Showing posts with label காவல் துறையில் வேலை வாய்ப்பு. Show all posts
Showing posts with label காவல் துறையில் வேலை வாய்ப்பு. Show all posts

Saturday, July 11, 2009

காவல் துறையில் வேலை வாய்ப்பு..!

தமிழ் நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் தமிழ் நாடு காவல் துறயில் இரண்டாம் நிலை ஆண்/பெண் காவலர்கள் தேர்வு இவ்வாண்டு நடைபெறவுள்ளது.


அதன் விதிமுறைகளுக்குட்பட்டு மேற்படி பணியில்(இரண்டாம் நிலை காவலர்) சேர விருப்பமுள்ள நமது சமுதாய இளைஞர்கள் வரும் 29.07.2009 க்குள் இதில் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் உள்ள விலாசத்திற்க்கு விண்ணப்பம் அனுப்பவேண்டும்.


அந்தந்த பிறைமரி தலைவர்/செயலாளர்கள் தங்கள் நகரத்திள் உள்ள இளைஞர்களை விண்ணப்பம் அனுப்ப தகுந்த ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.


ஒவ்வொரு மாவட்டத்திலும் விண்ண்ப்பம் அனுப்பிய இளைஞர்களை,மாவட்டத்தில் ஒரு இடத்தில் ஒன்று கூட்டி பின்பு அறிவிக்கப்படும் தேதியில் தமிழ் நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் .கே.எம்.காதர் மொகிதீன் அவர்களின் ஆணைக்கு இண்ங்க,மாநில மார்க்க அணிச் செயலாளர் தளபதி ஷஃபீகுர் ரஹ்மான் அவர்களின் ஆலோசனைப்படி அந்தந்த நகரத்தில் இளைஞர்களுக்கு நான் பயிற்சி அளிக்க உள்ளேன்.
அதற்க்குன்டான முயற்சிகளை அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


தகுதி:1)கல்வித்தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி.



2)வயது 01.07.2009 1ன்று 18 வயது நிறைவு பெற்று இருத்தல்.

30.06.1991 அன்றோ அதற்க்கு முன்னரோ பிற்ந்திருத்தல் வேண்டும்.


3)உயரம் 168செ.மீ மார்பள்வு 81 இருத்தல்மூச்சு அடங்கிய மார்பு விரிவாக்கம் குறைந்தளவு 5 செ.மீ



மேலும் விபரங்களுக்கு எ.சுக்கூர்
செயலாளர்,கடலூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,
விருதாச்சலம்,செல்:00919943375559