Friday, April 25, 2008

நலம் பெற வேண்டி பிரார்த்திக்கின்றோம்

இறைவனின் திருப்பெயரால்

நலம் பெற வேண்டி பிரார்த்திக்கின்றோம்


அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

கோவை தொடர் குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்குண்டு நீதிக்கு புறம்பாக தண்டனை விதிக்கப்பட்டு றூற்றுக்கும் மேற்ப்பட்ட இளைஞர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் முலாக் சிறைகளில் அடைபட்டு கிடப்பதை தாங்கள் அறிவீர்கள்.

கொலை கொள்ளை, மோசடி, வழிப்பறி போன்ற சமூக விரோத செயல்களை புரிந்து இவர்கள் சிறை செல்லவில்லை, மாறாக சமூக நலனில் அக்கறையும், தன்னலம் கருதா அர்ப்பணிப்பும் தான் இவர்களின் சிறைவாசத்திற்கான காரனமாகும்.

சிறைக்கூட சித்திரவதைகள்தந்த பரிசாக இவர்களில் நூற்றுக்கணக்கானோனர் தீராத வியாதிகளுக்கு ஆட்பட்டு அவதிப்படுகின்றனர். சபூர் ரஹ்மான் என்ற ஆயுள் கைதி கோவை மத்திய சிறைச்சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் மரணமடைந்தார். மஸ்த்தகீர் என்பவரும் இறந்து சில வருடங்கள் ஆகின்றன.

இப்போது அபுத்தாஹிர் என்ற இளம் வயது ஆயள் கைதி சிறுநீரகங்கள் இரண்டும் பழுதாகி தனியார் மருத்துவமனை ஒன்றில் அவசர சிகிச்சை பிரிவில் சோக்கப்பட்டு மரணத்தோடு போராடிக் கொண்டிருக்கின்றார்.

முஸ்லிம் அல்லாத ஆயள் தண்டனைக் கைதிகள் 10 வருடங்கள் நிறைவடைந்தால் விடுதலை பெற்று சுதந்திர காற்றை சுவாசிக்கின்றனர். ஆனால் முஸ்லிம் ஆயுள் தண்டனைக் கைதிகள் மட்டும் 10 ஆண்டுகள் கழிந்தும் விடுதலை பெறாமல் உயிர் காற்றை சுவாசிக்க கூட வழியின்றி மருத்துவ மனைகளுக்கும், மண்ணரைகளுக்கும் சென்று கொண்டிருக்கின்றனர். அரசின் இவ்வகை அப்பட்டமான போக்கை, அநீதியை கேட்போர் யார்....?

சகோதரர் அபுதாஹிருக்கு தொடாந்து டயாலிஸிஸ் செய்யப்படுகின்றது. சமுதாயம் நலமுடன் வாழ தன் அர்ப்பணித்த இந்த சகோதரரின் நலத்திற்காக சமுதாயமே உன் கரங்கள் உயர, கல்புகள் உருக எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்து உதவிட வேண்டுகின்றோம்.


சிறுபான்மை உதவி அறக்கட்டளை (CTM)
தமிழகமெங்கும் முஸ்லிம் சிறைவாசிகளின் வழக்குகளை நடத்தி வரும் தமிழக முஸ்லிம் நல அமைப்பு

குறிப்பு : இந்த சகோதரருக்காக இது வரை 1.5 லட்சத்திற்கும் அதிகமாக செலவு செய்யப்பட்டுள்ளது, ஒவ்வொரு நாளும் ரூ.800 ல் இருந்து 1200 வரை செலவாகிறது. கருனை உளம் படைத்த சகோதரர்கள் இரன்டு சிறுநீரகங்களும் பழுதாகி எவ்வித உதவியும் இன்றி மரணத்தோடு போராடிக் கொண்டிருக்கும் இவருக்கு உதவ என்னினால் தயவு செய்து சிறுபான்மை உதவி அறக்கட்டளையை தொடர்பு கொள்ளவும்.

1 comment:

தாருல்ஸஃபா said...

சகோதரர் அபூதாஹிருக்கு வல்ல ரஹ்மான், தாயின் பாசத்தைவிட 70மடங்கு அதிகமாக கருணை காட்டும் வல்ல இறைவன் நல்ல குணத்தையும், சமுதாயத்தில் மீண்டும் நலமுடன் வாழ துஆச் செய்கிறோம்.