Monday, April 21, 2014

ததஜ வினர் ஹைதர்அலி பேசிய ஆடியோவை வெளியிட சவால்...

 
 
அன்பார்ந்த சகோதரர்களே, அஸ்ஸலாமு அழைக்கும்(வரஹ்)...

கடுமையான களப்பணிகள் மற்றும் பரப்புரைகளுக்கு மத்தியில் தேவையற்ற ஒரு விசயத்திற்காக ஒரு கடிதத்தை எழுதவேண்டியதற்காக வருந்துகிறேன்.

அவதூறு ஒன்று சுற்றிவரும் நிலையில், அதற்கு விளக்கம் கொடுக்கும...ாறு வெளிநாடு வாழ் சகோதரர்கள் கேட்டுகொண்டனர்.

24 கூட்டமைப்பை சேர்ந்த அப்பொல்லோ ஹனிபா கூறியதாக ஒரு அவதூறை ததஜாவினர் பரப்பிவருகின்றனர்.

அதாவது, ததஜாவிடம் ஆதரவு கேட்குமாறு மமக நிர்வககுழுவில் சகோ.ஹைதர்அலி அவர்கள் கூறியதாகவும். அதை நானும், பேராசிரியர்.ஜவாஹிருல்லாஹ் அவர்களும் நிராகரித்ததாகவும், இதை அண்ணன் ஹைதர் அலி அவர்கள் அப்பொல்லோ ஹனிபாவிடம் வேதனையோடு கூறியதாகவும் அவதூறு பரப்பப்ட்டு வருகிறது.

இவ்விசயத்தில் முதலில் தலைவர் ஜெ.எஸ்.ரிபாயி மீது பழிபோட்டர்கள். இப்போது இரண்டு நாள் கழித்து என்மீதும், பேராசிரியர் மீதும் பழிபோடுகிறார்கள்.

இதுகுறித்து 20.04.2014 அன்று மாலை 4 மணியளவில் நானும் அண்ணன் ஹைதர்அலியும் பேசிக்கொண்டோம். இந்த அவதூறை கடுமையாக மறுக்கவேண்டும் என்றார். அவதுறு பரப்புபவர்கள் மீது கடும்கண்டனத்தையும் அவர் வெளிபடுத்தினார்.

பிறகு நான் இதுகுறித்து தலைவர் ஜெ.எஸ்.ரிபாயி அவர்களிடமும், பேராசிரியர்.ஜவாஹிருல்லாஹ் அவர்களிடமும் பேசினேன். நாங்கள் இந்த அவதூறு குறித்து ஒருமித்த கண்டனத்தை பதிவு செய்தோம்.

இரவு 9 மணிக்கு அபொல்லோ ஹனிபாவிடம் நான் பேசினேன், அவர் நானும் ஹைதரும் அப்படி எதுவும் பேசவே இல்லை என்றும், தேவைஇல்லாமல் அவதுறு பரப்பப்படுகிறது என்றும் கூறினர்.

மேலும், மயிலாடுதுறையில் மமகவிற்கு ததஜா ஆதரவு தரவேண்டும் என்று ததஜா தலைமையிடம் அவர் பேசியதாகவும், மன்னிப்பு கடிதம் ஒன்று எழுதி தந்தால்தான் அதுபற்றி பரிசீலிக்கமுடியும் என்று அவர்கள் கூறியதாகவும், அது சாத்தியமில்லை என்பதால் நான் அந்த முயற்சியை கைவிட்டதாகவும் கூறினார்.

எனவே சகோதரர்கள் இதையே விளக்கமாக ஏற்று இந்த அவதூறுக்கு முற்றுபுள்ளிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
சிலர் மயிலாடுதுறையில் எடுத்த தவறான-சுயநல அரசியல் முடிவு காரணமாக, பெறும் நெருக்கடியில் தத்தளித்துக்கொண்டுள்ளனர். அந்த இயக்கத்தில் இருக்கும் மனசாட்சியுள்ள தொண்டர்கள் இதனால் அதிருப்தியில் உள்ளனர்.

அதை திசைதிருப்புவதர்க்காகவும், தங்கள் தொண்டர்களை சமாதானபடுத்துவதர்க்காகவும் சிலர் பரப்பும் அவதூறுகளை புறக்கணிக்க வேண்டுகிறோம்.

அவர்கள் சகோ.ஹைதர்அலி பேசியதாக கூறும் அந்த ஆடியோவை வெளியிடுமாறு சவால்விடுகிறோம்.

சகோதரர்களே... இறைவன் அருளால் மயிலாடுதுறை தொகுதியில் நமக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மஹல்லாக்கள் தோறும் 99% வாக்குகள் ஓரணியில் திரண்டு இருக்கிறது.

எனவே எமது வெற்றிக்காக இறைவனிடம் பிரார்த்திக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

எம்.தமிமுன் அன்சாரி
பொதுசெயலாளர்

No comments: