Sunday, April 22, 2007

இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஏழாம் மாநாடு

இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஏழாம் மாநாடு

இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் சார்பாக ஏழாம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு வரும் மே மாதம் 25, 26, மற்றும் 27 ஆம் தேதிகளில் சென்னை கலைவாணர் அரங்கில் துவக்கப்பட உள்ளது.

25ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் இம்மாநாடு துவக்கப்பட உள்ளது பின்னர் மூத்த மார்க்க அறிஞர்கள் பங்கேற்கும் மார்க்க அரங்கமும், ஆய்வரங்கங்களும் 26ம் தேதி சென்னை புதுக் கல்லூரியிலும், 27ம் தெி காலை முதல் இரவு வரை பல்வேறு நிகழ்வுகள் சென்னை கலைவாணர் அரங்கிலும் நடைபெற உள்ளது.

இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய குடியரசுத்தலைவர், தமிழக ஆளுநர், மாநிலங்கள் அவைத் துணைத் தலைவர் ரகுமான் கான் ஆகியோரை அழைத்துள்ளார்கள் அத்துடன் இலங்கை அமைச்சர்களும், நமது மத்திய, மாநில அமைச்சர்களும் பங்கேற்க உள்ளார்கள்.

மே 27ம் தேதி மாலை 7.00 மணியளவில் நிகழ்ச்சியின் இறுதி நிகழ்வில் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களும் பங்கேற்க உள்ளார்கள்.

இது குறித்து மேலதிக தொடர்புகளுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அலைபேசிகளில் இதன் நிர்வாகிகளை தொடர்பு கொள்ளவும்.

கேப்டன் என்.ஏ. அமீர் அலி - தலைவர் - +91-9444940786
எஸ்.எம். இதயத்துல்லாஹ் - பொதுச் செயலாளர் - +91-9840040067

மின்னஞ்சல் மூலம் நமக்கு கிடைக்கப்பெற்ற இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் மடலை பார்க்க இங்கு சொடுக்கவும்.

No comments: