Saturday, August 25, 2007

பிஜேயின் கைதால் முஸ்லிம்கள் மகிழ்ச்சியா?

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்


அன்புள்ள நண்பர் சகோ.முஹம்மதுவுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. ..



இந்த வலைத்தளத்தில் வெளியான 'சென்ற இடமெல்லாம் செருப்பு' என்ற செய்திக்கு தாங்கள் எழுதிய விமரிசனம் கண்டேன். தங்களின் மேலான பார்வைக்கு கீழ்காணும் தகவல்களைத் தர விரும்புகிறேன்.

முதலாவதாக, ஒருவரைப் பற்றி அறிய வேண்டுமானால் அவரது நண்பரைப் பற்றி அறிவது நல்லது. அந்த அடிப்படையில் தாங்கள் மனம் வருந்தும் அளவிற்கு அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள திருவாளர் பிஜேயின் தற்கால உற்ற நண்பர் யார் தெரியுமா?

ரதி மீனா சொகுசு பஸ்ஸில், இஸ்லாத்தை கற்க வந்த நந்தினி என்ற பெண்ணோடு சல்லாபித்தபடி பிரயாணித்த சகா, திருவாளர் எஸ்.எம்.பாக்கர் அவர்கள் தான். இவரது வீர தீர பிரதாபங்களை சரச சல்லாபங்களைப் பற்றி அறிந்து கொள்ள ஆசைப்பட்டால் கடலூர் நிர்வாகிகளிடமோ ஒய்.கே.மேன்ஸன் (மண்ணடி) நிர்வாகிகளிடமோ கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.

இப்ப மேட்டருக்கு வாங்க.

இந்த செய்தியில் (சென்ற இடமெல்லாம் செருப்பு) மூலமாக செய்தியாளர் சந்தோசப்படுவதாக தாங்கள் கருதினால் அது தவறாக கூட இருக்கலாம். ஒருவேளை அந்த செய்தியை வெளியிட்டவர், கற்றவருக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு என கேள்விப்பட்டுள்ளோமே, ஆனால் கற்றவர் என பலராலும் நம்பப்படுகிற ஒருவர் ஒவ்வொரு நாட்டிற்கு செல்லும் பொழுதும் அங்குள்ள காவல் துறையினராலும் சுங்க குடியேற்ற அதிகாரிகளாலும் கைது செய்யப்படுவதும், விசாரிக்கப்படுவதும் பின்னர் உடனடியாக கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாக வெளியேற்றப்படுவதும் தொடர்கதையாவதால் ஆதங்கத்தோடு கூட அந்த தலைப்பை இட்டிருக்கலாம்.

என்றாலும் சகோதரரே தாங்கள் எண்ணுவது போல் சந்தோஷப்படக்கூடியவர்களும் இல்லாமலில்லை.

ஏனெனில், அல்லாஹ்விற்காக ஒருவரை விரும்புவதும், அல்லாஹ்விற்காக ஒருவரை வெறுப்பதும் ஒரு உண்மை விசுவாசியின் பண்பு என அவர்கள் அறிந்துள்ளது தான் காரணம்.

இஸ்லாத்தின் அடிப்படைகளில் ஒன்றான ஸகாத் விஷயத்தில் சமுதாயத்தை வழிகெடுக்க முனைந்தவர் முஸ்லீமாக இருந்தாலும், முஸ்லீம் அல்லாதவராக இருந்தாலும் கைது செய்யப்பட்டால் எந்த ஒரு முஸ்லீமும் சந்தோஷப்படவே செய்வான்.

அல்லாஹ் அருளிய வேதமான அல்குர்ஆனிற்கு தான்தோன்றித்தனமாக விளக்கம் எழுதியவர், அதிலே நபி ஸுலைமான் (அலை) அவர்களை கண்ணியக்குறைவாக எழுதியவர், அவர் முஸ்லீமாக இருந்தாலும், முஸ்லீம் அல்லாதவராக இருந்தாலும் கைது செய்யப்பட்டால் எந்த ஒரு முஸ்லீமும் சந்தோஷப்படவே செய்வான்.

அகிலத்தின் அருட்கொடை, அண்ணல் எம் பெருமான் முஹம்மது ரஸுல் ஸல் அவர்களின் நேரடி கண்காணிப்பில் பயிற்சி பெற்ற அருமை நபித்தோழர் அம்ர் பின் அல் ஆஸ் (ரளி) அவர்களை, ஒருவர் கிரிமினல் என்று கேவலமாக விமர்சிப்பார் எனில் அவர் முஸ்லீமாக இருந்தாலும், முஸ்லீம் அல்லாதவராக இருந்தாலும் கைது செய்யப்படுவார் எனில் அதை குறித்து ஒரு உண்மை முஸ்லீம் சந்தோஷப்படவே செய்வான்.

அம்ர் பின் அல் ஆஸ் (ரளி) அவர்களை மட்டுமல்ல இன்னும் ஏராளமான நபித்தோழர்களையும் கண்ணியக்குறைவான வார்த்தைகளில் விமர்சிப்பார் எனில் அவர் முஸ்லீமாக இருந்தாலும், முஸ்லீம் அல்லாதவராக இருந்தாலும் கைது செய்தியைக் கேட்டு ஒரு முஸ்லீம் சந்தோஷப்படாமல் இருக்க முடியுமா?

கஸ்டோடியன் ஆஃப் அபூஸானி (பாக்கரின் பாதுகாவலன்)கைது செய்யப்பட்டதை கேட்ட முஸ்லீம் சந்தோஷப்படாமல் என்ன செய்வார்?

பொய்யான காரணங்களைக் கூறி சமுதாயத்தை பிளவுபடுத்தி வரும் யூதர், பாப்பாத்தியின் கைக்கூலி, கருங்காலி ஒருவர் அவர் முஸ்லீமாக இருந்தாலும், முஸ்லீம் அல்லாதவராக இருந்தாலும் கைது செய்யப்படுவார் எனில் அதை குறித்து ஒரு உண்மை முஸ்லீம் சந்தோஷப்படவே செய்வான்.

அரசியல்வாதிகளை மிஞ்சும் வகையில் அறைக்குள் ஒன்றும், அம்பலத்தில் ஒன்றுமாக உலவி (உளறி?!!!) வரும் ஒருவர் முஸ்லீமாக இருந்தாலும், முஸ்லீம் அல்லாதவராக இருந்தாலும் அவர் கைது செய்யப்பட்டால் எந்த ஒரு முஸ்லீமும் சந்தோஷப்படவே செய்வான்.

சமுதாயத்தின் பொருளாதாரத்தை சுனாமியின் பெயரால் வசூலித்து தனது சொந்த கட்சியை வளப்படுத்த, கட்சியின் குண்டர்களுக்கு சீருடைக்காக செலவழிப்பார் எனில், அவர் கைது செய்யப்பட்டார் எனில் அதைக் குறித்து எந்த ஒரு முஸ்லிமும் சந்தோஷப்படவே செய்வான்.

இப்படி அவரது கைது குறித்து முஸ்லிம்கள் சந்தோஷப்பட ஏராளமான காரணங்களும் இருக்கத்தான் செய்கிறது.

எனவே அதற்காக தாங்கள் வருத்தப்படாமல், தயவு செய்து புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.

வல்ல அல்லாஹ் அனைவருக்கும் நேர்வழி காட்டப் போதுமானவன்.

வஸ்ஸலாம்
அன்புடன் - அபூதாஹிர்

1 comment:

தமிழ் முஸ்லிம் முன்னேற்றக் கழகம்-குவைத் said...

அஸ்ஸலாமு அலைக்கும் நண்பரே.., தாங்கள் இன்னும் பல விசயங்களை விட்டுவிட்டீர்கள். அதை நினைவுபடுத்துகிறேன்.
கோவை சிறைவாசிகளுக்கு எதிரான அரசுதரப்பு சாட்சி
ஹாமீது பக்ரி மீதான குற்றச்சாட்டு
பழ்லுல் இலாஹி மீதான குற்றச்சாட்டு
எஸ். கமாலுதீன் மதனி மீதான குற்றச்சாட்டு
தமுமுக மீதான குற்றச்சாட்டு
அம்மையார் அறிவித்த ஜனாஸா கமிஷனுக்கு ஆதரவு
சிறைவாசிகள் யாரும் வெளிவரக்கூடாது என்ற அறைகூவல்
குர்ஆனுக்குள் காதல் கடிதம் பறிமாற்றம்
விபச்சார குற்றத்திற்கு 32 நாட்கள் தண்டனை
தேர்தல் ஆதாய ஒப்பந்தத்தை ஹூதையியா உடன்படிக்கையோடு ஒப்பிட்டது
ஹ்ஹ்ஹூம் மூச்சு வாங்குது பிறகு மற்றதையெல்லாம் அறியத்தருகிறேன்.
Visit: www.q8tmmk.blogspot.com
- அமானுல்லாஹ் - குவைத்