Tuesday, July 03, 2007

தம்மாமில் இஸ்லாமிய கருத்தரங்கம்!!

شــــعبة توعية الجـــــاليات بالدمـــام
برنامج باللغة التاميلية في شــــعبة توعية الجـــــاليات بالدمـــام - الجمعة 21/06/1428 هــ


தம்மாம் மாநகரில்
அரை நாள் இஸ்லாமிய கருத்தரங்கம்

06.07.2007 வெள்ளிக்கிழமை
பிற்பகல் 1.15 மணி மதல் மஃரிப் வரை

இடம் : இஸ்லாமிய தஃவா சென்டர் (I.D.G.C) -தம்மாம் (Abdullah Fouad Area)

இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ள சிறப்பு விருந்தினர்களான

அஷ்ஷெய்க் : எஸ். கமாலுத்தீன் மதனி
அஷ்ஷெய்க : கே. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி


ஆகியோரின் இஸ்லாமிய சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும்

இச்சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று ஈருலக நற்பயன் பெற அன்புடன் அழைக்கின்றோம்

  • பென்களுக்கு தனி இட வசதி உள்ளது
  • மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
  • வாகன வசதி செய்யப்பட்டுள்ளது

ஏற்பாடு : இஸ்லாமிய தஃவா சென்டர் (I.D.G.C) -தம்மாம்
Tel. 03 8272772 / 8054445



2 comments:

Unknown said...

அனைவருக்கும் வணக்கம்.

நான் மதங்களுக்கு அப்பாற்பட்டவன். மதங்கள் அனைத்துமே ஏதோ ஒரு வகையில் மக்களிடையே பகைமையையும், மூட நம்பிக்கைகளையும் வளர்க்கின்றன என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவன்.

இஸ்லாம் மதத்தை வளர்க்க பி.ஜெய்னுலாபிதீன் என்ற இஸ்லாமிய பெரியவர் நடத்தும் அனைத்து நிகழ்ச்சிகளையும் நான் தவறாமல் பார்ப்பேன்.

சமீபத்தில் அவர் நடத்திய முக்காபுலா என்ற சாபம் இடும் நிகழ்ச்சியை பார்த்தேன். அதில் எழுந்த சந்தேகமே இக்கேள்வி.

கிறிஸ்த்தவத்தில் ஆதி மனிதன் செய்த பாவம் எல்லா மனிதர்கள் மீதும் தொடர்ந்து இருந்து வந்ததை தன் இரத்தத்தால் களையவே இயேசு சிலுவையில் உயிர் நீத்தார் என்ற கிறிஸ்த்தவ சித்தாந்தத்தை, "ஒருவர் பாவத்தை இன்னொருவர் சுமக்க இயலாது" என அறிவுக்கு இணங்கும் வகையில் அது தா நியாயமும் என இதே பி. ஜெயினுலாபித்தீன் பெரியவர் அறிவுப்பூர்வமாக வாதிட்டுள்ளது எனக்கு தெரியும்.

அவ்வாறிருக்க, இஸ்லாம் அறிவுப்பூர்வமான மார்க்கம் எனில், ஆண்கள் தங்களுக்குள் உள்ள பிரச்சனைகளை நியாயப்படுத்த தங்களின் மனைவி மற்றும் ஒன்றும் அறியா பச்சிளம் குழந்தைகளின் மீது கடவுளின் சாபம் உண்டாகட்டுமாக என சாபமிடுவது எந்த வகையில் அறிவுக்கு பொருத்தமாக இருக்கிறது என விளக்க இயலுமா?

இவ்வாறு சாபம் கோர இஸ்லாம் தான் வழிகாட்டுகிறது எனில், இஸ்லாம் எந்த வகையில் அறிவுப்பூர்வமான மார்க்கமாகிறது என்பதையும் சற்று விளக்குங்களேன்.

நன்றி.

Azmin Aiyoob said...

சுதர்சன் உங்களது ஆர்வம் பாராட்டத்தக்கது,
முபாஹலா பற்றிய உங்களது வினா இந்த இடத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது என நான் கருதுகின்றேன்.மிக ஆரம்பத்தில் P.J அவர்களுடைய முற்போக்கில்லாத,சர்ச்சைகள் மிகுந்த நடத்தைகளுடன் எனக்கு உடன்பாடு எப்பொழுதும் இருந்ததில்லை. எனினும் உங்களது ஆர்வத்திற்கு மதிப்பளித்து இங்கு பதில் தர விளைகின்றேன், எனது பதில் முழுமையானதாக இருக்காது இதற்கு மாற்றுக்கருத்திகளும் இருக்க முடியும்.(அல்லாஹ் நன்கு அறிந்தவன்).
உங்களது வினாவில் இரண்டு அம்சங்களை என்னால் உணர முடிகின்றது.
01- பாவங்களை சுமத்தல்
02-அழிவை வேண்டி சாபமிடுதல்.
பாவங்களை சுமத்தல் என்பதில் இஸ்லாம் மிக அறிவு பூர்வமான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது.அதுபற்றிய விளக்கம் இங்கு அவசியப்படாது.

ஆனால் அழிவை வேண்டி சாபமிடுதல் என்ற அம்சம் மிகவும் இக்கட்டான சூழ் நிலையின் போது மார்க்கத்தையும், அதனை பின்பற்றுவோரையும் பாதுகாக்கவென மேற்கொள்ளப்படும்"பரஸ்பர சாபம் வேண்டும் பிரார்த்தனை" யாகும். இங்கு இரண்டு சந்தர்ப்பங்கள் பொதுவாக முன்வைக்கப்படுகின்றது
01- இஸ்லாம் தவிர்ந்த் ஏனைய வேதமுடய சாராருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்படாத சந்தர்ப்பம்.
02- முஸ்லிம்களையும், இஸ்லாத்தையும் பாதுகாக்க வேண்டிய சந்தர்ப்பம்.

இவை தவிர்ந்த சாதாரண சந்தர்ப்பங்களில் முபாஹலா செல்லுபடியற்றது.

இங்கு இரு சாராரும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து தாம் இருக்கும்/சார்ந்துள்ள அம்சம் மிகவும் சரியானது என அடையாளம் கண்டு, தாம் பிழை எனில் தாம் நம்பிக்கை வைத்துள்ள அல்லாஹ்விடமிருந்து சாபத்தை தாமே வேண்டிப் பிரார்த்தனை புரிதல் முபாஹலா எனப்படுகின்றது.

தம்மீது தாமே சாபம் வேண்டுதல் என்பது- நம்பிக்கையின் உச்ச அளவைக்காட்டப்போதுமானது.
இஸ்லாத்தின் மீது கொண்டுள்ள அன்பு தனது உயிர்,தனது குடும்பத்தின் வாழ்வு என்பவற்றையும் மிகைத்தது என்பதாகவே முபாஹலா அமையும்.

இது எனது சாதாரண பதில் மட்டுமே. விரிவான பதில் வேண்டின் தயவுசெய்து விண்ணப்பிக்கவும்.
நன்றி
அல்லாஹ் நன்கு அறிந்தவன்.
அ.அஸ்மின்