Tuesday, June 26, 2007

கடலூர் முபாஹலா - வெளிச்சத்திற்கு வந்த உண்மைகள் (VIDEO)

குறிப்பு : அன்பு சகோதரர்களும் நடுநிலையாளர்களும் இந்த வீடியோவை பார்ப்பதற்கு முன்போ அல்லது பார்த்த பின்போ இந்த கட்டுரையை கட்டாயம் வாசிக்க வேண்டும் அப்போதுதான் பி.ஜே யின் பித்தளாட்டங்கள் உங்களுக்கு புறியும்.
கடலூர் சம்பந்தமான அனைத்தையும் இன்டர்நெட்டிலும் வின் டி.வி யிலுமாக வெளியட்ட பி.ஜே கும்பல் அதன் இறுதி முடிவான இந்த முபாஹலா சிடி க்களை மட்டும் வெளியிடாதது ஏன்? சந்தி சிரித்து விடும் என்பதாலா? ததஜ வினரிடம் இந்த கேள்வியை கேளுங்கள்.
கடலூர் முபாஹலா நாடகமும் வெளிச்சத்திற்கு வந்த உண்மைகளும்!!

வார்த்தையால் விளையாடுவதில் மன்னனான திருவாளர் பி.ஜெ. கடலூரில் செய்த முபாஹலா முதல் பாகத்தின் வார்த்தைகளை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை தந்துள்ளோம்.

த.த.ஜ. தலைமை நடத்தும் மதரஸாவில் ஆசிரியையாக உள்ள நஜ்முன்னிஸா என்ற ஆலிமா தலையில் எல்லாவற்றையும் கட்டி விட்டதைப் பாருங்கள்.

பி.ஜெ. கடலூரில் செய்த முபாஹலா முதல் பாகத்தின் வார்த்தைகள்.

இறைவா பாக்கர் தொடர்பாக லால் பேட்டையிலே நான் சொல்லும்பொழுது பாக்கரைப் பற்றியோ யாரைப் பற்றியோ விபச்சாரம் செய்தார்கள் என்று குற்றம் சுமத்துவது மார்க்கத்திலே 4 சாட்சிகள் இல்லாமல் சொல்லக் கூடாது என்ற குர்ஆன் வசனத்தைச் சொல்லி அதை தெளிவாகச் சொன்னதை நீ அறிவாய்.

இதை சிதம்பரத்திலே நடத்திய பொதுக்குழுவில் நேரடியாகவே நான் சொன்னதை கேட்ட இரண்டு சாட்சிகளே முன் மொழிந்ததை இறைவா நீ அறிவாய். இதிலே நான் சொன்ன ஒரு விஷயத்தை சொல்வில்லை என்று இவர்கள் பொய் சொல்லி இருந்தால் பொய் சொன்னவர்கள் மீதும் அவர்களுடைய குடும்பத்தினர் மீதும் உன்னுடைய சாபத்தை இறக்குவாயாக என்று உன்னுடைய திருக்குர்ஆனுடைய போதனைகளின் அடிப்படையிலே நான் துஆச் செய்கிறேன்.

அடுத்ததாக பாக்கர் அவர்கள் சில செய்திகளை பாக்கர் சம்பந்தமான சில செய்திகளை நஜ்முன்னிஸா என்ற ஒரு பெண் இப்படியெல்லாம் சொல்கிறாள் இது எந்த அளவுக்கு உண்மை என்று எனக்குத் தெரியாது ஆக இப்படியெல்லாம் தகவல்கள் வருகின்றது என்றுதான் நான் சொன்னேனே தவிர ஆனால் சந்தேகத்தின் வாசல் திறந்திருக்கிறது என்று சொன்னேனே தவிர நானே உறுதிப்படுத்தி சொல்லவில்லை என்று

அந்த பெண்ணுடைய பெயரைச் சொல்லாமல் ஒரு பெண் என்றும் அவர் ஒரு ஆசிரியை என்றும் அவர்கள் தான் இந்த மதுரை சம்பவத்திலிருந்து பல செய்திகளை சொன்னார்கள் என்றும் அவர்கள் ஒரு நோக்கத்தில் சொல்லி இருக்கலாம் என்றும் இறைவா நான் சொன்னதை நீ அறிவாய். நானே அதைப் பார்த்து உறுதி செய்தது போல சொன்னதாக இவர்கள் சொல்லுவது பொய்.

அவர்கள் எந்த அளவுக்கு உண்மை சொல்கிறார்கள் என்பது அவர்களுக்கும் அல்லாஹ்வுக்கும் தெரியும் என்பதையும் சேர்த்துதான் இறைவா நான் சொன்னேன். இதையும் நீ அறிவாய். இந்த விஷயத்திலே இவர்கள் உண்மையை முன்னிறுத்தி பொய் சொல்லி இருப்பார்களேயானால் உன்னுடைய திருக்குர்ஆனுடைய வழிகாட்டுதல் பிரகாரம் அவர்கள் மீதும் அவர்களுடைய குடும்பத்தார் மீதும் அல்லாஹ்.. என் மீதும் என்னுடைய குடும்பத்தார் மீதும் நான் பொய் சொல்லி இருந்தால் உன்னுடைய சாபம் இறங்கட்டும் என்று நான் துஆச் செய்கிறேன்.

தெளிவாக இன்னொரு தடவை இறைவா நான் நினைவுபடுத்துகிறேன். பாக்கர் விபச்சாரம் செய்து விட்டார் என்ற வார்த்தையை நான் சொல்லவில்லை. அப்படி யாரைப் பற்றியும் சொல்லக் கூடாது என்று சூரத்துல் நூரில் இருக்கிற குர்ஆன் வசனத்தை எடுத்துக் காட்டி நான் சொன்னேன். அப்படி சொல்லி இருக்கும்பொழுது அதையும் மறுத்திருக்கிறார்கள் இச் சபையிலே இதில் நீ சாட்சியாக இருந்து கொள் என்பதுதான் இந்த விஷயத்திலே நான் உன்னிடத்திலே வைக்கிற முறையீடு

மேலே உள்ள வார்த்தைகளால்தான் பி.ஜெ. பாக்கர் விஷயத்தில் முபாஹலா செய்துள்ளார். வார்த்தையால் விளையாடுவதில் மன்னனான பி.ஜெ. வார்த்தை விளையாட்டுகளால்தான் முபாஹலா செய்துள்ளார் என்பதை அவரது முபாஹலா வார்த்தைகள் சாட்சி அளிக்கின்றன.

பாக்கரைப் பற்றியோ யாரைப் பற்றியோ விபச்சாரம் செய்தார்கள் என்று குற்றம் சுமத்துவது மார்க்கத்திலே 4 சாட்சிகள் இல்லாமல் சொல்லக் கூடாது என்ற குர்ஆன் வசனத்தைச் சொல்லி (விட்டுத்தான்) அதை (பாக்கர் சம்பந்தமான குற்றச்சாட்டுச் செய்திகளை) தெளிவாகச் சொல்லி உள்ளதாக முபாஹலாவில் பி.ஜெ. கூறி உள்ளார். பாக்கர் சம்பந்தமான அந்த குற்றச்சாட்டுச் செய்திகள் என்ன என்ன?

1. ஹஜ்ஜுப் பெருநாளுக்கு மறுநாள் பாக்கர் ஒரு பெண்ணுடன் சொகுசு பஸ்ஸில் சென்னையிலிருந்து நெல்லைக்கு பக்கத்து பக்கத்து சீட்டில் உட்கார்ந்தும் ஒருவருக்கொருவர் மடியில் படுத்துக் கொண்டும் பிரயாணம் செய்ததை பார்த்தவர்கள் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகள் மூலமாக எங்களுக்கு தெரிவித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்னார்கள். பாக்கரை விசாரித்தோம் முதலில் அல்லாஹ் மீது சத்தியம் செய்து இல்லை என்று மறுத்தார். பல ஆதாரங்களை நாங்கள் காட்டி பேசும்போது ஆமாம் என்று ஒப்புக் கொண்டார்.

பாக்கர் பற்றி இந்த முதல் குற்றச்சாட்டை பி.ஜெ. டெலிபோன் மூலம் சொல்லி உள்ளார். எனவே இது லால்பேட்டையில் என்ற வாசகத்தில் அடங்காது. இந்த முதல் குற்றச்சாட்டில் உள்ள வாசகங்களைக் கூறியோ அதை மறுத்தோ பி.ஜெ. முபாஹலா பண்ணவில்லை.

2. அழகு நிலையம் நடத்தும் நந்தினி என்ற பெண்ணை பாக்கர் த.த.ஜ. தலைமை நடத்தும் மதரஸாவில் சேர்த்தார். மதரஸாவில் எந்தப் பெண்ணுக்கும் செல் போன் வைத்துக் கொள்ள அனுமதி கிடையாது. செல் போன் வைத்துக் கொள்ள தடை இருந்தும். அந்த பெண் நந்தினி செல் போன் வைத்துக் கொள்ள பாக்கர் தனது செல்வாக்கை பயன்படுத்தியுள்ளார்.

3. பாக்கர் நந்தினிக்கு பட்டுப் புடவை வாங்கி கொடுத்திருக்கிறார்.

4. பாக்கர் நந்தினியை காரில் அழைத்துச் சென்றிருக்கிறார்.

5. பாக்கர் நந்தினியை தனியாக வைத்து குடும்பம் நடத்த சென்னையில் தனி வீடு பார்த்திருக்கிறார்.

6. பாக்கரிடம் நந்தினி இப்படி என்னிடம் தவறாக உறவு வைத்துள்ளீர்களே! உங்கள் மார்க்கத்தில் இது தவறு இல்லையா? என்று கேட்டிருக்கிறார். அதற்கு இருவரும் மனம் ஒத்து செய்தால் மார்க்கத்தில் தவறில்லை என்று பாக்கர் நந்தினியிடம் கூறி இருக்கிறார். இதை த.த.ஜ. தலைமை மதரஸாவில் ஆசிரியையாக இருக்கும் (நஜ்முன்னிஸா என்ற) ஆலிமாவிடம் நந்தினி கூறி இருக்கிறார். இதை (நஜ்முன்னிஸா என்ற) அந்த ஆலிமா பி.ஜெ.யிடம் சொன்னார்.

7. மதுரையில் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சியின் போது பாக்கர் 24 மணி நேரம் காணாமல் போனார். காணாமல் போன
அந்த நேரத்தில் நந்தினி வீட்டில் பாக்கர் தங்கி இருந்தார். இதை அந்த ஆலிமா (நஜ்முன்னிஸா என்ற) பெண்ணிடம் நந்தினியே கூறி இருக்கிறார். இதை அந்த ஆலிமா (நஜ்முன்னிஸா என்ற) பெண் பி.ஜெ.யிடம் சொன்னார்.

இப்படி ஆயக்கலைகள் 64 என்பது போல் பாக்கரின் மீதான குற்றச்சாட்டுக்களை 16 தலைப்புகளில் பி.ஜெ. பட்டியலிட்டுள்ளார். பாக்கர் விஷயத்தில் தெளிவாக வார்த்தைக்கு வார்த்தை சொல்லி மறுக்க முடியாத பி.ஜெ. வார்த்தை விளையாட்டுகளால் தப்பி இருக்கிறார். பி.ஜெ.யின் கூற்றுப்படி பாக்கர் என்ற இடத்தில் பி.ஜெ. பெயரை போட்டுப் பாருங்கள்.

பி.ஜெ. சம்பந்தமான சில செய்திகளை நஜ்முன்னிஸா என்ற ஒரு பெண் இப்படியெல்லாம் சொல்கிறாள் இது எந்த அளவுக்கு உண்மை என்று எனக்குத் தெரியாது ஆக இப்படியெல்லாம் தகவல்கள் வருகின்றது என்றுதான் நான் சொன்னேனே தவிர ஆனால் சந்தேகத்தின் வாசல் திறந்திருக்கிறது என்று சொன்னேனே தவிர நானே உறுதிப்படுத்தி சொல்லவில்லை.

இப்படி பாக்கர் என்ற ஒவ்வொரு இடத்திலும் பி.ஜெ. பெயரையோ த.த.ஜ.விலுள்ள ஒவ்வொரு மவுலவிகளின் பெயரையோ பயன்படுத்திப் பாருங்கள். அவர்கள் ஒரு நோக்கத்தில் சொல்லி இருக்கலாம். சந்தேகத்தின் வாசல் திறந்திருக்கிறது நானே உறுதிப்படுத்தி சொல்லவில்லை. அவர்கள் எந்த அளவுக்கு உண்மை சொல்கிறார்கள் என்பது அவர்களுக்கும் அல்லாஹ்வுக்கும் தெரியும் என்றெல்லாம் சொல்லி விட்டு பாக்கரிடம் நந்தினி,; நந்தினியிடம் பாக்கர் என்று சொன்ன மாதிரி சொல்லிப் பாருங்கள் ஏற்றுக் கொள்வார்களா?

தான் உறுதிபடுத்தாத ஒன்றை பிறரிடம் சொல்பவன் ஒரு முஸ்லிமா? அவன் ஒரு சராசரி மனிதனா? அவன் ஒரு தாஇயா? என மானமுள்ள முஸ்லிம்கள் கேட்பார்கள். மானங்கெட்ட கழுதைகள் இது போன்றதுகளைத்தான் தலைவர்களாக ஏற்றுக் கொள்ளும். இதற்கு எடுத்துக் காட்டுதான் த.த.ஜ. என்பதை பி.ஜெ. செய்த முபாஹலா நிரூபித்து விட்டது.

கடலூர் முபாஹலாவில் கலீமுல்லாஹ் தலையிலானவர்களின் உயர்ந்த நிலை.

கடலூரில் நடந்த முபாஹலா முதல் பாகத்தின் பி.ஜெ. வார்த்தைகளை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை தந்திருந்தோம். கலீமுல்லாஹ் தலையிலான கடலூர் மாவட்ட முன்னாள் டி.என்.டி.ஜே. நிர்வாகிகள் என்ன சொல்லி முபாஹலா செய்தார்கள் என பலர் கேட்டுள்ளார்கள். எனவே அவற்றை சுருக்கமாகத் தருகிறோம்.

காரணம் கடலூர் பி.ஜெ. முபாஹலாவில் வெளிச்சத்துக்கு வந்த நஜ்முன்னிஸா என்ற தலைப்பிலான வெளியீட்டை பார்த்து இருப்பீர்கள். அதன் இறுதியில் பாக்கரின் மன்மத லீலைகள் சம்பந்தமாக பி.ஜெ. சொன்னது பட்டியலிடப்பட்டுள்ளது. அவற்றையும் கூறித்தான் கலீமுல்லாஹ் தலையிலான கடலூர் மாவட்ட முன்னாள் டி.என்.டி.ஜே. நிர்வாகிகள் முபாஹலா செய்தார்கள். எனவே .. வெளிச்சத்துக்கு வந்த நஜ்முன்னிஸாவில் குறிப்பிட்டுள்ளதை தவிர்த்து சுருக்கமாகத் தருகிறோம்.

டி.என்.டி.ஜே. மாநில பொதுச் செயலாளர் எஸ்.எம். பாக்கர் பதவி நீக்கம் ஒழுக்கக் கேடு சம்பந்தமானதுதான் என்ற எந்தச் செய்தியும் கலீமுல்லாஹ் தலையிலான கடலூர் மாவட்ட முன்னாள் டி.என்.டி.ஜே. நிர்வாகிகளுக்கு எதுவும் தெரியாது.

11.3.07 ஆம் தேதிய லால்பேட்டை பொதுக் கூட்டம் சம்பந்தமாக 5.3.07 அன்று போன் செய்த பி.ஜெ.தான் அவராகவே முன் வந்து பாக்கரின் ஒழுக்கக் கேடு சம்பந்தமான குற்றச்சாட்டுக்களைக் கூறினார். அப்பொழுதுதான் கலீமுல்லாஹ் தலையிலான கடலூர் மாவட்ட முன்னாள் டி.என்.டி.ஜே. நிர்வாகிகளுக்குத் தெரியும். அதுவரை எதுவும் தெரியாது.

11.3.07 ஆம் தேதிய லால்பேட்டை பொதுக் கூட்டத்திற்குப் பிறகு ஒரு வீட்டில் வைத்து இரவு 12 மணி அளவில் சுமார் ஒண்ணரை மணி நேரம் பாக்கரின் ஒழுக்கக் கேடுகள் பற்றி பி.ஜெ. பேசினார். பலர் கூடி இருந்த அந்த இடத்தில் பாக்கர் ஒழுக்கக் கேடுகள் பற்றி விபரமாகப் பேசினார். விலாவாரியாக விளக்கிப் பேசினார் பி.ஜெ. எந்த அளவுக்கு என்றால் பாக்கர் பல முறை விபச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்ற அளவுக்கு பி.ஜெ. பேசினார்.

பாக்கர் மீது நமது முன்னால் சகாக்கள் கூறிய ஒய்.கே. மேன்சன் விவகாரம் உண்மை என்றும் பி.ஜெ. சொன்னார்.

களியக்காவிளை விவாதத்தின் போது பாக்கர் ஒரு நாள் மிஸ்ஸிங். அப்போது அந்த நாளில் பாக்கர் ஒரு பெண் வீட்டில் இருந்திருக்கிறார். அப்போது அப்பெண்ணின் கணவர் களியக்காவிளை விவாதத்தில் இருந்திருக்கிறார். என்றும் பி.ஜெ. சொன்னார்.

நந்தினியை பாக்கர் அவரது காரில் கூட்டிச் சென்றார் என்றும் பி.ஜெ. சொன்னார்.

ஹஜ்ஜுப் பெருநாளுக்கு மறுநாள் ரதி மீனா சொகுசு பஸ்ஸில் பாக்கரும் நந்தினியும் ஒருவருக்கொருவர் மடியில் படுத்துக் கொண்டும் ஒருவருக்கொருவர் சில்மிஷம் செய்து கொண்டும் நெல்லை வரை சென்றார்கள் என்றும் பி.ஜெ. சொன்னார்.

பாக்கரும் நந்தினியும் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டார்கள் என்றும் பி.ஜெ. சொன்னார்.

இன்னும் பாக்கர் பற்றி நிறைய விஷயங்கள் உள்ளன என்றும் பி.ஜெ. சொன்னார்.

பாக்கர் செய்த தவறுகளையெல்லாம் (பி.ஜெ.யாகிய) நான் பாக்கரிடம் விசாரித்தபொழுது முதலில் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து மறுத்தார். பிறகு ஆதாரங்களை காட்டி போது பாக்கர் ஒப்புக் கொண்டார் என்றும் பி.ஜெ. சொன்னார்.

பாக்கர் பி.ஜெ.யைப் பார்த்து நீங்கள் மட்டும் யோக்கியமா? கம்யூட்டர் கற்றுத் தருகிறேன் என்று மதரஸா மாணவிகளின கைகளைப் பிடித்து சில்மிஷம் செய்யவில்லையா? என்று கேட்டார் என்றும் பி.ஜெ. சொன்னார்.

ஸைபுல்லாஹ் ஹாஜாவையும் ஒரு பெண்ணையும் தொடர்புபடுத்தி பாக்கர் குற்றச்சாட்டு வைத்தார் என்றும் பி.ஜெ. சொன்னார்.

விபச்சாரம் செய்ததாக ஒருவர் பொய் சொன்னால் 80 கசையடி என்ற சமாச்சாரம் எதையும் பலர் கூடி இருந்த அந்தக் கூட்டத்தில் பி.ஜெ. சொல்லவில்லை. மொத்தத்தில் அன்று பி.ஜெ. பாக்கர் அதிகப்படியாக தவறுகள் செய்துள்ளார் என்பதை மக்கள் அறிய வேண்டும் என்பதிலேயே பி.ஜெ. குறியாக இருந்தார்.

பாக்கர் பற்றி பி.ஜெ. போனில் குற்றச்சாட்டு கூறியபொழுது இதெல்லாம் உளவுத்துறையின் வேலையாக இருக்கும். எனவே பாக்கர் விஷயத்தில் அவசரப்படாதீர்கள் என்று கலீமுல்லாஹ் சொன்னது போலவே கூடி இருந்தவர்களும் இதெல்லாம் உளவுத்துறையின் வேலையாக இருக்கும் அவசரப்பட்டு பேசாதீர்கள் என்று பி.ஜெ.யிடம் சொன்னார்கள்.

இதை மறுத்த பி.ஜெ. அப்படியெல்லாம் இல்லை. நாங்கள் இரண்டு மாதத்திற்கு மேலாக பல பேரிடம் தீர விசாரித்த பின்பே ஆதாரங்களின் அடிப்படையிலேதான் இந்த முடிவுக்கு வந்தோம் என்று பி.ஜெ. கூறினார்.

இப்படி பாக்கர் நந்தினி பற்றி பி.ஜெ. கூறியுள்ள அனைத்தையும் கடலூர் மாவட்ட முன்னாள் டி.என்.டி.ஜே. தலைவர் கலீமுல்லாஹ் முபாஹலாவில் சொல்லிக் காட்டுகிறார். இவ்வளவு விஷயங்களை சொல்லிக் காட்டி கலீமுல்லாஹ்; செய்த முபாஹலா துஆவின் போது கலீமுல்லாஹ்வும் அவரது தலைமையில் உள்ளவர்களும் உயர்ந்த பண்பாளாகள்; என்பதை நிரூபித்து விட்டார். அந்த துஆவை பாருங்கள்.

பி.ஜெ. பாக்கர் பற்றி இப்படி கூறியது முற்றிலும் உண்மை. இது பொய் என்றால், இதில் பொய்யர்கள் நாங்கள் என்றால் எங்கள் மீதும் எங்கள் குடும்பத்தார் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்.

இது உண்மை என்றால் பி.ஜெய்னுல் ஆபிதீன் மற்றும் அவரது குடும்பத்தார் மீதும் அல்லாஹ் அவனது சாபத்தை உண்டாவதற்கு பதிலாக பி.ஜெய்னுல் ஆபிதீன் எங்களுக்கும் ஏனையவர்களுக்கும் ஏகத்துவத்தை ஊட்டியதற்கு பகராமாக பி.ஜெ. செய்த குற்றங் குறைகளை சுட்டிக் காட்டியவர்கள் மீது வரம்பு மீறிய பொய்களையும் தவறான அவதூறுகளையும் வீண் பழிகளையும் சுமத்தி பேசியும் எழுதியும் வருகிறதை தடுத்து யா அல்லாஹ் பி.ஜெ.க்கு நேரான வழியை காட்டு.

இது மாதிரிதான் கலீமுல்லாஹ் தலையிலான அனைவரும் துஆச் செய்தார்கள். இந்த கடலூர் முபாஹலா மூலம் கலீமுல்லாஹ் தலையிலானவர்கள் உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் என்பதை நிரூபித்து விட்டார்கள்.

பாக்கர் பல முறை விபச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்ற அளவுக்கு பி.ஜெ. பேசினார் என்றுதான் கலீமுல்லாஹ் தலையிலானவர்கள் கூறி உள்ளார்கள். பாக்கர் விபச்சாரம் செய்து விட்டார் என்ற வார்த்தையை நான் சொல்லவில்லை என்று திசை திருப்பி பி.ஜெ. முபாஹலா செய்துள்ளார்.

நந்தினிக்கு பட்டுப்புடவை, தனி வீடு, செல் போன், தவறான உறவு, நந்தினி வீட்டில் பாக்கர் என்பது உட்பட பி.ஜெ. சொன்ன அனைத்தையும் வார்த்தைக்கு வார்த்தை கூறித்தான் கலீமுல்லாஹ் தலையிலானவர்கள் முபாஹலா செய்தார்கள். இவற்றையெல்லாம் பி.ஜெ. வார்த்தைக்கு வார்த்தை மறுக்கவில்லை. பாக்கர் சம்பந்தமான சில செய்திகளை நஜ்முன்னிஸா என்ற ஒரு பெண் இப்படியெல்லாம் சொல்கிறாள் என்று நழுவி பி.ஜெ. முபாஹலா செய்துள்ளார்.

ஆண் பெண் தகாத உறவை இருவரும் மனம் ஒத்து செய்தால் மார்க்கத்தில் தவறில்லை என்று பாக்கர் நந்தினியிடம் கூறி இருக்கிறார். இதை த.த.ஜ. தலைமை மதரஸாவில் ஆசிரியையாக இருக்கும் (நஜ்முன்னிஸா என்ற) ஆலிமாவிடம் நந்தினி கூறியது. இதை (நஜ்முன்னிஸா என்ற) அந்த ஆலிமா (பி.ஜெ.யாகிய) என்னிடம் கூறியது.

அந்த நேரத்தில் பாக்கர் என் வீட்டில்தான் தங்கி இருந்தார் என்று அந்த ஆலிமா (நஜ்முன்னிஸா என்ற) பெண்ணிடம் நந்தினியே கூறி இருக்கிறார். இதை அந்த ஆலிமா (நஜ்முன்னிஸா என்ற) பெண் (பி.ஜெ.யாகிய) என்னிடம் கூறியது.

இதையெல்லாம் பார்த்த பின் மானமுள்ள எவனாவது தனது பிள்ளைகளை, சகோதரிகளை த.த.ஜ. நடத்தும் பெண்கள் கல்லூரிக்கு பாடம் படிக்க அனுப்புவானா? இவர்கள் நடத்திய பாடத்தின் லட்சணம்தான் நந்தினி - நஜ்முன்னிஸா என நாட்டியம் ஆடுகிறது. பாக்கர் நந்தினி, பி.ஜெய்னுல் ஆபிதீன் நஜ்முன்னிஸா ஆகியவர்களின் மர்மக் கதைகளை ஜொள்ளு விட்டு படிக்க ஆசைப்பட்டவர்கள்தான் இவர்கள் நடத்தும் கல்லூரிகளுக்கு நன்கொடை அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள் போலும்..

பி.ஜெ.யைப் பார்த்து நீங்கள் மட்டும் யோக்கியமா? கம்யூட்டர் கற்றுத் தருகிறேன் என்று மதரஸா மாணவிகளின கைகளைப் பிடித்து சில்மிஷம் செய்யவில்லையா? என்று பாக்கர் கேட்டார் என்பது ஷம்சுல்லுஹா கூறியதை நினைவுபடுத்துகிறது.


மதுரையில் 2000இலல் நடந்த இஸ்லாமிய எழுச்சி மாநாட்டின் போது பிரச்சார மேடைக்கு பி.ஜெ. அதிகமாக வரவே இல்லை. பிரச்சார மேடைக்கு வராமல் பெரும்பாலும் பெண்கள் நிறைந்த கண்காட்சிப் பகுதியிலேயே பி.ஜே. கிடந்தார். மதரஸா மாணவிகளையே பி.ஜெ. சுற்றி சுற்றி வந்தார். மாணவிகளும் ஆலிம்ஸா ஆலிம்ஸா என பி.ஜெ.யை சுற்றிச் சுற்றி வந்தார்கள். எல்லா மவுலவிகளும் வருந்தி பேசிக் கொண்டோம். இதனால்தான் சுலைமானும் நானும் மேலப்பாளையம் அல் இர்ஷhத் மாணவிகளை மாநாட்டுப் பணிகளுக்கு அனுப்ப மாட்டோம் என்றோம் என்று ஷம்சுல்லுஹா கூறினார். இந்த தகவலை முன்பே வெளியிட்டிருக்கிறோம்..

கம்யூட்டர் கற்றுத் தருகிறேன் என்று மதரஸா மாணவிகளின கைகளைப் பிடித்து சில்மிஷம் செய்யும் பி.ஜெ.யிடமிருந்து மேலப்பாளையம் அல் இர்ஷhத் மாணவிகளை காப்பாற்றிய சுலைமானுக்கும் ஷம்சுல்லுஹாவுக்கும் மேலப்பாளையவாசிகள் நன்றி கூற வேண்டும்.

நன்றி : இலாஹி

1 comment:

Unknown said...

Ganniyamaana Petrorgalukku Assalamu Alaikkum Varah,

PJ asai nayagi NAJMUNNISHA, S.M.Bakerin kaama veriyai theerthuvaikkum NANDHINI ponrawargal irukkum kallooriyil vungal kulanthaigalaa? Ivargalin kattuppaattil vungal kulanthaigal thodarnthu intha kallooriyil irunthaal, Vungal kulanthaigalum yenraavathu orunaal, yaarukkaavathu (or Ivargalin palarukku) NANDHINI yaaga maarividum kolathai paarppirgal. POLICE RAID vanthu pidithuvittaal "ALAGIGAL KAITHU" enru vungal kulanthaigalin padamum (photo) thinasari seithithaalgalil varum kolathai paarkkavaa vendum? Ivargal solvathuthaan sari enru THOWHEED enru thannai sollikolbavargal thangalin kulanthaigalai panayamaakkividavendaam.
ALLAH kaappaatruvaan

Kadalore MUBAHALA VIDEO CD 26/06/07 il vantha tmpolitics.net enra website il parungal. En ponra sagotharargalukku Islam markatthai thooya wadivil solgirom enru wantha PJ, Shamsul Luha, Baker, Sulaiman, Al Thafi, Rahmathullah ponrawargalin seyalai parungal, Abdul rahman firdausi enra Cinema mogam kondavar eppadi ellam paattu paaduvaar enbathai avar pesiya CD il Parungal. Kovai Rahmathullah Enra munaafikkai, mosadithanathai & pombalaiyai EGATHUVAM April (or) May-07 ithalgalai parungal. Inimelum ivargal pinnaal sellum, THOWHEED waathi enru sollum sagotharargal irunthaal thirutthikollungal. Avargalidem suya sinthanaiyudan ethir kelvi ketka katrukollungal. Ivargalin pechai mattum kettuvittu ithuthaan islaam enru matravargalidam solli neengal kutravaaligalaaga maarividaathirgal. Allah anaithaiyum arinthavanaaga irukkiraan. Ellaarum manithargal thaan enraalum intha alawukku tharam kettavargalaaga irukka koodaathu. Ivargalin Pechai mattum kettuvittu ithuthaan islaam enru sollum avargalin pinnaal irukkum THOWHEED waathigalum tharam kettavargalthaan. Manithargalukku aaraam arivu pagutharivu irukkirathu. Anaal thaan mattum THOWHEEDWAATHI matravargal BITH'ATH WAATHI enru sollum manithargalukku intha arivu irukkirathaa? enru theriyavillai.

POMBALAI porukkigalaaga irukkum PJ, Baker & Abdul Rahman Firdausi ponra kaama kayawargalin kattuppaattil irukkum kalloorigalukku thangalin kulanthaigalai, ivargalin akkiramam therinthum anuppum petrorgalaaga neengal iruppeergalaanaal, wungalaivida keduketta, keeltharamaana & kaama kaliyaattangalukku peyarpona petrorgal enra saathanaiyai vungalaivittum yaarum parithuvida mudiyaathu. Allah vai anjikollum petrorgalaaga, Thannudaya Kulanthaigalukku nalvalikaattum petrorgalaaga, Isalam Markathin peyarai solli kaama kaliyaattangal nadathikondirukkum PJ, Baker & Abdul Rahman Firdausi ponravargalidem irunthum Avargalin kattuppaattil irukkum kalloorigalukku thannudaya kulanthagalai anuppaamal kadamai unarvodu nadakkum petrorgalaaga ALLAH nammai yerpaduthi tharavendum.