Showing posts with label நன்றி அறிவிப்பு. Show all posts
Showing posts with label நன்றி அறிவிப்பு. Show all posts

Tuesday, November 27, 2007

சத்தமின்றி படைக்கப்பட்ட வரலாறு - TMMK நன்றி அறிவிப்பு மாநாடு

மேடையில் கலைஞருடன் தமிழ் முஸ்லிம் தலைவர்கள்

(இதைப் பார்த்து விட்டு சிவப்பு விளக்கு கணவில் இருக்கும் சிலருக்கு துர்க்கம் வரவில்லையாம்)

தமிழ் முஸ்லிம் அரசியல் மேடைக்காக எடுக்கப்பட்ட சிறப்பு புகைப்படங்கள்

PHOTO GALLERY (PART-01)

PHOTO GALLERY (PART-02)

கடந்த 24.11.2007 அன்று இறைவனின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் இஸ்லாமிய மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியமைக்காக தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு தமிழக இஸ்லாமிய மக்களின் சார்பாக நன்றி அறிவிப்பு மாநாட்டை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் வரலாற்று சிறப்பு மிக்க வகையில் நடத்தி காட்டியது.

சகோ. சஃபியுல்லா மற்றும் அப்பாஸ் அலி


தமிழகத்தில் பலர் சிந்திகக் திறனற்றவர்களாக பத்து லட்சம் கூடியது என்று கூறி சமுதாயத்தை அடகு வைத்ததோடு மட்டுமல்லாமல் அன்று கலைஞர் வெளியிட்ட அரசானையையும் கின்டல் செய்து இட ஒதுக்கீடு எல்லாம் கிடைக்காது என்று கேலி பேசினார்கள், ஆனால் இட ஒதுக்கீடு கிடைத்தவுடன் இன்று அது தன்னால் தான் கிடைத்தது என்று சின்னப் பிள்ளையாட்டம் கைப்பிள்ளை விளையாட்டு விளையான்டு கொண்டுள்ளார்கள். ஆனால் உண்மையில் பேரதிகமான தமிழ் முஸ்லிம் மக்களை அழைத்து வந்து சென்னை மாநகரை மக்கள் வெள்ளத்தில் மூழ்கடித்திருந்தார்கள் த.மு.மு.க வினர்.

சவுதி அரேபியா கிழக்கு மன்டல நிர்வாகி பொறியாளர் சஃபியுல்லா கலைஞருக்கு பரிசளிக்கிறார்

வின் டி.வி யில் கிசுபுள்ளாவின் பேச்சை நேற்று இரவு கேட்டபோது ஒரே சிரிப்பானி சிரிப்பானியா வந்தது. இட ஒதுக்கீடு தங்களால் தான் வந்தது என்றெல்லாம் கிச்சு கிச்சு மூட்டினார். இந்த அண்டப் புழுகையும் பார்த்து மூழை கழுவிடப்பட்டு வின் டி.வி பார்த்து இஸ்லாத்து வந்து கொண்டிருக்கும் கூட்டம் புல்லரித்து போனது தனிக் கதை.

சகோ. சஃபியுல்லா மேடையில்

சகோ. கோவை தங்கப்பா

த.மு.மு.க வெற்றிகரமாக நடத்திய இந்த கூட்டத்திற்கு தமிழகமெங்கும் இருந்து மக்கள் திரளாக வந்து கலந்து கொண்டனர். கோவையில் இருந்து ஒரு ரயிலை 7 லட்சம் ரூபாய் கொடுத்து வாடகைக்கு பிடித்து ஆயிரக்கணக்கில் வந்து வரலாறு படைத்தனர் கோவை மாவட்ட த.மு.மு.க வினர்.

கோவையில் இருந்து தனி ரயிலில் வந்து வரலாறு படைத்த கூட்டம்