்க வேண்டும் என்பதற்க்காக உங்கள் பெயர் என்ன, உங்கள் ஊர் என்று கேட்டு அழைகிறார்கள். இது போன்ற சம்பந்மில்லாத கேள்விகளுக்கு இங்கு பதில் அளிக்கப்படாது.

நாம் கேட்டுள்ள கேள்விகள் கிழே,

1. குலாமுக்கு 22 ஆயிரம் சம்பளம் கொடுத்தை எப்படி ஏற்று கொள்ள முடியும் (இது பொய் என்றால் ஆதாரத்துடன் நிருபிக்கவும்)

2. ஜும்மா தொழத செய்யது குதுப்பை தூக்கி பிடித்து அழைவது ஏன் (இது பொய் என்றால் ஆதாரத்துடன் செய்யது குதுப் ஜும்மா தொழுதுள்ளார் என்று நிருபிக்கவும்)

3. ஜனநாயகம் ஷிர்க் என்று அன்று மேடை தோறும் முழங்கி விட்டு, இன்று அதை தனது வழியாக தேர்ந்தொடுத்து அந்தர் பெல்டி அடித்தது ஏன்?

4. குலாம் தனது மகளின் திருமணத்தை வரதட்சனை கொடுத்து, தனது விட்டு பெண்களை மேடையில் ஃபர்தா இல்லாமல் மேடை ஏற்றியதை அன்று கண்டித்து அவரை அந்த இயக்கத்தை விட்டு வெளியேற்றாமல், இன்று அதை குறை கூறி அழைவது ஏன்? (இது பொய் என்றால் ஆதாரத்துடன் நிருபிக்கவும்)

5. 'நான் இஸ்லாமிய ஆட்சி அமைத்து வெற்றியாளனக மதினா மற்றும் மக்காவில் நுழையும் போது செய்ய வேண்டிய முதல் காரியம் அபுபக்கர் (ரலி) மற்றும் உமர் (ரலி) அவர்களின் ஜனாஸாவை தோண்டி எடுப்பது தான் (நவுதுபில்லாஹ்)' என்று சொன்ன இமாம் (?) கொமைனியின் புரட்சிக்கு, இஸ்லாமிய சாயம் புசியது ஏன்?

6. இசை விஷயத்தில் தமிழகத்தில் ஒரு நிலைபாட்டிலும், கேரளத்தில் ஒரு நிலைபாட்டிலும், யூசுப் அல் கர்ளாவி ஒரு நிலைபாட்டிலும் உள்ளார்கள். இதில் எது சரி என்று மக்களுக்கு பகிரங்கமா அறிவிக்கவும்!

7. உங்கள் இயக்கத்தின் அகிதா (அதாவது மத்ஹப், தர்ஹா வழிபாடு போன்ற விஷயங்களில் தங்களின் கொள்கை என்ன) என்ன என்பதை மக்களுக்கு வோடமிடாமல் விளக்கவும்.

மேலே உள்ள அனைத்து கேள்விகளும் நமது ஆக்கத்துக்கு சம்பந்தபட்டது. இதற்கு இது வரை இங்கும் யாரினாலும் பதில் அளிக்க முடியவில்லை. ஒரு போதும் பதில அளிக்கவும் முடியாது. நாம் மேலே கேட்டுள்ள கேள்விகளுக்கு அப்பாற்பட்டு கேட்டுக்கப்படும் கேள்விகளுக்கு, நம்மால் பதில் அளிக்க மட மாட்டாது.

சத்தியாமே வெல்லும்!

சத்தியவான்..

Anonymous said...

அண்ணே..அண்ணே..

மீண்டும் நாந்தாண்ணே...

//நாம் மேலே எழுதிய நமது ஆக்கத்திற்கு பதில் அளிக்க முடியாமல் திணரி திண்டாடி கொண்டு இருப்பதை நாம் அறிந்ததே.

நாம் மேலே கேட்டுள்ள கேள்விகளுக்கு அப்பாற்பட்டு கேட்டுக்கப்படும் கேள்விகளுக்கு, நம்மால் பதில் அளிக்க மட மாட்டாது.
//


என்னண்ணே... இப்புடி குப்புற கவுந்துட்டியே.. ச்சீ போண்ணே.. நா ஒன்ன என்னமோன்னுல்லா நெனச்சுட்டிருந்தேன்.. ஏன்ணே.. பதில் சொல்ல முடியாமப் போச்சா... கவலப்படாதண்ணே...

ஆமாண்ணே.. மொத்தமா 7 கேள்விகள கேட்டிருக்கியே... மொத்த சரக்குமே இம்புட்டுத்தானாண்ணே.. தொடரும்.. வளரும்னெல்லாம் மெகா தொடர்போல மொளக்கிட்டு இப்ப என்னண்ணே உப்பு சப்பில்லாம பண்ணிப்புட்டியே.. பாவமண்ணே நீ... ஒன் நெலமய நெனச்சா எனக்கு அழுக அழுகயா வருதண்ணே..

பாவமண்ணே நீ... புலி வால புடிச்சது போல ஆயிட்டியேண்ணே...அவ்வ்வ்வ்ங்

ஆனாலும், நல்லாத்தாண்ணே நடிக்குற..

// விபரம் தெரியாத சிலர் ஏதோ கேள்வி கேட்க வேண்டும் என்பதற்க்காக உங்கள் பெயர் என்ன, உங்கள் ஊர் என்று கேட்டு அழைகிறார்கள். இது போன்ற சம்பந்மில்லாத கேள்விகளுக்கு இங்கு பதில் அளிக்கப்படாது. //

USF - ன்னு ஒருத்தரு நீயாரு, உன்பெயரென்னன்னு கேட்டாரண்ணே... அதுக்கப்புறம் வேற யாருமே கேக்கலண்ணே.. ஆனா நீதான் குலாம் முகம்மது மகள் திருமணத்திற்கான பயிற்சி பற்றி உன்னிடம் கேள்வி கேட்ட ஆள மெரட்டுறது மாதிரி நீ யாரு உன் பொருப்பு என்னண்ணெல்லாம் கேட்டண்ணே... வேற யாரண்ணே உன்னாண்ட பேரென்ன, ஊரென்னண்ணு கேட்டாங்க... ஒருவேள தூக்கத்துல கனவுல கேட்டாகளோ... டமாஸ் பண்ணாதண்ணே...

அண்ணே... உன்னோட கேள்விக்கெல்லாம் பதில் சொல்லுக்கு முன்னால... உனக்கு புத்தியே இல்லண்ணே... இல்லாங்காட்டி, நீயாட்டு ஒளரிட்டு ஆதாரத்தோடு நிருபிக்கணும், ஆதாரத்தோடு நிருபிக்கணும்னு சொல்றியே... நீ தானே ஆதாரோத்தோட நிரூபிச்சிட்டு இதை மறுக்க முடியுமா, ஆதாரத்த காட்டுனு கேக்கணும்... என்னண்ணே நீ..

உன்னோட எல்லா கேள்விக்கும் பதில் சொல்றண்ணே.. அதுக்கு முன்னாடி ஏற்கனவே 2 பின்னூட்டம் அது உன்னோட 7 கேள்விகள் சம்பந்தப் பட்டது இருக்குதுண்ணே... அதுக்கு பதில் சொல்லுண்ணே...

// இதற்கு இது வரை இங்கும் யாரினாலும் பதில் அளிக்க முடியவில்லை. ஒரு போதும் பதில அளிக்கவும் முடியாது. //

தற்பெரும வேண்டாண்ணே... நீயாட்டே முடிவெடுத்தா எப்டிண்ணே... இனிதாண்னே நான் தொடங்கவே போறேன்... அப்புறமா சொல்லுணே...

இந்த கமெண்டுக்கு பதில பாத்துட்டு நான் பதில் சொல்றண்ணே... எல்லாத்துக்கும்..

அதுவரைக்கும்... வர்ர்ட்ட்டா

Anonymous said...

அண்ணே..அண்ணே..

மீண்டும் நாந்தாண்ணே...

//நாம் மேலே எழுதிய நமது ஆக்கத்திற்கு பதில் அளிக்க முடியாமல் திணரி திண்டாடி கொண்டு இருப்பதை நாம் அறிந்ததே.

நாம் மேலே கேட்டுள்ள கேள்விகளுக்கு அப்பாற்பட்டு கேட்டுக்கப்படும் கேள்விகளுக்கு, நம்மால் பதில் அளிக்க மட மாட்டாது.
//


என்னண்ணே... இப்புடி குப்புற கவுந்துட்டியே.. ச்சீ போண்ணே.. நா ஒன்ன என்னமோன்னுல்லா நெனச்சுட்டிருந்தேன்.. ஏன்ணே.. பதில் சொல்ல முடியாமப் போச்சா... கவலப்படாதண்ணே...

ஆமாண்ணே.. மொத்தமா 7 கேள்விகள கேட்டிருக்கியே... மொத்த சரக்குமே இம்புட்டுத்தானாண்ணே.. தொடரும்.. வளரும்னெல்லாம் மெகா தொடர்போல மொளக்கிட்டு இப்ப என்னண்ணே உப்பு சப்பில்லாம பண்ணிப்புட்டியே.. பாவமண்ணே நீ... ஒன் நெலமய நெனச்சா எனக்கு அழுக அழுகயா வருதண்ணே..

பாவமண்ணே நீ... புலி வால புடிச்சது போல ஆயிட்டியேண்ணே...அவ்வ்வ்வ்ங்

ஆனாலும், நல்லாத்தாண்ணே நடிக்குற..

// விபரம் தெரியாத சிலர் ஏதோ கேள்வி கேட்க வேண்டும் என்பதற்க்காக உங்கள் பெயர் என்ன, உங்கள் ஊர் என்று கேட்டு அழைகிறார்கள். இது போன்ற சம்பந்மில்லாத கேள்விகளுக்கு இங்கு பதில் அளிக்கப்படாது. //

USF - ன்னு ஒருத்தரு நீயாரு, உன்பெயரென்னன்னு கேட்டாரண்ணே... அதுக்கப்புறம் வேற யாருமே கேக்கலண்ணே.. ஆனா நீதான் குலாம் முகம்மது மகள் திருமணத்திற்கான பயிற்சி பற்றி உன்னிடம் கேள்வி கேட்ட ஆள மெரட்டுறது மாதிரி நீ யாரு உன் பொருப்பு என்னண்ணெல்லாம் கேட்டண்ணே... வேற யாரண்ணே உன்னாண்ட பேரென்ன, ஊரென்னண்ணு கேட்டாங்க... ஒருவேள தூக்கத்துல கனவுல கேட்டாகளோ... டமாஸ் பண்ணாதண்ணே...

அண்ணே... உன்னோட கேள்விக்கெல்லாம் பதில் சொல்லுக்கு முன்னால... உனக்கு புத்தியே இல்லண்ணே... இல்லாங்காட்டி, நீயாட்டு ஒளரிட்டு ஆதாரத்தோடு நிருபிக்கணும், ஆதாரத்தோடு நிருபிக்கணும்னு சொல்றியே... நீ தானே ஆதாரோத்தோட நிரூபிச்சிட்டு இதை மறுக்க முடியுமா, ஆதாரத்த காட்டுனு கேக்கணும்... என்னண்ணே நீ..

உன்னோட எல்லா கேள்விக்கும் பதில் சொல்றண்ணே.. அதுக்கு முன்னாடி ஏற்கனவே 2 பின்னூட்டம் அது உன்னோட 7 கேள்விகள் சம்பந்தப் பட்டது இருக்குதுண்ணே... அதுக்கு பதில் சொல்லுண்ணே...

// இதற்கு இது வரை இங்கும் யாரினாலும் பதில் அளிக்க முடியவில்லை. ஒரு போதும் பதில அளிக்கவும் முடியாது. //

தற்பெரும வேண்டாண்ணே... நீயாட்டே முடிவெடுத்தா எப்டிண்ணே... இனிதாண்னே நான் தொடங்கவே போறேன்... அப்புறமா சொல்லுணே...

இந்த கமெண்டுக்கு பதில பாத்துட்டு நான் பதில் சொல்றண்ணே... எல்லாத்துக்கும்..

அதுவரைக்கும்... வர்ர்ட்ட்டா