Saturday, December 09, 2006

தந்தை பெரியார் சிலை உடைப்பு!!

தமிழ்பகை - தமிழனுக்கு விடப்பட்ட சவால்

தந்தை பெரியார் சிலை உடைப்பு!!

வன்மையாகக் கண்டிக்கிறோம்!!



தந்தை பெரியார்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சிலை உடைப்பு! அவர் பாதச் சுவடுகள் பதிந்த தமிழ் மண்ணில் சமூக நல்லிணக்க விரோதிகளால் உடைக்கப்பட்டு இருப்பது வேதனை அளிக்கிறது.

கவிழ்ந்து விட்ட திராவிட தமிழ் இனத்தின் கேடு நீக்க ஒரு நூற்றாண்டைப் பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய பிரச்சார பீரங்கியின் சிலை உடைக்கப் பட்டு இருப்பது ஒவ்வொரு தமிழனின் இதயத்தில் ரணத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கொலை வாளினை எடுடா, கொடியோர் செயல் அறவே என்றான் புரட்சிக்கவி. திராவிட பாரம்பரியத்தின் தமிழ் ஆய்ந்த தலைமகன் டாக்டர். கலைஞரின் ஆட்சியில் அரங்கேற்றப்பட்டு இருப்பது வகுப்பு வாத சக்திகளின் விஷ விருட்ஷம் தமிழ் மண்ணை விஞ்சி இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. புற்றுக்குள் இருந்த வகுப்புவாத அரவம் மீண்டும் தமிழனுக்கு எதிராக விஷத்தைக் கக்கி இருக்கிறது.

பெரியார் சிலை உடைப்பு தமிழனுக்கு, சமூக ஒற்றுமைக்கு விடப்பட்ட சவால். தமிழக அரசே, வாய்மை வெல்லட்டும், தூண்டி விட்டு குளிர் காயும் சமூக நல்லிணக்க விரோதிகளை தமிழ் பகையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க தமிழக அரசை இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK) கேட்டுக்கொள்கிறது.

கருத்துச் சுதந்திரம் மிளிரட்டும்! கயவாலித் தனம் ஒழியட்டும்!! தமிழன் தமிழனாய் தலை நிமிர்ந்து நிற்கட்டும்!!!


இவண்

இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK), தமிழ்நாடு.

No comments: