Saturday, April 14, 2007

பாக்கர் பெற்ற ஞானஸ்நானம்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)

இஸ்லாத்தின் பெயரால் வயிறு வளர்க்கின்றனர் என சகட்டு மேனிக்கு அனைவரையும் குற்றம் சுமத்தியவர்கள்,

தாங்கள் மட்டுமே வடிகட்டிய தவ்ஹீதுவாதிகள் என தம்பட்டம் அடித்தவர்கள்,

தூய்மையை நிரூபிப்பதற்காக எவரையும் துச்சமென எண்ணி தூக்கி வீசக்கூடிய தன்மை உள்ளவர்களென தெருவெல்லாம் வெற்று கூச்சலிட்டவர்கள்,

இவர்கள் யாரெனப் புரியவில்லையா?

அந்தோ பரிதாபம்! இவர்கள் தான் தவ்ஹீதின் பெயரால் தகிடுதத்தங்கள் புரிந்து வரும் தமிழ்நாடு தறுதலை ஜமாஅத்தினர்.

இவர்களின் தலைமை சமீபத்தில் அடித்த கூத்து அரசியல்வாதிகளையே அசர வைத்து விட்டது.

நாம் பல முறை குறிப்பிட்டுள்ளோம்,

பிஜேபிக்கும் பிஜே பார்ட்டிக்கும் வேற்றுமையை விட ஒற்றுமைகளே அதிகம்.

பிஜேபியின் அத்வானி மீது பாராளுமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது. தான் வகித்து வந்த உள்துறை அமைச்சர் பதவியிலிருந்து அத்வானி ராஜினாமா செய்தார். பொதுவாழ்வில் தூய்மையை நிரூபிப்பதற்காக பதவியை துறந்தவர் என புகழாரம் சூட்டப்பட்டது. ஆனால் குறுகிய காலத்திற்குள்ளாகவே மீண்டும் பதவியேற்றுக் கொண்டதோடு துணைப் பிரதமராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார். குற்றச்சாட்டிலிருந்து எப்படி ஞானஸ்நானம் பெற்றாரோ எவரும் அறியார்.

இதைப்போலவே,

பிஜேயின் பினாமி பாக்கர் சமீபத்தில் தறுதலை ஜமாஅத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்தார். காரணம்,
கையும் கன்னியின் மெய்யுமாக பேருந்து நிலையத்தில் மாட்டிக் கொண்டதால், தான் சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒன்றாக பயணம் மேற்கொள்ள வேண்டி வந்தது என ஜால்சாப்பு சொல்லிப் பார்த்தும் முடியாமல், முடிவில் விஷயம் சந்தி சிரித்த காரணத்தால் ராஜினாமா செய்தார். பிஜேயின் பரம ரசிகர்கள், ஆஹா பார்த்தீர்களா! எங்களுக்கு கொள்கை தான் முக்கியம், சந்தேகம் என்று வந்து விட்டால் எவ்வளவு பெரிய பொறுப்பிலிருந்தாலும் நாங்கள் தூக்கியெறிந்து விடுவோம். அவருடைய கடந்த கால பங்களிப்பு பற்றி பேசி சப்பை கட்டு கட்ட மாட்டோம். காரணம் நாங்கள் வடிகட்டிய தவ்ஹீதுவாதிகள் என பேசித் திரிந்தனர்.

இவர்கள் வடிகட்டிய தவ்ஹீத்வாதிகளல்லர். மாறாக வடிகட்டிய முட்டாள்கள் என 2004 முதலே சில விஷயமறிந்தவர்கள் கூறி வந்தனர்.

அது உண்மைதான் என இப்பொழுது ததஜவினர் நிரூபித்துள்ளனர்.

ஏனெனில், பாக்கரின் ராஜினாமா விஷயத்தில் ததஜவின் சாதாரண தொண்டனை விட அதிகமதிகமாக அந்த சம்பவத்திற்கு தஃப்ஸீரும், தஃவீலும் செய்தவர் கிரிமினல் தலைவன் பிஜே தான்.

பாக்கரின் ராஜினாமாவைத் தொடர்ந்து, தனது தொண்டரடிப் தொண்டரடிப் பொடியினருக்கு தனது வலைத்தளத்தின் மூலமாக வஞ்சகத்தனத்தை வலைவிரித்தவர் தான் இந்த பிஜே.

பாக்கர் அந்த பேருந்தில் எப்படி அமர்ந்திருந்திருப்பார். பேருந்து ஓட்டத்தில், அருகருகில் அமர்ந்திருப்பவர் இருளின் துணையோடு என்னென்ன செயல்களிளெல்லாம் ஈடுபட்டிருப்பார் என விஸ்தாரமாக தனது கற்பனை ஓட்டத்தில் கதையளந்தவர் கிரிமினல் தலைவன் பிஜே தான்.
தனது நவீன குரு (பீர்) பிஜேவிடம் முரீது பெற்ற முட்டாள் சீடர்கள், உடனே கொள்கை குன்றுகள் போல் வீரவசனம் பேசித் திரிந்தனர். இயக்கத்தின் கொள்கைகளுக்காக, குற்றம் சுமத்தப்பட்டவரை துரத்தி அடித்ததாகவும், அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், பதவி இறக்கம் செய்ய தயங்க மாட்டோம் என முழங்கி வந்தனர்.

இவர்கள் அத்தனை பேர் மூஞ்சியிலும் டன் கணக்கில் கரியை அள்ளி பூசிவிட்டனர் கிரிமினல் தலைவன் பிஜேயும் அவரது பினாமி (டு)பாக்கரும்.
இவர்களுக்கு கொள்கையும் கிடையாது ஒரு குப்பையும் கிடையாது என்பதனை இதன் மூலமாக அனைவருக்கும் வெளிச்சம் போட்டு காட்டி விட்டனர்.
கொள்கை என்று ஒன்று இருந்திருந்தால் 2004 ல் ஒய்.கே.மேன்சன் விவகாரத்திலேயே (டு)பாக்கரை தூக்கி எறிந்திருப்பர்.
என்ன செய்வது. அப்பொழுது தான் தமுமுகவிலிருந்து சுருட்டிக் கொண்டு வந்த சொத்துக்களுடன் தனிக்குடித்தனம் ஆரம்பித்துள்ள நிலையில், அப்பொழுது பிஜே தலைவராக கூட ஆகாத நிலையில், (டு)பாக்கர் மீது கைவைத்தால் தனது எதிர்காலம் அப்பொழுதே அஸ்தமித்து விடும் என கிரிமினல் தலைவன் பிஜேவுக்கு தெரியும். எனவே தான் ஒய்.கே.மேன்சனுக்கு வக்காலத்து வாங்கினார்.

அதனை அப்பொழுதே நாம் சுட்டிக்காட்டினோம்.

ஆனால் அறிவோடு சிந்தித்து விளங்கிக் கொண்டவர்கள் குறைவு.
இத்தகையோரின் மடமைத்தனத்தையே தனது மூலதனமாகக் கொண்ட கிரிமினல் பிஜே, ஒய்.கே.மேன்சன் விவகாரத்தை சப்பைக்கட்டு கட்டி பேசியதை நினைவு படுத்திப் பாருங்கள்.
'தப்பு செய்றவன் இப்புடி எல்லாருக்கும் தெரியுற மாதிரியா செய்வான். யாருக்கும் தெரியாம எங்காவது தூரமா ஒதுக்குப்புறமா போய்தானே செய்வான்' என்று தர்க்கம் புரிந்தார்.

நவீன முரீதுகளாகிய ததஜவினர் தலை ஆட்டி ஆமோதித்தனர்.

ஒருவேளை தலைவர் குறிப்பிட்ட தப்பு செய்வதற்கான இலக்கணத்தை புரிந்து கொண்டனர் போலும்.
ஆனால், அன்று ஒய்.கே.மேன்சனை காபந்து செய்த கிரிமினல் பிஜே இன்று கோவில்பட்டி பேருந்து விவகாரத்தில் வெளியிட்ட ஆடியோவில் பேசியிருப்பதைப் பாருங்கள்.

'பெண்கள் விஷயத்தைப் பொறுத்தவரை, தப்பு நடக்காவிட்டாலும், நடந்திருக்குமோ என்ற சந்தேகம் வரக்கூடிய சூழல் இருந்தாலும் உடனே பதவி விலக வேண்டும். இது எங்களுக்கு நாங்களே விதித்துக் கொண்ட கட்டுப்பாடு'

இந்த கட்டுப்பாடு எப்பொழுது யாரால் விதிக்கப்பட்டது. இது குறித்து அறிவிப்பு எப்பொழுது வெளியானது. ஒரு ததஜ அடிவருடிக்கும் தெரியாது.

இதோடு விடவில்லை. மாட்டிக் கொள்ளாமல் தப்பு செய்வது எப்படி என்றும் விளக்கமளிக்கிறார். அதனை மீண்டும் எடுத்து எழுதி அனைவரையும் தப்பு செய்யுமாறு துண்டுவதற்கு நாம் தயாரில்லை.

ஆனால், இதனைத் தொடர்ந்து அவர் பேசியுள்ளது தான் ஹைலைட்.

கிரிமினல் பிஜேயின் கோவில்பட்டி பேருந்து தஃப்ஸீரைப் பாருங்கள்.

'ஒண்ணா பயணம் செஞ்சது அறிவில்லாத செயல். பக்கத்து பக்கத்து ஸீட்ல இருந்திருக்கீங்க. இரவு நேர பயணம். நீங்க அங்கிட்டும், அவுங்க இங்கிட்டும் சாஞ்சிருப்பீங்க.. .. ..'
இப்படியாக அவரது வர்ணணை செல்கிறது. இங்கே கிளிக் செய்து அந்த வர்ணனையை செவிமடுங்கள்.

சகோதரர்களே! சற்று சிந்தித்துப் பாருங்கள். 2004 க்கும் 2007 க்கும் உள்ள வித்தியாசத்தை.
2004இல் பலர் சாட்சியாக நடைபெற்ற ஒன்றை மூடி மறைக்க முயற்சி எடுத்தவர், 2007இல் பேருந்திற்கு உள்ளே பக்கத்தில் இருந்து கண்டது போல் விபரமாக, விரசமாக விளக்கம் அளித்தது ஏன்?

அதுதான் கிரிமினல் பிஜேயின் கிரிமினல் திட்டம்.

2004இல் கொள்கை, கத்தரிக்காய் என கூவி இருந்தால், துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு (டு)பாக்கர் கிளம்பியிருப்பார். பிஜே பாயை பிராண்டியிருப்பார்.

மகனுக்கென மூன் மீடியாவை உருவாக்கியிருக்க முடியாது.

தேவநாதனின் வின்டிவியை வளைத்திருக்க முடியாது.

தோட்டத்து பணப்பயிரை அறுவடை செய்திருக்க முடியாது.

இப்படி எத்தனையோ காரணங்கள்.

ஆனால் இன்றோ, மேற்கூறியவற்றையும் அதற்கும் மேலாகவும் கண்டாகி விட்டது.
கைகழுவினால் கூடுதல் இலாபம் பெறலாம் என கிரிமினல் முளை வேலை செய்ததால் நாடகத்தை நடத்த திட்டமிட்டார்.

சாதாரண ஜெயினுலாபிதீனை தனது வியாபாரத்திற்காக பிஜே என பிரம்மாண்டப்படுத்தி பிரபலப்படுத்திய வியாபாரிக்குத்தானே அந்த பிராண்டை எப்படி ஒழக்க முடியும் எனத்தெரியும். பிஜே எனும் பிராண்டை ஒழிக்க வியாபாரி (டு)பாக்கர் என்ன செய்தாரோ தெரியவில்லை. பாக்கர் இப்பொழுது ஞானஸ்நானம் பெற்றுவிட்டார்.

ஆகவே,
மான்ய மகா ஜனங்களே!

பாலியல் தவறு செய்வது எப்படி என கற்றுக் கொடுக்கவும், தவறு செய்தவர்களை தட்டிக் கொடுத்து பதவியில் அமர்த்தவும், தமிழ்நாடு தறுதலை ஜமாஅத் என்றும் தயாராக இருக்கிறது என்ற நல்ல செய்தியை ததஜவின் கிரிமினல் தலைவன் பிஜேவின் சமீப கால நடவடிக்கை ஊர்ஜிதப்படுத்துகிறது.

தவிப்போடு ததஜவில் தொடரும் உண்மை தவ்ஹீத்வாதிகளுக்கு விடுதலை வேட்கையை அதிகப்படுத்தும் இந்த நிகழ்ச்சிக்குப் பின்னும் அடிமையாய் இருக்கப் போகிறார்களா? விடுதலை கோஷம் எழுப்பி வெளியேறப் பேகிறார்களா?

வஸ்ஸலாம்
ராவுத்தர் 14.04.2007

No comments: