Saturday, September 30, 2006

உங்களின் தானதர்மங்களுக்கு தகுதியானவர்கள்!!




உங்களுடைய ஜகாத் யாருக்கு?


பேரன்பு மிக்க இஸ்லாமிய சகோதரர், சகோதரிகளுக்கு கோவையிலிருந்து சிறுபான்மை உதவி அறக்கட்டளை சார்பாக வரையும் விளக்க மடல்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

வல்லான் அல்லாஹ்வின் பேரருள் பிரதேசம் எங்கும் நிலவட்டுமாக! அவனுடைய சாந்தியும் சமாதானமும் அண்ணலார் பெருமானார் (ஸல்) அவர்கள் மீதும் அண்ணாரது உற்றார் உறவினர்கள் மீதும் சத்திய ஸஹாபாக்களின் மீதும் தீனை இம்மண்ணில் நிலைநாட்டிட வேண்டுமென்று அயராது பாடுபடும் எல்ல நல்ல உள்ளங்களின் மீதும் நின்று நிலவட்டுமாக! 8½ ஆண்டுகளாக சிறைபட்டு முடங்கி கிடக்கும் நம் சகோதரர்களை மீட்டுவதற்குரிய பொருளாதாரத்தை இப்புனித ரமலான் மாதத்தில் தாங்களின் து ஆவையும், தானதர்மங்களையும் தந்திட வேண்டுமென்பதை கோரும் விளக்கமடல்


நிகழ்ந்தவை

தமிழக சூழுநிலைகளை பற்றி தாங்கள் அனைவரும் நன்றாக அறிந்ததே! இஸ்லாத்தையும் முஸ்லீம்களையும் வேரடி மண்ணோடு மண்ணாக ஆக்கிட வேண்டுமென அதிதீவிரமாக செயல்பட்டு வரும் சங்பரிவார் கும்பல்களின் அடாவடித்தனங்களும் அக்கிரமங்களும் எல்லை மீறி சென்றுவிட்டன. இக்கும்பல்களின் தலையாய அக்கிரமமாக இறைஇல்லமான பாபரி மஸ்ஜித் தரைமட்டமாக்கப்பட்டது. இக்கொடூர சம்பவம் இந்திய முஸ்லீம்களின் மனதை பெருமளவில் பாதிப்படையச் செய்தது. இதிலும் குறிப்பாக தமிழக முஸ்லீம்களின் மனதை அதிகமாக பாதிப்படையச் செய்தது மட்டுமன்றி வெகுண்டு எழச் செய்தது. காரணம் ஏனெனில் தொடர்ந்து சங்பரிவார் கும்பல்களில் தாக்குதலாக இஸ்லாமிய ஊழியர் ஜின்னா சாஹிப் அவர்களின் படுகொலையும், அல்ஹாஜ் பழனிபாபா அவர்களின் படுகொலையும், அங்கிங்கென அவ்வப்Nபுhது அப்பாவி முஸ்லிம்களின் மீது நிகழும் தாக்குதல்களும் சிறு சிறு கலவரங்களும் இதற்கு உரிய பரிகார நடவடிக்கை கிடைக்காதது மட்டுமன்றி தமிழக அரசின் பாரபட்ச போக்கினை கண்ட நம் இளைஞர்கள் ஓர் அணியாக திரள்வதை தவிர்க்க இயலாததாகிவிட்டது.
1997 நவம்பர் மாதம் 29-ல் தேதி சங்பரிவார் கும்பல்களும் தமிழக காவல் துறையில் பலரும் இணைந்து கோவை முஸ்லீம்களுக்கு எதிராக நடந்திட்ட கோர தாண்டவம் முஸ்லீம்களை நிலைகுலையச் செய்தது. இக்கயவர்கள் மூட்டிய அநீதி நெருப்பில் முஸ்லீம்களின் 1000 கோடி சொத்துகள் கருகின. 18 முஸ்லிம் இளைஞர்களை காக்கா குருவி போன்று சுட்டுப்பொசுக்கித் தள்ளியது தமிழக காவல்துறை. பயங்கரவாத திமிர்பிடித்த இஸ்ரேல் ராணுவம் கூட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரப்பர் குண்டுகளை பயன்படுத்துகின்றது. ஆனால் சொந்த நாட்டில் எம் சொந்த மண்ணில் எதிரிகளை சுட்டுக் கொல்வது போல் சுட்டுப் பொசுக்கியதை கண்டு பாதிப்படைந்த முஸ்லிம் இளைஞர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். அடிபட்டவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது குற்றுயிரும் கொலை உயிருமாக கிடந்த நம் சகோதரர்களின் மர்ம உறுப்புகளை வெட்டி எறியப்பட்ட ஈனத்தனமான செயல்களையும், அராஜகத்தால் அடிபட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்துக் சென்றவர்கள் குற்றுயிரும் கொலை உயிருமாக திரும்பியதையும், மருத்துவமனையில் சிக்கிய சடலங்களைக் கூட விட்டு வைக்காமல் மர்ம உறுப்புகளை வெட்டி தீக்கரையாக்கிய இக்கொடூர செயல்களைக் கண்ட மனித நாகரீகமே வெட்கப்படுமளவிற்கு வாhத்தைகளால் விவரித்திட முடியாத ஈனத்தனமான செயல்கள் நடந்தேறியது.

நடந்து முடிந்த இவ்வக்கிரமான வன்முறையை நியாய உணர்வுள்ள எவராலும் ஜீரணித்துக் கொள்ள இயலாது. அதே சமயம் இவ்வன்முறையை எதிர்கொள்ள இன்னொரு வன்முறை என்பதும் நிச்சயமாக ஏற்றுக்கொள்ள இயலாது. வன்முறை ஒருபோதும் தீர்வாகாது. அதே சமயம் இவ்வக்கிரமத்திற்குதிய எதிர்கொள்ளலையும் தீர்வுகளையும் வழிகாட்டுதல்களையும் ஒரிய முறையில் விளக்கி வழிகாட்டிட வேண்டியது அறிஞர் பெருமக்கள் மற்றும் இயக்கத்தலைமைகளின் தார்மீக பொறுப்பாகும். ஆனால் வெட்டி வேதாந்தம் பேசி வெறும் கண்துடைப்பு அறிக்கை வெளியிட்டு சால்ஜாப் செய்து இளைஞர்களை கோழைகளாக்கும் நிகழ்வுகள் ஒருபுறமும் இன்னொரு புறமோ ரத்தத்தை சூடேற்றும் வகையில் தீப்பொரிக்கும் அனல் பேச்சுகளால் இளைஞர்களைத் தூண்டி உணர்ச்சி வசமாக்கிய மடத்தனமான செயல்கள், இங்ஙனம் நிலவி வந்த தமிழக சூழ்நிலைகளால் நம் இளைஞர்களின் ஆற்றல்கள், உழைப்பு என அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராய் பயனற்றுப் போனது. செல்லரித்துப் போன இந்நிலையினை மீளாய்வு செய்த மீட்டிய வேண்டிட நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் 1997 நவம்பர் 29 கலவரத்தின் எதிர்வினையாக இந்தியாவையே உலுக்கிய கோவை குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இதை வைத்தவர் யார்? இதைச் செய்தவர்கள் யார்? என்பதையெல்லாம் முறையாக விசாரிக்கத் தவறிய தமிழக சிறப்பு புலனாய்வுத் துறை வீட்டில் படுத்துறங்கிக் கொண்டிருந்தவர்களையும், தெருவொரத்தில் தூங்கியவர்களையெல்லாம் கொத்தாகப் பற்றி வாரி வழித்து சகட்டுமேனிக்கு அனைவரையும் சிறையில் அடைத்தது. பலரை இப்போதுவிட்டு விடுவோம் என விசாரணைக்கு அழைத்துச் சென்றவர்களை ஆண்டுகள் எட்டு கட்ந்து விட்டும் இனியும் விட்டபாடில்லை. இங்ஙனம் இவ்வழக்கின் 166 நபர்கள் உள்ளனர். 8 ஆண்டுகளாக சிறைவாழ்வை கழித்துவரும் இவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள். அவர்களது இளமைக்காலம் முழுவதும் சிறையிலேயே கழிந்துவிட்டது. வெளி உலகமே என்னவென தெரியாத சிறுவர்களும் இன்றோ, நாளையோ என மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் வயது சிறைவாசத்தில் உரிய சிகிச்சையின்றி சிறையிலே இறந்துபோன முதியவர் தஸ்தகீர் போன்றோர் நிலை விடுதலையாவதற்குள் இன்னும் எத்தனை பேருக்கு என்பது நாம் கொள்ளும் மிகப்பெரிய கவலையாகும்.


தலைவன் இல்லாத குடும்பம்... ... ...
மகனைப் பிரிந்த பெற்றோர்கள்... ... ...

வயதான காலத்தில் மருத்துவ பராமரிப்பு இல்லாமல் தங்களது எஞ்சிய நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கும் சிறைப்பட்டவர்களின் வீட்டில் உள்ளவர்களுக்கு திடீரென ஏற்படும் உடல நலக்குறைவுகள், மரணம், திருமண வயதை அடைந்தும் மணமாகாமல் காத்திருக்கும் சிறைப்பட்ட சகோதரர்களின் குடும்பத்துப் பெண்கள், தொடக்க கல்வி பாட சாலை பார்த்திடாத இவர்களின் குழந்தைகள், பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு குடும்ப பாரத்தை சுமந்து வேலைக்கு அனுப்பப்பட்ட சிறுவர்கள், ஹிஜாபை பேணவேண்டிய குடும்பப் பெண்கள் வேலைக்குச் செல்ல வேண்டிய நிலை கவலையினால் நிரந்தர நோயாளியாகிப் போன தாய், தந்தையர்கள், என அவர்களின் தொடர்சிறை வாசத்தைப் போல இவர்களின் குடும்பங்களின் துன்பங்களும் தொடர் பட்டியல்கவே உள்ளன.


சி.டி.எம் ஓர் அறிமுகம்

இவ்வாறெல்லாம் துன்பங்களும் துயரங்களும் உள்ள இவர்களது வாழ்வுக்கு எந்த நிவாரணமும் உதவியும் செய்ய முன்வராத நிலை, எந்தவொரு அறிஞர்களோ, இயக்கங்களோ முயற்சி எடுக்காத நிலைகண்டு வேதனையிலும் வேதனையாக சிறைபட்டோரும் அவர்தம் குடும்பத்தாரும் செய்வதறியாது நிற்கையில் அல்லாஹ்வின் பேருதவியால் நல்ல மனம் படைத்த சிலரின் ஆலோசனையின் பெரில் பாதிப்பட்டவர்களின் குடும்பங்கயே ஒன்றிணைந்து 2001 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இவ்வறக்கட்டளை நிறுவப்பட்டன. குடும்பங்களில் நிலவிடும் பிரச்சனைகளை முழுவதும் தீர்க்க முடியாவிட்டாலும் முடிந்த அளவிற்கு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சிறு சிறு உதவிகளை செய்து வருகிறோம்.

(இந்த எட்டாண்டுகளுக்கு பிறகு பல அமைப்புகள் குரல் கொடுத்து வருவதும் பல அறிஞர் பெருமக்களின் ஆதரவு குரல்களும் ஓரிரு அமைப்புகளின் சிறு சிறு பொருளாதார உதவியும் எங்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது)


எம் பணிகளில் சில :

சிறைபட்டோரின் குடும்பத்தாருக்கு திருமண உதவி, கல்விக்காக என்று 40 குடும்பங்களுக்கும் மருத்துவ செலவுகள் 20 குடும்பங்களுக்கும் சில குடும்ப பெண்களுக்கு தையல் மெஷின் போன்ற சுய தொழில் முனைவு பொருட்கள் வழங்குதல் என உதவிப்பணிகள் செய்யப்பட்;டு வருகின்றன. ஹிஜாப் பேணவேண்டிய பெண்கள் வெளியிடங்களில் வேலைக்குச் சென்று வருவதை தடுக்க ஊ.வு.இ.ன் சார்பாக மகளிர் சுய உதவிக்குழு அமைக்கப்பட்டு அவர்களுக்கு வேலையும் கொடுத்து வருகின்றோம். இக்குழுவின் சார்பாக குறைந்தது 40 குடும்பங்களுக்கு மாதா மாதம் 500 ரூபாய் குடும்ப நல உதவியாக அனுப்பப்படுகிறது. போதிய முதலீடு உதவிகளும் இல்லாததால் இப்பணி குறைவாகவே நடைபெற்று வருகின்றது. தங்களைப் போன்ங நல்லுள்ளங்கள் முன்வந்தால் இப்பணியில் குடும்பங்களின் உதவித்தொகை அதிகமாகவும் கொடுக்கலாம், அண்ணிய ஆடவர்கள் மத்தியில் வேலை செய்து பிழைக்க வேண்டிய அவலநிலையினை போக்கி சகோதரிகள் ஹிஜாப் முறையை பேணி சம்பாதிக்க உரியவகையில் எம் சமூக மக்களுக்கு உதவலாம்.

கண்ணீர் கருத்தரங்கம், மனித உரிமை கருத்தரங்கம், நீதி கோரும் கருத்தரங்கம் என்ற கருத்தரங்கங்கள் பல சமுதாய தலைவர்களின் முன்னிலையில் நடத்தியுள்ளோம். தமிழக மஸ்லீம் மக்களிடையயே சிறைபட்டோரின் விடுதலைக்காக விழிப்புணர்வு ஏற்படுத்த மேற்கண்ட நிகழ்ச்சிகளும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தி உள்ளோம். எம் நிகழ்வுகளில் பங்கு பெற்ற சமூக ஆர்வலர்களின் சிலர் மனித உரிமை இயக்கத் தலைவர் கண்ணபிரான், முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் K.M காதர்மொய்தீன் MP மதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத், ஹாமித் பக்ரி, M.G.K. நிஜாமுதீன் Ex. MLA TGA. சலாவுதீன் ரியாஜு தேசியலீக் பஷீர் அஹம்மது, M மார்கஸ் போன்றோர்

வழக்குகள் பொருத்தவரையில் கோட்டை அமீர். போலீஸ்காரர் செல்வராஜ் கொலை வழக்குகள் போன்ற சில வழக்குகள் அல்லாஹ்வின் உதவியால் விடுதலையாகிவிட்டது. இன்னும் எம் முயற்சிகள் தொடர்கின்றன, பல வழக்குகள் உயர்நீதி மன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் தீர்ப்பின் தருணத்தைக் காத்துக் கொண்டிருக்கின்றது. அதுபோல கோவை குண்டுவெடிப்பு விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில மாதங்களில் வழக்குகள் முடிவடையும் நிலையில் உள்ளன. அரசு நியமித்துக் கொடுத்த போதிய அனுபவமற்ற வழக்கறிஞர்களைக் கொண்டு வழக்கு விசாரணை ஒருவழியாக முடிவடையப் போகின்றன. இன்னும் சில மாதங்களில் இறுதி கட்ட விசாரணை நடக்கும். இச்சமயம் திறமையான சீனியர் வழக்கறிஞர்களை நியமிப்பதற்கு உண்டான பொருளாதாரம் கிடைக்கப் பற்றால் வழக்கின் வெற்றிக்கு வாய்ப்பாக இருக்கும். அல்லாங்வின் கிருபையால் இவ்வழக்கிலிருந்து நிறைய சகோதரர்களை மீட்டு விடலாம் என்ற நம்பிக்கை நிறைய உள்ளன.


எதிர்கால திட்டம்

ஆனால், இன்னும் நடத்திட வேண்டிய வழக்குகளும் ஏராளம்! ஏராளம்! மேலும் வகையில் வாடும் குடும்பத்தின் வாட்டத்தைப் போக்கிடுவதும் மிவும் இன்றியமையாததாக உள்ளன. சட்ட உதவிகள் செய்வதற்குரிய பொருளாதாரம் இல்லாமையால் நம் சகோதரர்கள் நீண்ட காலம் சிறையில் வாடுகின்றனர் என்பதே நிஜம் முழு முயற்சி செய்து விடுதலையாகவில்லையெனில் அதைப்பற்றி கவலைப்பட்டு கொண்டிருக்கவேண்டியதில்லை அல்லாஹ்வின் நாட்டமென பொறுமை காப்போம். உரிய பொருளாதாரம் கிடைக்காமையினால் சட்ட ரீதியான உதவிகள் ஏதும் செய்ய இயலாமல் தவிக்கின்றோம். பல வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்ட நம் சகோதரர்கள் பொருளாதார இன்மையால் போதிய அனுபவமற்ற வழக்கிறஞாகளை நியமித்து விசாரணை மேற்கொண்டதால் இன்று தமிழக சிறையில் 75க்கும் மேற்பட்ட வெள்ளை உடை தரித்த ஆயுள் தண்டனை சிறைவாசிகளாக உலாவருகின்றனர். அல்லாஹ்வின் கிருபையால் உரிய பொருளாதாரம் கிடைக்கப்பெற்றால் முழுவீச்சுடன் முயற்சிகளை மேற்கொள்ளலாம். உச்ச நீதி மன்றம் வரை உடனுக்குடன் செல்ல பொருளாதாரமே தடையாக உள்ளன.

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெறும் சகோதரருக்கு மேல் முறையீடு செய்து விசாரிப்பதற்கு கணிசமான பொருளாதாரம் தேவைப்படும் கோவை குண்டுவெடிப்பு அல்லாத வேறு பல வழக்குகளில் தண்டனைப் பெற்ற சகோதரர்களுக்கு மேல் முறையீடு செய்வதற்வே லட்சக்கணக்கில் பொருளாதாரம் தேவைப்படுகிறது. இங்ஙனம் பல வழிகளில் பொருளாதாரத்தின் அவசியம் மிகமிக இன்றியமையாததாக உள்ளன. கோவை குண்டு வெடிப்பு வழக்கிலுள்ள 166 நபர்களின் 40 நபர்களுக்கு தமிழக முஸ்லிம் முன்னேற்றக்கழகமும் 8 நபர்களுக்கு கேரள மதானி சகாய கமிட்டியும் சிறுபான்மை உதவி அறக்கட்டளை கோவை சிறையில் மட்டும் 115 நபர்களுக்கு பொறுப்பெடுத்து கவனித்து வருகிறது. உரிய பொருளாதாரம் கிடைக்கப்பெற்றால் தமிழகத்தின் மற்றைய சிறைகளில் சிக்குண்டு கிடக்கும் சகோதரர்களுக்கும் உதவிகள் மற்றும் வழக்குகளை கவனிக்கும் என இவ்வறக்கட்டளை தாங்களின் முன் வாக்களிக்கின்றது. வரும் காலங்களில் நம் சமூகத்தின் மீது இழைக்கப்படும் கொடுமைகளையும் பொய் வழக்குகளையும் எதிர் கொள்ள சட்ட ரீதியான அனைத்து உதவிகளையும் செய்யும் இன்ஷா அல்லாஹ்.


வேண்டுகோள்

ஆயிரம் குற்றவாளிகள் தப்பலாம் ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்பதே நீதித்துறையின் தாரக மந்திரம். எட்டு ஆண்டுகள் நெருங்கியும் எங்களில் யார் குற்றவாளிகள் என நிரூபிக்காமல் வழக்குகளை தாமதப்படுத்துகின்றனர். தாமதப்படுத்தும் நீதி மறுக்கப்படும் நீதிக்கு சமமாகும் என உச்ச நீதிமன்றம் பல முறை கண்டனக்குரல் எழுப்பியும் முஸ்லீம்களாகிய எம் சகோதரர்களுகு;கு கிடைக்க வேண்டிய நியாயமான பிணை கூட மறுத்து விடுகின்றனர். நாடறிந்த குற்றவாளியாகிய பாசிச சங்பரிவார கும்பல்கள் குற்றமற்றவர்களாக வெளியே உலா வருகின்றனர். ஏன் சட்ட மன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் குற்றம் செய்துள்ளார் என்று அறிவிக்கப்பட்டும் கூட சங்கராச்சாரியார் பிணையில் விடப்படுகின்றார். ஒரு சமுதாயத்தின் எண்ணற்றோர் நீண்ட காலமாக பிணைதராமல் கொடிய சிறையினுள் அடைத்து வைத்திருக்கும் மாபெரும் அநீதி நம் தமிழகத்தின் தான் இவ்வநீதிக்கு எதிராக முஸ்லீம்கள ஒன்று திரள்வது காலத்தின் கட்டாயமாகும். நமக்கென்ன என்று விட்டு விடுவது நல்ல முஸ்லீம்களின் பண்பு அல்ல.

அண்ணலார் பெருமானார் கூறியிருக்கின்றார்கள்:

அநீதிக்குள்ளாகப்படுபவனை பார்த்துக் கொண்டு தடுக்காமல் விட்டு விடுபவன் அல்லாஹ்வின் சாபத்தைப் பெற்று கொள்வான் (தபராணி)
அநீதிகளுக்கு ஆட்படுகின்ற ஒருவனுடன் அவன் அந்த அநீதியிலிருந்து விடுபடும் வரை துணை நிற்பவனின் பாதங்கள் சிராத் பாலத்தில் அவன் நடக்கும் போது அல்லாஹ் பலப்படுத்தி வைக்கின்றான. (அஸ் பஹானி)
இவர்களுக்காக குரல் கொடுப்பது, போராடுவது, பொருளாதார உதவிகள் சேய்வது போன்ங அனைத்து உதவிகள் செய்திட வேண்டியது முஸ்லீம்களாகிய நம் மீது கடமையாகும்.

ஒரு முஸ்லீம் இன்னொரு முஸ்லீமின் சகோதரராவார், அவன் அடுத்தவனை (முஸ்லீமை) அமுக்கவோ அடுத்தவனுடைய உரிமைகளை பறிக்கவோ மாட்டான். சகோதர முஸ்லீமுடைய தேவையை தருபவனுக்கு அல்லாஹு உதவி செய்வான். சகோதர முஸ்லீமுடைய ஒரு துன்பத்தை அகற்றுபவனுடைய துன்பங்களில் ஒன்றை அல்லாஹு மறுமைநாளில் அகற்றுவான். முஸ்லீம் சகோதரருடைய குறையை மறைப்பவனுக்கு மறுமைநாளில் அல்லாஹ் அவனுடைய குறையை மறைத்து அருள் புரிவான் (முஸ்லிம்)

மேலும் அவ(இறைவ)ன் மீதுள்ள பிரியத்தினால் ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும், சிறைபட்டோருக்கும் உணவளிப்பார்கள். அல்குர்ஆன்(76:8)
முஸ்லீம்களிடம் காணப்பட வேண்டியப பரஸ்பர அன்பு, இறக்கம், தாராளத்தன்மை ஆகியவை ஒரு உடலுக்கு ஒப்பாகும். இந்த உடலில் ஒரு சில பகுதிகளுக்கு வேதனை ஏற்பட்டு விட்டால் உடலின் ஏனைய பகுதிகளும் உறக்கமின்மை, காய்ச்சல் ஆகியவற்றிற்கு இலக்காகி விடுகின்றன. (புகாரி)
இங்ஙனம் பல்வேறு தேவையுடையோராகவும் குறிப்பாக வாழ்வின் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்ற இயலாத வகையில் முடங்கிக் கிடக்கும் இவர்களே! உங்களின் தானதர்மங்களுக்கு தகுதியானவர்கள். ஜகாத்தை பரித்தளித்திட 8 பிரிவினரில் இச்சிறைப்பட்டோரும் ஒருபிரிவனர் ஆவர்.

இன்னும் இவர்களுக்கு உதவுவதே நம் மீது கடமையாகும் என்பதை மேற்சொன்ன ஹதீதுகளும் குரான் ஆய்வுகளிலும் நாம் உணரலாம். ஆகவே, நன்மையை கொள்ளையடிக்க வேண்டிய ரமலான் மாதத்தில் உங்களின் தானதர்மங்களை இவர்களளுக்கு வாரி வழங்குவீர். இல்லாஹ்வின் தாதர் இம்மாதத்தை அடைந்து விட்டால் வேகமாக வீசக்கூடிய புயல் காற்றை விட அதிகமாக தானதர்மங்கள் செய்வார்கள். அண்ணலாரின் அடியொற்றி வாழும் நாமும் இச்சுவனத்தைப் பின்பற்றி சிறை பட்டோரின் நலனுக்கு வாரி வழங்கி மறுமை ஈடேற்றம் என்ற நற்பேற்றினை அடைவீராக! இவர்களுக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் துஆக்கள் அங்கீகரிக்கப்படும் நேரமாகிய நோன்பு திறப்பதற்கு சற்றுமுன் கேட்கப்படும் துஆவின் இவர்களின் விடுதலைக்காகவும் இதற்காக பாடுபடும் நல்ல உள்ளங்களுக்காகவும் துஆ செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


தங்கள் உதவியை நாடி உண்மையுடன்
சிறுபான்மை உதவி அறக்கட்டளை
CHARITABLE TRUST FOR MINORITIES என்ற பெயரில் M.O அல்லது DD அல்லது செக்காகவோ எடுத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.
CHARITABLE TRUST FOR MINORITIES
Rahim Plastic House
Gnaniyar Nagar
Saramedu, Karumbukkadai
Coimbatore – 641 008
Tamilnadu, India
Ph : +91-422-2307673
Mobile : +91 94436 54473
Email :
kovaithangappa@gmail.com

No comments: